சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் தைச் சுற்றிவந்ததினால், அந்நகரத்தின் மதில் இடிந்து கீழே விழுந்தது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஷெ7. அதி. ஒருநாள் இஸ்ரவேலர் போரிலே சத்துருக்களுக்குத் தோற் றுப் புறங்காட்டியோடினதினால், யோசுவா முதலியோர் மிக வியாகுலித்து, யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகச் சாயங் காலம் வரைக்கும் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்து, சத்துருக்களை வெல்ல வரம்பெற்றார்கள் என்று சொல்லப்பட் டிருக்கின்றது. 1.சாமு.5,6 - ம் அதிகாரங்களிலே ஒரு முறை அந்தச்சாட்சிப்பெட்டியை இஸ்ரவேலருடைய சத் துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்த் தங்கள் தேவாலயத்தில் வைத்தபோது, அங்கேயிருந்த விக்கிரகம் அந்தப்பெட்டிக்கு முன்பாக விழுந்து தலைவேறு கைவேறாக வெட்டுண்டு கிடந் தது என்றும், அந்நாடுகளெல்லாம் மூலவியாதியினால் வாதிக் கப்பட்டன என்றும், அதினாலே அவர்கள் அந்தப்பெட்டி யைத் திரும்ப இஸ்ரவேலரிடத்திற்கு அனுப்பிவிட்டார்க ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 2. சாமு. 6. அதி காரத்திலே அந்தப் பெட்டியைத் தாவீது முப்பதினாயிரம் பேரோடுபோய், ஒரு புது இரதத்தின் மேலேற்றிக்கொண்டு வரும்பொழுது; மாடுகள் அப்பெட்டியை அசைத்தபடியி னாலே, அவ்விரதத்தை நடத்திய ஊசா அகியோ என்னுமிரு வருள் ஊசா தன் கையை நீட்டி அதைப்பிடித்தான் என்றும், அதினால் யெகோவா அவனைக் கோபித்துக் கொன்றுபோட் டார் என்றும், அதுகண்டு தாவீது பயந்து, யெகோவாள் பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி, அதைத் தன்னிடத்திலே கொண்டுவர விரும்பாமல், கித்திய னாகிய ஓபெத் ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத் தான் என்றும், அந்தப்பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாசம் தங்கிற்றென்றும், அதினிமித்தம் யெகோவா ஒபெத் 14 Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org இலிங்கப் பிரகரணம் ஏதோமையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர் வதித்தார் என்றும், தாவீது அதை அறிந்துபோய் அந்தப் பெட்டியைத் தன் நகரத்திலே கொண்டுவந்து வைத்துப் பலி கொடுத்து ஆராதனை பண்ணினான் என்றும், சொல்லப்பட் டிருக்கின்றது. 1.இரா.6.8.அதிகாரங்களிலே தாவீதின் குமாரனாகிய சலோமோன் யெரூஷலேமிலே ஒரு ஆலயங் கட்டி, அதிலே அந்தப்பெட்டியை வைத்துப் பிரதிட்டை பண்ணி, அனேகம் ஆடுமாடுகளைப் பலிகொடுத்து, ஆராதனை செய்தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. 15 இப்படியே உன் சமயநூலிலே, உன் தேவனாகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருபக்கத்திலும் இரண்டு கெரூபிகளையும் வைத்து ஆராதனைபண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்களென்றும், யெகோவா அந்தப்பெட்டியிலே பிரசன்னராகிக் கிருபைசெய்தாரென்றும், அந்தப்பெட்டியை அவமதிசெய்தவர்களைத் தண்டித்தார் என்றும், சொல்லப்பட் டிருக்கின்றது. அதை அறிந்துகொண்டும், கோதுமை அப்பத் தையும் திராட்சரசத்தையும் உன்தேவனாகிய கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமுமாகவேனும் அவைகளுக்கு அறிகுறியாக வேனும் பாவித்து உட்கொள்ளளல்வேண்டும் என்று புதிய வுடன்படிக்கையில் விதித்தபடி செய்துகொண்டும், எங்களைக் கல்லையும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகளென்றும், கடவுளுக்குச் செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில் லாத விக்கிரகங்களுக்குச்செய்யும் பாவிகளென்றும், தூஷிப் பது மதிமயக்கமன்றோ? அறிகுறியும் அதிட்டேயமுமாகிய இலிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச் செய்யும் வழிபாட் டைத் தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கமுடையவரல்லர்.
சைவதூஷணபரிகாரம் தைச் சுற்றிவந்ததினால் அந்நகரத்தின் மதில் இடிந்து கீழே விழுந்தது என்று சொல்லப்பட்டிருக்கின்றது . ஷெ 7 . அதி . ஒருநாள் இஸ்ரவேலர் போரிலே சத்துருக்களுக்குத் தோற் றுப் புறங்காட்டியோடினதினால் யோசுவா முதலியோர் மிக வியாகுலித்து யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகச் சாயங் காலம் வரைக்கும் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்து சத்துருக்களை வெல்ல வரம்பெற்றார்கள் என்று சொல்லப்பட் டிருக்கின்றது . 1.சாமு .5 - ம் அதிகாரங்களிலே ஒரு முறை அந்தச்சாட்சிப்பெட்டியை இஸ்ரவேலருடைய சத் துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்த் தங்கள் தேவாலயத்தில் வைத்தபோது அங்கேயிருந்த விக்கிரகம் அந்தப்பெட்டிக்கு முன்பாக விழுந்து தலைவேறு கைவேறாக வெட்டுண்டு கிடந் தது என்றும் அந்நாடுகளெல்லாம் மூலவியாதியினால் வாதிக் கப்பட்டன என்றும் அதினாலே அவர்கள் அந்தப்பெட்டி யைத் திரும்ப இஸ்ரவேலரிடத்திற்கு அனுப்பிவிட்டார்க ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . 2. சாமு . 6. அதி காரத்திலே அந்தப் பெட்டியைத் தாவீது முப்பதினாயிரம் பேரோடுபோய் ஒரு புது இரதத்தின் மேலேற்றிக்கொண்டு வரும்பொழுது ; மாடுகள் அப்பெட்டியை அசைத்தபடியி னாலே அவ்விரதத்தை நடத்திய ஊசா அகியோ என்னுமிரு வருள் ஊசா தன் கையை நீட்டி அதைப்பிடித்தான் என்றும் அதினால் யெகோவா அவனைக் கோபித்துக் கொன்றுபோட் டார் என்றும் அதுகண்டு தாவீது பயந்து யெகோவாள் பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி அதைத் தன்னிடத்திலே கொண்டுவர விரும்பாமல் கித்திய னாகிய ஓபெத் ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத் தான் என்றும் அந்தப்பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாசம் தங்கிற்றென்றும் அதினிமித்தம் யெகோவா ஒபெத் 14 Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org இலிங்கப் பிரகரணம் ஏதோமையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர் வதித்தார் என்றும் தாவீது அதை அறிந்துபோய் அந்தப் பெட்டியைத் தன் நகரத்திலே கொண்டுவந்து வைத்துப் பலி கொடுத்து ஆராதனை பண்ணினான் என்றும் சொல்லப்பட் டிருக்கின்றது . 1.இரா.6.8.அதிகாரங்களிலே தாவீதின் குமாரனாகிய சலோமோன் யெரூஷலேமிலே ஒரு ஆலயங் கட்டி அதிலே அந்தப்பெட்டியை வைத்துப் பிரதிட்டை பண்ணி அனேகம் ஆடுமாடுகளைப் பலிகொடுத்து ஆராதனை செய்தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது . 15 இப்படியே உன் சமயநூலிலே உன் தேவனாகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருபக்கத்திலும் இரண்டு கெரூபிகளையும் வைத்து ஆராதனைபண்ணும்படி விதித்தார் என்றும் அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்களென்றும் யெகோவா அந்தப்பெட்டியிலே பிரசன்னராகிக் கிருபைசெய்தாரென்றும் அந்தப்பெட்டியை அவமதிசெய்தவர்களைத் தண்டித்தார் என்றும் சொல்லப்பட் டிருக்கின்றது . அதை அறிந்துகொண்டும் கோதுமை அப்பத் தையும் திராட்சரசத்தையும் உன்தேவனாகிய கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமுமாகவேனும் அவைகளுக்கு அறிகுறியாக வேனும் பாவித்து உட்கொள்ளளல்வேண்டும் என்று புதிய வுடன்படிக்கையில் விதித்தபடி செய்துகொண்டும் எங்களைக் கல்லையும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகளென்றும் கடவுளுக்குச் செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில் லாத விக்கிரகங்களுக்குச்செய்யும் பாவிகளென்றும் தூஷிப் பது மதிமயக்கமன்றோ ? அறிகுறியும் அதிட்டேயமுமாகிய இலிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச் செய்யும் வழிபாட் டைத் தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கமுடையவரல்லர் .