சைவ தூஷண பரிகாரம்

44 சைவதூஷணபரிகாரம் 18. சிவபுராணப் பிரகரணம் சிவபுராணங்களிலே சிவனுடைய மகிமையும், அவராலே விதிக்கப்பட்ட சிவபுண்ணியங்கள் பசுபுண்ணியங்களும், அவைகளைச் செய்யும் முறைமையும், அவைகளைச் செய்தவர் கள் பெற்ற பெரும்பேறும், சிவத்துரோகம் முதலிய பாவங் களும், அவைகளைச் செய்தவர்கள் பெற்றதண்டமும், சொல்லப்படுகிறபடியால், அவைகளை அறிந்தவர்களுக்குப் பாவங்களிலே வெறுப்பும், புண்ணியங்களிலே விருப்பும், சிவ னிடத்திலே பத்தியும் உதிக்கும். ஆதலால்,அச்சிவ புராணங்களை ஆலயம் மடம் முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே அன்புடனே விதிப்படி பூசித்து வாசித்தலும், பிரசாரம் பண்ணுதலும், கேட்டலும் புண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன. 2 நிகி.9.3. அவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே நின்றுகொண்டு ஒருசாமமட்டும் தங்கள் தேவனாகிய யெகோ வாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தார்கள். 1. தெச.5.27. இந்த நிருபத்தைப் பரிசுத்தமான சகோதரர் யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, கர்த்தரைக் கொண்டு உங்களை ஆணை இடுவிக்கின்றேன். கொலோ.4. 16. இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்,இலா வோதிக்கையா சபையி லும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள். உன்சமய நூலிலே இப்படிப் பேசப்பட்டயை கண்டு கொண்டும், நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினாலே யாதொருபயனும் இல்லை யென்று பேசுகின்றாய். அப்படியாயின், நீ உன்சமய நூலை வெகுபொருள் செலவிட்டு அச்சிற்பதிப்பித்து அநேகர் வாசிக்கும்படி கொடுப்பது என்னை? நீ வாசித்து அதன் பொருளைப் பிறருக்குச்சொல்வது என்னை? இப்படித் தனக் புண்ணியதீர்த்தப் பிரகரணம் கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயும் பேசலாமா? நாங்கள், எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல் களினாலே பெரும்பயனுண்டென்பதைச் சகல பிரமாணங்களி னாலும் பூரணமாயறிந்திருக்கிறோம். 45 19. புண்ணியதீர்த்தப் பிரகரணம் சிவகங்கை கங்கை சேது முதலியன சிவனது அருட் சத்தி பதிதலால் புண்ணியதீர்த்தங்களாம் என்றும், அவை களிலே அன்புடன் விதிப்படி ஸ்நானம் பண்ணுகின்றவர் களுக்குப் பாவங்களும் குஷ்டம் முதலிய நோய்களும் நீங்கு மென்றும் சைவ நூல்கள் சாற்றுகின்றன. 2.இராசா 5-ம் அதிகாரத்திலே நாமான் என்பவன் யோர்தான் நதியிலே ஸ்நானம் பண்ணினதினால், அவனை வருத்திய குஷ்டரோகம் நீங்கிற்று என்றும், யோவான். 5-ம் அதிகாரத்திலே குருடர் சப்பாணிகள் கும்பின உறுப்பை யுடையவர்கள் முதலான அநேக வியாதிக்காரர் யெரூஷலேமி லுள்ள பேதெஸ்தா என்னப்பட்ட குளத்திலே ஸ்நானம் பண்ணினதினாலே சொஸ்தமடைந்தார்களென்னும் சொல்லப் பட்டிருக்கின்றது. அன்றியும் ஒருவன் உன்சமயத்திலே பிரவேசிக்கும் பொழுது, அவனுடைய அஞ்ஞானமெல்லாம் போக்கி அவனிடத்தே ஞானத்தைப் பதிக்கின்றோமென்று சொல்லி,தண்ணீரினாலே அவனைஸ்நானம்பண்ணுவிக்கின்றாய் இப்படியிருக்க நீ எங்களை நோக்கி, பூமியிலே உள்ள மற்றைத் தண்ணீரைப்பார்க்கிலும் புண்ணிய தீர்த்தம் என்னப் பட்டதில் இருக்கும் விசேஷம் யாது? அதிலே ஸ்நானம் பண்ணுதலினால் சரீரத்திலுள்ள அழுக்குப்போமேயன்றிக் குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்குமா? பாவங்கள் விமோசன மாமா? என்று இகழ்வது என்னை? Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
44 சைவதூஷணபரிகாரம் 18. சிவபுராணப் பிரகரணம் சிவபுராணங்களிலே சிவனுடைய மகிமையும் அவராலே விதிக்கப்பட்ட சிவபுண்ணியங்கள் பசுபுண்ணியங்களும் அவைகளைச் செய்யும் முறைமையும் அவைகளைச் செய்தவர் கள் பெற்ற பெரும்பேறும் சிவத்துரோகம் முதலிய பாவங் களும் அவைகளைச் செய்தவர்கள் பெற்றதண்டமும் சொல்லப்படுகிறபடியால் அவைகளை அறிந்தவர்களுக்குப் பாவங்களிலே வெறுப்பும் புண்ணியங்களிலே விருப்பும் சிவ னிடத்திலே பத்தியும் உதிக்கும் . ஆதலால் அச்சிவ புராணங்களை ஆலயம் மடம் முதலிய பரிசுத்தஸ்தானங்களிலே அன்புடனே விதிப்படி பூசித்து வாசித்தலும் பிரசாரம் பண்ணுதலும் கேட்டலும் புண்ணியம் என்று சைவநூல்கள் சாற்றுகின்றன . 2 நிகி .9.3 . அவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே நின்றுகொண்டு ஒருசாமமட்டும் தங்கள் தேவனாகிய யெகோ வாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தார்கள் . 1 . தெச .5.27 . இந்த நிருபத்தைப் பரிசுத்தமான சகோதரர் யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று கர்த்தரைக் கொண்டு உங்களை ஆணை இடுவிக்கின்றேன் . கொலோ .4 . 16. இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின் இலா வோதிக்கையா சபையி லும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள் . உன்சமய நூலிலே இப்படிப் பேசப்பட்டயை கண்டு கொண்டும் நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினாலே யாதொருபயனும் இல்லை யென்று பேசுகின்றாய் . அப்படியாயின் நீ உன்சமய நூலை வெகுபொருள் செலவிட்டு அச்சிற்பதிப்பித்து அநேகர் வாசிக்கும்படி கொடுப்பது என்னை ? நீ வாசித்து அதன் பொருளைப் பிறருக்குச்சொல்வது என்னை ? இப்படித் தனக் புண்ணியதீர்த்தப் பிரகரணம் கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயும் பேசலாமா ? நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல் களினாலே பெரும்பயனுண்டென்பதைச் சகல பிரமாணங்களி னாலும் பூரணமாயறிந்திருக்கிறோம் . 45 19. புண்ணியதீர்த்தப் பிரகரணம் சிவகங்கை கங்கை சேது முதலியன சிவனது அருட் சத்தி பதிதலால் புண்ணியதீர்த்தங்களாம் என்றும் அவை களிலே அன்புடன் விதிப்படி ஸ்நானம் பண்ணுகின்றவர் களுக்குப் பாவங்களும் குஷ்டம் முதலிய நோய்களும் நீங்கு மென்றும் சைவ நூல்கள் சாற்றுகின்றன . 2.இராசா 5 - ம் அதிகாரத்திலே நாமான் என்பவன் யோர்தான் நதியிலே ஸ்நானம் பண்ணினதினால் அவனை வருத்திய குஷ்டரோகம் நீங்கிற்று என்றும் யோவான் . 5 - ம் அதிகாரத்திலே குருடர் சப்பாணிகள் கும்பின உறுப்பை யுடையவர்கள் முதலான அநேக வியாதிக்காரர் யெரூஷலேமி லுள்ள பேதெஸ்தா என்னப்பட்ட குளத்திலே ஸ்நானம் பண்ணினதினாலே சொஸ்தமடைந்தார்களென்னும் சொல்லப் பட்டிருக்கின்றது . அன்றியும் ஒருவன் உன்சமயத்திலே பிரவேசிக்கும் பொழுது அவனுடைய அஞ்ஞானமெல்லாம் போக்கி அவனிடத்தே ஞானத்தைப் பதிக்கின்றோமென்று சொல்லி தண்ணீரினாலே அவனைஸ்நானம்பண்ணுவிக்கின்றாய் இப்படியிருக்க நீ எங்களை நோக்கி பூமியிலே உள்ள மற்றைத் தண்ணீரைப்பார்க்கிலும் புண்ணிய தீர்த்தம் என்னப் பட்டதில் இருக்கும் விசேஷம் யாது ? அதிலே ஸ்நானம் பண்ணுதலினால் சரீரத்திலுள்ள அழுக்குப்போமேயன்றிக் குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்குமா ? பாவங்கள் விமோசன மாமா ? என்று இகழ்வது என்னை ? Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org