திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

204 திருவாசக ஆராய்ச்சியுரை 14. புகவே தகேனுனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்தியண் ணாவமுதே நகமே தகுமெம் பிரானென்னை நீசெய்த நாடகமே. ப-ரை :- என் பொல்லா மணியே - எனது துளையிடாத மாணிக்கமே. யான் உனக்கு அன்பருள் புகவே தகேன் = யான் உன்னுடைய அன்பர் கூட்டத்தில் புகுதற்கே தகுதியில்லாதவன்; எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை தகவே - அங்ஙனமாகவும் தகுதியில்லாத என்னை உனக்கு ஆனா கக் கொண்ட தன்மை நீன் பெருமைக்குத் தகுதியாகுமோ? யரை மிகவே உயர்த்தி - எத்தகைய இழித்தோரையும் மிக உயர்வடையச் எப்புன்மை செய்து, விண்ணோரை பணித்தி- உயர்ந்தவர்களாகிய தேவரிகளைத் தாழ் வடையச் செய்கின்ருய்; அண்ணா - தந்தையே. அமுதே - அமுதம் போன் றவனே, எம்பிரான் - எங்கள் தலைவனே நீ செய்த நாடகம் நாவே தகும் - நீ இவ்வாறு இயல்பிற்கு மாறாக என்னை ஆட்கொண்டு அருள் செய்த திருக்கூத்து சிறிது நகையாடுதற்கே தக்கதாகும். என் பொல்லா மணியே, யான் யன் அன்பர் கூட்டத்திற் புகுதற்கே தகுதியற்றவன்; அங்ஙனமாகவும் தகுதியில்லாத என்னை உனக்கு ஆளா கக் கொண்ட தன்மை நின்பெருமைக்குத் தகுதியாகுமோ? எத்தகைய இழிந்தோரையும் மிக உயர்வடையச் செய்து உயர்ந்தோராகிய தேவர்களைத் தாழ்வடையச் செய்கின்றாய். அண்ணா எழுதே எம்பிரான் / நீ இவ்வாறு இயல்பிற்கு மாறாக என்னை ஆட்கொண்டு அருள்செய்த திருக்கூத்து சிறுது நகையாடுதற்கே தக்கதாகும் என்பதாம். பொல்லா - துளையீடாத. முவைட்டப் கிழிந்து பொல்லா"" பூணுமுத்து முள்கலீற் (சீவக 2184) என்புழிப் பொல்லா என்பதற்குத் துணையிடாத என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க, பொள்ளாமணி என்பது வட நூலாம் மதம் பற்றிப் பொல்லாமணி என மரீஇயிற்று. பணி என்பது நவமணிகளுக்கும் பொதுப்பெயராயினும் ஈண்டு மாணிக்கத்தை உணர்த்திற்று. "தோளாமணியே'" (கோவை 47) என்பதற்குத் தனைக்கப்படாத மாணிக்கமே எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமையுங் காண்க இறைவன் துளையிடாத மாணிக்கம் போலும் இயல்பாகவே ஒளியையுடைய சிவந்த திருமேனியனாதலின் 'பொல்லா மணியே' என்றார். ''என்னை யாண்ட பொல்லா மணியேயோ" அசைப் 1. "என்பொல்லா மணியைப் புணர்ந்தே" புணர்ச் 1. "புனையப்பெறுவ தென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே'' புணர்ச் 47, "அப்பலத் தாடுகின்ற என்பொல்லா மணியை" என இத்திருவா சகத்தும், அச்சப் 3. திருச்சதகம் 205 என்பொண மணிககுங் சொல்வ லென்றிறை கோயில் புக்கான்' (20:2) என நம்பி திருவிளையாடற் புராணத்தும், "என்பொலா மணி மனமிரங்கிற் றென்பவே (முனிவர் ) எனப் பிரபுலிங்கலையினும் வருவன காண்க. இறைவன் மாணிக்கம் போலும் ஒளியையுடைய சிவந்த மேனியனாதல், 'வைப்புமா டென்றும் மாணிக்கத்தொளி யென்றும் மனத்திடை யுருகாதே'" (அதிசயப் 1) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையானும் அறியப்படும். அன்பர் உனக்கு அன்பர் - உன்னிடத்தன்பர் எனினுமாம். புகவே தகேன் என்பது அடியார் திருக்கூட்டத்தில் புகுதற்கே தகுதியில்லாதேன் அவருன் ஒருவனாய் இரும்பது யாங்ஙனம் என்பதை உணர்த்தியது. புகவே என்ப தில் ஏகாரம் தேற்றப் பொருட்டு. கூட்டத்திற் புகுதற்கே தகுதியில்வாத என்னை உனக்கு ஆளாகக் கொண்ட தன்மை நின் பெரு மைக்குத் தகுதியாமோ என்பார் 'புகவே தகேன்; தகவே யெனை யுனக் காட்கொண்ட தன்மை' என்றார். இதனால் தகுதியில்லாதோரையும் தகுதி வருவித்து ஆட்கொள்ளும் இறைவனது பேரருட்டிறம் புலப்படுத்தவாறு. தகவே என்பதில் ஏகாரம் வினாப் பொருளில் வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தியது. எப்புன்மையரை என்பதில் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக் மிகவே உயர்த்தி - மிகவும் உயரச் செய்து, புண்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி என்றது விண்ணோரிலும் புல்மையரை மிகச் செய்தல் பற்றியாகும். "மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன்' எனத் திருக்கோ வையாரில் (315) அடிகள் அருளியமையுங் காண்க. மிகவே என்பதில் ஏகாரம் அசை. கார விண்ணோரைப் பணித்தி என்றதனால் உயர்தோரான விண்ணோர் அதி மலத்துட்பட்டுச் செருக்குறுங்காலத்து அச்செருக்கினை நீக்குமாறு அவர்களைத் தாழ்வடையச் செய்யும் மறக்கருணையை விளக்கியவாறு. அண்ணா அமுதே என்பதற்கு அடைதற்கரிய அமுதம் போன்றவனே என வும் உரைக்கலாம். எம்பிரான் அண்மை விளி. "என் எம்பிரான் வம் பனேன் வினைக் கிறுதியில்லையே" (சதகம 99) என்புழிப்போல என்னை நீ செய்த நாடகம் என்றது ஒரு சிறிதும் தகுதியில்லாத சிறிலேனை நீ ஆட்கொண்டு அருள் செய்த திருக்கூத்து என்றவாறு நகவே தகும் என்றது அத்திருக்கூத்துப் பேரானந்தமாகிய சிரிப்பைத் தருவதை வெளியிட்டலாருகும், இதன்கண் இறைவன் இயல்பும் அவன் ஆட்கொண்டருளும் இயவ் பும் செருக்குற்றோரை ஒறுக்கும் இயல்புமாகிய மெய்ம்மை பெறப்படுத லின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிய பொருள் புலப்படு 10. மாறு காண்க,
204 திருவாசக ஆராய்ச்சியுரை 14. புகவே தகேனுனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்தியண் ணாவமுதே நகமே தகுமெம் பிரானென்னை நீசெய்த நாடகமே . - ரை : - என் பொல்லா மணியே - எனது துளையிடாத மாணிக்கமே . யான் உனக்கு அன்பருள் புகவே தகேன் = யான் உன்னுடைய அன்பர் கூட்டத்தில் புகுதற்கே தகுதியில்லாதவன் ; எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை தகவே - அங்ஙனமாகவும் தகுதியில்லாத என்னை உனக்கு ஆனா கக் கொண்ட தன்மை நீன் பெருமைக்குத் தகுதியாகுமோ ? யரை மிகவே உயர்த்தி - எத்தகைய இழித்தோரையும் மிக உயர்வடையச் எப்புன்மை செய்து விண்ணோரை பணித்தி- உயர்ந்தவர்களாகிய தேவரிகளைத் தாழ் வடையச் செய்கின்ருய் ; அண்ணா - தந்தையே . அமுதே - அமுதம் போன் றவனே எம்பிரான் - எங்கள் தலைவனே நீ செய்த நாடகம் நாவே தகும் - நீ இவ்வாறு இயல்பிற்கு மாறாக என்னை ஆட்கொண்டு அருள் செய்த திருக்கூத்து சிறிது நகையாடுதற்கே தக்கதாகும் . என் பொல்லா மணியே யான் யன் அன்பர் கூட்டத்திற் புகுதற்கே தகுதியற்றவன் ; அங்ஙனமாகவும் தகுதியில்லாத என்னை உனக்கு ஆளா கக் கொண்ட தன்மை நின்பெருமைக்குத் தகுதியாகுமோ ? எத்தகைய இழிந்தோரையும் மிக உயர்வடையச் செய்து உயர்ந்தோராகிய தேவர்களைத் தாழ்வடையச் செய்கின்றாய் . அண்ணா எழுதே எம்பிரான் / நீ இவ்வாறு இயல்பிற்கு மாறாக என்னை ஆட்கொண்டு அருள்செய்த திருக்கூத்து சிறுது நகையாடுதற்கே தக்கதாகும் என்பதாம் . பொல்லா - துளையீடாத . முவைட்டப் கிழிந்து பொல்லா பூணுமுத்து முள்கலீற் ( சீவக 2184 ) என்புழிப் பொல்லா என்பதற்குத் துணையிடாத என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க பொள்ளாமணி என்பது வட நூலாம் மதம் பற்றிப் பொல்லாமணி என மரீஇயிற்று . பணி என்பது நவமணிகளுக்கும் பொதுப்பெயராயினும் ஈண்டு மாணிக்கத்தை உணர்த்திற்று . தோளாமணியே ' ( கோவை 47 ) என்பதற்குத் தனைக்கப்படாத மாணிக்கமே எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமையுங் காண்க இறைவன் துளையிடாத மாணிக்கம் போலும் இயல்பாகவே ஒளியையுடைய சிவந்த திருமேனியனாதலின் ' பொல்லா மணியே ' என்றார் . ' ' என்னை யாண்ட பொல்லா மணியேயோ அசைப் 1 . என்பொல்லா மணியைப் புணர்ந்தே புணர்ச் 1 . புனையப்பெறுவ தென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே ' ' புணர்ச் 47 அப்பலத் தாடுகின்ற என்பொல்லா மணியை என இத்திருவா சகத்தும் அச்சப் 3 . திருச்சதகம் 205 என்பொண மணிககுங் சொல்வ லென்றிறை கோயில் புக்கான் ' ( 20 : 2 ) என நம்பி திருவிளையாடற் புராணத்தும் என்பொலா மணி மனமிரங்கிற் றென்பவே ( முனிவர் ) எனப் பிரபுலிங்கலையினும் வருவன காண்க . இறைவன் மாணிக்கம் போலும் ஒளியையுடைய சிவந்த மேனியனாதல் ' வைப்புமா டென்றும் மாணிக்கத்தொளி யென்றும் மனத்திடை யுருகாதே ' ( அதிசயப் 1 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையானும் அறியப்படும் . அன்பர் உனக்கு அன்பர் - உன்னிடத்தன்பர் எனினுமாம் . புகவே தகேன் என்பது அடியார் திருக்கூட்டத்தில் புகுதற்கே தகுதியில்லாதேன் அவருன் ஒருவனாய் இரும்பது யாங்ஙனம் என்பதை உணர்த்தியது . புகவே என்ப தில் ஏகாரம் தேற்றப் பொருட்டு . கூட்டத்திற் புகுதற்கே தகுதியில்வாத என்னை உனக்கு ஆளாகக் கொண்ட தன்மை நின் பெரு மைக்குத் தகுதியாமோ என்பார் ' புகவே தகேன் ; தகவே யெனை யுனக் காட்கொண்ட தன்மை ' என்றார் . இதனால் தகுதியில்லாதோரையும் தகுதி வருவித்து ஆட்கொள்ளும் இறைவனது பேரருட்டிறம் புலப்படுத்தவாறு . தகவே என்பதில் ஏகாரம் வினாப் பொருளில் வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தியது . எப்புன்மையரை என்பதில் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக் மிகவே உயர்த்தி - மிகவும் உயரச் செய்து புண்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி என்றது விண்ணோரிலும் புல்மையரை மிகச் செய்தல் பற்றியாகும் . மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் ' எனத் திருக்கோ வையாரில் ( 315 ) அடிகள் அருளியமையுங் காண்க . மிகவே என்பதில் ஏகாரம் அசை . கார விண்ணோரைப் பணித்தி என்றதனால் உயர்தோரான விண்ணோர் அதி மலத்துட்பட்டுச் செருக்குறுங்காலத்து அச்செருக்கினை நீக்குமாறு அவர்களைத் தாழ்வடையச் செய்யும் மறக்கருணையை விளக்கியவாறு . அண்ணா அமுதே என்பதற்கு அடைதற்கரிய அமுதம் போன்றவனே என வும் உரைக்கலாம் . எம்பிரான் அண்மை விளி . என் எம்பிரான் வம் பனேன் வினைக் கிறுதியில்லையே ( சதகம 99 ) என்புழிப்போல என்னை நீ செய்த நாடகம் என்றது ஒரு சிறிதும் தகுதியில்லாத சிறிலேனை நீ ஆட்கொண்டு அருள் செய்த திருக்கூத்து என்றவாறு நகவே தகும் என்றது அத்திருக்கூத்துப் பேரானந்தமாகிய சிரிப்பைத் தருவதை வெளியிட்டலாருகும் இதன்கண் இறைவன் இயல்பும் அவன் ஆட்கொண்டருளும் இயவ் பும் செருக்குற்றோரை ஒறுக்கும் இயல்புமாகிய மெய்ம்மை பெறப்படுத லின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிய பொருள் புலப்படு 10 . மாறு காண்க