சைவ தூஷண பரிகாரம்

10. புண்ணியகாலப் பிரகரணம் சோமவாரம் மங்கலவாரம் சுக்கிரவாரம் பானுவாரம் அமாவாசி பூரணை சதுர்த்தி சட்டி கார்த்திகை சிவராத்திரி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு உற்சவகாலம் முதலிய தினங்கள் புண்ணியகாலங்களென்றும், அவைகளிலே மனம் பொறிவழி போகாமல் உண்டி சுருங்குதல் செய்து கடவுளை விதிப்படி விசேஷமாக வழிபடுதல் பெரும்புண்ணியம் என்றும் சைவ நூல்கள் சொல்கின்றன. 2.இரா.4.22.23. தன் புருஷனைக் கூப்பிட்டு நான் தேவனுடைய தாசனிடத்திற் போய்வரும்படி வாலிபரில் ஒருவனையும்,கழுதைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பும் என்றாள். அதற்கு, அவன் நீ இன்றைக்கு அவ னிடத்திற் போகவேண்டியதென்ன; அமாவாசியுமல்ல, ஓய்வு நாளுமல்லவென்று சொல்ல, அவள் நன்மையாய் முடியுமென் றாள். 1.நாளா.23.31. ஓய்வுநாளிலும், அமாவாசியிலும், நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும்; தொகைப்படி, தங்களுக் குக் கட்டளையிடப்பட்ட விதிப்பிரகாரம், யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் யெகோவாவுக்குச் சகல தகனபலிகளையு மிடவும், லேவி. 23-ம் அதிகாரத்திலும் பிறவிடங்களிலும் ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும் பூரணையும் உற்சவ நாள்களும் புண்ணியகாலங்கள் என்றும், அந்தக்காலங்களிலே யெகோவாவின் ஆவாசத்தை விட்டுப் பிரியலாகாதென்றும், எவ்வித சாதாரணவேலையுஞ் செய்யலாகாதென்றும், நித்தி யாக்கினியிலே இறைச்சி முதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல் வேண்டும் என்றும், தங்கள் தங்கள் சங்கற்பத்தின் படியே நியமித்த தினங்களிலே உபலசித்து விரதமனுட்டித் தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. சிவாசாரியப் பிரகரணம் இப்படியே உன்விவிலிய நூல் பேசுவதைக் கண்டுகொண் டும், எங்களைப்போலவே பானுவாரத்தைப் புண்ணியகால மன்று கொண்டாடிக்கொண்டும் எங்களை நோக்கி, நீங்கள் காலமெல்லாம் சமமாயிருக்கச் சிலவற்றை வேறுபிரித்துப் ண்ணியகாலங்களென்றுகொண்டு, விரதம் அனுட்டித்தலும் திருவிழாக்கொண்டாடுதலும் வீண்செய்கைகள் என்று றிதற்றுவது அழகா? Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 25 11. சிவாசாரியப் பிரகரணம் பரார்த்தலிங்கப்பிரதிட்டை பரார்த்தபூசை உற்சவம் சகலகர்மங்களும் யவர்களாய் என்பனவும் செய்தற்கு கௌசிகாதி பஞ்சரிஷிகோத்திரத்திற் பிறந்த ஆதிசைவர் என்னும் சிவப்பிராமணர்களுள், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய், சமயம் விசேஷம் நிருவாணம் என்னும் மூன்றுதீக்ஷையும் பெற்றவர் களாய், சைவாகமங்களை ஓதியுணர்ந்தவர்களாய், சிவாகமங் களில் விதித்த இன்னோரன்னபல இலக்கணங்களையும் உடை ஆசாரியாபிஷேகம்பெற்ற சிவாசாரியர்களே அதிகாரிகள் என்றும், மற்றைப்பிராமணர் க்ஷத்திரியர் வைசி யர் சூத்திரர் என்னும் நான்கு வருணத்தார்களுள்ளும் மேற் கூறியவாறே ஆசாரியாபிஷேகம் பெற்றவர்கள் மேற்கூறிய பரார்த்தலிங்கப் பிரதிட்டை முதலியன நீங்கலாக மற்றை ஆன்மார்த்தலிங்கப் பிரதிட்டை தீக்ஷை முதலியன செய்வதற்கு அதிகாரிகளென்றும், அவர்களெல்லாரும் மனிதப்பிறப்பின ராயினும் தேவர்களாகப் பாவிக்கற்பாலர் என்றும் அவர்களைப் பூசிப்பவர்கள் சிவனைப்பூசிப்பவர்களென்றும், அவர்களைத் தூஷிப்பவர்கள் சிவனைத் தூஷிப்பவர்கள் என்றும், அவர்க தீக்ஷைமுதலியனவுமாகிய
10. புண்ணியகாலப் பிரகரணம் சோமவாரம் மங்கலவாரம் சுக்கிரவாரம் பானுவாரம் அமாவாசி பூரணை சதுர்த்தி சட்டி கார்த்திகை சிவராத்திரி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு உற்சவகாலம் முதலிய தினங்கள் புண்ணியகாலங்களென்றும் அவைகளிலே மனம் பொறிவழி போகாமல் உண்டி சுருங்குதல் செய்து கடவுளை விதிப்படி விசேஷமாக வழிபடுதல் பெரும்புண்ணியம் என்றும் சைவ நூல்கள் சொல்கின்றன . 2.இரா .4.22.23 . தன் புருஷனைக் கூப்பிட்டு நான் தேவனுடைய தாசனிடத்திற் போய்வரும்படி வாலிபரில் ஒருவனையும் கழுதைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பும் என்றாள் . அதற்கு அவன் நீ இன்றைக்கு அவ னிடத்திற் போகவேண்டியதென்ன ; அமாவாசியுமல்ல ஓய்வு நாளுமல்லவென்று சொல்ல அவள் நன்மையாய் முடியுமென் றாள் . 1.நாளா .23.31 . ஓய்வுநாளிலும் அமாவாசியிலும் நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும் ; தொகைப்படி தங்களுக் குக் கட்டளையிடப்பட்ட விதிப்பிரகாரம் யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் யெகோவாவுக்குச் சகல தகனபலிகளையு மிடவும் லேவி . 23 - ம் அதிகாரத்திலும் பிறவிடங்களிலும் ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும் பூரணையும் உற்சவ நாள்களும் புண்ணியகாலங்கள் என்றும் அந்தக்காலங்களிலே யெகோவாவின் ஆவாசத்தை விட்டுப் பிரியலாகாதென்றும் எவ்வித சாதாரணவேலையுஞ் செய்யலாகாதென்றும் நித்தி யாக்கினியிலே இறைச்சி முதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல் வேண்டும் என்றும் தங்கள் தங்கள் சங்கற்பத்தின் படியே நியமித்த தினங்களிலே உபலசித்து விரதமனுட்டித் தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . சிவாசாரியப் பிரகரணம் இப்படியே உன்விவிலிய நூல் பேசுவதைக் கண்டுகொண் டும் எங்களைப்போலவே பானுவாரத்தைப் புண்ணியகால மன்று கொண்டாடிக்கொண்டும் எங்களை நோக்கி நீங்கள் காலமெல்லாம் சமமாயிருக்கச் சிலவற்றை வேறுபிரித்துப் ண்ணியகாலங்களென்றுகொண்டு விரதம் அனுட்டித்தலும் திருவிழாக்கொண்டாடுதலும் வீண்செய்கைகள் என்று றிதற்றுவது அழகா ? Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 25 11. சிவாசாரியப் பிரகரணம் பரார்த்தலிங்கப்பிரதிட்டை பரார்த்தபூசை உற்சவம் சகலகர்மங்களும் யவர்களாய் என்பனவும் செய்தற்கு கௌசிகாதி பஞ்சரிஷிகோத்திரத்திற் பிறந்த ஆதிசைவர் என்னும் சிவப்பிராமணர்களுள் பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய் சமயம் விசேஷம் நிருவாணம் என்னும் மூன்றுதீக்ஷையும் பெற்றவர் களாய் சைவாகமங்களை ஓதியுணர்ந்தவர்களாய் சிவாகமங் களில் விதித்த இன்னோரன்னபல இலக்கணங்களையும் உடை ஆசாரியாபிஷேகம்பெற்ற சிவாசாரியர்களே அதிகாரிகள் என்றும் மற்றைப்பிராமணர் க்ஷத்திரியர் வைசி யர் சூத்திரர் என்னும் நான்கு வருணத்தார்களுள்ளும் மேற் கூறியவாறே ஆசாரியாபிஷேகம் பெற்றவர்கள் மேற்கூறிய பரார்த்தலிங்கப் பிரதிட்டை முதலியன நீங்கலாக மற்றை ஆன்மார்த்தலிங்கப் பிரதிட்டை தீக்ஷை முதலியன செய்வதற்கு அதிகாரிகளென்றும் அவர்களெல்லாரும் மனிதப்பிறப்பின ராயினும் தேவர்களாகப் பாவிக்கற்பாலர் என்றும் அவர்களைப் பூசிப்பவர்கள் சிவனைப்பூசிப்பவர்களென்றும் அவர்களைத் தூஷிப்பவர்கள் சிவனைத் தூஷிப்பவர்கள் என்றும் அவர்க தீக்ஷைமுதலியனவுமாகிய