திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

190 திருவாசக ஆராய்ச்சியுரை 7. உத்தமனத்த னுடையானடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவ னென்ன மன நினைனில் ஒத்தன வொத்தன சொல்லிட வூரூர் திரிந்தெவரும் தத்த மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே. ப-ரை : உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி - சிறந் தவனும் உலகத்துள்ளார் எல்லாருக்கும் தந்தையும் எல்லாவற்றையும் உடைய யவனுமாகிய இறைவனுடைய திருவடிகளையே இடைவிடாது நினைந்து உள்ளம் உருகி மத்த மனத்தொடு-களிப்பேறிய மனத்தோடு, ஊர் ஊர் திரிந்து - ஊர்கள் தோறும் திரிந்து, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல் விட - என் உள்ளக்கருத்தில் அவ்வப்போது பொருத்தின பொருந்தின வாகிய எண்ணங்களை யான் சொல்ல, எவரும் - என் நிவையைக்கண்டார் என்சொல்லைக் கேட்டார் எல்லோரும், மால் இவன் என்ன-பித்துப்பிடித்து மயங்கினவன் இவன் என்று, தம் தம் மனத்தன பேச-தத்தம் மனத்திற் றோன்றிய எண்ணங்களைச் சொல்ல. சாவது எஞ்ஞான் நு-எனது தற் போதங் கெடுவது. எந்நாளோ? உத்தமனும் அத்தனும் உடையானுமாகிய இறைவன் திருவடிகளையே நினைந்துருகிக் களிப்பேறிய மனத்தொடு ஊர்கள்தோறும் திரிந்து மன நினைவில் அவ்வப்போது பொருந்தின பொருந்தினவாகிய எண்ணங்களை யான் சொல்லவும், எவரும் என்னைப் பித்துப்பிடித்து மயங்கினவன் என்று தத்தம் மனத்தன சொல்லவும் எனது தற்போதங்கெடுவது எந்நாளோ என்பதாம். பேராசிரியர் உத்தமன் - சிறந்தவன். இறைவன் உலகத்துள்ளார் எல்லாருக்குந் தந்தையாதல்பற்றி 'அத்தன் ' என்றார், "அத்தன் முத்தன், சிவன் செய்த சீரருளார் தியூர (358) என்னும் இருக்கோவையார் உரையில், 'அத்தன் - உலகத்துள்ளாரெல்லாருக்குந் தந்தை உரைத்தமையுங் காண்க. அன்றிப் பேரின்பமாகிய பெருஞ் செல்லத்னத நல்கிக் காத்தருளல்பற்றிக் கூறினார் எனினுமாம். இடைவிடாது நினைத் தற்குரியது திருவடியேராதலின் 'அடியே நினைந்து' என்றார். என்பதில் ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம். அன்பினால் நினைக்குந்தோறும் உள்ள முருகுதலின் 'நினைந் தருகி என்றார். "நீணிலா வணியினாளை நினைந்து நைந்துருகி" (அச்சப் 10) என அடிகள் பிறாண்டு அருளியமை யுங் காண்க. நினைந்துருகு மடியாரை " (நாவு 228: 1) என்பது தேவாரம். மத்தம்-உன்மத்தம்; பெருங்களிப்பு. மால் - மயக்கம். அது மயக்க முடையவனை உணர்த்தியது. என்னப் பேச எனக் கூட்டுக. மன நினை வில் ஒத்தன வொத்தன சொல்லுதலை அடிகள் செயலாகக் கொள்க. ஊரவர் செயலாக உரைப்பாருமுளர். ஒத்தல்-பொருந்துதல். ஊராண்மைக் கொத்த படிறுடைத்து' (கலி 80: 2) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க, # போற்றித் திருவகவல் 191 இறைவனை வழிபடுதற்கு ஊர்தொறும் செல்லுதலை 'ஊரூர் திரிந்து" என்றார். எவரும் என்றது கற்றோரும் கல்லாதோரும் பெரியோரும் சிறி யோருமாகிய யாவரையும் குறித்தது. தத்தமனத்தன பேசுவென்றது ஊரிலுள்ளவர்கள் தத்தம் மனத்திற்றோன்றிய இகழ்ச்சியமைந்த கருத்துக் களைப் பேசு வென்றவாறு. சகம்பே யென்று தம்மைச் சிரிப்பு நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாக'" என அடிகள் அருளியமையும் காண்க. கொல்-அசை. சாதல் - தற்போதங் கெடுதல். "நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ" (தெள்ளேணம்) என அடிகள் அருளியமையுங் காண்க. நினைந்துருகி (1) மனத்தொடு (2) ஊரூர் திரிந்து ஒத்தன வொத்தன சொல்லிட எவரும் (3) மாலிவன் என்ன (2) தத்த மனத்தன பேச எஞ் ஞான்று கொல் சாவது (4) என மாறிக்கூட்டி. முடிக்க. இதன்கண் எவரும் மாலவன் என்னத் தத்தமனத்தனபேச அவர் கூற்றுப் புகழ்ச்சியாயினும் இகழ்ச்சியாயினும் அவற்றில் விருப்பு வெறுப் பின்றித் திருவருள் ஒன்றிலேயே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயன் என்பது பெறப்படுதலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதவீய பொருள் புலனாதல் அறிக. 3. .. போற்றித் 68.70. 8. சாவமுன் னாள் தக்கன் வேள்ளித் தகர்தின்று நஞ்சமஞ்சி ஆவவெந் தாயென் றனிதா விடுதம் மவரவரே மூவரென் றேயெம் பிரரானேடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேத் றேவரென் றேஇறு மாந்தென்ன பாவத் திரிதவரே. ப-ரை : சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் நின்று-தாம் எல்லோ ரும் இறந்துபட நேரும் என உணர்ந்தும் முன்னாளில் தக்கனாற் செய்யப் பட்ட யாகத்தில் அவியாக ஓமஞ்செய்த ஆட்டின் ஊனைத் தின்றும், நஞ்சம் அஞ்சி - பின்னர்த் திருப்பாற்கடலில் எழுந்த நஞ்சினை அஞ்சி ஆஅ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே - ஆஆ எங்களுக்கு இரங்கி எங்கள் தந்தையே அருள்செய்க என்று முறையீடு செய்யும் நம்மவர்களாகிய அத்தேவர்கள் தாமோ, எம்பிரானொடு மூவர் என்று எண்ணி.எம்பெருமானொடு தம்மையும் சேர்த்து மூவராவோம் என்று நினைத்து, விண் ஆண்டு - விண்ணுலகத்தில் தத்தம் உலகங்களை ஆட்சி புரிந்து, மண்மேல் தேவர் என்று இதுமாந்து திரி தவர்-நிலவுலகத்தில் யாம் முழுமுதற் கடவுளாவோம் என்ற செருக்குற் துத் திரிவுபடும் தவத் திகையுடையர். என்ன பாலம்-தக்கன் வேள்வியில் சாவடைந்தும் நஞ்சம் அஞ்சு அவிதா இட்டும் இழிவடைந்த தேவர்களது அறியாமையை என்ன தீவினை என்போம்.
190 திருவாசக ஆராய்ச்சியுரை 7. உத்தமனத்த னுடையானடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவ னென்ன மன நினைனில் ஒத்தன வொத்தன சொல்லிட வூரூர் திரிந்தெவரும் தத்த மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே . - ரை : உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி - சிறந் தவனும் உலகத்துள்ளார் எல்லாருக்கும் தந்தையும் எல்லாவற்றையும் உடைய யவனுமாகிய இறைவனுடைய திருவடிகளையே இடைவிடாது நினைந்து உள்ளம் உருகி மத்த மனத்தொடு - களிப்பேறிய மனத்தோடு ஊர் ஊர் திரிந்து - ஊர்கள் தோறும் திரிந்து மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல் விட - என் உள்ளக்கருத்தில் அவ்வப்போது பொருத்தின பொருந்தின வாகிய எண்ணங்களை யான் சொல்ல எவரும் - என் நிவையைக்கண்டார் என்சொல்லைக் கேட்டார் எல்லோரும் மால் இவன் என்ன - பித்துப்பிடித்து மயங்கினவன் இவன் என்று தம் தம் மனத்தன பேச - தத்தம் மனத்திற் றோன்றிய எண்ணங்களைச் சொல்ல . சாவது எஞ்ஞான் நு - எனது தற் போதங் கெடுவது . எந்நாளோ ? உத்தமனும் அத்தனும் உடையானுமாகிய இறைவன் திருவடிகளையே நினைந்துருகிக் களிப்பேறிய மனத்தொடு ஊர்கள்தோறும் திரிந்து மன நினைவில் அவ்வப்போது பொருந்தின பொருந்தினவாகிய எண்ணங்களை யான் சொல்லவும் எவரும் என்னைப் பித்துப்பிடித்து மயங்கினவன் என்று தத்தம் மனத்தன சொல்லவும் எனது தற்போதங்கெடுவது எந்நாளோ என்பதாம் . பேராசிரியர் உத்தமன் - சிறந்தவன் . இறைவன் உலகத்துள்ளார் எல்லாருக்குந் தந்தையாதல்பற்றி ' அத்தன் ' என்றார் அத்தன் முத்தன் சிவன் செய்த சீரருளார் தியூர ( 358 ) என்னும் இருக்கோவையார் உரையில் ' அத்தன் - உலகத்துள்ளாரெல்லாருக்குந் தந்தை உரைத்தமையுங் காண்க . அன்றிப் பேரின்பமாகிய பெருஞ் செல்லத்னத நல்கிக் காத்தருளல்பற்றிக் கூறினார் எனினுமாம் . இடைவிடாது நினைத் தற்குரியது திருவடியேராதலின் ' அடியே நினைந்து ' என்றார் . என்பதில் ஏகாரம் பிரிநிலை . தேற்றமுமாம் . அன்பினால் நினைக்குந்தோறும் உள்ள முருகுதலின் ' நினைந் தருகி என்றார் . நீணிலா வணியினாளை நினைந்து நைந்துருகி ( அச்சப் 10 ) என அடிகள் பிறாண்டு அருளியமை யுங் காண்க . நினைந்துருகு மடியாரை ( நாவு 228 : 1 ) என்பது தேவாரம் . மத்தம் - உன்மத்தம் ; பெருங்களிப்பு . மால் - மயக்கம் . அது மயக்க முடையவனை உணர்த்தியது . என்னப் பேச எனக் கூட்டுக . மன நினை வில் ஒத்தன வொத்தன சொல்லுதலை அடிகள் செயலாகக் கொள்க . ஊரவர் செயலாக உரைப்பாருமுளர் . ஒத்தல் - பொருந்துதல் . ஊராண்மைக் கொத்த படிறுடைத்து ' ( கலி 80 : 2 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க # போற்றித் திருவகவல் 191 இறைவனை வழிபடுதற்கு ஊர்தொறும் செல்லுதலை ' ஊரூர் திரிந்து என்றார் . எவரும் என்றது கற்றோரும் கல்லாதோரும் பெரியோரும் சிறி யோருமாகிய யாவரையும் குறித்தது . தத்தமனத்தன பேசுவென்றது ஊரிலுள்ளவர்கள் தத்தம் மனத்திற்றோன்றிய இகழ்ச்சியமைந்த கருத்துக் களைப் பேசு வென்றவாறு . சகம்பே யென்று தம்மைச் சிரிப்பு நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாக ' என அடிகள் அருளியமையும் காண்க . கொல் - அசை . சாதல் - தற்போதங் கெடுதல் . நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ ( தெள்ளேணம் ) என அடிகள் அருளியமையுங் காண்க . நினைந்துருகி ( 1 ) மனத்தொடு ( 2 ) ஊரூர் திரிந்து ஒத்தன வொத்தன சொல்லிட எவரும் ( 3 ) மாலிவன் என்ன ( 2 ) தத்த மனத்தன பேச எஞ் ஞான்று கொல் சாவது ( 4 ) என மாறிக்கூட்டி . முடிக்க . இதன்கண் எவரும் மாலவன் என்னத் தத்தமனத்தனபேச அவர் கூற்றுப் புகழ்ச்சியாயினும் இகழ்ச்சியாயினும் அவற்றில் விருப்பு வெறுப் பின்றித் திருவருள் ஒன்றிலேயே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயன் என்பது பெறப்படுதலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதவீய பொருள் புலனாதல் அறிக . 3 . .. போற்றித் 68.70 . 8. சாவமுன் னாள் தக்கன் வேள்ளித் தகர்தின்று நஞ்சமஞ்சி ஆவவெந் தாயென் றனிதா விடுதம் மவரவரே மூவரென் றேயெம் பிரரானேடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேத் றேவரென் றேஇறு மாந்தென்ன பாவத் திரிதவரே . - ரை : சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் நின்று - தாம் எல்லோ ரும் இறந்துபட நேரும் என உணர்ந்தும் முன்னாளில் தக்கனாற் செய்யப் பட்ட யாகத்தில் அவியாக ஓமஞ்செய்த ஆட்டின் ஊனைத் தின்றும் நஞ்சம் அஞ்சி - பின்னர்த் திருப்பாற்கடலில் எழுந்த நஞ்சினை அஞ்சி ஆஅ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே - ஆஆ எங்களுக்கு இரங்கி எங்கள் தந்தையே அருள்செய்க என்று முறையீடு செய்யும் நம்மவர்களாகிய அத்தேவர்கள் தாமோ எம்பிரானொடு மூவர் என்று எண்ணி.எம்பெருமானொடு தம்மையும் சேர்த்து மூவராவோம் என்று நினைத்து விண் ஆண்டு - விண்ணுலகத்தில் தத்தம் உலகங்களை ஆட்சி புரிந்து மண்மேல் தேவர் என்று இதுமாந்து திரி தவர் - நிலவுலகத்தில் யாம் முழுமுதற் கடவுளாவோம் என்ற செருக்குற் துத் திரிவுபடும் தவத் திகையுடையர் . என்ன பாலம் - தக்கன் வேள்வியில் சாவடைந்தும் நஞ்சம் அஞ்சு அவிதா இட்டும் இழிவடைந்த தேவர்களது அறியாமையை என்ன தீவினை என்போம் .