திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

அமரர் ‘சங்கநூற் செல்வர்' பண்டிதமணி சு.அருளம்பலவனார் தோற்றம் : 1910 மறைவு : 1966 சிவமயம் பதிப்புரை எழுதரு மறைகடேரு விறைவனை எல்லிற்கங்குல் பொழுதறு காலத்தென்றும் பூசனை விடாதுசெய்து தொழுதகை தலைமேலேறத் துளும்புகண் ணீருள்மூழ்கி அழுதடி யடைந்தவன்ப னடியவர்க் சுடிமைசெய்வாம். மணிவாசகரால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம் அனைவருக் கும் தோன்றாத் துணையாய் - பிறவிப்பிணிதீர்க்கும் அரிய மருந்தாய் = இறைவன் அடிசேர்க்கும் இனிய ஆற்றுப்படையாய் நிலவி வருகின் றது. கருங்கல் மனத்தையும் கனிவித்துக் கடவுளின்பால் அதனை ஈடுபடுத்தும் பெரும்புணையாக உள்ளது. ஆரா இன்பப் பனுவலா கிய இதற்கு பொருள் அறிய விரும்பிய அன்பர்களுக்கு மணிவாசகப் பெருமான் தில்லையம்பதியில் எல்லையிலா இன்பநடம்புரியும் நடராசப் பெருமானையே காட்டினாரென்று அவர் புராணங்கூறும். எனது அருமைத் தந்தையார் அவர்கள் நூல் முழுவதிற்கும் உரையை எழுதிமுடித்து, அச்சிடத் தொடங்கி திருச்சதகம் அநுபோக சுத்தி அச்சாகும் காலத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள். அதனால் தாமதமாகி நீத்தல் விண்ணப்பம் வரையுள்ளன, இப் போது நூலின் முதற்பகுதியாக வெளிவருகின்றது. தந்தையார் உரையெழுதுங் காலத்தில் உடனிருந்து உயரிய திருத்தங்கள் பல செய்து உரைநூலின் நோக்கம் நிறைவேற உதவிகள் புரிந்த பெரி யார் தந்தையாரின் குருமூர்த்தியும் சைவாசாரியரும் ஸ்ரீமத் சி. சுப்பிரமணிய தேசிகர் ஆவர். அவர்கள் இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரையும் எழுதியுதவியுள்ளார்கள். அவர்களுக்கு யான் என்றும் கடப்பாடுடையேன். தந்தையாருக்குப் பின் இந்நூல் அச்சுக்குப்போகுமுன் கையெழுத் துப் பிரதிகளைப் படித்தும், அச்சாகுங்கால் அச்சுப்பிரதிகளை ஒப்பு நோக்கியும் உதவிய இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரை யாளர் வித்துவான் பொன். முத்துக்குமாரன் B. O. L. அவர்கள் காலத்தினாற் செய்த நன்றி ஞாலத்தின் மாணப் பெரிது. இந்நூல் வெளிவருதல் வேண்டி பல உதவிகள் செய்து முன்னின்று ஊக்கிய சாவகச்சேரி இந்துக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வித்துவான் மு. சபாரத்தினம் அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
அமரர் சங்கநூற் செல்வர் ' பண்டிதமணி சு.அருளம்பலவனார் தோற்றம் : 1910 மறைவு : 1966 சிவமயம் பதிப்புரை எழுதரு மறைகடேரு விறைவனை எல்லிற்கங்குல் பொழுதறு காலத்தென்றும் பூசனை விடாதுசெய்து தொழுதகை தலைமேலேறத் துளும்புகண் ணீருள்மூழ்கி அழுதடி யடைந்தவன்ப னடியவர்க் சுடிமைசெய்வாம் . மணிவாசகரால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம் அனைவருக் கும் தோன்றாத் துணையாய் - பிறவிப்பிணிதீர்க்கும் அரிய மருந்தாய் = இறைவன் அடிசேர்க்கும் இனிய ஆற்றுப்படையாய் நிலவி வருகின் றது . கருங்கல் மனத்தையும் கனிவித்துக் கடவுளின்பால் அதனை ஈடுபடுத்தும் பெரும்புணையாக உள்ளது . ஆரா இன்பப் பனுவலா கிய இதற்கு பொருள் அறிய விரும்பிய அன்பர்களுக்கு மணிவாசகப் பெருமான் தில்லையம்பதியில் எல்லையிலா இன்பநடம்புரியும் நடராசப் பெருமானையே காட்டினாரென்று அவர் புராணங்கூறும் . எனது அருமைத் தந்தையார் அவர்கள் நூல் முழுவதிற்கும் உரையை எழுதிமுடித்து அச்சிடத் தொடங்கி திருச்சதகம் அநுபோக சுத்தி அச்சாகும் காலத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் . அதனால் தாமதமாகி நீத்தல் விண்ணப்பம் வரையுள்ளன இப் போது நூலின் முதற்பகுதியாக வெளிவருகின்றது . தந்தையார் உரையெழுதுங் காலத்தில் உடனிருந்து உயரிய திருத்தங்கள் பல செய்து உரைநூலின் நோக்கம் நிறைவேற உதவிகள் புரிந்த பெரி யார் தந்தையாரின் குருமூர்த்தியும் சைவாசாரியரும் ஸ்ரீமத் சி . சுப்பிரமணிய தேசிகர் ஆவர் . அவர்கள் இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரையும் எழுதியுதவியுள்ளார்கள் . அவர்களுக்கு யான் என்றும் கடப்பாடுடையேன் . தந்தையாருக்குப் பின் இந்நூல் அச்சுக்குப்போகுமுன் கையெழுத் துப் பிரதிகளைப் படித்தும் அச்சாகுங்கால் அச்சுப்பிரதிகளை ஒப்பு நோக்கியும் உதவிய இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரை யாளர் வித்துவான் பொன் . முத்துக்குமாரன் B. O. L. அவர்கள் காலத்தினாற் செய்த நன்றி ஞாலத்தின் மாணப் பெரிது . இந்நூல் வெளிவருதல் வேண்டி பல உதவிகள் செய்து முன்னின்று ஊக்கிய சாவகச்சேரி இந்துக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் வித்துவான் மு . சபாரத்தினம் அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன் .