திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

200 திருவாசக ஆராய்ச்சியுரை உன்மத்தம் பெருங்களிப்பு. மேல்கொண்டு என்றது உடையனாய் என்ற உழிதருதல் சுற்றித்திரிதல். 'புவியகளே யுடையாகத் திரிவான் (நாவு 281:7) எனத் தேவாரத்து வருதலும் காண்க. படி. தன்னை" இங்கே பேய்களோடு சுடுகாட்டில் கூத்தாடியும், கதியற்றவனாகியும். புலித்தோல் உடுத்தவனாகியும். பித்து மிகுதியுடையவனாகியும் சுற்றித் திரிவான் என இறைவனது எளிமை தொவிப்பொருளாகத் தோன்றுமா யினும்,கழுதொடு காட்டிடை நாடகமாடுதலும், கதியிலியாதலும்.உழுவை யின்தோல் உடுத்தலும். உன்மத்தம் மேல்கொண்டு உழிதருதலும் அவ னது இறையைக் குணங்களையே நன்கு புலப்படுத்துவனவாகும். இதன்கண் இறைவனது இறைமைக் குணங்கள் புலப்படுதலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க. 12. உழிதரு காலுங் கனலும் புனலோடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின் உழிதகு கால்அத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக் கழிதகு காலமு மாயவை காந்தெம்மைக் காப்பவனே. 7. ப-ரை: உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும். ஓரிடத்து நில்லாது திரியும் காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்புமாகிய இவ்வைம்பெரும் பூதங்களும், இழிதரு காலம் வருவது எக்காலம்-தத்தம் நிலையினீங்கி ஓடுங்குகின்ற காலம் வருவது எக்காலமோ? வந்ததற்பின் பூதங்களின் ஒடுக்க காலமாகிய பேரூழிக்காலம் வந்த பின்னரும், உழிதரு கால் அத்த - ஓய்வின்றி அசைந்தாடும் திருவடியையுடைய தந்தையே, உன் அடியேன் செய்த வல்வினையை-உன் அடிமையாகிய யான் செய்த வலிய வினைகளை, கழிதரு காலமுமாய் - நீக்குகின்ற காலதத்துவமும் ஆகி. காத்து -அவ்வினைகள் அடிமேனைத் தாக்கா வண்ணம் தடுத்து, எம்மை காப்பவனே என்னையும் என்னைப் போன்ற ஏழை அடியாரையும் காப்பாற்றியருள்பவனே, அதனைக் கூறியருள்க. அவை க-ரை: ஐம்பெரும்பூதங்களும் தத்தம் நிலையினீங்கி ஒடுங்குகின்ற காலம் வருவது எக்காலமோ? பூதங்களின் ஓடுக்ககாலமாகிய பேரூழிக்காலம் வந்த பின்னரும் ஓய்வின்றி அசைந்தாடும் திருவடியையுடைய தந்தையே! உன்னடியேன் செய்த வல்வினையை நீக்குகின்ற காலத்துவமுமாகி அவ் வினைகள் அடியேனைத் தாக்காவண்ணம் தடுத்து எம்மைக் காப்பவனே, அதனைக் கூறியருள்சு. காற்று எப்பொழுதம் ஓரிடத்து நில்லாது அசைந்துகொண்டேயிருத் தலின் 'உறிதருகால்' என்றார். உநிதரு-ஓரிடத்து நில்லாது திரியும். இப்பொசூட்ட தவ் உறிதடு பெருநீதி யுவப்ப நல்கினான்" (சீவக 330) என்புழி உழிதரு என்பதற்கு 'ஓரிடத்து நில்லாது திரியும்' என நச்சி திருச்சதகம் 201 னார்க்கினியர் உரைத்தமையும் காண்க. சுழலும் எனினுமமையும். உழி தருகால் எனக் காற்றின் இயல்பு கூறியதனால் வெங்கனலும் தண்புன லும் திணிநிலனும் அகல்விண்ணும் என மற்றைய பூதங்களின் இயல்பு களும் கொள்ளப்படும். செய்யுளாதலின் காலும் கனலும் புனனும் மண்ணும் விண்ணும் என பிறழக் கூறினாராயினும் மண் புனலினும், புனல் கனவினும், கனல் காவிலும், கால் விண்ணிலும் ஒடுங்கித் தத்தம் நிலையின் நீங்கும் என்க. இருகிலனது புனவிடை மடிதர வெரிபுக வெரியது மிகு பெருவெளி யினில்விதர வளிகெட வியனிடை முழுவது கெட" எனத் தேவாரத்து வருதலும் காண்க. (ஞான 22:7) J இழிதருகாலம் - தத்தம் நிலையினீங்கும் காலம். என்றது அவை ஒடுங் கும் பேரூழிக்காலத்தை. இழிதருகாலம் வருவது எக்காலம் என அடிகள் வினாவியது ஐம்பெரும்பூதங்களின் ஒடுக்கத்தின் பின்னர்த்தானே தம் வினையொடுங்கித் திருவடியிற் கலத்தல் உளதாகும் என அதன்கணுள்ள பெருவிருப்பினால் என்க. வந்ததற் பின்னும் என உம்மை விரிக்க. உழிதருகால்-உலகம் ஒடுங்கிய பின்னும் ஓய்வின்றி அசைந்தாடும் திருவடி. இறைவனது அருட்கூத்துக்கு ஒருபொழுதும் இடையீடின்மை யின் அங்ஙனம் அருளிச் செய்யப்பட்டது அடியேன் செய்த வல்வினை எனப் பொதுப்படக்கூறினும் எடுத்த பிறப்பு முகந்து கின்ற பிராரத்த வினையொழிந்த சஞ்சித ஆகாமிய வினைகளே இங்கு கூறப்பட்டன. கழிதரு காலம் - நீங்குகின்ற காலதத்துவம் காலமுதலிய தத்துவங்கள், உயிர்கள் வினைப்பயனை அனுபவித்து ஈடேறும் பொருட்டு அமைக்கப் பட்டனவாகிய ஒற்றுமைபற்றிக் ' கழிதரு காலமுமாய்' என இறைவன் மேல் ஏற்றிக்கூறினார். அவை காத்தல் காலதத்துவத்தில் நீங்காது நின்ற சஞ்சித ஆகாமிய வினைகள் தாக்காதவாறு தடுத்தல். எம்மை என்ற பன்மை தப்மையும் தம்போன்ற அடியாரையும் உளப்படுத்தி நின்றது. இதன்கண் 'உழிதரு காலுங் கனலுங் புனவொடு மண்ணும் விண் ணும், இழிதரு காலம் எக்காலம் வருவது' என்பதனால், ஐம்பெரும்பூதங் களும் அவற்றின் காரியமாகிய உலகங்களும் ஒடுங்கும் என்னும் மெய் யுணர்வு புலப்படுத்தலீன் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 13. பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோச்பெருமான் சிவனெம்பிரானென்னை யாண்டுகொண்டானென் சிறுமைகண்டும் அவனெம் பிராவென்ன நானடி யேனென்ன விப்பரிசே புவனெம் பிரான்றெறி யும்பரி சாவ தியம்புகவே. மு-ரை: பவன் - உலகத்தோற்றத்திற்கு நிமித்தகாரணமாயுள்ளவனும், எம்பிரால் எம்பெருமானும், பனி மா மதி கண்ணி - குளிர்ச்சியும் பெருமை 86
200 திருவாசக ஆராய்ச்சியுரை உன்மத்தம் பெருங்களிப்பு . மேல்கொண்டு என்றது உடையனாய் என்ற உழிதருதல் சுற்றித்திரிதல் . ' புவியகளே யுடையாகத் திரிவான் ( நாவு 281 : 7 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . படி . தன்னை இங்கே பேய்களோடு சுடுகாட்டில் கூத்தாடியும் கதியற்றவனாகியும் . புலித்தோல் உடுத்தவனாகியும் . பித்து மிகுதியுடையவனாகியும் சுற்றித் திரிவான் என இறைவனது எளிமை தொவிப்பொருளாகத் தோன்றுமா யினும் கழுதொடு காட்டிடை நாடகமாடுதலும் கதியிலியாதலும்.உழுவை யின்தோல் உடுத்தலும் . உன்மத்தம் மேல்கொண்டு உழிதருதலும் அவ னது இறையைக் குணங்களையே நன்கு புலப்படுத்துவனவாகும் . இதன்கண் இறைவனது இறைமைக் குணங்கள் புலப்படுதலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க . 12. உழிதரு காலுங் கனலும் புனலோடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின் உழிதகு கால்அத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக் கழிதகு காலமு மாயவை காந்தெம்மைக் காப்பவனே . 7 . - ரை : உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் . ஓரிடத்து நில்லாது திரியும் காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்புமாகிய இவ்வைம்பெரும் பூதங்களும் இழிதரு காலம் வருவது எக்காலம் - தத்தம் நிலையினீங்கி ஓடுங்குகின்ற காலம் வருவது எக்காலமோ ? வந்ததற்பின் பூதங்களின் ஒடுக்க காலமாகிய பேரூழிக்காலம் வந்த பின்னரும் உழிதரு கால் அத்த - ஓய்வின்றி அசைந்தாடும் திருவடியையுடைய தந்தையே உன் அடியேன் செய்த வல்வினையை - உன் அடிமையாகிய யான் செய்த வலிய வினைகளை கழிதரு காலமுமாய் - நீக்குகின்ற காலதத்துவமும் ஆகி . காத்து -அவ்வினைகள் அடிமேனைத் தாக்கா வண்ணம் தடுத்து எம்மை காப்பவனே என்னையும் என்னைப் போன்ற ஏழை அடியாரையும் காப்பாற்றியருள்பவனே அதனைக் கூறியருள்க . அவை - ரை : ஐம்பெரும்பூதங்களும் தத்தம் நிலையினீங்கி ஒடுங்குகின்ற காலம் வருவது எக்காலமோ ? பூதங்களின் ஓடுக்ககாலமாகிய பேரூழிக்காலம் வந்த பின்னரும் ஓய்வின்றி அசைந்தாடும் திருவடியையுடைய தந்தையே ! உன்னடியேன் செய்த வல்வினையை நீக்குகின்ற காலத்துவமுமாகி அவ் வினைகள் அடியேனைத் தாக்காவண்ணம் தடுத்து எம்மைக் காப்பவனே அதனைக் கூறியருள்சு . காற்று எப்பொழுதம் ஓரிடத்து நில்லாது அசைந்துகொண்டேயிருத் தலின் ' உறிதருகால் ' என்றார் . உநிதரு - ஓரிடத்து நில்லாது திரியும் . இப்பொசூட்ட தவ் உறிதடு பெருநீதி யுவப்ப நல்கினான் ( சீவக 330 ) என்புழி உழிதரு என்பதற்கு ' ஓரிடத்து நில்லாது திரியும் ' என நச்சி திருச்சதகம் 201 னார்க்கினியர் உரைத்தமையும் காண்க . சுழலும் எனினுமமையும் . உழி தருகால் எனக் காற்றின் இயல்பு கூறியதனால் வெங்கனலும் தண்புன லும் திணிநிலனும் அகல்விண்ணும் என மற்றைய பூதங்களின் இயல்பு களும் கொள்ளப்படும் . செய்யுளாதலின் காலும் கனலும் புனனும் மண்ணும் விண்ணும் என பிறழக் கூறினாராயினும் மண் புனலினும் புனல் கனவினும் கனல் காவிலும் கால் விண்ணிலும் ஒடுங்கித் தத்தம் நிலையின் நீங்கும் என்க . இருகிலனது புனவிடை மடிதர வெரிபுக வெரியது மிகு பெருவெளி யினில்விதர வளிகெட வியனிடை முழுவது கெட எனத் தேவாரத்து வருதலும் காண்க . ( ஞான 22 : 7 ) J இழிதருகாலம் - தத்தம் நிலையினீங்கும் காலம் . என்றது அவை ஒடுங் கும் பேரூழிக்காலத்தை . இழிதருகாலம் வருவது எக்காலம் என அடிகள் வினாவியது ஐம்பெரும்பூதங்களின் ஒடுக்கத்தின் பின்னர்த்தானே தம் வினையொடுங்கித் திருவடியிற் கலத்தல் உளதாகும் என அதன்கணுள்ள பெருவிருப்பினால் என்க . வந்ததற் பின்னும் என உம்மை விரிக்க . உழிதருகால் - உலகம் ஒடுங்கிய பின்னும் ஓய்வின்றி அசைந்தாடும் திருவடி . இறைவனது அருட்கூத்துக்கு ஒருபொழுதும் இடையீடின்மை யின் அங்ஙனம் அருளிச் செய்யப்பட்டது அடியேன் செய்த வல்வினை எனப் பொதுப்படக்கூறினும் எடுத்த பிறப்பு முகந்து கின்ற பிராரத்த வினையொழிந்த சஞ்சித ஆகாமிய வினைகளே இங்கு கூறப்பட்டன . கழிதரு காலம் - நீங்குகின்ற காலதத்துவம் காலமுதலிய தத்துவங்கள் உயிர்கள் வினைப்பயனை அனுபவித்து ஈடேறும் பொருட்டு அமைக்கப் பட்டனவாகிய ஒற்றுமைபற்றிக் ' கழிதரு காலமுமாய் ' என இறைவன் மேல் ஏற்றிக்கூறினார் . அவை காத்தல் காலதத்துவத்தில் நீங்காது நின்ற சஞ்சித ஆகாமிய வினைகள் தாக்காதவாறு தடுத்தல் . எம்மை என்ற பன்மை தப்மையும் தம்போன்ற அடியாரையும் உளப்படுத்தி நின்றது . இதன்கண் ' உழிதரு காலுங் கனலுங் புனவொடு மண்ணும் விண் ணும் இழிதரு காலம் எக்காலம் வருவது ' என்பதனால் ஐம்பெரும்பூதங் களும் அவற்றின் காரியமாகிய உலகங்களும் ஒடுங்கும் என்னும் மெய் யுணர்வு புலப்படுத்தலீன் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 13. பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோச்பெருமான் சிவனெம்பிரானென்னை யாண்டுகொண்டானென் சிறுமைகண்டும் அவனெம் பிராவென்ன நானடி யேனென்ன விப்பரிசே புவனெம் பிரான்றெறி யும்பரி சாவ தியம்புகவே . மு - ரை : பவன் - உலகத்தோற்றத்திற்கு நிமித்தகாரணமாயுள்ளவனும் எம்பிரால் எம்பெருமானும் பனி மா மதி கண்ணி - குளிர்ச்சியும் பெருமை 86