தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01

தென்னாடு 04 ஆ.சசிநாத் சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்பது பொருளாகும். 'சித்' என்றால் அறிவு. ஞானம் என்பதும் இதற்கு இணையான பொருளாகும். சித்தர் என்றால் அவர்கள் பல விதமான சித்துக் களைச் (அற்புதங்களை) செய்பவர்கள், இரசவாதம் செய்து பித்தளையைத் தங்கமாக மாற்றுபவர்கள், கூடு விட்டுக் கூடு பாய்பவர்கள், அட்டமா சித்திகள் செய்ய வல்லவர்கள், எண்வகை யோகங் களைச் செய்பவர்கள், இறை உண்மைகளை மறைத்துச் (பரிபாஷை) சொல்பவர்கள் என்றெல்லாம் கூறப்பெற்றுள்ளன. பொதுவாக, சித்தர்கள் சமூக மீறல்கள் கொண்டவர்களாக விளங்கினர். நாம் பின்பற்றும் மரபுகளுக்குள்ளும் அளவு கோல்களிற்குள்ளும் அடங்காதிருந்தனர். இவர்கள் சாத்திரக் குப்பைகளையும் கோத்திரக் கோளாறுகளையும் சாடிய வர்கள். கலை இந்நிலை நின்றொழுகியவர்களாக நாயன்மார்களையும் அடையாளப் படுத்தலாம். அந்நிய மதங்களின் ஆதிக் கத்திலிருந்து சைவத்தையும் சைவப் பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பாற்றிய வர்களாகவே நாயன்மார்கள் போற்றப் படுகின்றனர். மேலும், நாயன்மார்கள் காலச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களி டையே இருந்த சாதி, சமய வேறுபாடு களையவும், இறைவன் ஒருவன் என்பதை வலியுறுத்தவும், வையத்துள் மக்களது வழிகாட்டியாகவும், சமூக முன்னேற்றத்திற்கான அச்சாணியாகவும் திகழ்ந்தனர். இதற்காகப் பல அற்புதங் களைச் செய்தும், சமுதாயத்தில் பேணப் பட வேண்டிய வாழ்வியல் கருத்துக்களைத் தம் பாசுரங்களுாடாகவும் விதைத்துச் சென்றுள்ளனர். இந்தவகையில் இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழும் நாயன்மார்களைச் சித்தர்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கவில்லையாயி னும், அவர்களின் சமூக நோக்குகள் மற்றும் செயற்பாடுகள் சித்தர்களோடு வைத் தெண்ணத் தோன்றுவதிலிருந்து நாயன் மார்களையும் சித்தர்களாகக் கொள்ள இடமுண்டு என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகி பல வகையான சித்துக்களைச் செய்வ தனால் இவர்கள் சித்தர்கள் எனப் பலரும் கருத்துரைத்துள்ளனர். இந்நிலையில் நாயன்மார்களை நோக்கின், பல வகையான அற்புதங்களை நிகழ்த்தி சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை நிலைநாட்டியவர்களாவர். இதற்குத் திருமுறைப்பாடல்கள் சான்றாக விளங்குகின்றன. 'வாசி தீரவே காசு நல்குவீர்.....' என்ற பதிகம் பாடி படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியமை, 'பூத் தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி....' ஏன்ற பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியமை என்பன சம்பந்தரது அற்புதங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகும். நாவுக்கரசரது அற்புதங் களுக்கு எடுத்துக்காட்டாக, 'ஒன்று கொலாமவர் சிந்தை....' என்ற பதிகம் பாடி அப்பூதியடிகளது மகன் மூத்த திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தமையைக் காட்டலாம். இவ்வகையான அற்புதங்கள் சித்தர்கள் செய்யும் சித்துக்களோடு ஒத்துப் போகின்ற தன்மையில் நாயன்மார்களைச் சித்தர்கள் என ஏற்றுக் கொள்ளல் தவறா காது. கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது சித்தர்களின் இயல்பு. உயிரானது ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குள் புகுவது தான், கூடு விட்டுக் கூடு பாய்தல் என்றில்லை. உயிருடன் இருக்கும் போது அறிவு வடிவாகிய குரு, தன்னை அறி வென்று அறிவித்த சீடனின் உடலுக்குள் காது வழியாக நுழைந்து அவனையும் அறிவு வடிவமென்று அறிவித்து நீயும் நானும் ஒன்றுதான். எனக்காட்டி அத்துவிதமாக்கிக் கூடிக் கலந்து களித்தலே கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். இதனைத் திருமூலர், 'அறிவுவடிவு என்று அறியாத என்னை.....' என்றும், 'இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி....' என்றும் கூறுகிறார். வள்ளலார், 'பிறிவேதி இனியுனைப் பிடித்தனம் உனக்கு நாம்: அறிவே வடிவேனும் அருட் பெருஞ்சோதி' என்கிறார். இத்தகைய சித்தர் நிலையினை உணர்ந்தவர்களாக நாயன்மார்களும் திகழ்ந்திருக்கின்றனர். உதாரணமாக, மாணிக்கவாசகர், 'சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனைக்கருளியவாறு யார் பெறுவார் கண்டலா தருளுமில்லை கலந்தபின் பிரிவதில்லை' என்றும் உரைத்திருக்கக் காணலாம். பரம்பொருள் நம் உடம்பிற்குள்ளே உள்ள சிற்சபையில் அமர்ந்து அம்பலத்தில் நடராசராய் நடனமாடி ஒலிசெய்து கொண்டிருப்பதைச் சித்தர்கள் தெளிவாக உரைத்துள்ளனர். திருமூலர், 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்....' என்றும், 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்......' என்றும் ஒளவையார், 'உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்: உடம்பினுள் உத்தமனைக் காண்' என்றும் பாடிய திறத்தால் உணரலாம். இச்சிந் தனைப் புலத்தைக் கொண்டவர்களாகவே நாயன்மார்களையும் நோக்க முடியும். திருநாவுக்கரசர், 'காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக.....' என்ற பாடலூ டாக உடம்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கின்றமை நாயன்மார்களும் சித்தர் கொள்கை உடையவர்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது. மாணிக்கவாசகர், 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி' என்றுரைப்பதும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. தென்னாடு சிவாயநம எனப்பெறும் ஐந்தெழுத் துக்களால் ஆன மந்திரமே பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம். சைவப் *** DASA திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் புலப்படுத்தியுள்ளனர். மாணிக்கவாசகர், 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்கிறார். சமயங்கள் பலவாக இருப்பினும் அவை கூறும் பரம்பொருள் ஒன்றே. சித்தர்களும் ஓரிறைக் கொள்கை உடைய வர்கள் என்பதும் மனங்கொள்ளத்தக்கது. திருமூலர், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிறார். சிவவாக்கியர்இ 'அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ என்றும், அகத்தியர், 'சக்தியே பராபரமே ஒன்றே தெய்வம்', 'தானென்ற தானே தானொன்றே தெய்வம்' என்றும் சமயப் பொதுமையை வலியுறுத்துவது நாயன் மார்களோடு ஒத்து நோக்குதற்குரியது. உயிர்கள் மீது செலுத்தும் அன்பே உண்மையான வழிபாடாகும். திருமூலர், 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்' என்கிறார். மேலும் பிறர் துன்பம் கண்ட போது அதைத் தன் துன்பமாகக் காண வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சமூகத்திலே ஏற்றத்தாழ்வுகள் என்பதே இல்லாமற் போய்விடும். இதனை திருமுறைகளில் பதிவு செய்துள்ளனர். வண்ணலார், 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் பசியினால் இளைத்தே’ என்று பாடுவதிலிருந்தும், பதிகப் பெருவழி சிறக்க வாழ்ந்த காரைக்காலம்மையார் பெருமக்களின் உயிராகவும் அவர்களின் கண்மணி போலவும் விளங்குவது இந்த ஐந்தெழுத்து மந்திரம் ஆகும். இதன் பெருமையை உணர்த்த 'நமசிவாயப் பதிகம்’, ‘பஞ்சாக்கரத் திருப்பதிகம்’ என இரண்டு பதிகங்களையும் திருஞானசம் பந்தர் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர். நாவுக்கரசரும், 'கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடியருளியுள்ளார். இத்தகு பெருமை பொருந்திய பஞ்சாட்சரம் பற்றி, காகபுசுண்டர் என்ற சித்தர், ‘ஆதி என்ற மூல மந்திரம் ஐந்தெழுத்து’ என்கிறார். ஒளவையார், 'சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்கிறார். ஆதியாக பரீட்சிக்க ஒண்ணாத வித்தாக, சிவமயப் பொருளாக, உயிராக, பின்னல் கிரண விந்து நாதமாக சிவ சக்தியாக இருக்கும் அப்பொருளே மூலமந்திரம். உலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களிலும் உள்ள அனைத்து மூல மந்திரங்களும் அந்த மெய்ப்பொருளாகிய ஆதியையே குறித்து நிற்கின்றன எனும் கருத்துத் தளத்தில் நாயன்மார்களும் சித்தர்களும் ஒரே தன்மை உடையோராய்த் திகழ்தல் ஈண்டு நோக்குதற்குரியது. உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் மனிதகுல மேம்பாடு எனும் ஒரு இலக் கினையே அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றன என முதலில் சமயங் களுக்குள்ளே சமத்துவத்தை பேணுதல் சுந்தரர் PACCHETT மாணிக்கவாசகர் சைவம் வளர்த்த நாயன்மார்களும் சித்தர்களே! இறைவனை அடைய ஆண், பெண் பேதம் இன்றி உள்ளத்தில் கொள்ளும் அன்பே முக்கியம் என நிலைநாட்டுவதிலிருந்தும் அறியலாம். 'பிறந்து மொழிபயின்ற பின்னாளெல்லாம் காதல் சிறந்து நின் சேவடி சேர்ந்தேன்' என்கிறார் அம்மையார். சமூகத்திலே புரையோடிக் கிடந்த சாதி வேற்றுமைகளுக்கு எதிராகக் கண் டனக்குரல் எழுப்பியவர்களாகச் சித்தர்கள் விளிக்கப்படுகின்றனர். சிவவாக்கியர், 'பறைச்சியாவ தேதடா பணத்திலாவதே தடா, 'சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெல்லாம்' என்றும், பாம்பாட்டிச்சித்தர், 'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' என்றும் கடுவெளிச் சித்தர், 'ஒவ்வா என்ற பல சாதி யாவும் ஒன்றென்று அறிந்தே உணர்ந்து உறவோதி' என்றும் திருமூலர், 'ஒன்றே குலம்’ என்றும் கலகக்குரல் எழுப்பி சமூகத்தை மடைமாற்றம் செய்வதில் தீவிரம் காட்டியதைப் போன்று நாயன் மார்களும் சாதி பேதங்களைக் கண்டித்த வர்களாக விளங்கியிருப்பதைக் காணலாம். 'ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பரா கில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவு ளாரே' என்று அப்பரடிகளும் 'சாதி குலம் பிறப்பு என்னும் சுழிபட்டுத் தடுமாறும்......' என்று மணிவாசகரும் கூறும் கருத்துக்கள் மேற்போந்த கருத்துக்கு வலுச்சேர்க்கிறது. மேலும், பெரியபுராணம் சிவனடியார் வரலாற்றைக் கூறும் சிறப்பு மிக்க நூல். இதில் சேக்கிழார் சாதிசமயங்களை நீக்கி துலைத் திங்கள், 2020 ஆதி சைவர், பிராமணர், இடையர், சத்திரியர், குறுநில மக்கள், வைசிகர், வேளாளர், பரதவர், வேடர்இ சான்றார், சாலியர், குயவர், பாணர், புலையர் என அனைத்து அடியவர்களும் இறைவனைச் சேர்ந்தார்கள் என நாயன்மார் வரலாற்றில் தெளிவாக்கியுள்ளார். அந்தணராகிய நமிநந்தியடிகள் சாதிமுறை பார்க்க, அவர் கனவிலே தோன்றிய கண்ணுதற் பெரு மான், 'ஆன மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார்' என்று சேக்கிழார் கூறுவது சாதியமைப்பு முறை இல்லை என்பதைக் காட்டவல்லது. ஒவ்வொரு சமூகமும் தனக்கான சமூக நடவடிக்கைகளைத் தன் நிலவியல் மற்றும் புறச்சூழலுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றன. சமூக வாழ்வு முரண் பாடின்றி இணக்கமாகத் திகழ வேண்டு மெனின் தனிமனிதன் தன்னளவில் செம்மைப்படல் வேண்டும். சித்தர்கள் போதைப்பொருள்களைக் கண்டித்து வந்தனர். 'வெறிகாட்டி மயங்கிய கள் குடியாதே கஞ்சாப்புகை பிடியாதே என்கிறார் கடுவெளிச்சித்தர். 'ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லையாறித் தூய்மை செய்து....' என்கிறார் திருஞானசம்பந்தர். இந்நிலை யில் சமூகத்தை நல்வழிப்படுத்துவதில் வகுத்த வழிவகைகளில் இரு தரப்பின ரையும் நோக்குகின்ற போது ஒற்றுமைத் தன்மை புலப்படுகிறது. உயிரினங்களில் மனிதன் பெருமளவில் முன்னேறி வியத்தகு சாதனைகள் பல படைத்திருப்பினும் பாலுணர்வும் பசியுணர்வும் அவை தொடர்பான போராட்டங்களும் அவனை விட்டு நீங்கியபாடில்லை. இத்தேவைகள் அவனை முடக்கிக் கொண்டிருக்கின்றன. ஆதலின் பெண்ணாசையை ஒழித்தல் என்பது தலையாய ஒழுக்கமாகி விடுகிறது. 'கற்றதேல் ஒன்றுமில்லை காரிகை யாரோடாடிப் பெற்றதேற் பெரிதும் துன்பம் என்றும், 'கண்ட பேச்சினிற் காளையர் தங்கள் பால் மண்டி பேச்சினும் மாதரைச் சேராதே' என்றும் அப்பர் பெண் வேட்கையினைத் தவிர்த்து வாழ்தல் சிறந்தது என்கிறார். இது 'எழில் பெண்ணாசை கொண்டு மாளாதே', 'மாய்கைத் தேவடியாள் தனம் பண்ணாதே' போன்ற சித்தர் கொள்கையினைத் தழுவியிருப்பது, நாயன்மார்களையும் சித்தராக்க இடமளிக்கிறது. சித்தர்கள் சமய வழிபாடுகளையும் மூடப்பழக்கவழக்கங்களையும் கண்டித்தவர்களாகவே காணப்படுகின்ற னர். விக்கிரக வழிபாட்டை முற்றாக வெறுத்தனர். 'நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலுபுஷ்பம் சாத்தியே....' 'கோயிலாவதேதடா குளங்களாவதே தடா....' போன்ற சித்தர் பாடல்களை எடுத்துக் காட்டலாம். ஆனால் நாயன்மார் கள் கோயில்களையும் வழிபாடுகளையும் முதன்மைப்படுத்தியிருந்தனர். 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...'' எனச் சம்பந்தரும் 'நிலை பெறுமா றெண்ணு தியெல் நெஞ்சே நீ வா நித்தலு மெம் பிரானுடைய கோயில் புக்கு' என அப்பரும் பாடியிருத்தல் சான்றாகும். ஆயினும் சித்தர்கள் அனைவரும் கோயிலையும் வழிபாடுகளையும் எதிர்த்தவரல்லர். போலிகளையே எதிர்த்தனர். ஈழத்துச் சித்தர்கள் ஆலயங்களை முதன்மைப்படுத்தி யமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. சித்தி பெற்றவர்களாகிய சித்தர்களின் கருத்துக்கள், கொள்கைகள் என்பன ஒரு சமூகத்தை மடைமாற்றம் செய்வதாகவே அமைந்துள்ளன. அத்தகைய நிலையிலே வாழ்ந்தவர்களாகவே நாம் நாயன்மார்களையும் கருதமுடியும். அற்புதங்களைச் செய்தல், கூடு விட்டுக் கூடு பாய்தல்இ தன்னை - அகத்தை உணர்தல், பஞ்சாட்சரத்தின் மகிமை, சமயப்பொதுமைஇ சாதி பேதங்களைக் களைதல், தனிமனித ஒழுக்கம் போன்ற பல விடயங்களையும் சித்தி -அறிவு பெற்றவர்கள் நிலையில் நின்று உணர்த்தியிருப்பதானது 'சித்தர்' என்று அழைப்பதற்குப் பொருத்தமானதாக அமைகிறது. மேலும் நாயன்மார்களின் செயற்பாடுகளைச் சித்தர்களோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது கொள்கையளவிலும் மனதளவிலும் ஒருவராகத் தோன்றும் பட்சத்தில் நாயன்மார்களும் சித்தர்களே என்பது தெளிவாகிறது.
தென்னாடு 04 ஆ.சசிநாத் சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்பது பொருளாகும் . ' சித் ' என்றால் அறிவு . ஞானம் என்பதும் இதற்கு இணையான பொருளாகும் . சித்தர் என்றால் அவர்கள் பல விதமான சித்துக் களைச் ( அற்புதங்களை ) செய்பவர்கள் இரசவாதம் செய்து பித்தளையைத் தங்கமாக மாற்றுபவர்கள் கூடு விட்டுக் கூடு பாய்பவர்கள் அட்டமா சித்திகள் செய்ய வல்லவர்கள் எண்வகை யோகங் களைச் செய்பவர்கள் இறை உண்மைகளை மறைத்துச் ( பரிபாஷை ) சொல்பவர்கள் என்றெல்லாம் கூறப்பெற்றுள்ளன . பொதுவாக சித்தர்கள் சமூக மீறல்கள் கொண்டவர்களாக விளங்கினர் . நாம் பின்பற்றும் மரபுகளுக்குள்ளும் அளவு கோல்களிற்குள்ளும் அடங்காதிருந்தனர் . இவர்கள் சாத்திரக் குப்பைகளையும் கோத்திரக் கோளாறுகளையும் சாடிய வர்கள் . கலை இந்நிலை நின்றொழுகியவர்களாக நாயன்மார்களையும் அடையாளப் படுத்தலாம் . அந்நிய மதங்களின் ஆதிக் கத்திலிருந்து சைவத்தையும் சைவப் பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பாற்றிய வர்களாகவே நாயன்மார்கள் போற்றப் படுகின்றனர் . மேலும் நாயன்மார்கள் காலச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களி டையே இருந்த சாதி சமய வேறுபாடு களையவும் இறைவன் ஒருவன் என்பதை வலியுறுத்தவும் வையத்துள் மக்களது வழிகாட்டியாகவும் சமூக முன்னேற்றத்திற்கான அச்சாணியாகவும் திகழ்ந்தனர் . இதற்காகப் பல அற்புதங் களைச் செய்தும் சமுதாயத்தில் பேணப் பட வேண்டிய வாழ்வியல் கருத்துக்களைத் தம் பாசுரங்களுாடாகவும் விதைத்துச் சென்றுள்ளனர் . இந்தவகையில் இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழும் நாயன்மார்களைச் சித்தர்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கவில்லையாயி னும் அவர்களின் சமூக நோக்குகள் மற்றும் செயற்பாடுகள் சித்தர்களோடு வைத் தெண்ணத் தோன்றுவதிலிருந்து நாயன் மார்களையும் சித்தர்களாகக் கொள்ள இடமுண்டு என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகி பல வகையான சித்துக்களைச் செய்வ தனால் இவர்கள் சித்தர்கள் எனப் பலரும் கருத்துரைத்துள்ளனர் . இந்நிலையில் நாயன்மார்களை நோக்கின் பல வகையான அற்புதங்களை நிகழ்த்தி சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை நிலைநாட்டியவர்களாவர் . இதற்குத் திருமுறைப்பாடல்கள் சான்றாக விளங்குகின்றன . ' வாசி தீரவே காசு நல்குவீர் ..... ' என்ற பதிகம் பாடி படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியமை ' பூத் தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி .... ' ஏன்ற பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியமை என்பன சம்பந்தரது அற்புதங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகும் . நாவுக்கரசரது அற்புதங் களுக்கு எடுத்துக்காட்டாக ' ஒன்று கொலாமவர் சிந்தை .... ' என்ற பதிகம் பாடி அப்பூதியடிகளது மகன் மூத்த திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தமையைக் காட்டலாம் . இவ்வகையான அற்புதங்கள் சித்தர்கள் செய்யும் சித்துக்களோடு ஒத்துப் போகின்ற தன்மையில் நாயன்மார்களைச் சித்தர்கள் என ஏற்றுக் கொள்ளல் தவறா காது . கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது சித்தர்களின் இயல்பு . உயிரானது ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குள் புகுவது தான் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்றில்லை . உயிருடன் இருக்கும் போது அறிவு வடிவாகிய குரு தன்னை அறி வென்று அறிவித்த சீடனின் உடலுக்குள் காது வழியாக நுழைந்து அவனையும் அறிவு வடிவமென்று அறிவித்து நீயும் நானும் ஒன்றுதான் . எனக்காட்டி அத்துவிதமாக்கிக் கூடிக் கலந்து களித்தலே கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும் . இதனைத் திருமூலர் ' அறிவுவடிவு என்று அறியாத என்னை ..... ' என்றும் ' இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி .... ' என்றும் கூறுகிறார் . வள்ளலார் ' பிறிவேதி இனியுனைப் பிடித்தனம் உனக்கு நாம் : அறிவே வடிவேனும் அருட் பெருஞ்சோதி ' என்கிறார் . இத்தகைய சித்தர் நிலையினை உணர்ந்தவர்களாக நாயன்மார்களும் திகழ்ந்திருக்கின்றனர் . உதாரணமாக மாணிக்கவாசகர் ' சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனைக்கருளியவாறு யார் பெறுவார் கண்டலா தருளுமில்லை கலந்தபின் பிரிவதில்லை ' என்றும் உரைத்திருக்கக் காணலாம் . பரம்பொருள் நம் உடம்பிற்குள்ளே உள்ள சிற்சபையில் அமர்ந்து அம்பலத்தில் நடராசராய் நடனமாடி ஒலிசெய்து கொண்டிருப்பதைச் சித்தர்கள் தெளிவாக உரைத்துள்ளனர் . திருமூலர் ' உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் .... ' என்றும் ' உடம்பார் அழியின் உயிரார் அழிவர் ...... ' என்றும் ஒளவையார் ' உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் : உடம்பினுள் உத்தமனைக் காண் ' என்றும் பாடிய திறத்தால் உணரலாம் . இச்சிந் தனைப் புலத்தைக் கொண்டவர்களாகவே நாயன்மார்களையும் நோக்க முடியும் . திருநாவுக்கரசர் ' காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக ..... ' என்ற பாடலூ டாக உடம்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கின்றமை நாயன்மார்களும் சித்தர் கொள்கை உடையவர்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது . மாணிக்கவாசகர் ' ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி ' என்றுரைப்பதும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது . தென்னாடு சிவாயநம எனப்பெறும் ஐந்தெழுத் துக்களால் ஆன மந்திரமே பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம் . சைவப் *** DASA திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் புலப்படுத்தியுள்ளனர் . மாணிக்கவாசகர் ' தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ' என்கிறார் . சமயங்கள் பலவாக இருப்பினும் அவை கூறும் பரம்பொருள் ஒன்றே . சித்தர்களும் ஓரிறைக் கொள்கை உடைய வர்கள் என்பதும் மனங்கொள்ளத்தக்கது . திருமூலர் ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்கிறார் . சிவவாக்கியர்இ ' அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ என்றும் அகத்தியர் ' சக்தியே பராபரமே ஒன்றே தெய்வம் ' ' தானென்ற தானே தானொன்றே தெய்வம் ' என்றும் சமயப் பொதுமையை வலியுறுத்துவது நாயன் மார்களோடு ஒத்து நோக்குதற்குரியது . உயிர்கள் மீது செலுத்தும் அன்பே உண்மையான வழிபாடாகும் . திருமூலர் ' அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் ' என்கிறார் . மேலும் பிறர் துன்பம் கண்ட போது அதைத் தன் துன்பமாகக் காண வேண்டும் . அவ்வாறு வாழ்ந்தால் சமூகத்திலே ஏற்றத்தாழ்வுகள் என்பதே இல்லாமற் போய்விடும் . இதனை திருமுறைகளில் பதிவு செய்துள்ளனர் . வண்ணலார் ' வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் பசியினால் இளைத்தே என்று பாடுவதிலிருந்தும் பதிகப் பெருவழி சிறக்க வாழ்ந்த காரைக்காலம்மையார் பெருமக்களின் உயிராகவும் அவர்களின் கண்மணி போலவும் விளங்குவது இந்த ஐந்தெழுத்து மந்திரம் ஆகும் . இதன் பெருமையை உணர்த்த ' நமசிவாயப் பதிகம் பஞ்சாக்கரத் திருப்பதிகம் என இரண்டு பதிகங்களையும் திருஞானசம் பந்தர் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர் . நாவுக்கரசரும் ' கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே ' எனப் பாடியருளியுள்ளார் . இத்தகு பெருமை பொருந்திய பஞ்சாட்சரம் பற்றி காகபுசுண்டர் என்ற சித்தர் ஆதி என்ற மூல மந்திரம் ஐந்தெழுத்து என்கிறார் . ஒளவையார் ' சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை ' என்கிறார் . ஆதியாக பரீட்சிக்க ஒண்ணாத வித்தாக சிவமயப் பொருளாக உயிராக பின்னல் கிரண விந்து நாதமாக சிவ சக்தியாக இருக்கும் அப்பொருளே மூலமந்திரம் . உலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களிலும் உள்ள அனைத்து மூல மந்திரங்களும் அந்த மெய்ப்பொருளாகிய ஆதியையே குறித்து நிற்கின்றன எனும் கருத்துத் தளத்தில் நாயன்மார்களும் சித்தர்களும் ஒரே தன்மை உடையோராய்த் திகழ்தல் ஈண்டு நோக்குதற்குரியது . உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் மனிதகுல மேம்பாடு எனும் ஒரு இலக் கினையே அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றன என முதலில் சமயங் களுக்குள்ளே சமத்துவத்தை பேணுதல் சுந்தரர் PACCHETT மாணிக்கவாசகர் சைவம் வளர்த்த நாயன்மார்களும் சித்தர்களே ! இறைவனை அடைய ஆண் பெண் பேதம் இன்றி உள்ளத்தில் கொள்ளும் அன்பே முக்கியம் என நிலைநாட்டுவதிலிருந்தும் அறியலாம் . ' பிறந்து மொழிபயின்ற பின்னாளெல்லாம் காதல் சிறந்து நின் சேவடி சேர்ந்தேன் ' என்கிறார் அம்மையார் . சமூகத்திலே புரையோடிக் கிடந்த சாதி வேற்றுமைகளுக்கு எதிராகக் கண் டனக்குரல் எழுப்பியவர்களாகச் சித்தர்கள் விளிக்கப்படுகின்றனர் . சிவவாக்கியர் ' பறைச்சியாவ தேதடா பணத்திலாவதே தடா ' சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெல்லாம் ' என்றும் பாம்பாட்டிச்சித்தர் ' சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் ' என்றும் கடுவெளிச் சித்தர் ' ஒவ்வா என்ற பல சாதி யாவும் ஒன்றென்று அறிந்தே உணர்ந்து உறவோதி ' என்றும் திருமூலர் ' ஒன்றே குலம் என்றும் கலகக்குரல் எழுப்பி சமூகத்தை மடைமாற்றம் செய்வதில் தீவிரம் காட்டியதைப் போன்று நாயன் மார்களும் சாதி பேதங்களைக் கண்டித்த வர்களாக விளங்கியிருப்பதைக் காணலாம் . ' ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பரா கில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவு ளாரே ' என்று அப்பரடிகளும் ' சாதி குலம் பிறப்பு என்னும் சுழிபட்டுத் தடுமாறும் ...... ' என்று மணிவாசகரும் கூறும் கருத்துக்கள் மேற்போந்த கருத்துக்கு வலுச்சேர்க்கிறது . மேலும் பெரியபுராணம் சிவனடியார் வரலாற்றைக் கூறும் சிறப்பு மிக்க நூல் . இதில் சேக்கிழார் சாதிசமயங்களை நீக்கி துலைத் திங்கள் 2020 ஆதி சைவர் பிராமணர் இடையர் சத்திரியர் குறுநில மக்கள் வைசிகர் வேளாளர் பரதவர் வேடர்இ சான்றார் சாலியர் குயவர் பாணர் புலையர் என அனைத்து அடியவர்களும் இறைவனைச் சேர்ந்தார்கள் என நாயன்மார் வரலாற்றில் தெளிவாக்கியுள்ளார் . அந்தணராகிய நமிநந்தியடிகள் சாதிமுறை பார்க்க அவர் கனவிலே தோன்றிய கண்ணுதற் பெரு மான் ' ஆன மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் ' என்று சேக்கிழார் கூறுவது சாதியமைப்பு முறை இல்லை என்பதைக் காட்டவல்லது . ஒவ்வொரு சமூகமும் தனக்கான சமூக நடவடிக்கைகளைத் தன் நிலவியல் மற்றும் புறச்சூழலுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றன . சமூக வாழ்வு முரண் பாடின்றி இணக்கமாகத் திகழ வேண்டு மெனின் தனிமனிதன் தன்னளவில் செம்மைப்படல் வேண்டும் . சித்தர்கள் போதைப்பொருள்களைக் கண்டித்து வந்தனர் . ' வெறிகாட்டி மயங்கிய கள் குடியாதே கஞ்சாப்புகை பிடியாதே என்கிறார் கடுவெளிச்சித்தர் . ' ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லையாறித் தூய்மை செய்து .... ' என்கிறார் திருஞானசம்பந்தர் . இந்நிலை யில் சமூகத்தை நல்வழிப்படுத்துவதில் வகுத்த வழிவகைகளில் இரு தரப்பின ரையும் நோக்குகின்ற போது ஒற்றுமைத் தன்மை புலப்படுகிறது . உயிரினங்களில் மனிதன் பெருமளவில் முன்னேறி வியத்தகு சாதனைகள் பல படைத்திருப்பினும் பாலுணர்வும் பசியுணர்வும் அவை தொடர்பான போராட்டங்களும் அவனை விட்டு நீங்கியபாடில்லை . இத்தேவைகள் அவனை முடக்கிக் கொண்டிருக்கின்றன . ஆதலின் பெண்ணாசையை ஒழித்தல் என்பது தலையாய ஒழுக்கமாகி விடுகிறது . ' கற்றதேல் ஒன்றுமில்லை காரிகை யாரோடாடிப் பெற்றதேற் பெரிதும் துன்பம் என்றும் ' கண்ட பேச்சினிற் காளையர் தங்கள் பால் மண்டி பேச்சினும் மாதரைச் சேராதே ' என்றும் அப்பர் பெண் வேட்கையினைத் தவிர்த்து வாழ்தல் சிறந்தது என்கிறார் . இது ' எழில் பெண்ணாசை கொண்டு மாளாதே ' ' மாய்கைத் தேவடியாள் தனம் பண்ணாதே ' போன்ற சித்தர் கொள்கையினைத் தழுவியிருப்பது நாயன்மார்களையும் சித்தராக்க இடமளிக்கிறது . சித்தர்கள் சமய வழிபாடுகளையும் மூடப்பழக்கவழக்கங்களையும் கண்டித்தவர்களாகவே காணப்படுகின்ற னர் . விக்கிரக வழிபாட்டை முற்றாக வெறுத்தனர் . ' நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலுபுஷ்பம் சாத்தியே .... ' ' கோயிலாவதேதடா குளங்களாவதே தடா .... ' போன்ற சித்தர் பாடல்களை எடுத்துக் காட்டலாம் . ஆனால் நாயன்மார் கள் கோயில்களையும் வழிபாடுகளையும் முதன்மைப்படுத்தியிருந்தனர் . ' மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ... ' ' எனச் சம்பந்தரும் ' நிலை பெறுமா றெண்ணு தியெல் நெஞ்சே நீ வா நித்தலு மெம் பிரானுடைய கோயில் புக்கு ' என அப்பரும் பாடியிருத்தல் சான்றாகும் . ஆயினும் சித்தர்கள் அனைவரும் கோயிலையும் வழிபாடுகளையும் எதிர்த்தவரல்லர் . போலிகளையே எதிர்த்தனர் . ஈழத்துச் சித்தர்கள் ஆலயங்களை முதன்மைப்படுத்தி யமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது . சித்தி பெற்றவர்களாகிய சித்தர்களின் கருத்துக்கள் கொள்கைகள் என்பன ஒரு சமூகத்தை மடைமாற்றம் செய்வதாகவே அமைந்துள்ளன . அத்தகைய நிலையிலே வாழ்ந்தவர்களாகவே நாம் நாயன்மார்களையும் கருதமுடியும் . அற்புதங்களைச் செய்தல் கூடு விட்டுக் கூடு பாய்தல்இ தன்னை - அகத்தை உணர்தல் பஞ்சாட்சரத்தின் மகிமை சமயப்பொதுமைஇ சாதி பேதங்களைக் களைதல் தனிமனித ஒழுக்கம் போன்ற பல விடயங்களையும் சித்தி -அறிவு பெற்றவர்கள் நிலையில் நின்று உணர்த்தியிருப்பதானது ' சித்தர் ' என்று அழைப்பதற்குப் பொருத்தமானதாக அமைகிறது . மேலும் நாயன்மார்களின் செயற்பாடுகளைச் சித்தர்களோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது கொள்கையளவிலும் மனதளவிலும் ஒருவராகத் தோன்றும் பட்சத்தில் நாயன்மார்களும் சித்தர்களே என்பது தெளிவாகிறது .