சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவ கர்மங்க ளினாலேயே பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றார்க ளெனில், அவர்கள் ஆதியிலே கடவுளால் படைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அனுபவித்தற்கு, முன்னே என்ன கர்மஞ் செய்திருந்தார்கள்? என்பாயாகில்: பசுக்களும், அப்பசுக்களைப் பந்தித்தபாசமும், அப்பாசத்தை ஒழித்து அப்பசுக்களுக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்பொருட்டுப்பதியினாலே செய்யப் படும் பஞ்சகிர்த்தியமும் ஆதியல்ல, அனாதியேயாம். பதியைப் போலப் பசுக்களையும் அநாதியெனில், பதியை ஒப்பில்லாதவ ரென்றல் கூடாதே என்பாயாகில், நீ ஆன்மாவுக்கு உற்பத்தி யுண்டு நாசம் இல்லையெனக் கூறுகின்றாயே: அவ்வழியும், பதியைப்போலப் பசுவை நாசமில்லாததென்கையால், பதியை ஒப்பில்லாதவரென்றல் பொருந்தாதென்று பேசல் வேண் டுமே! பதியும் பசுவும் அனாதிசித்தாயினும்,பதி அனாதி மலமுத்தசித்தும், பசு அனாதிமல்பெத்தசித்தும் பதி பசுவுக் குப் பரமுத்திவியத்திக்குறி அனுக்கிரகம்பண்ணும் சித்தும், பசு அவ்வனுக்கிரகத்தைப் பதியினிடத்தினின்றும் பெறும் சித்தும், பதி சிருட்டி சங்கார திதி திரோபாவ பத முத்தி அனுக்கிரகங்களைப் பண்ணுஞ் சித்தும், பசு அந்தப் பஞ்ச கிருத்திய பரதந்திரத்தில் அகப்பட்டுக்கட்டுண்ணுஞ்சித்தும், பதி ஒருவராலறிவிக்கப்படாது தானே அறியுஞ் சித்தும் பசு சிற்றறிவு பேரறிவுகளினால் உணர்த்துவிக்க யோக்கியமாகுஞ் சித்துமாய் இருத்தலால், பதியை ஓப்பில்லாதவர் என்றல் கூடாதென்பது கூடாது. 90 பஞ்சகிருத்தியங்களை அநாதி என்றல் எவ்வாறு? என்பா யாகில்; பஞ்சகிருத்தியஞ் செய்யும்பதியும், அப்பஞ்சகிர்த்தி யங்களில் அகப்படும் பசுவும், அநாதியாமாதலாலும், அனாதி யாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிர்த்தி விவேசனம் 91 யஞ் செய்யத் தொடங்கினரெனில், அவரை நிருவிகாரியென் றல் கூடாமையானும், ஒருவனிடத்தினின்றும் உயிர்ப் புண்டாயொடுங்குதல் சிலகாலஞ் சென்றபின்னர்த் தோன்றுத லின்றி ஓயாது எக்காலத்தும் வருதல்போல, பதியினின்றும் உண்டாகும் பஞ்சகிருத்தியங்களும் சிலகாலத்துக்குப் பினனர்த்தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருமாத லாலும், பதி பஞ்சகிருத்தியம் அநாதியென்பதே சித்தம். இப்படிப்பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும் என்பாயாகில்,பலசென்மங்களிலே நிஷ் காமியமாகச் செய்த புண்ணியங்களினாலே, மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு சத்திநிபாதங்களும் கிரமமாகவரும். அப்பொழுது கருணாநிதியாகிய சிவன் ஆசாரியமூர்த்தியை அதிட்டித்து, சிவதீக்ஷை செய்து, முறையே சரியை கிரியை யோகம் ஞானங்களிலே நிறுத்துவர். இந்நான்கு பாதங்களின் வழிநின்றவர்கள் முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சியங்களைப் பெறுவார்கள். இவைக ளெல்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கில், தெளி வாக விளங்கும். Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org சைவாகமங்களை எனக்கு உணர்த்தல்வேண்டும் என்பா யாகில்; அவைகளைச் சிவநிந்தை பண்ணும் புறச்சமயிகளுக் குச் சொல்ல எங்களுக்குச் சிவனுடைய அனுமதியில்லை. ஆதலால், உனக்குச் சொல்வதுகூடாது, மத்.7.6. "நீங்கள் நாய்களுக்குப் பரிசுத்தமானதை இடாதிருங்கள், பன்றி களுக்குமுன் உங்கள் முத்துக்களைப் போடாதிருங்கள்; இவை கள் அந்த முத்துக்களைக் கால்களால் உழக்கி, திரும்பி உங்களைப்பீறும்.'' என்னும் வசனத்தை நீ மறந்தனை போலும்.அதுநிற்க,சைவர்களுள்ளும் எல்லாரும் சைவாக மங்களை வாசித்தற்கு அதிகாரிகளல்லர். சைவாகமங்களில்
சைவதூஷணபரிகாரம் ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவ கர்மங்க ளினாலேயே பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றார்க ளெனில் அவர்கள் ஆதியிலே கடவுளால் படைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அனுபவித்தற்கு முன்னே என்ன கர்மஞ் செய்திருந்தார்கள் ? என்பாயாகில் : பசுக்களும் அப்பசுக்களைப் பந்தித்தபாசமும் அப்பாசத்தை ஒழித்து அப்பசுக்களுக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்பொருட்டுப்பதியினாலே செய்யப் படும் பஞ்சகிர்த்தியமும் ஆதியல்ல அனாதியேயாம் . பதியைப் போலப் பசுக்களையும் அநாதியெனில் பதியை ஒப்பில்லாதவ ரென்றல் கூடாதே என்பாயாகில் நீ ஆன்மாவுக்கு உற்பத்தி யுண்டு நாசம் இல்லையெனக் கூறுகின்றாயே : அவ்வழியும் பதியைப்போலப் பசுவை நாசமில்லாததென்கையால் பதியை ஒப்பில்லாதவரென்றல் பொருந்தாதென்று பேசல் வேண் டுமே ! பதியும் பசுவும் அனாதிசித்தாயினும் பதி அனாதி மலமுத்தசித்தும் பசு அனாதிமல்பெத்தசித்தும் பதி பசுவுக் குப் பரமுத்திவியத்திக்குறி அனுக்கிரகம்பண்ணும் சித்தும் பசு அவ்வனுக்கிரகத்தைப் பதியினிடத்தினின்றும் பெறும் சித்தும் பதி சிருட்டி சங்கார திதி திரோபாவ பத முத்தி அனுக்கிரகங்களைப் பண்ணுஞ் சித்தும் பசு அந்தப் பஞ்ச கிருத்திய பரதந்திரத்தில் அகப்பட்டுக்கட்டுண்ணுஞ்சித்தும் பதி ஒருவராலறிவிக்கப்படாது தானே அறியுஞ் சித்தும் பசு சிற்றறிவு பேரறிவுகளினால் உணர்த்துவிக்க யோக்கியமாகுஞ் சித்துமாய் இருத்தலால் பதியை ஓப்பில்லாதவர் என்றல் கூடாதென்பது கூடாது . 90 பஞ்சகிருத்தியங்களை அநாதி என்றல் எவ்வாறு ? என்பா யாகில் ; பஞ்சகிருத்தியஞ் செய்யும்பதியும் அப்பஞ்சகிர்த்தி யங்களில் அகப்படும் பசுவும் அநாதியாமாதலாலும் அனாதி யாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிர்த்தி விவேசனம் 91 யஞ் செய்யத் தொடங்கினரெனில் அவரை நிருவிகாரியென் றல் கூடாமையானும் ஒருவனிடத்தினின்றும் உயிர்ப் புண்டாயொடுங்குதல் சிலகாலஞ் சென்றபின்னர்த் தோன்றுத லின்றி ஓயாது எக்காலத்தும் வருதல்போல பதியினின்றும் உண்டாகும் பஞ்சகிருத்தியங்களும் சிலகாலத்துக்குப் பினனர்த்தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருமாத லாலும் பதி பஞ்சகிருத்தியம் அநாதியென்பதே சித்தம் . இப்படிப்பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும் என்பாயாகில் பலசென்மங்களிலே நிஷ் காமியமாகச் செய்த புண்ணியங்களினாலே மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு சத்திநிபாதங்களும் கிரமமாகவரும் . அப்பொழுது கருணாநிதியாகிய சிவன் ஆசாரியமூர்த்தியை அதிட்டித்து சிவதீக்ஷை செய்து முறையே சரியை கிரியை யோகம் ஞானங்களிலே நிறுத்துவர் . இந்நான்கு பாதங்களின் வழிநின்றவர்கள் முறையே சாலோக சாமீப சாரூப சாயுச்சியங்களைப் பெறுவார்கள் . இவைக ளெல்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கில் தெளி வாக விளங்கும் . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org சைவாகமங்களை எனக்கு உணர்த்தல்வேண்டும் என்பா யாகில் ; அவைகளைச் சிவநிந்தை பண்ணும் புறச்சமயிகளுக் குச் சொல்ல எங்களுக்குச் சிவனுடைய அனுமதியில்லை . ஆதலால் உனக்குச் சொல்வதுகூடாது மத் .7.6 . நீங்கள் நாய்களுக்குப் பரிசுத்தமானதை இடாதிருங்கள் பன்றி களுக்குமுன் உங்கள் முத்துக்களைப் போடாதிருங்கள் ; இவை கள் அந்த முத்துக்களைக் கால்களால் உழக்கி திரும்பி உங்களைப்பீறும் . ' ' என்னும் வசனத்தை நீ மறந்தனை போலும்.அதுநிற்க சைவர்களுள்ளும் எல்லாரும் சைவாக மங்களை வாசித்தற்கு அதிகாரிகளல்லர் . சைவாகமங்களில்