திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

214 திருவாசக ஆராய்ச்சியுரை மூன்றனையும் குறித்தார். வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என ஐம்பூதங்களும் முற் கூறப்பட்டமையின் அவற்றின் பரிணாமமாகிய உடலை வேறு கூறவேண்டாமையின் 'ஊனாகி யுயிராகி' என்பதற்கு உடலோடு கூடிய உயிராகி எனப் பொருளுரைக்கப்பட்டது. உயிர் உடலோடு கூடி நிற்கும் நிலையில் 'இயமானன்' எனப்படும். வானாகி என்பது முதல் உயிராகி என்பது வரையில் இறைவனது அட்டமுகூர்த்தங்கள் கூறப் பட்டன. "நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றோன்' என இத் திருவாசசுத்தும், தோணோ5. இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமானனா யெறியுங் காற்றுமாகி, அருகிலைய திங்களாய் நாயிறாகி யாகாசமா யட்டமூர்த்தியாகி' (நாவு 308:1) எனத் தேவாரத்தும் வருவன காண்க இதனால் இறைவனது சருவ வியாபகநிலை கூறினார். ( இறைவன் மெய்யன் பர்க்கு உள்பொருளாக வெளிப்பட்டும், அஃதி லார்க்கு இல்பொருளாக வெளிப்படாதும் நிற்கும் இயல்பு பற்றி உண்மையுமா யின்மையுமாய்' என்றார், "மெய்யர் மெய்யனே "' (சத 100) எனவும்.''மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினர்க்கு (பொ ற் 20) என வும், அன்பர்க்கு மெய்யானை யல்வாதார்க் கல்லாத வேதியனை" (அம் மானை 13) எனவும் அடிகள் அருளியவாறுங் காண்க. எல்லாப் பொருள்களுக்கும் தலைவனாக இருப்பவன் இறைவனாதலின் 'கோனாகி' என்றார். "அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவாறு கூறுதுங்கா ணம்மானாய்'" (அம்மானை 16) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. இதனால் இறைவன் தன்வயத்தனாதல் கூறினார். யான் என்பது அகப்பற்று; எனது என்பது புறப்பற்று: ''யானென தென்னும் செருக்கு " (குறள் 346) என்றார் திருவள்ளுவரும். இவற்றை முறையே அகங்காரம் மமகாரம் என்பர் வடநூலார். அவரவர் என்றது யான் எனது என்று செருக்கிற்கூற வல்லாராய் உலகங்களிலுள்ள மக்கள் தேவர் நரகரைக் குறித்தது. கூத்தரட்டுவானென்றது உயிர்கள்தோறும் இறைவன் கலந்து நின்று இயக்கினாலன்றி அவை தாமாக இயங்குந்தன்மையுடையனவல்ல என்பதை உணர்த்தியது. ''ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரே மடக்குவித்தா லாரொருவரடங்காதாரே (9OD:3) என அப்பரடிகள் திருவாக்கும் காண்க. நின்ருயை என இறந்த காலத்தாற் கூறினும் நிற்கின்றாயை என்பது பொருளாகக் கொள்க, என்சொல்லி வாழ்த்துவன் என்பது நின் இயல்புகள் என்சொல்லில் அடங்கா என்பதை உணர்த்தியது. திருச்சதகம் என்னானா யென்னானா யென்னி னல்லால் ஏழையேன் எள் சொல்லி யேத்துகேனே நாவு 309:7. எனத் தேவாரத்து வருதலுங் காண்க. இதன்கண், இறைவனை வாழ்த்துதற்கு அவன் இயல்பு அடங்காமை யின் வாழ்த்தாதிருக்க முயலும் மனமொழிமெய்களை வெறுத்து இறை வனை முன்னிலைப்படுத்துக் கூறிமுகமாக இயன்றவரை வாழ்த்துவதே கடமையென மனமொழி மெய்களுக்குக் குறிப்பினால் அறிவுறுத்தலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 15, 215. "₂ 20 வாழ்த்துவதும் வானவர்கள் தாம்ளாழ்வான் மன நின்பால் தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரறுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே. ப-ணா: மதுகரம் சூழ்த்தது முரலும் தாரோயை - வண்டுகள் சூழ்ந்து மொய்த்து ஒலிக்கும் கொன்றை மலர்மாலையுடைய நின்னை,வானவர்கள் வாழ்த்துவதும் தாம் வாழ்வான்-தேவர்கள் வாழ்த்தி வணங்குவதும் தாம் நெடுங்காலம் இன் பவுலகில் வாழும்பொருட்டே, மனம் நின்பால் தாழ்த்து வதும் - அவர்கள் தம் நெஞ்சை நின்னிடத்துத் தங்கும்படி செய்வதும். தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி-தாம் உயர்வடையவும் அதனால் தம்மை எல்லாவுயிர்களும் வணங்கவும் விரும்பியே; ஆனால், நாய் அடியேன் யானும்-நாய் போன்ற சிறுமையையுடைய அடியவனாகிய யானும், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் உன்னை பரவுவன்- பயனின்றிக் கழியும் எடுத்த பிறப்பில் அப்பிறப்பினை அறுத்தலாகிய பயனைப் பெற வேண்டி உன்னை வாழ்த்துவேன். மதுகரம் முரலும் தாரோயை வானவர்கள் வாழ்த்துவதும் தாம் நெடுங்காலம் இன்பவுலகில் வாழும்பொருட்டே; அவர்கள் தம் நெஞ்சை நின்பால் தங்கும்படி செய்வதும் தாம் உயர்வடையவும் அதனால் தம்மை எல்லாம் தொழவிரும்பியே; ஆனால் நாயடியேன் யானும் அப்பயன்களை விரும்பாது பயன்றிக் கழியும் எடுத்தபிறப்பில் அப்பிறப்பினை அறுத்தலா கிய பயனைப் பெறும்பொருட்டு உன்னை வாழ்த்துவேன் என்பதாம். வானவர்கள் மொழியினாலும் மனத்தினாலும் நின்னை வாழ்த்துவதும் நின்னை இடைவிடாது நினைத்தலும் செய்தல், தாம் வாழும் இன்பவுலகில் நெடுங்காலம் வாழவும் தாம் உயர்வடைந்து அதனால் தமமைப் பிறர் தொழவும் வேண்டியாகும் என்பது "வாழ்த்துவதும் வானவர்கள்..... தொழவேண்டி" என்பதன் பொருளாகும். அவர்கள் பெறவிரும்பும் பயன் கள் இன்பவுலக வாழ்வும் தமது உயர்வும் பிறர் தர்மை மணங்குக மாதலின் அழிவுடைய அப்பயன்கள் விரும்பத்தக்கனவல்ல என்பது
214 திருவாசக ஆராய்ச்சியுரை மூன்றனையும் குறித்தார் . வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என ஐம்பூதங்களும் முற் கூறப்பட்டமையின் அவற்றின் பரிணாமமாகிய உடலை வேறு கூறவேண்டாமையின் ' ஊனாகி யுயிராகி ' என்பதற்கு உடலோடு கூடிய உயிராகி எனப் பொருளுரைக்கப்பட்டது . உயிர் உடலோடு கூடி நிற்கும் நிலையில் ' இயமானன் ' எனப்படும் . வானாகி என்பது முதல் உயிராகி என்பது வரையில் இறைவனது அட்டமுகூர்த்தங்கள் கூறப் பட்டன . நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றோன் ' என இத் திருவாசசுத்தும் தோணோ 5 . இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமானனா யெறியுங் காற்றுமாகி அருகிலைய திங்களாய் நாயிறாகி யாகாசமா யட்டமூர்த்தியாகி ' ( நாவு 308 : 1 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க இதனால் இறைவனது சருவ வியாபகநிலை கூறினார் . ( இறைவன் மெய்யன் பர்க்கு உள்பொருளாக வெளிப்பட்டும் அஃதி லார்க்கு இல்பொருளாக வெளிப்படாதும் நிற்கும் இயல்பு பற்றி உண்மையுமா யின்மையுமாய் ' என்றார் மெய்யர் மெய்யனே ' ( சத 100 ) எனவும் . ' ' மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினர்க்கு ( பொ ற் 20 ) என வும் அன்பர்க்கு மெய்யானை யல்வாதார்க் கல்லாத வேதியனை ( அம் மானை 13 ) எனவும் அடிகள் அருளியவாறுங் காண்க . எல்லாப் பொருள்களுக்கும் தலைவனாக இருப்பவன் இறைவனாதலின் ' கோனாகி ' என்றார் . அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவாறு கூறுதுங்கா ணம்மானாய் ' ( அம்மானை 16 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . இதனால் இறைவன் தன்வயத்தனாதல் கூறினார் . யான் என்பது அகப்பற்று ; எனது என்பது புறப்பற்று : ' ' யானென தென்னும் செருக்கு ( குறள் 346 ) என்றார் திருவள்ளுவரும் . இவற்றை முறையே அகங்காரம் மமகாரம் என்பர் வடநூலார் . அவரவர் என்றது யான் எனது என்று செருக்கிற்கூற வல்லாராய் உலகங்களிலுள்ள மக்கள் தேவர் நரகரைக் குறித்தது . கூத்தரட்டுவானென்றது உயிர்கள்தோறும் இறைவன் கலந்து நின்று இயக்கினாலன்றி அவை தாமாக இயங்குந்தன்மையுடையனவல்ல என்பதை உணர்த்தியது . ' ' ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரே மடக்குவித்தா லாரொருவரடங்காதாரே ( 9OD : 3 ) என அப்பரடிகள் திருவாக்கும் காண்க . நின்ருயை என இறந்த காலத்தாற் கூறினும் நிற்கின்றாயை என்பது பொருளாகக் கொள்க என்சொல்லி வாழ்த்துவன் என்பது நின் இயல்புகள் என்சொல்லில் அடங்கா என்பதை உணர்த்தியது . திருச்சதகம் என்னானா யென்னானா யென்னி னல்லால் ஏழையேன் எள் சொல்லி யேத்துகேனே நாவு 309 : 7 . எனத் தேவாரத்து வருதலுங் காண்க . இதன்கண் இறைவனை வாழ்த்துதற்கு அவன் இயல்பு அடங்காமை யின் வாழ்த்தாதிருக்க முயலும் மனமொழிமெய்களை வெறுத்து இறை வனை முன்னிலைப்படுத்துக் கூறிமுகமாக இயன்றவரை வாழ்த்துவதே கடமையென மனமொழி மெய்களுக்குக் குறிப்பினால் அறிவுறுத்தலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 15 215 . 20 வாழ்த்துவதும் வானவர்கள் தாம்ளாழ்வான் மன நின்பால் தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரறுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே . - ணா : மதுகரம் சூழ்த்தது முரலும் தாரோயை - வண்டுகள் சூழ்ந்து மொய்த்து ஒலிக்கும் கொன்றை மலர்மாலையுடைய நின்னை வானவர்கள் வாழ்த்துவதும் தாம் வாழ்வான் - தேவர்கள் வாழ்த்தி வணங்குவதும் தாம் நெடுங்காலம் இன் பவுலகில் வாழும்பொருட்டே மனம் நின்பால் தாழ்த்து வதும் - அவர்கள் தம் நெஞ்சை நின்னிடத்துத் தங்கும்படி செய்வதும் . தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி - தாம் உயர்வடையவும் அதனால் தம்மை எல்லாவுயிர்களும் வணங்கவும் விரும்பியே ; ஆனால் நாய் அடியேன் யானும் - நாய் போன்ற சிறுமையையுடைய அடியவனாகிய யானும் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் உன்னை பரவுவன்- பயனின்றிக் கழியும் எடுத்த பிறப்பில் அப்பிறப்பினை அறுத்தலாகிய பயனைப் பெற வேண்டி உன்னை வாழ்த்துவேன் . மதுகரம் முரலும் தாரோயை வானவர்கள் வாழ்த்துவதும் தாம் நெடுங்காலம் இன்பவுலகில் வாழும்பொருட்டே ; அவர்கள் தம் நெஞ்சை நின்பால் தங்கும்படி செய்வதும் தாம் உயர்வடையவும் அதனால் தம்மை எல்லாம் தொழவிரும்பியே ; ஆனால் நாயடியேன் யானும் அப்பயன்களை விரும்பாது பயன்றிக் கழியும் எடுத்தபிறப்பில் அப்பிறப்பினை அறுத்தலா கிய பயனைப் பெறும்பொருட்டு உன்னை வாழ்த்துவேன் என்பதாம் . வானவர்கள் மொழியினாலும் மனத்தினாலும் நின்னை வாழ்த்துவதும் நின்னை இடைவிடாது நினைத்தலும் செய்தல் தாம் வாழும் இன்பவுலகில் நெடுங்காலம் வாழவும் தாம் உயர்வடைந்து அதனால் தமமைப் பிறர் தொழவும் வேண்டியாகும் என்பது வாழ்த்துவதும் வானவர்கள் ..... தொழவேண்டி என்பதன் பொருளாகும் . அவர்கள் பெறவிரும்பும் பயன் கள் இன்பவுலக வாழ்வும் தமது உயர்வும் பிறர் தர்மை மணங்குக மாதலின் அழிவுடைய அப்பயன்கள் விரும்பத்தக்கனவல்ல என்பது