திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

ALA 210 திருவாசக் ஆராய்ச்சியுரை பதற்குச் சாதனமாக நல்ல மலர்களை மாலையாகத் தொடுத்து நினக்கு அணியேன் : நா தழும்பு ஏறஏத்தேன் நின்ளை மேன்மேலும் துதித்தலால் நாவில் தழும்புண்டாகும்படி நின்புகழைப் பாடேன்; அருள் அமுதம் புரியாயேல் -என்னிடத்து அச்ச தனங்களின்மையால் நினது திருவருளாகிய அமுதத்தினை அடியேனுக்கு வழங்கல் செய்யா தொழிகுவையாயின். அதமி யேன் வருந்தவன் - அச்சாதனத் தகுதிகளில்லாது அணையிலாதேனாகிய யான் மேன்மேலும் வருந்துவேன்; நான் ஆம் ஆறு மற்று என் - நான் அங்ஙனம் வருந்தாது உய்யும்வறி வேறு யாது உனது? பொற்சிலை குனித்தாய், நாயடியேன் நின் மலர்ப்பாதங்களாகிய அவற் றைக் காணும் பொருட்டு வருந்தி முயல்கின்றேன்; அவ்வாறு முயன் றிருந்தும் திருவடிகளைக் காண்பதற்குச் சாதனமாக நல்ல மலர்களைத் தொடுத்து நினக்கு அணியேன்; நாத்தழும்பேற ஏத்தேன்; என்னிடத்து அச்சரதனங்களின்மையால் நின் திருவருளாகிய அமுதத்தினை அடியேனுக்கு வழங்கல் செய்யாதொழிகுவையாயின் அத்தமியேன் வருந்துவன்; வருந்தாது உய்யும்வழி வேறு யாது உளது என்பதாம். நான் வருந்துவன்' என்றது நின்மலர்ப்பாதங்களைக் காணும் பொருட்டு வருந்தி முயல்கின்றேன் என்னும் பொருளது. மலர்ப்பாதம் மலர் போன்ற பாதம். ''மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்'' (திருவெம் 2)மாலறியா மலர்ப்பாத மிரண்டும்'' (திருப்படை 1) எனப் பிருண்டும் ருவன காண்க. மவர் என்றது தாமரை மலரை. தாமரைத் தாள் " (சத 45) எனவும், சொற்பதங் கடந்த அப்பன் தாள தாமரைகள்" (அச்சப் )ே எனவும் அடிகள் அருளியவாறுங் காண்க. பாதமவை என்பதிற் சுட்டு பாதங்கள் என்னும் துணையாய் கின்றது. இருந்தும் என்றது மலர்ப்ப தங்களைக் காணும் பொருட்டு வருந்தி முயன்றிருந்தும் என்னும் பொருளது. நலமலர் என்றது உரியகாலத்து உரிய முறைப்படி உரியனவாகக் கொய்தெடுக்கப்பட்ட நல்ல மலர்களை. புனையேன் என்ற வினையினால் அம் மலராற் றொடுக்கப்பட்ட மாலை என உரைக்கப்பட்டது. பூமாலை புனைந் தேத்தேன்'' (சத 14) என வந்தமையுங் காண்க. நாத்தழும்பு ஏற என்றது பல்காற் பாடுதலால் தாவில் தழும்பு உண்டாகும்படி என்றவாது. கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்தி" (திருப்பொற் 15) என வருதலுங்காண்க. நாத்தழும்பு ஏறுதற்குச் செயப் படுபொருளாகிய இறைவன் புகழ் வருவிக்கப்பட்டது. சிலை-மலை. சிலையளித்த தோளான்' (பு.வெ.மா. 33) என்பதற்கு "மலையையொத்த தோளான்" என அதன் உரையாசிரியர் பொருளுரைத்த மையுங் காண்க, பொற்சிலை என்றது பொன்னுருவாகப் பொருந்திய மேருமைைர! குனிதல்-வனைத்தல். குனித்தாய் என்னும் பனையினுால் வில் லாக என்பது வருவிக்கப்பட்டது. இறைவன் பொற்சிப்பகுளித் யார் புரங்களை அழித்தற் பொருட்டாகும். திறை அடை திருச்சதகம் 211 ஞான 83.6. "வீண்டார் புரம்லேவ மேருச் சிலையாகக் கொண்டான்" நினையாதார் புரமெரிய வளைத்த மேருச், சிலையானை '' நாவு 277:8. வரியர மாணதாக மாமேரு வில்லதாக அரியன புரங்கள்ளவை யாரழ லூட்ட வென்னே " சுந் 99.8. எனத் தேவாரத்தும், " அடையார் புரங்கள் இகல்குன்ற வில்லிற் சென்றோன் (4) எனத் திருக்கோவையாயினும் வருவன காண்க. வில்லாதற்குப் பொருந்தாத மலையை வளைத்த நீ, மலர்புனைதற்கும் ஏத்துதற்கும் என்னைத் தூண்டாத மனத்தை வளைத்து உதவலாமன்றோ. அதனால் அருளமுதம் வழங்குதல் செய்தலும் இயையுமே. அங்ஙனம் வழங்குதல் செய்யாதொழிவையாயின் என்பார் அருளமுதம் புரியாயேல்' என்றார். அருளமுதம்- திருவருளாகிய அமுதம். 'புயங்கன் அருளமுதம் ஆரப்பருகி" (யாத்திரைப் 9) எனவும், 'உண்டேன் அவரருள் ஆர மிர்தத்தினை '' (11-த் திருமுறை. கோயில் திருப்பள்ளி 14) எனவும் வரு வன காண்க.ஏத்துதல் அருள் பெறுதற்கேதுவாதல்+ ''எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே" 30. "ஏத்தியு மெம்பெரு மானென் நிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே' 30. எனத் திருமந்திரத்து வருவனவற்றாலுமறீக. அத்தமியேன் என்பதில் சுட்டு மலர்புனைதலும் ஏத்துதலுமாகிய அச் சாதவைகளின்மையை உணர்த்தியது. தமியேன்-தணையில்லாதேன். திருக் கோவை 90 பேர் உரை. மற்று, பிறிது பொருளது.ஆம் ஆறு என்றது. வருந்துவேனாகிய யான் வருந்தாது உய்யும் வழி என்னும் பொருளது, ஏ-அசை. இதன்கண் நின்மலர்ப்பாதங்களைக் காண்பான் வருந்தி முயல்கின்ற யான் மலர்புனையவும் எத்தவும் உதவி செய்யாது புறப்புலன்களில் அலைந்து திரியும் என் மனத்தினை அவ்வாறு திரியாது அடக்கித் தரவேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்ளுதலினால் மனத்திற்குக் குறிப்பான் அறி வுறுத்தியமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க. 13. 18. ஆமாறுன் திருவடிக்கே யகங்குழையேன் அன்புருகேள்' பூமாலை புனைத்தேந்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமானின் விருக்கோயில் நூகேன்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விசைகின்றேன் சதுராலே சார்னானே.
ALA 210 திருவாசக் ஆராய்ச்சியுரை பதற்குச் சாதனமாக நல்ல மலர்களை மாலையாகத் தொடுத்து நினக்கு அணியேன் : நா தழும்பு ஏறஏத்தேன் நின்ளை மேன்மேலும் துதித்தலால் நாவில் தழும்புண்டாகும்படி நின்புகழைப் பாடேன் ; அருள் அமுதம் புரியாயேல் -என்னிடத்து அச்ச தனங்களின்மையால் நினது திருவருளாகிய அமுதத்தினை அடியேனுக்கு வழங்கல் செய்யா தொழிகுவையாயின் . அதமி யேன் வருந்தவன் - அச்சாதனத் தகுதிகளில்லாது அணையிலாதேனாகிய யான் மேன்மேலும் வருந்துவேன் ; நான் ஆம் ஆறு மற்று என் - நான் அங்ஙனம் வருந்தாது உய்யும்வறி வேறு யாது உனது ? பொற்சிலை குனித்தாய் நாயடியேன் நின் மலர்ப்பாதங்களாகிய அவற் றைக் காணும் பொருட்டு வருந்தி முயல்கின்றேன் ; அவ்வாறு முயன் றிருந்தும் திருவடிகளைக் காண்பதற்குச் சாதனமாக நல்ல மலர்களைத் தொடுத்து நினக்கு அணியேன் ; நாத்தழும்பேற ஏத்தேன் ; என்னிடத்து அச்சரதனங்களின்மையால் நின் திருவருளாகிய அமுதத்தினை அடியேனுக்கு வழங்கல் செய்யாதொழிகுவையாயின் அத்தமியேன் வருந்துவன் ; வருந்தாது உய்யும்வழி வேறு யாது உளது என்பதாம் . நான் வருந்துவன் ' என்றது நின்மலர்ப்பாதங்களைக் காணும் பொருட்டு வருந்தி முயல்கின்றேன் என்னும் பொருளது . மலர்ப்பாதம் மலர் போன்ற பாதம் . ' ' மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் ' ' ( திருவெம் 2 ) மாலறியா மலர்ப்பாத மிரண்டும் ' ' ( திருப்படை 1 ) எனப் பிருண்டும் ருவன காண்க . மவர் என்றது தாமரை மலரை . தாமரைத் தாள் ( சத 45 ) எனவும் சொற்பதங் கடந்த அப்பன் தாள தாமரைகள் ( அச்சப் )ே எனவும் அடிகள் அருளியவாறுங் காண்க . பாதமவை என்பதிற் சுட்டு பாதங்கள் என்னும் துணையாய் கின்றது . இருந்தும் என்றது மலர்ப்ப தங்களைக் காணும் பொருட்டு வருந்தி முயன்றிருந்தும் என்னும் பொருளது . நலமலர் என்றது உரியகாலத்து உரிய முறைப்படி உரியனவாகக் கொய்தெடுக்கப்பட்ட நல்ல மலர்களை . புனையேன் என்ற வினையினால் அம் மலராற் றொடுக்கப்பட்ட மாலை என உரைக்கப்பட்டது . பூமாலை புனைந் தேத்தேன் ' ' ( சத 14 ) என வந்தமையுங் காண்க . நாத்தழும்பு ஏற என்றது பல்காற் பாடுதலால் தாவில் தழும்பு உண்டாகும்படி என்றவாது . கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்தி ( திருப்பொற் 15 ) என வருதலுங்காண்க . நாத்தழும்பு ஏறுதற்குச் செயப் படுபொருளாகிய இறைவன் புகழ் வருவிக்கப்பட்டது . சிலை - மலை . சிலையளித்த தோளான் ' ( பு.வெ.மா. 33 ) என்பதற்கு மலையையொத்த தோளான் என அதன் உரையாசிரியர் பொருளுரைத்த மையுங் காண்க பொற்சிலை என்றது பொன்னுருவாகப் பொருந்திய மேருமைைர ! குனிதல் - வனைத்தல் . குனித்தாய் என்னும் பனையினுால் வில் லாக என்பது வருவிக்கப்பட்டது . இறைவன் பொற்சிப்பகுளித் யார் புரங்களை அழித்தற் பொருட்டாகும் . திறை அடை திருச்சதகம் 211 ஞான 83.6 . வீண்டார் புரம்லேவ மேருச் சிலையாகக் கொண்டான் நினையாதார் புரமெரிய வளைத்த மேருச் சிலையானை ' ' நாவு 277 : 8 . வரியர மாணதாக மாமேரு வில்லதாக அரியன புரங்கள்ளவை யாரழ லூட்ட வென்னே சுந் 99.8 . எனத் தேவாரத்தும் அடையார் புரங்கள் இகல்குன்ற வில்லிற் சென்றோன் ( 4 ) எனத் திருக்கோவையாயினும் வருவன காண்க . வில்லாதற்குப் பொருந்தாத மலையை வளைத்த நீ மலர்புனைதற்கும் ஏத்துதற்கும் என்னைத் தூண்டாத மனத்தை வளைத்து உதவலாமன்றோ . அதனால் அருளமுதம் வழங்குதல் செய்தலும் இயையுமே . அங்ஙனம் வழங்குதல் செய்யாதொழிவையாயின் என்பார் அருளமுதம் புரியாயேல் ' என்றார் . அருளமுதம்- திருவருளாகிய அமுதம் . ' புயங்கன் அருளமுதம் ஆரப்பருகி ( யாத்திரைப் 9 ) எனவும் ' உண்டேன் அவரருள் ஆர மிர்தத்தினை ' ' ( 11 - த் திருமுறை . கோயில் திருப்பள்ளி 14 ) எனவும் வரு வன காண்க.ஏத்துதல் அருள் பெறுதற்கேதுவாதல் + ' ' எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே 30 . ஏத்தியு மெம்பெரு மானென் நிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே ' 30 . எனத் திருமந்திரத்து வருவனவற்றாலுமறீக . அத்தமியேன் என்பதில் சுட்டு மலர்புனைதலும் ஏத்துதலுமாகிய அச் சாதவைகளின்மையை உணர்த்தியது . தமியேன் - தணையில்லாதேன் . திருக் கோவை 90 பேர் உரை . மற்று பிறிது பொருளது.ஆம் ஆறு என்றது . வருந்துவேனாகிய யான் வருந்தாது உய்யும் வழி என்னும் பொருளது - அசை . இதன்கண் நின்மலர்ப்பாதங்களைக் காண்பான் வருந்தி முயல்கின்ற யான் மலர்புனையவும் எத்தவும் உதவி செய்யாது புறப்புலன்களில் அலைந்து திரியும் என் மனத்தினை அவ்வாறு திரியாது அடக்கித் தரவேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்ளுதலினால் மனத்திற்குக் குறிப்பான் அறி வுறுத்தியமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க . 13 . 18. ஆமாறுன் திருவடிக்கே யகங்குழையேன் அன்புருகேள் ' பூமாலை புனைத்தேந்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமானின் விருக்கோயில் நூகேன்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விசைகின்றேன் சதுராலே சார்னானே .