திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தாழ்த்துதல் - தங்கச் செய்தல். "கவுளிறி கடாத்துத், தண்ணறு நாற்றந் தாழ்ப்ப " (பெருங் (2) 12:142-3) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. மனந் தாழ்த்துதல்- இறைவனிடத்து மனத்தைத் தங்கச் செய் தல்; என்றது இடைவிடாது நினைத்தல் என்றவாறு. எல்லாம்-எல்லா வுயிர்களும். குழ்ந்து என்பது எதுகை நோக்கி வலித்தது. மதுகரம் - வண்டு. '' விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா, மதுகரமே ஏத்துக்கு வந்தாய்" எனச் சிவபெருமான் திருவந்தாதியிலும் (11-ந் திரு முறை) இப்பொருட்டாதல் காண்க. மதுகரம் முரலும் தார் என்றது இறைவனது அடையாள மாலையாகிய கொன்றைமலர் மாைைய உணர்த்தி "மணங்கொண்ட, தாதகத்த தேன்முரலுங் கொன்றையான்'' (I1.ந் திருமுறை முத்தநாயனார் திருவீரட்டைமணிமாலை) வருதல் காண்க. தார் என மார்பின் மாலை கூறப்படினும் உபலக்கணத்தாற் கண்ணி யாகிய முடிமாயுைங் கொள்ளப்படும். என 216 பாழ்த்த பிறப்பு-பயனின் றிக் கழிவதாகிய எடுத்த பிறப்பு. பிறப்பு அறுத்திடுவான் - பிறப்பினை ஒழித்திடுவதற்காக. அடிகள் பிறப்பினை அறுக்க விரும்பினர் என்பது, பிறவியை வேரொடுங் களைந்தாண்டுகொள்'' நீத் 19. அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்" ஏசற2. பாருரு வாய் பிறப்பற வேண்டும்" எண் 1. "பித்திலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பலுப்பாய்'' எண்4. என அடிகள் பிறாண்டு அருளியவாற்றனுமறியப்படும். பிறப்பறுத்திடு வான் பரவுவன் என இயையும். 42. .. 11 சாத்திர மோதஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி யகலவிட் டோடுமோ (1631) எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க. வானவர்களுடைய விருப்பம் மீண்டும் பிறத்தற்கு ஏதுவாமன்றி நித்திய இன்பத்தைத் தருவதின்றாம். அடிகள் துன்பத்திற்கிடமான பிறப்பினை ஒழித்து நித்தியமாகிய முத்தி யின்பத்தினைப் பெறுமாறு பரவுவாராயினர், யானும் என்பதில் உம்மை வானவர்களன்றி யானும் என இறந்தது தழீஇய எச்சவும்மை. இதன்கண் மனமொழிகளால் இறைவனை இயன்றவாறு வழிபடும் போது வானுகில் இன்புற்றவாழும் தேவர் வாழ்வினைக் கருதும் மன மொழிகனை வெறுத்து இறைவனை முன்னிலையாக்கிக் கூறுமுகமாகப் பிறப் பருத்துப்பெறும் விடே பெறுதற்குறீயதெனக் குறிப்பினால் அவற்றிற்கு அறிவுறுத்தமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நூதலியபொருள் புலப்படுமாறு காண்க. 16. திருச்சதகம் 21. பரவுவா ரிமையோர்கள் பாடுவன நால்வேதங் குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் விரவுவார் மெய்யன்பி னடியார்கண் மேன்மேலுன் அரவுவார் கழலிணைகள் காண்பரரோ வரியானே. ய-ரை : அரியானே - யாவர்க்கும் அறிதற்கும் காண்டற்கும் அரிய வனே, இமையோர்கள் பரவுவார்-தேவர்கள் வாழ்த்துவர்: நால்வேதம் பாடுவன- நான்கு வேதங்களும் நின்னைப் புகழ்ந்து பாடுவன: குரவு வார் குழல் மடவாள்-குராமலரை அணிந்த கூந்தவையுடைய உமையம்மையார். ஒரு பாகம் கூறு உடையாள்- நின் திருமேனியின் இடப்பாகத்தைத் தனக் குக் கூறாகவுடையாள்: அடியார்கள் மேல் மேல் மெய் அன்பின் விரவு வார் - அடியார்கள் மேன்மேலும் உண்மையான அன்பினால் நின்னொடு கலப்பார்கள்; உன் அரவு வார் கழல் இணைகள் காண்பாரே - அவரெல் லாம் உன்னுடைய ஒலிக்கின்ற நெடிய வீரக்கழலணிந்த திருவடிகளைக் காணப்பெறுவாரோ? 217 அரியானே, இமையோர்கள் பரவுவார்; நால்வேதம் பாடுவன்; வாள் ஒருபாகம் கூறுடையாள்; அடியார்கள் மேன்மேலும் மெய்யன்பி னால் நின்னோடு கலப்பார்கள். அவரெல்லாம் உன் கழலிணைகள் பாரோ என்பதாம். காண் #1 மட தேவர்கள் இறைவனை முன்னிலைப் படுத்துத் துதித்தலின் 'பரவுவார் இமையோர்கள்' என்றார். பரவல் முன்னிலைக்கண் வருமென்பது "பரவ லும் புகழ்ச்சியும் கருதிய பாங்கிலும் '' (புறத் கு 22) என்னும் தொல் காப்பியச்சூத்திரவுரையில், புகழ்தல் படர்க்கைக் கண்ணும் பரவல் முன்னிலைக்கண்ணும் வரும்' என இளம்பூரணர் உரைத்தமையானுமறிக. மறைகளெல்லாம் இறைவன் புகழைப் பாடுதலின் 'பாடுவன நால்வேதம்' என்றர். 11 L குரவு - ஒருவகை மரம். நின்ற குரவின் மிசையேறி நிகழ்வதறிய வொளித்திருந்தான்" (பெரிய புரா சண்டேசுர 45) எனவருதல் காண்க. ஈண்டுக் குராமலரை உணர்த்தியது. குராப்பயில் கூழையிவள்'" (திருக் கோவை 382) என்புழிபோல. குரவு குழன் மடவாள் எனக் கூட்டிக் குரா மலரையணிந்த கூந்தலையுடைடைய உமையம்மையார் எனவுரைக்க. "குரவங் கமழ் நறுமென்குழ லுமை ஞான 10:5. குரவங் கமழ் குறுமென்குழ லரிவை யவள் வெருவ" ஞான 13:1. "குரவங் கமழ் குழலாள்'' ஞான 88:2. 41 'குரவார் குழலா ளொருகூறன் ஞான 153:2 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. ஒருபாகம் என்றது இடப் பாகத்தை. "மாதிடங் கொண்டம்பலத்து நின்றோன்" எனத் திருக் கோவையாரில் (138) வருதலுங் காண்சு. 28
திருவாசக ஆராய்ச்சியுரை தாழ்த்துதல் - தங்கச் செய்தல் . கவுளிறி கடாத்துத் தண்ணறு நாற்றந் தாழ்ப்ப ( பெருங் ( 2 ) 12 : 142-3 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . மனந் தாழ்த்துதல்- இறைவனிடத்து மனத்தைத் தங்கச் செய் தல் ; என்றது இடைவிடாது நினைத்தல் என்றவாறு . எல்லாம் - எல்லா வுயிர்களும் . குழ்ந்து என்பது எதுகை நோக்கி வலித்தது . மதுகரம் - வண்டு . ' ' விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா மதுகரமே ஏத்துக்கு வந்தாய் எனச் சிவபெருமான் திருவந்தாதியிலும் ( 11 - ந் திரு முறை ) இப்பொருட்டாதல் காண்க . மதுகரம் முரலும் தார் என்றது இறைவனது அடையாள மாலையாகிய கொன்றைமலர் மாைைய உணர்த்தி மணங்கொண்ட தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் ' ' ( I1 . ந் திருமுறை முத்தநாயனார் திருவீரட்டைமணிமாலை ) வருதல் காண்க . தார் என மார்பின் மாலை கூறப்படினும் உபலக்கணத்தாற் கண்ணி யாகிய முடிமாயுைங் கொள்ளப்படும் . என 216 பாழ்த்த பிறப்பு - பயனின் றிக் கழிவதாகிய எடுத்த பிறப்பு . பிறப்பு அறுத்திடுவான் - பிறப்பினை ஒழித்திடுவதற்காக . அடிகள் பிறப்பினை அறுக்க விரும்பினர் என்பது பிறவியை வேரொடுங் களைந்தாண்டுகொள் ' ' நீத் 19 . அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய் ஏசற 2 . பாருரு வாய் பிறப்பற வேண்டும் எண் 1 . பித்திலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பலுப்பாய் ' ' எண் 4 . என அடிகள் பிறாண்டு அருளியவாற்றனுமறியப்படும் . பிறப்பறுத்திடு வான் பரவுவன் என இயையும் . 42 . .. 11 சாத்திர மோதஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி யகலவிட் டோடுமோ ( 1631 ) எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க . வானவர்களுடைய விருப்பம் மீண்டும் பிறத்தற்கு ஏதுவாமன்றி நித்திய இன்பத்தைத் தருவதின்றாம் . அடிகள் துன்பத்திற்கிடமான பிறப்பினை ஒழித்து நித்தியமாகிய முத்தி யின்பத்தினைப் பெறுமாறு பரவுவாராயினர் யானும் என்பதில் உம்மை வானவர்களன்றி யானும் என இறந்தது தழீஇய எச்சவும்மை . இதன்கண் மனமொழிகளால் இறைவனை இயன்றவாறு வழிபடும் போது வானுகில் இன்புற்றவாழும் தேவர் வாழ்வினைக் கருதும் மன மொழிகனை வெறுத்து இறைவனை முன்னிலையாக்கிக் கூறுமுகமாகப் பிறப் பருத்துப்பெறும் விடே பெறுதற்குறீயதெனக் குறிப்பினால் அவற்றிற்கு அறிவுறுத்தமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நூதலியபொருள் புலப்படுமாறு காண்க . 16 . திருச்சதகம் 21. பரவுவா ரிமையோர்கள் பாடுவன நால்வேதங் குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் விரவுவார் மெய்யன்பி னடியார்கண் மேன்மேலுன் அரவுவார் கழலிணைகள் காண்பரரோ வரியானே . - ரை : அரியானே - யாவர்க்கும் அறிதற்கும் காண்டற்கும் அரிய வனே இமையோர்கள் பரவுவார் - தேவர்கள் வாழ்த்துவர் : நால்வேதம் பாடுவன- நான்கு வேதங்களும் நின்னைப் புகழ்ந்து பாடுவன : குரவு வார் குழல் மடவாள் - குராமலரை அணிந்த கூந்தவையுடைய உமையம்மையார் . ஒரு பாகம் கூறு உடையாள்- நின் திருமேனியின் இடப்பாகத்தைத் தனக் குக் கூறாகவுடையாள் : அடியார்கள் மேல் மேல் மெய் அன்பின் விரவு வார் - அடியார்கள் மேன்மேலும் உண்மையான அன்பினால் நின்னொடு கலப்பார்கள் ; உன் அரவு வார் கழல் இணைகள் காண்பாரே - அவரெல் லாம் உன்னுடைய ஒலிக்கின்ற நெடிய வீரக்கழலணிந்த திருவடிகளைக் காணப்பெறுவாரோ ? 217 அரியானே இமையோர்கள் பரவுவார் ; நால்வேதம் பாடுவன் ; வாள் ஒருபாகம் கூறுடையாள் ; அடியார்கள் மேன்மேலும் மெய்யன்பி னால் நின்னோடு கலப்பார்கள் . அவரெல்லாம் உன் கழலிணைகள் பாரோ என்பதாம் . காண் # 1 மட தேவர்கள் இறைவனை முன்னிலைப் படுத்துத் துதித்தலின் ' பரவுவார் இமையோர்கள் ' என்றார் . பரவல் முன்னிலைக்கண் வருமென்பது பரவ லும் புகழ்ச்சியும் கருதிய பாங்கிலும் ' ' ( புறத் கு 22 ) என்னும் தொல் காப்பியச்சூத்திரவுரையில் புகழ்தல் படர்க்கைக் கண்ணும் பரவல் முன்னிலைக்கண்ணும் வரும் ' என இளம்பூரணர் உரைத்தமையானுமறிக . மறைகளெல்லாம் இறைவன் புகழைப் பாடுதலின் ' பாடுவன நால்வேதம் ' என்றர் . 11 L குரவு - ஒருவகை மரம் . நின்ற குரவின் மிசையேறி நிகழ்வதறிய வொளித்திருந்தான் ( பெரிய புரா சண்டேசுர 45 ) எனவருதல் காண்க . ஈண்டுக் குராமலரை உணர்த்தியது . குராப்பயில் கூழையிவள் ' ( திருக் கோவை 382 ) என்புழிபோல . குரவு குழன் மடவாள் எனக் கூட்டிக் குரா மலரையணிந்த கூந்தலையுடைடைய உமையம்மையார் எனவுரைக்க . குரவங் கமழ் நறுமென்குழ லுமை ஞான 10 : 5 . குரவங் கமழ் குறுமென்குழ லரிவை யவள் வெருவ ஞான 13 : 1 . குரவங் கமழ் குழலாள் ' ' ஞான 88 : 2 . 41 ' குரவார் குழலா ளொருகூறன் ஞான 153 : 2 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . ஒருபாகம் என்றது இடப் பாகத்தை . மாதிடங் கொண்டம்பலத்து நின்றோன் எனத் திருக் கோவையாரில் ( 138 ) வருதலுங் காண்சு . 28