சைவ தூஷண பரிகாரம்

பட்டணத்துப்பிள்ளையார் பாடல் இப்பிறப்பை நம்பி யிருப்பையோ நெஞ்சமே வைப்பிருக்க வாயின் மனையிருக்கச் -சொப்பனம்போல் விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக் சுக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. மேலுமிருக்க விரும்பினையே வெள்விடையோன் சீல மறிந்திலையே சிந்தையே - கால்கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப் பட்டவு கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (டற் (2) ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே - வன்கழுக்க டத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு. இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே மன்னரிவ ரென்றிருந்து வாழ்ந்தவரை - முன்ன மெரிந்தகட்டை மீதி லிணைக்கோ வணத்தை யுறிந்துருட்டிப் போட்டது கண்டு. விட்டுளிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நே ரமுஞ்சிவனை யேத்துங்கள் போற்றுங்கள் சொன்னேனதுவே சுகம். (1) காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே யுற்றா ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. (3) (4) (5) (6) ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே யழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியனை மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மியழுநன்மை வேண்டுமென்றே (7) கணபதி துணை. சைவதூஷணபரிகாரம் 1. பதிப் பிரகரணம் பாதிரியே! பெருங்கருணையினாலே, படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் தம் பிரயோசனங் குறியாது ஆன்மாக்களது பிரயோசனங் குறித்துச் செய்தருளும் பதி ஒருவரே என்றும், அவர் முற்றறிவு வரம்பிலின்பம் இயற்கையுணர்வு தன்வயம் குறைவிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறுகுணங்களும் நிறைந்த சிவனே என்றும், நாங்கள் மெய்நூல்களெனத் துணிந்த வேதாகமங்கள் உணர்த்துகின்றன. அதுபற்றி அச்சிவனையே நாங்கள் வழிபடுகின்றோம். ஆதலால், நாங்கள் சைவர்கள் எனப்படுவோம். நீ இக்கருத்தைச் சிறிதாயினும் ஆராய்ந்து அறியாது, எங்களைப் பலரைத் தெய்வம் என்று வணங்கும் அஞ்ஞானிகள் என்று இகழ்கின்றாய். யெகோவா பரிசுத்தாவி கிறிஸ்து என்னும் பலரைத் தெய்வமென்று வணங்கும் அஞ்ஞானி நீயே. சிவனையேயன்றி விஷ்ணுமுதலிய பிறரையும் நீங்கள் வணங்கக் காண்கின்றேனே என்பாயாகில்; சத்தியம் நீ சொல்லியது; ஆயினும், நாங்கள் அவர்களைப் பரம்பொரு ளாகிய பதிகளெனக்கொண்டு வணங்குவதில்லை; பதியாகிய ச்சிவனுடைய அடியார்களெனக்கொண்டு வணங்குகின் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
பட்டணத்துப்பிள்ளையார் பாடல் இப்பிறப்பை நம்பி யிருப்பையோ நெஞ்சமே வைப்பிருக்க வாயின் மனையிருக்கச் -சொப்பனம்போல் விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக் சுக்கிச்செத் துக்கொட்டக் கண்டு . மேலுமிருக்க விரும்பினையே வெள்விடையோன் சீல மறிந்திலையே சிந்தையே - கால்கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப் பட்டவு கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு . ( டற் ( 2 ) ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே - வன்கழுக்க டத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு . இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே மன்னரிவ ரென்றிருந்து வாழ்ந்தவரை - முன்ன மெரிந்தகட்டை மீதி லிணைக்கோ வணத்தை யுறிந்துருட்டிப் போட்டது கண்டு . விட்டுளிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நே ரமுஞ்சிவனை யேத்துங்கள் போற்றுங்கள் சொன்னேனதுவே சுகம் . ( 1 ) காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே யுற்றா ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு . ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே யழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியனை மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மியழுநன்மை வேண்டுமென்றே ( 7 ) கணபதி துணை . சைவதூஷணபரிகாரம் 1. பதிப் பிரகரணம் பாதிரியே ! பெருங்கருணையினாலே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் தம் பிரயோசனங் குறியாது ஆன்மாக்களது பிரயோசனங் குறித்துச் செய்தருளும் பதி ஒருவரே என்றும் அவர் முற்றறிவு வரம்பிலின்பம் இயற்கையுணர்வு தன்வயம் குறைவிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறுகுணங்களும் நிறைந்த சிவனே என்றும் நாங்கள் மெய்நூல்களெனத் துணிந்த வேதாகமங்கள் உணர்த்துகின்றன . அதுபற்றி அச்சிவனையே நாங்கள் வழிபடுகின்றோம் . ஆதலால் நாங்கள் சைவர்கள் எனப்படுவோம் . நீ இக்கருத்தைச் சிறிதாயினும் ஆராய்ந்து அறியாது எங்களைப் பலரைத் தெய்வம் என்று வணங்கும் அஞ்ஞானிகள் என்று இகழ்கின்றாய் . யெகோவா பரிசுத்தாவி கிறிஸ்து என்னும் பலரைத் தெய்வமென்று வணங்கும் அஞ்ஞானி நீயே . சிவனையேயன்றி விஷ்ணுமுதலிய பிறரையும் நீங்கள் வணங்கக் காண்கின்றேனே என்பாயாகில் ; சத்தியம் நீ சொல்லியது ; ஆயினும் நாங்கள் அவர்களைப் பரம்பொரு ளாகிய பதிகளெனக்கொண்டு வணங்குவதில்லை ; பதியாகிய ச்சிவனுடைய அடியார்களெனக்கொண்டு வணங்குகின் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org