திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

188 திருவாசக ஆராய்ச்சியுரை யவர் பதங்களும்'' (திருக்குறள் உரைப்பாயிரம்) எனப் பரிமேலழகர் உரைத்தலுங் காண்க, புரந்தரன் மால் அயன் வாழ்வு இன்பம் பயத்தல் பற்றி அவற்றை எடுத்துக் கூறினார். இந்திராதி பதங்களை அடைந்தவர்க் கும் புநராவர்த்தியினாற் பிறப்புண்டாமாதலின் அப்பதங்களைச் சிவனடி யார் விரும்பார் என்க. "கொங்குவா வரிவண்டினிசைபாடுமலர்க்கொன்றைத் தொங்கலானடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே" ஞான 177:7. எனத் தேவாரத்து வருதலுங் காண்க. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு என்றமையால் ஏனையோர் வாழ்வையும் கொள்ளாமை தானே பெறப்படும். வாழ்வும் என்ற சிறப் பும்மை விகாரத்தாற் றொக்கது. அடியாருறவு 'குடிகெடினும்' என்பது மத்திபதிபமாக நின்று குடிகெடினும் புரந் தரன் மாலயன் வாழ்வு கொள்ளேன் எனவும் குடிகெடினும் நீன தடியாரொ டல்லால் நள்னேன் எனவும் இயைந்து பொருள்தந்தது. வீடுபேற்றிற்கு ஏதுவாதலானும், குடிப்பிறப்பிற்குரிய பெருமை கெட் நேருங்கால் அடியவரல்லாதாரோடு நட்புச்செய்தல் குடிப்பிற்கு வருந் தீங்கினும் மிக்க தீங்கினைப் பயத்தலானும் அல்வடியார் உறவையே வேண் டும் என்பார். 'குடிகெடினும் நள்ளேன் நினதடியாரொடல்லால்' என் றார்.குடி- குலத்தின் உட்பிரிவு,"விலக்கிமனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண். குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர் தங்குடி விளங்கும்'' (திருநாவு 15) எனப் பெரியபுராணத்து வருதலுங் காண்க. ஈண்டுக் குடி என்றது குடிப்பிறப்பிற்குரிய பெருமையை உணர்த்துதலின் ஆகுபெயர். கெடினும் என்ற உம்மை கொடாமையை உணர்த்துதலின் எதிர்மறை. நள்ளல் - சிநேகித்தல். நரகம், பாதாளத்தில் தீவினையாளர் சென்று தங்கும் இடம். " பாவர் சென்றங்கு ஈரகம்' (திருக்கோலை 337) என அடிகள் அருளியமையுங் காண்க. அது அள்ளல், ரௌரவம், கும்பிபாகம், கூடசாலம். செந்துத் தானம்,பூதி, மாபூதி என எழுவகைப்படும். இறைவன் திருவருளுடையார் நரகம் புகுதல் எக்காலத்துமின்மையின் நரகம் புகினும் என்றர். உம்மை எதிர்மறை. மிக்க துன்பத்தினைப் பயக்கும் நரகின்கண் ஒரோவழி புகநேருமாயினும் இறைவன் திருவருளுணர்ச்சியோடு இருக்கப்பெறின் அதனையும் இகறேன் என்பார், 'நரகம் புகினு மெள்ளேன் திருவதனாலே இருக்கப்பெறின்' என்றார். எள்ளல் இகழுதல். "ஆற்ற அடையோ ராற்றல் போற்றாதென்னுள்ள மெள்ளிய மடவோன் (புற 73:5-6) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. திருவருளால்-ஆல் ஓடுப் பொருட்டு. நரகம் புக்கவர் திருவருளுணர்ச்சியோடு இருக்கப்பெறுதல் அரிதாகலின் 'இருக்கப்பெறின்' என்றார். போற்றித் திருவகவல் 189 எங்கும் நிறைதல் எல்லாம் அறிதல் முதலிய இறைவனுக்குரிய குணங் கள் இல்லாத திருமால் முதலியோரைப் 'பிறதெய்வம்' என்றார். சிவபரம் பொருளையன்றிப் பிறதெய்வங்களைச் சிறிதும் மனத்தினாலும் நினைத்தி லேன் என்பார், 'உள்ளேன் பிறதெய்வம்' என்றார். உள்ளல் - நினைத்தல். "உள்ளுவன் மன் யான் மறப்பின் " இருக்குறன் 1125. உள்ளேன் என மனத்தின் செயலைக் கூறியதனால் வாக்கினால் வாழ்த்தேன்; காயத்தால் வணங்கேன் என்பனவுங் கொள்க அடிகள் பிறதெய்வங்களை வழிபடா மையை, மற்றேர் தெய்வங் கனவிலு நினையாது போற்றி 74. செழுமணி யணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனே சொல்லாய்'' வாழாப் 10. கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம்" ஏசறவு5. என அவர் அருளியவாற்றானு மறியப்படும். 'உற்றவரு முறுதுணையு ரீயேயென்று முன்னையலால் ஒருதெய்வ முள்கே னென்றும்...அலறாகில்லே'' (245: 7) ''சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்'' (312:5) எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும், " வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல மணியே மாணிக்கவண்ணா, நச்சே னொருவரை நானுமை யல்லா குட்டியத்தான்குடி நம்பி" (15:2) 'விருப்பே னுன்னை யல்லா லொருதெய்வமென் மனத்தால் கரும்பாருங் கழனிக் கழுப்பாலை மேயாளே " (28:4) 'தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்கு வாஞ்சியத்துள் ஏழைபங்காளனை பவ்வால் இறையெனக் கருதுதலிலமே" (76: ! ** எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும் அருளியமையும் சண்டைக்கேற்ப அறியற்பாலன. அடிகள் இறைவன் திருவருளாற் பிறதெய்வம் உள்ளா தொழிந்தாரென்பது '"மான் பிறவேத்தா வகையீரங்கித், தன்கடைக்கண் வைத்த தண்டில்லைச் சங்கரன்'' (298) எனத் திருகோவையாரில் வருத லானறியப்படும். இதன்கண் புரந்தரன் மாலயன் வாழ்வு கொள்ளாமையும் பிறதெய் உள்ளாமையும் அடியாரல்லாரோடு நள்ளாமையும். அவை அழி வுடைமையும் பெரும்பயன் தாராமையும் பற்றியாதவின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க
188 திருவாசக ஆராய்ச்சியுரை யவர் பதங்களும் ' ' ( திருக்குறள் உரைப்பாயிரம் ) எனப் பரிமேலழகர் உரைத்தலுங் காண்க புரந்தரன் மால் அயன் வாழ்வு இன்பம் பயத்தல் பற்றி அவற்றை எடுத்துக் கூறினார் . இந்திராதி பதங்களை அடைந்தவர்க் கும் புநராவர்த்தியினாற் பிறப்புண்டாமாதலின் அப்பதங்களைச் சிவனடி யார் விரும்பார் என்க . கொங்குவா வரிவண்டினிசைபாடுமலர்க்கொன்றைத் தொங்கலானடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே ஞான 177 : 7 . எனத் தேவாரத்து வருதலுங் காண்க . கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு என்றமையால் ஏனையோர் வாழ்வையும் கொள்ளாமை தானே பெறப்படும் . வாழ்வும் என்ற சிறப் பும்மை விகாரத்தாற் றொக்கது . அடியாருறவு ' குடிகெடினும் ' என்பது மத்திபதிபமாக நின்று குடிகெடினும் புரந் தரன் மாலயன் வாழ்வு கொள்ளேன் எனவும் குடிகெடினும் நீன தடியாரொ டல்லால் நள்னேன் எனவும் இயைந்து பொருள்தந்தது . வீடுபேற்றிற்கு ஏதுவாதலானும் குடிப்பிறப்பிற்குரிய பெருமை கெட் நேருங்கால் அடியவரல்லாதாரோடு நட்புச்செய்தல் குடிப்பிற்கு வருந் தீங்கினும் மிக்க தீங்கினைப் பயத்தலானும் அல்வடியார் உறவையே வேண் டும் என்பார் . ' குடிகெடினும் நள்ளேன் நினதடியாரொடல்லால் ' என் றார்.குடி- குலத்தின் உட்பிரிவு விலக்கிமனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் . குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர் தங்குடி விளங்கும் ' ' ( திருநாவு 15 ) எனப் பெரியபுராணத்து வருதலுங் காண்க . ஈண்டுக் குடி என்றது குடிப்பிறப்பிற்குரிய பெருமையை உணர்த்துதலின் ஆகுபெயர் . கெடினும் என்ற உம்மை கொடாமையை உணர்த்துதலின் எதிர்மறை . நள்ளல் - சிநேகித்தல் . நரகம் பாதாளத்தில் தீவினையாளர் சென்று தங்கும் இடம் . பாவர் சென்றங்கு ஈரகம் ' ( திருக்கோலை 337 ) என அடிகள் அருளியமையுங் காண்க . அது அள்ளல் ரௌரவம் கும்பிபாகம் கூடசாலம் . செந்துத் தானம் பூதி மாபூதி என எழுவகைப்படும் . இறைவன் திருவருளுடையார் நரகம் புகுதல் எக்காலத்துமின்மையின் நரகம் புகினும் என்றர் . உம்மை எதிர்மறை . மிக்க துன்பத்தினைப் பயக்கும் நரகின்கண் ஒரோவழி புகநேருமாயினும் இறைவன் திருவருளுணர்ச்சியோடு இருக்கப்பெறின் அதனையும் இகறேன் என்பார் ' நரகம் புகினு மெள்ளேன் திருவதனாலே இருக்கப்பெறின் ' என்றார் . எள்ளல் இகழுதல் . ஆற்ற அடையோ ராற்றல் போற்றாதென்னுள்ள மெள்ளிய மடவோன் ( புற 73 : 5-6 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . திருவருளால் - ஆல் ஓடுப் பொருட்டு . நரகம் புக்கவர் திருவருளுணர்ச்சியோடு இருக்கப்பெறுதல் அரிதாகலின் ' இருக்கப்பெறின் ' என்றார் . போற்றித் திருவகவல் 189 எங்கும் நிறைதல் எல்லாம் அறிதல் முதலிய இறைவனுக்குரிய குணங் கள் இல்லாத திருமால் முதலியோரைப் ' பிறதெய்வம் ' என்றார் . சிவபரம் பொருளையன்றிப் பிறதெய்வங்களைச் சிறிதும் மனத்தினாலும் நினைத்தி லேன் என்பார் ' உள்ளேன் பிறதெய்வம் ' என்றார் . உள்ளல் - நினைத்தல் . உள்ளுவன் மன் யான் மறப்பின் இருக்குறன் 1125. உள்ளேன் என மனத்தின் செயலைக் கூறியதனால் வாக்கினால் வாழ்த்தேன் ; காயத்தால் வணங்கேன் என்பனவுங் கொள்க அடிகள் பிறதெய்வங்களை வழிபடா மையை மற்றேர் தெய்வங் கனவிலு நினையாது போற்றி 74 . செழுமணி யணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனே சொல்லாய் ' ' வாழாப் 10 . கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் ஏசறவு 5 . என அவர் அருளியவாற்றானு மறியப்படும் . ' உற்றவரு முறுதுணையு ரீயேயென்று முன்னையலால் ஒருதெய்வ முள்கே னென்றும் ... அலறாகில்லே ' ' ( 245 : 7 ) ' ' சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் ' ' ( 312 : 5 ) எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல மணியே மாணிக்கவண்ணா நச்சே னொருவரை நானுமை யல்லா குட்டியத்தான்குடி நம்பி ( 15 : 2 ) ' விருப்பே னுன்னை யல்லா லொருதெய்வமென் மனத்தால் கரும்பாருங் கழனிக் கழுப்பாலை மேயாளே ( 28 : 4 ) ' தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்கு வாஞ்சியத்துள் ஏழைபங்காளனை பவ்வால் இறையெனக் கருதுதலிலமே ( 76 : ! ** எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும் அருளியமையும் சண்டைக்கேற்ப அறியற்பாலன . அடிகள் இறைவன் திருவருளாற் பிறதெய்வம் உள்ளா தொழிந்தாரென்பது ' மான் பிறவேத்தா வகையீரங்கித் தன்கடைக்கண் வைத்த தண்டில்லைச் சங்கரன் ' ' ( 298 ) எனத் திருகோவையாரில் வருத லானறியப்படும் . இதன்கண் புரந்தரன் மாலயன் வாழ்வு கொள்ளாமையும் பிறதெய் உள்ளாமையும் அடியாரல்லாரோடு நள்ளாமையும் . அவை அழி வுடைமையும் பெரும்பயன் தாராமையும் பற்றியாதவின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க