திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறைவன் சர்வவல்லமை யுடையனாதலின் 'மஞ்சா' என்றார். "மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளுமானாய்* (நாவு 57: 1) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. மஞ்சனே போற்றி என்பதற்கு 'அழகனே வணக்கம்' என்றும், 'மழையே போற்றி" என்றும் உரைப்பாருமுளர். 172 மணாளா போற்றி மணவாளனே போற்றி. ''வள்ளலே போற்றி மணாளா போற்றி " (246 : 8) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. மணாளா என்பதற்கு உமையம்மையின் மணாளா எனவும் உரைக்கலாம். "மலையான் மடந்தை மணவாளா போற்றி" (நாவு 248:3) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பஞ்சேர் அடியாள் என்றது உமையம்மையை. பஞ்சு என்றது செம் பஞ்சுக்குழம்பை. "பஞ்சுதோய் மெல்லடிப் பாலையா ளொடும் (ஞான 274:6) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. ஏர்- அழகு. 'ஏரணி யணியி னிளையரு மினியரும்'' என்னும் பரிபாடலினும் (0:27) இப் பொருட்டாதல் காண்க. 'பஞ்சேர் அடியாள் பங்கா' என்றார் இறைவன் உமையம்மையை ஒரு கூற்றி லுடைமையின், " பஞ்சுலாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகளை' (தே. 241:9) என ஆளுடையபிள்ளையாரும், "பஞ் சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னை '' (தே.288:2) என ஆளுடைய யரசும் அருளியமை காண்க. அவந்தேன் நாயேன் அடியேன் என்பதனை, நாயேன் அடியேன் அலங் தேன் என மாற்றிக்கூட்டிப் பொருளுரைக்க. நாயேன் அடியேன் - கீழ் மையையுடைய அடியேன். "நாயடியேன்" (சத 13, 10 கண்ட 3) "நாயடியேற்கு '' (ஊசல் 1) எனப் பிராண்டும் அடிகள் அருளியமை காண்க. அலந்தேன் - நின்னைப் பிரிந்து துன்பமுற்றேன்; அத்துன்பத்தை நீக்க அருள்செய்ய வேண்டும் எனச் சில சொற்கள் அவாய் நிலையான் வருவித்துரைக்க. 'முறையோ தரியேன் முதல்வா போற்றி" (போற் 180) என்ற இடத்துப் பொருளை ஈண்டும் கூறியது ஆற்றாமை மிகுதிபற்றிய தாகலின் புனருத்தியாகாது. அலத்தல் - துன்புறுதல். 'அலப்பென் றோழி யவ ரகன்ற ஞான்றே" (குறுத் 41) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இலங்குசுடர் ஈசா-விளங்காநின்ற ஒளியையுடைய ஈசா. "தோற் றச் சுடரொளியாய்" (சிவபுரா 80) தூயமேனிச் சுடர்விடு சோதி" (கீர்த் 112) " விரிந்தே யெரியுஞ் சுடரனையாய்'' (நீத் 38) தூண்டா விளக்கின் சுடரனையாய்" (பிரார்த் 4) என அடிகள் பிறாண்டு அருளி யமையுங் காண்க. இலங்குதல்-விளங்குதல். "இலங்குவெள் ளருவியொடு" (மதுரைக் 299) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 11 187-196. கலைத்தலை மேவிய கண்ணே போற்றி - கவைத்தலை என் னும் தலத்தில் விரும்பி எழுந்தருளிய கண்போற் சிறந்தவனே நினக்கு போற்றித் திருவகவல் 173 வணக்கம்; குவைப்பதி மலிந்த கோவே போற்றி- குவைப்பதி என்னும் தலத்தில் மகிழ்ச்சிமிகுந்து எழுந்தருளியிருந்த தலைவனே நினக்கு வணக் கம் மலைநாடு உடைய மன்னே போற்றி - மலைநாட்டினையுடைய மன்னனே நினக்கு வணக்கம்: கலை ஆர் அரிகேசரியாய் போற்றி - கலைஞர்கள் நிறைந்த அரிகேசரி என்னும் தலத்தையுடையவனே நினக்கு வணக்கம்; திருக் கழுக்குன்றில் செல்வா போற்றி-திருக்கழுக்குன்றில் எழுந்தருளியிருக்கும் செல்வனே நினக்கு வணக்கம்: பொருப்பு அமர் பூவணத்து அரரே போற்றி - மலைகள் பொருந்திய திருப்பூவணத்தில் எழுந்தருளிய சிவபெரு மானே நினக்கு வணக்கம்; அருவமும் உருவமும் ஆனாய் போற்றி- அருவமும் உருவமும் ஆனவனே நினக்கு வணக்கம்; மருவி கருணை மலையே போற்றி - இயல்பாகப் பொருந்திய திருவருளை மலையாகவுடையவனே நினக்கு வணக்கம்; துரியமும் கடந்த சுடரே போற்றி - நான்காம் நிலையையுங் கடந்த ஒளிவடிவினனே நினக்கு வணக்கம்; தெரிவு அரிதாகிய தெளிவே போற்றி - பருப்பொருளறிவாலும் நுண்பொருள றிவாலும் அறிதற்கரிதாகிய அருளால் தெரியப்படும் பொருளே நினக்கு வணக்கம் கவைத்தலை, குவைப்பதி என்பன சிவதலங்கள். மேவிய என்றார் கவைத்தலை என்னும் தலத்தில் இறைவன் திருக்கோயில் கொண்டெழுந் தருளியமையின். கண்ணே என்றார் இறைவன் கண்போற் சிறந்தவனாத வின், "கருவேயென் கற்பகமே கண்ணே""நெடிய வீசும்பொடு கண்ணே போற்றி" (தே. 261:1: 289:10) என அப்பரடிகள் அருளியமை யுங் காண்க. மலிதல் - மிகுதல். "பூமலி வையை வருபுனல்" (கலி 90:10-11) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கோவே போற்றி -தலைவனே வணக்கம். "குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி" என அப் பரடிகள் (தே. 246:7) அருளியமையுங் காண்க. மலைநாடு என்றது சேரநாட்டினைவேழமுடைத்து மலைநாடு" (தனிப்பாடல்) என வருதலுங் காண்க. அரிகேசரி - ஒரு வதவம், கலைஞர்கள் ஆண்டு மிக்கிருந்தமையின் 'கயைார் அரிகேசரியாய்' என்றார். 'கலையார். அரிகேசரியாய்" என்பதற்கு ஆடையாக உடுத்திய சிங்கத்தோலுடையவனே என்பாருமுளர். இறைவன் திருக்கோயில் கொண்டெழுந்தருளி அடியார்க் கருள்புரிந்த தலங்களைக் 'கவைத்தலை மேவிய கண்ணே' 'குவைப்பதி மலிந்த கோவே' மலைநாடுடைய மன்னே 'திருக்கழுக்குன்றிற் செல்வா' 'பொருப்பமா பூவணத் தரனே ' என அடிகள் கூறுகின்றாராதலின் அவற்றிடையே போந்த அரிகேசரி" என்பதும் ஒரு சிவதலம் என்று துணியப்படும் திருக்கழுக்குன்றம் இறைவனுறையும் தலமாதலின் 'திருக்கழுக்குள் றிற் செல்வா என்றார். கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக் குன்றை " (ஞான 103 : 11) " கழையாடு கழுக்குன்றமமர்ந்தான் கண்டாய்"" (நாவு 285:5)" நட்டமாடி நவிலும்மிடம் கழுக்குன் றமே (சுந்8t: ?)
திருவாசக ஆராய்ச்சியுரை என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இறைவன் சர்வவல்லமை யுடையனாதலின் ' மஞ்சா ' என்றார் . மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளுமானாய் * ( நாவு 57 : 1 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . மஞ்சனே போற்றி என்பதற்கு ' அழகனே வணக்கம் ' என்றும் ' மழையே போற்றி என்றும் உரைப்பாருமுளர் . 172 மணாளா போற்றி மணவாளனே போற்றி . ' ' வள்ளலே போற்றி மணாளா போற்றி ( 246 : 8 ) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . மணாளா என்பதற்கு உமையம்மையின் மணாளா எனவும் உரைக்கலாம் . மலையான் மடந்தை மணவாளா போற்றி ( நாவு 248 : 3 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பஞ்சேர் அடியாள் என்றது உமையம்மையை . பஞ்சு என்றது செம் பஞ்சுக்குழம்பை . பஞ்சுதோய் மெல்லடிப் பாலையா ளொடும் ( ஞான 274 : 6 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . ஏர்- அழகு . ' ஏரணி யணியி னிளையரு மினியரும் ' ' என்னும் பரிபாடலினும் ( 0:27 ) இப் பொருட்டாதல் காண்க . ' பஞ்சேர் அடியாள் பங்கா ' என்றார் இறைவன் உமையம்மையை ஒரு கூற்றி லுடைமையின் பஞ்சுலாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகளை ' ( தே . 241 : 9 ) என ஆளுடையபிள்ளையாரும் பஞ் சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னை ' ' ( தே .288 : 2 ) என ஆளுடைய யரசும் அருளியமை காண்க . அவந்தேன் நாயேன் அடியேன் என்பதனை நாயேன் அடியேன் அலங் தேன் என மாற்றிக்கூட்டிப் பொருளுரைக்க . நாயேன் அடியேன் - கீழ் மையையுடைய அடியேன் . நாயடியேன் ( சத 13 10 கண்ட 3 ) நாயடியேற்கு ' ' ( ஊசல் 1 ) எனப் பிராண்டும் அடிகள் அருளியமை காண்க . அலந்தேன் - நின்னைப் பிரிந்து துன்பமுற்றேன் ; அத்துன்பத்தை நீக்க அருள்செய்ய வேண்டும் எனச் சில சொற்கள் அவாய் நிலையான் வருவித்துரைக்க . ' முறையோ தரியேன் முதல்வா போற்றி ( போற் 180 ) என்ற இடத்துப் பொருளை ஈண்டும் கூறியது ஆற்றாமை மிகுதிபற்றிய தாகலின் புனருத்தியாகாது . அலத்தல் - துன்புறுதல் . ' அலப்பென் றோழி யவ ரகன்ற ஞான்றே ( குறுத் 41 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இலங்குசுடர் ஈசா - விளங்காநின்ற ஒளியையுடைய ஈசா . தோற் றச் சுடரொளியாய் ( சிவபுரா 80 ) தூயமேனிச் சுடர்விடு சோதி ( கீர்த் 112 ) விரிந்தே யெரியுஞ் சுடரனையாய் ' ' ( நீத் 38 ) தூண்டா விளக்கின் சுடரனையாய் ( பிரார்த் 4 ) என அடிகள் பிறாண்டு அருளி யமையுங் காண்க . இலங்குதல் - விளங்குதல் . இலங்குவெள் ளருவியொடு ( மதுரைக் 299 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 11 187-196 . கலைத்தலை மேவிய கண்ணே போற்றி - கவைத்தலை என் னும் தலத்தில் விரும்பி எழுந்தருளிய கண்போற் சிறந்தவனே நினக்கு போற்றித் திருவகவல் 173 வணக்கம் ; குவைப்பதி மலிந்த கோவே போற்றி- குவைப்பதி என்னும் தலத்தில் மகிழ்ச்சிமிகுந்து எழுந்தருளியிருந்த தலைவனே நினக்கு வணக் கம் மலைநாடு உடைய மன்னே போற்றி - மலைநாட்டினையுடைய மன்னனே நினக்கு வணக்கம் : கலை ஆர் அரிகேசரியாய் போற்றி - கலைஞர்கள் நிறைந்த அரிகேசரி என்னும் தலத்தையுடையவனே நினக்கு வணக்கம் ; திருக் கழுக்குன்றில் செல்வா போற்றி - திருக்கழுக்குன்றில் எழுந்தருளியிருக்கும் செல்வனே நினக்கு வணக்கம் : பொருப்பு அமர் பூவணத்து அரரே போற்றி - மலைகள் பொருந்திய திருப்பூவணத்தில் எழுந்தருளிய சிவபெரு மானே நினக்கு வணக்கம் ; அருவமும் உருவமும் ஆனாய் போற்றி அருவமும் உருவமும் ஆனவனே நினக்கு வணக்கம் ; மருவி கருணை மலையே போற்றி - இயல்பாகப் பொருந்திய திருவருளை மலையாகவுடையவனே நினக்கு வணக்கம் ; துரியமும் கடந்த சுடரே போற்றி - நான்காம் நிலையையுங் கடந்த ஒளிவடிவினனே நினக்கு வணக்கம் ; தெரிவு அரிதாகிய தெளிவே போற்றி - பருப்பொருளறிவாலும் நுண்பொருள றிவாலும் அறிதற்கரிதாகிய அருளால் தெரியப்படும் பொருளே நினக்கு வணக்கம் கவைத்தலை குவைப்பதி என்பன சிவதலங்கள் . மேவிய என்றார் கவைத்தலை என்னும் தலத்தில் இறைவன் திருக்கோயில் கொண்டெழுந் தருளியமையின் . கண்ணே என்றார் இறைவன் கண்போற் சிறந்தவனாத வின் கருவேயென் கற்பகமே கண்ணே நெடிய வீசும்பொடு கண்ணே போற்றி ( தே . 261 : 1 : 289 : 10 ) என அப்பரடிகள் அருளியமை யுங் காண்க . மலிதல் - மிகுதல் . பூமலி வையை வருபுனல் ( கலி 90 : 10-11 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கோவே போற்றி -தலைவனே வணக்கம் . குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி என அப் பரடிகள் ( தே . 246 : 7 ) அருளியமையுங் காண்க . மலைநாடு என்றது சேரநாட்டினைவேழமுடைத்து மலைநாடு ( தனிப்பாடல் ) என வருதலுங் காண்க . அரிகேசரி - ஒரு வதவம் கலைஞர்கள் ஆண்டு மிக்கிருந்தமையின் ' கயைார் அரிகேசரியாய் ' என்றார் . ' கலையார் . அரிகேசரியாய் என்பதற்கு ஆடையாக உடுத்திய சிங்கத்தோலுடையவனே என்பாருமுளர் . இறைவன் திருக்கோயில் கொண்டெழுந்தருளி அடியார்க் கருள்புரிந்த தலங்களைக் ' கவைத்தலை மேவிய கண்ணே ' ' குவைப்பதி மலிந்த கோவே ' மலைநாடுடைய மன்னே ' திருக்கழுக்குன்றிற் செல்வா ' ' பொருப்பமா பூவணத் தரனே ' என அடிகள் கூறுகின்றாராதலின் அவற்றிடையே போந்த அரிகேசரி என்பதும் ஒரு சிவதலம் என்று துணியப்படும் திருக்கழுக்குன்றம் இறைவனுறையும் தலமாதலின் ' திருக்கழுக்குள் றிற் செல்வா என்றார் . கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக் குன்றை ( ஞான 103 : 11 ) கழையாடு கழுக்குன்றமமர்ந்தான் கண்டாய் ( நாவு 285 : 5 ) நட்டமாடி நவிலும்மிடம் கழுக்குன் றமே ( சுந் 8 t : ? )