சைவ தூஷண பரிகாரம்

66 சைவதூஷணபரிகாரம் சுக மோக்ஷம் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைந்து சகலரும் மற்றைப் புண்ணியங்களெல்லாவற்றையும் செய்யாமல் விட்டு விடுவார்களே; இப்படிச்சொல்லும் சமயநூல் பாவஞ்செய் யும்படி சகலரையும் ஏவுகின்றதே; இப்படிப்பட்ட அற்ப புண்ணியம் செய்தவனுக்கு இவ்வளவு பயனென்றால், பெரும்புண்ணியத்தைச் செய்தவனுக்கு எவ்வளவு அதிக மாகிய பயனுண்டு? அப்படிப்பட்ட புண்ணியங்கள் ஆயிரம் பதினாயிரம் ஒருவன் செய்தால், அவனுக்குக் கிடைக்கும் பயனுக்கு அளவில்லையே, என்று வாயில் வந்தபடியே பிதற்றுகின்றாய். ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத்தக்க துக்கங்களை அனுபவிப்பார்க ளென்றும், பாவங்கள் வீதிப்படி பிராயச்சித்தம் செய்தவழி நீங்குமென்றும், பின்னர் பிராயச்சித்தஞ்செய்துகொள்வோ மென நினைந்து முன்னர்ப் பாவஞ்செய்தார் தண்டிக்கப்படுவா ரென்றும், சீவசாத்திரங்கள் செப்புகின்றன. இப்படிச் சொல்லும் எங்கள் சமயநூலோ, எவ்வகைப்பட்ட பாவங் களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசித்தவர் நித்தியமோட்சத்தை அடைவாரென்றும், எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசியாதவர் நித்திய நரகத்தை அடைவாரென்றும் சொல்கிற உன்சமயநூலோ, ஆன்மாக்களைப் பாவம் செய்யும் படி ஏவும் நூல்? நன்றாகச் சிந்தித்துணர்ந்து பேசு. செய்தும் எங்கள் தேவனாகிய கிறிஸ்துவை அந்தக்கள்ளன் புத்தி பூர்வமாகப் பிரார்த்தித்தபடியால் மோக்ஷம்சேர்ந்தான்; அந்த ஸ்திரீயும் அவரைப் புத்திபூர்வமாக வழிபட்டதனால் அவளுடைய பாவங்கள் நிவாரணமாயின. உங்கள் சிவ புராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப் விவேசனம் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 67 நேரம் பட்டனவல்லவே; சிவ சிவ என்றுசொன்னதினாலும், விபூதி சரீரத்திலே பட்டதினாலும், புண்ணிய ஸ்தலத்திலே சற்று தங்கினதினாலும் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்படுகின்றதே என்பாயாகில்; கடவுள் சர்வசாமர்த் திய முள்ளவராகையால், ஒன்றுக்கும் பற்றாத ஒருதுரும்பை நோக்கி நீ உலகமெல்லாவற்றையும் தாங்கு என்று அருளிச் செய்யினும், அது அங்ஙனம் செய்யவல்லதாகும்; தாங்கென் றுரைத்த அக்கடவுளதுசத்தி நன்னிடத்தே பதிந்திருக் கின்றமையினாலேயே, அங்ஙனம் விசேஷமுள்ள தாயிற்று. அவ்வாறே அக்கடவுளால் நியமிக்கப்பட்ட பொருள் இடம் காலம் கிரியை என்பவைகளெல்லாம், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்திருக்கின்றமையால், புண்ணியப்பொருள்களும், புண்ணியஸ்தலங்களும், புண்ணிய காலங்களும், புண்ணியக்கிரியைகளுமாய், விசேஷம் அடைந் தன. சிவசிவ அரகர சம்பு மகாதேவ என்றற் றொடக் கத்துச் சொற்களும் அவருடைய திருநாமங்களாயிருத்த லால், அவரைத்தொட்டுப் புண்ணியநாமங்களாய் விசேஷம் அடைந்தன. விபூதிருத்திராக்ஷங்களும் அவராலே தரிக்கப் பட்டமையாலும், அவருடைய சத்தி தங்களிடத்திலே பதிந்தமையாலும், புண்ணியப்பொருள்களாயின. அவரை வழிபடுகின்றவர்களும் அவருக்கு அடிமைகளாயின்படியா லும், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்தமையாலும் புண்ணியவான்களாய் விசேஷமடைந்தார்கள். மத்.26. 26-28. யேசு அப்பத்தை எடுத்து, துதிசெய்து, அதைப் பிட்டு, சீஷருக்குக்கொடுத்து, நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீரமென்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரஞ்சொல்லி, அதை அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள்.
66 சைவதூஷணபரிகாரம் சுக மோக்ஷம் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைந்து சகலரும் மற்றைப் புண்ணியங்களெல்லாவற்றையும் செய்யாமல் விட்டு விடுவார்களே ; இப்படிச்சொல்லும் சமயநூல் பாவஞ்செய் யும்படி சகலரையும் ஏவுகின்றதே ; இப்படிப்பட்ட அற்ப புண்ணியம் செய்தவனுக்கு இவ்வளவு பயனென்றால் பெரும்புண்ணியத்தைச் செய்தவனுக்கு எவ்வளவு அதிக மாகிய பயனுண்டு ? அப்படிப்பட்ட புண்ணியங்கள் ஆயிரம் பதினாயிரம் ஒருவன் செய்தால் அவனுக்குக் கிடைக்கும் பயனுக்கு அளவில்லையே என்று வாயில் வந்தபடியே பிதற்றுகின்றாய் . ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத்தக்க துக்கங்களை அனுபவிப்பார்க ளென்றும் பாவங்கள் வீதிப்படி பிராயச்சித்தம் செய்தவழி நீங்குமென்றும் பின்னர் பிராயச்சித்தஞ்செய்துகொள்வோ மென நினைந்து முன்னர்ப் பாவஞ்செய்தார் தண்டிக்கப்படுவா ரென்றும் சீவசாத்திரங்கள் செப்புகின்றன . இப்படிச் சொல்லும் எங்கள் சமயநூலோ எவ்வகைப்பட்ட பாவங் களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசித்தவர் நித்தியமோட்சத்தை அடைவாரென்றும் எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசியாதவர் நித்திய நரகத்தை அடைவாரென்றும் சொல்கிற உன்சமயநூலோ ஆன்மாக்களைப் பாவம் செய்யும் படி ஏவும் நூல் ? நன்றாகச் சிந்தித்துணர்ந்து பேசு . செய்தும் எங்கள் தேவனாகிய கிறிஸ்துவை அந்தக்கள்ளன் புத்தி பூர்வமாகப் பிரார்த்தித்தபடியால் மோக்ஷம்சேர்ந்தான் ; அந்த ஸ்திரீயும் அவரைப் புத்திபூர்வமாக வழிபட்டதனால் அவளுடைய பாவங்கள் நிவாரணமாயின . உங்கள் சிவ புராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப் விவேசனம் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 67 நேரம் பட்டனவல்லவே ; சிவ சிவ என்றுசொன்னதினாலும் விபூதி சரீரத்திலே பட்டதினாலும் புண்ணிய ஸ்தலத்திலே சற்று தங்கினதினாலும் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்படுகின்றதே என்பாயாகில் ; கடவுள் சர்வசாமர்த் திய முள்ளவராகையால் ஒன்றுக்கும் பற்றாத ஒருதுரும்பை நோக்கி நீ உலகமெல்லாவற்றையும் தாங்கு என்று அருளிச் செய்யினும் அது அங்ஙனம் செய்யவல்லதாகும் ; தாங்கென் றுரைத்த அக்கடவுளதுசத்தி நன்னிடத்தே பதிந்திருக் கின்றமையினாலேயே அங்ஙனம் விசேஷமுள்ள தாயிற்று . அவ்வாறே அக்கடவுளால் நியமிக்கப்பட்ட பொருள் இடம் காலம் கிரியை என்பவைகளெல்லாம் அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்திருக்கின்றமையால் புண்ணியப்பொருள்களும் புண்ணியஸ்தலங்களும் புண்ணிய காலங்களும் புண்ணியக்கிரியைகளுமாய் விசேஷம் அடைந் தன . சிவசிவ அரகர சம்பு மகாதேவ என்றற் றொடக் கத்துச் சொற்களும் அவருடைய திருநாமங்களாயிருத்த லால் அவரைத்தொட்டுப் புண்ணியநாமங்களாய் விசேஷம் அடைந்தன . விபூதிருத்திராக்ஷங்களும் அவராலே தரிக்கப் பட்டமையாலும் அவருடைய சத்தி தங்களிடத்திலே பதிந்தமையாலும் புண்ணியப்பொருள்களாயின . அவரை வழிபடுகின்றவர்களும் அவருக்கு அடிமைகளாயின்படியா லும் அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்தமையாலும் புண்ணியவான்களாய் விசேஷமடைந்தார்கள் . மத் .26 . 26-28 . யேசு அப்பத்தை எடுத்து துதிசெய்து அதைப் பிட்டு சீஷருக்குக்கொடுத்து நீங்கள் எடுத்துப் புசியுங்கள் ; இதுவே என்சரீரமென்றார் . பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரஞ்சொல்லி அதை அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள் .