தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01

துலைத் திங்கள், 2020 தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன், ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை, சைவ மாணவர் சபை (பதிவு - HA/4/JA/343) 0715588737 புதியாய் ஒரு பழையது ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் உலகம், தினமும் தன்னுள் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தன்னைத் தகவமைத்து நிலைக்கிறது. கடந்த காலத்தின் இறந்து போன ஓசை தான் "வரலாறு" எனும் பெயர் பெற்று எதிர்காலத்தை தீர்மானிக் கின்றது. எந்த இனம் தன் வரலாற்றை சரியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தவில்லையோ, அந்த இனத்தின் எதிர்காலம் எதிரும் புதிருமாய் அமைந்துவிடும் என்பது காலம் எமக்கு கற்றுத் தந்த பெரிய பாடம். நீண்ட நெடிய வரலாற்றையும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கியச் செழுமையும் கொண்டு, உலகின் கலாசாரத்தின் முதல் நிலத்தில் முகிழ்ந்த தழிழ் குடிகள், காலத்தாலும், கயமைகளாலும் தன் நிலை மாறித் தவிர்க்கின்ற பரிதாப நிலையை இன்று பார்க்கின்றோம். எது எங்கள் வழிபாடு? எது எங்கள் பண்பாடு என்பதைத் தாண்டி, எது எங்கள் சொற்கள்? எது எங்கள் எழுத்து என்கின்ற வரையில் குழம்பிப் போயுள்ள நிலை ஒருவித குற்ற உணர்வை எம்மிடையே ஏற்படுத்தியதால், இந்தக் குழப்பமும், தாழ்வு நிலையும் எதனால்? ஏப்போது? உருவானது என்ற கேள்வியின் தாக்கத்தால், இறந்துபோன அந்தக் காலத்தின் குறுகிப்போன ஓசையின் அதிர்வால் தேடல்கள் தொடர்கின்றன. ஆழ்ந்தும் அகன்றும், அகழ்ந்தும் தேடியதில் குழப்பங்கள் கூடியது. தேளிவின் ஒளியும் பிறந்தது "குழம்பாமல் தெளிவது எப்படி?" இந்த நிலையில் தான் உலகின் முதுபெரும் நிலமாகிய குமரிக்கண்டம், கடலோடு கலந்தததையும், அங்கிருந்து குடிகள் பெயர்ந்து உலகமெல்லாம் கால் ஊன்றியதையும், தென்னவர் வழிபாடாக அந்தக் தென்குமரியில் கடலோடு கலந்தததையும் நினைத்து வழிபடும் வரலாற்றின் அறுபடாத நீட்சியாய் உள்ள சிறு இழையைப் பற்றி தென்னாடாக, கொக்குவிலில் ஒரு சிவமடமும், அங்கிருந்த வெளியீடான இந்த மாத இதழும் புதியாய் ஒரு பழையதைப் பறைசாற்றப் பிறந்துள்ளது. சங்ககால வாழ்வியலின் தாக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமடைந்த இனத்தின் உள்ளாற்றல் என்பவற்றால் இன்று உலகின் அதிகார தலைமைப்பீடமாகத் தான் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் இன்று தன் தனித்துவங்களைக் கூட தொலைந்து அல்லாடும் இனமாக ஆனது எப்படி? இந்தக் கனதியான கேள்விகளுக்கு விடை பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டியது ஆயினும், ஒட்டுமொத்தமாக தம் இருப்புக்களை உணராத இளைய தலைமுறையாலும், தம்பொறுப்புக்களை உணராத மூத்த தலைமுறையாலும் இந்த நிலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகித்து அறியலாம். ஏந்த இனம் தன் வரலாற்றை தலைமுறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் கடத்தவில்லையோ, எந்த இனம் தன் சுயத்துக்கு ஆபத்தான விடயங்களையும், பிற பண்பாடுகளில் இருந்து உள்ளீர்த்துக் கொள்கின்றதோ அந்த இனம் எதிர்காலத்தில் தன் இருப்பை கேள்விக் குறியாக்கும. அல்லது தன் தனித்துவங்களை தம் மூதாதை யர்களின் புதைமேடுகளில் தேடுகின்ற அவலநிலைக்கு தள்ளப்படும். அந்த நிலையில் தான் நாமும் உள்ளோம் என்பதே வருந்தத்தக்க உண்மை. ஆனவை ஆகிப்போக, கிடைத்த தடங்களில் இருந்து ஆராய்ந்து எமது சுயத்தை அறிவை மட்டுமன்றி அதை இளைய பிள்ளைகள் அறியத்தக்க வகையில் பாடசாலைகள் தோறும் பரப்பும் முகமாகவும் எவற்றிலும் தாம் தங்கியிருப்பார்கள் இல்லை எல்லா பண்பாட்டு கோலங்களுக்கும் முன்னர் எம்மிடம் தனித்துவமான பண்பாடு மிக நேரிய சீரிய வகையில் தோன்றி வளர்ந்திருந்தது என்ற தெளிவோடு அவர்கள் நிமிர்ந்து நிற்கும் வகையிலும், இந்தத் தென்னாடு" மற இதழின் முதல் பிரதியை எம் முன்னவர்களின் அருவ அருளோடு வெளியிட்டு வைக்கின்றோம். "நாமர்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்" a எர DO DO மம் 1 வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தி யாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னு மிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் Snganamell 1641 38888 38008 VI மாதம் ஒரு பாடசாலை வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் கலவன் பாடசாலையாகும். 03 தென்னாடு யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூ ரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது. நாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என இலங்கையில் கல்வி வரலாறு வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளுார்ப் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார்ஜ1ஸ. பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு பிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர் இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறு வேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். மின்னஞ்சல் : aathan@thennadu.org
துலைத் திங்கள் 2020 தென்னாடு www.thennadu.org சிவத்திரு.செந்தமிழாதன் ஆசிரியர் - தென்னாட்டுத் திண்ணை சைவ மாணவர் சபை ( பதிவு - HA / 4 / JA / 343 ) 0715588737 புதியாய் ஒரு பழையது ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் உலகம் தினமும் தன்னுள் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தன்னைத் தகவமைத்து நிலைக்கிறது . கடந்த காலத்தின் இறந்து போன ஓசை தான் வரலாறு எனும் பெயர் பெற்று எதிர்காலத்தை தீர்மானிக் கின்றது . எந்த இனம் தன் வரலாற்றை சரியாக அடுத்த தலைமுறைக்கு கடத்தவில்லையோ அந்த இனத்தின் எதிர்காலம் எதிரும் புதிருமாய் அமைந்துவிடும் என்பது காலம் எமக்கு கற்றுத் தந்த பெரிய பாடம் . நீண்ட நெடிய வரலாற்றையும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கியச் செழுமையும் கொண்டு உலகின் கலாசாரத்தின் முதல் நிலத்தில் முகிழ்ந்த தழிழ் குடிகள் காலத்தாலும் கயமைகளாலும் தன் நிலை மாறித் தவிர்க்கின்ற பரிதாப நிலையை இன்று பார்க்கின்றோம் . எது எங்கள் வழிபாடு ? எது எங்கள் பண்பாடு என்பதைத் தாண்டி எது எங்கள் சொற்கள் ? எது எங்கள் எழுத்து என்கின்ற வரையில் குழம்பிப் போயுள்ள நிலை ஒருவித குற்ற உணர்வை எம்மிடையே ஏற்படுத்தியதால் இந்தக் குழப்பமும் தாழ்வு நிலையும் எதனால் ? ஏப்போது ? உருவானது என்ற கேள்வியின் தாக்கத்தால் இறந்துபோன அந்தக் காலத்தின் குறுகிப்போன ஓசையின் அதிர்வால் தேடல்கள் தொடர்கின்றன . ஆழ்ந்தும் அகன்றும் அகழ்ந்தும் தேடியதில் குழப்பங்கள் கூடியது . தேளிவின் ஒளியும் பிறந்தது குழம்பாமல் தெளிவது எப்படி ? இந்த நிலையில் தான் உலகின் முதுபெரும் நிலமாகிய குமரிக்கண்டம் கடலோடு கலந்தததையும் அங்கிருந்து குடிகள் பெயர்ந்து உலகமெல்லாம் கால் ஊன்றியதையும் தென்னவர் வழிபாடாக அந்தக் தென்குமரியில் கடலோடு கலந்தததையும் நினைத்து வழிபடும் வரலாற்றின் அறுபடாத நீட்சியாய் உள்ள சிறு இழையைப் பற்றி தென்னாடாக கொக்குவிலில் ஒரு சிவமடமும் அங்கிருந்த வெளியீடான இந்த மாத இதழும் புதியாய் ஒரு பழையதைப் பறைசாற்றப் பிறந்துள்ளது . சங்ககால வாழ்வியலின் தாக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமடைந்த இனத்தின் உள்ளாற்றல் என்பவற்றால் இன்று உலகின் அதிகார தலைமைப்பீடமாகத் தான் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் இன்று தன் தனித்துவங்களைக் கூட தொலைந்து அல்லாடும் இனமாக ஆனது எப்படி ? இந்தக் கனதியான கேள்விகளுக்கு விடை பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டியது ஆயினும் ஒட்டுமொத்தமாக தம் இருப்புக்களை உணராத இளைய தலைமுறையாலும் தம்பொறுப்புக்களை உணராத மூத்த தலைமுறையாலும் இந்த நிலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகித்து அறியலாம் . ஏந்த இனம் தன் வரலாற்றை தலைமுறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் கடத்தவில்லையோ எந்த இனம் தன் சுயத்துக்கு ஆபத்தான விடயங்களையும் பிற பண்பாடுகளில் இருந்து உள்ளீர்த்துக் கொள்கின்றதோ அந்த இனம் எதிர்காலத்தில் தன் இருப்பை கேள்விக் குறியாக்கும . அல்லது தன் தனித்துவங்களை தம் மூதாதை யர்களின் புதைமேடுகளில் தேடுகின்ற அவலநிலைக்கு தள்ளப்படும் . அந்த நிலையில் தான் நாமும் உள்ளோம் என்பதே வருந்தத்தக்க உண்மை . ஆனவை ஆகிப்போக கிடைத்த தடங்களில் இருந்து ஆராய்ந்து எமது சுயத்தை அறிவை மட்டுமன்றி அதை இளைய பிள்ளைகள் அறியத்தக்க வகையில் பாடசாலைகள் தோறும் பரப்பும் முகமாகவும் எவற்றிலும் தாம் தங்கியிருப்பார்கள் இல்லை எல்லா பண்பாட்டு கோலங்களுக்கும் முன்னர் எம்மிடம் தனித்துவமான பண்பாடு மிக நேரிய சீரிய வகையில் தோன்றி வளர்ந்திருந்தது என்ற தெளிவோடு அவர்கள் நிமிர்ந்து நிற்கும் வகையிலும் இந்தத் தென்னாடு மற இதழின் முதல் பிரதியை எம் முன்னவர்களின் அருவ அருளோடு வெளியிட்டு வைக்கின்றோம் . நாமர்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் a எர DO DO மம் 1 வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தி யாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னு மிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது . அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில் இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் Snganamell 1641 38888 38008 VI மாதம் ஒரு பாடசாலை வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் கலவன் பாடசாலையாகும் . 03 தென்னாடு யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும் காங்கேசந்துறை வீதி நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரி வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூ ரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது . மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது . நாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது . எனினும் பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும் குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும் இதன் தோற்றமும் இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை . சைவத்தைப் பரப்புவதற்காகவும் கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர் இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும் இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என இலங்கையில் கல்வி வரலாறு வலிந்து திணிக்கப்படுவதையும் உள்ளுார்ப் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார்ஜ 1 . பற்றி நூலொன்றை எழுதிய கே . எச் . எம் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில் நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை . இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது . இது ஆண் பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு பிற்கால ஆய்வாளர்கள் சிலர் முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர் இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு இடம்பெறு வேண்டுமாயின் உங்கள் பாடசாலை அல்லது கல்லூரி குறித்து 350 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள் . அனுப்ப வேண்டிய முகவரி தென்னாடு செந்தமிழாகம சிவமடம் குளங்கரை வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . மின்னஞ்சல் : aathan@thennadu.org