திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அடியார்கள் மேன்மேல் மெய்யன்பின் விரவுவார் என மாற்றிக் கூட்டிப் பொருளுரைக்க. இனி, மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல் விரவுவார் எனக் கூட்டிப் பொருளுரைப்பினுமமையும். விரவுதல் - கலத் தல். ஈண்டு உள்ளத்தாற் கலத்தவைக் குறித்தது. அரவுதல் - ஒலித்தல். 'வண்டரவு கொன்றை" எனத் தேவாரத்து வருதலுங் காண்க. இனி அரவு வார்கழலிணைகள் என்பதற்குப் பாம்பினையும் நீண்ட வீரக்கழலினை யும் அணிந்த திருவடிகள் எனினுமாம். நான்கு வேதங்களையும் சேர்த்து எண்ணிக் காண்பாரோ என உயர்திணையாற் கூறியது மிகுதிபற்றியாகும். தேவர்கள் தம் உலக இன்ப வாழ்வை விரும்புதலிற் பரவியும் இறை வன் திருவடிகளைக் கண்டிலர். நான்கு வேதங்களும் கின்னைப் புகழ்ந்தும் நின்னைக் காண்டற்குரியனவல்ல. 218 "வேதக் காட்சிக்கும் உபயிடத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்குங் காணலன்'' (சூரன் அமைச் 127) எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டு அறியத்தக்கது. அரியான்- எத்தகைய மேம்பாட்டினரும் அறிதற்கும் காண்டற்கும் அரியவன். .. A அந்தமாதி யயனுமாலு மார்க்கும் அறிவரியான்" ஒன்று மறிவானவர்க்கு மறியாமை நின்ற அரன்!" ஒருவர்க்கு முணர்வரியான் ஞான 319:6. "யாவரு மறிதற் கரியான்றனை நாவு176:2. '' அவள் இவன் என் றியாவர்க்கும் அறியவொண்ணாச் செம்பொன் காண்" காவு 299: 3. ''காண்டற்கரிய கடவுள் கண்டாய்" நாவு 237:1 எனத் தேவாரத்து வருவனவும் காண்க. ஞான 73:9. ஞான 224: 4, இதன்கண், மொழியினாற் பாடியும் பரவியும் இன்பமடைதலினும் மெய்யன்பினால் விரவித் திருவடிக் காட்சியைப் பெறுதலே சிறந்ததாகும் என்னும் உண்மையை இறைவனை முன்னிலைப்படுத்திக் கூறுங் குறிப்பி னான் நெஞ்சிற்கு அறிவுறுத்தமையின் அறிவுறுத்தல் என்னும் இரண் டாம்பத்து நுதலிய பொருள் பாதருதல் காண்க. 22. அறியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே. ப-ரை: யாவர்க்கும் அரியானே.எத்தகைய மேம்பாட்டினர்க்கும் அறி தற்கும் காண்டற்கும் அரியவனே, அம்பரவா-சிதாகாயத்தையுடையவனே, அம்பலத்து எம் பெரியானே - தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடும் எங்கள் பெரியோனே, சிறியேனை ஆட்கொண்ட பெய் சுழல் கீழ்- சிறிய திருச்சதகம் 219 வனாகிய என்னை ஆட்கொண்டருளிய இட்ட வீரக்கழலினையுடைய திரு வடியின்கண். விரை ஆர்ந்த மலர் தூவேன் - நறுமணம் பொருந்திய மலர்களை இட்டு வழிபடேன்; வியந்து அலறேன்- பெறுதற்கரிய நின் திரு வடிக் காட்சியைப் பெற்று வியப்படைந்து வாய்குழறேன்; நயந்து உரு கேள் - விரும்பி அன்பினால் மனம் உருகேன்; நான் ஆம் ஆறு என்-அடி யேன் உய்யும் வழி யாது? அதனை அருளாதொழியின், தரியேன்-உனக்கு ஆளாகிய யான் மலர் தூவல் வியந்தலறல் நயந்துருகல் செய்யாமல் இவ் வுலகில் தங்கி வாழேன்; நான் சரவேன் சாவேன் - அதனால் நான் இறந்துடு வேன் இறந்துபடுவேன். யாவர்க்கும் அறியாளே. அம்பரவா, அம்பலத்தெம் பெரியோனே. சிறி வியந் யேனை ஆட்கொண்டருளிய உன் திருவடிக்கண் மலர்தூவேன்: கலறேன்; விரும்பி அன்பினால் மனமுருகேன்: இவைகளைச் செய்யாத யான் உய்யும் வழி யாது? மன மொழி மெய்களால் நின்னை வழிபடாது. இவ்வுலகில் தங்கி வாழேன்: இறந்துபடுவேன்; இறந்துபடுவேன் என்ப தாம். யாவர்க்கும் என்பதில் உம்மை முற்றுப்பொருளைத் தருவதாயினும் அறிவாற்றல்களிற் குறைந்தவர்களைக் குறியாது அவற்றின் மேம்பட்டுயர்ந்த திருமால் பீரமன் இந்திரன் முனிவர் முதலியோரைக் குறித்தது. தேவர் முனிவர் முதலிய யாவர்க்கும் இறைவன் அறிதற்கரியான் என்பது. 'தேவரு மறியாச் சிவனே காண்க" அண்ட 50. 'கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி" போற்றி 143. தேவர்கோ வறியாத தேவதேவன் '' சத 30. "பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் அம்மானை 2. # * யாராலுங் காண்டற் கரியான்" வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனுங் கானின்று வற்றியுங் காண்பரிய கனைகழலோன்" அம்மானை 4. 'மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த வெண்பா. தேவருங் காணச் சிவபெருமான்' 'உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான், பலமா முனிவர் நனிவாட" என இத் திருவாசசுத்தும், சத4. தன்னையார்க்கு மறிவரியான் திருமலை 1. "சார்வரு தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரை யடவி சார்ந்துங் காணுதற் கரியான் ' கண்ணப் 128. எனப் பெரியபுராணத்தும் வருவனவற்றாலுமறிக. அம்பரம் - ஆகாசம். 4"அம்பர மனல் கால்' 8:8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. (திவ். பெரிய தி. (1) இதனைச் சிதாகாசம்
திருவாசக ஆராய்ச்சியுரை அடியார்கள் மேன்மேல் மெய்யன்பின் விரவுவார் என மாற்றிக் கூட்டிப் பொருளுரைக்க . இனி மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல் விரவுவார் எனக் கூட்டிப் பொருளுரைப்பினுமமையும் . விரவுதல் - கலத் தல் . ஈண்டு உள்ளத்தாற் கலத்தவைக் குறித்தது . அரவுதல் - ஒலித்தல் . ' வண்டரவு கொன்றை எனத் தேவாரத்து வருதலுங் காண்க . இனி அரவு வார்கழலிணைகள் என்பதற்குப் பாம்பினையும் நீண்ட வீரக்கழலினை யும் அணிந்த திருவடிகள் எனினுமாம் . நான்கு வேதங்களையும் சேர்த்து எண்ணிக் காண்பாரோ என உயர்திணையாற் கூறியது மிகுதிபற்றியாகும் . தேவர்கள் தம் உலக இன்ப வாழ்வை விரும்புதலிற் பரவியும் இறை வன் திருவடிகளைக் கண்டிலர் . நான்கு வேதங்களும் கின்னைப் புகழ்ந்தும் நின்னைக் காண்டற்குரியனவல்ல . 218 வேதக் காட்சிக்கும் உபயிடத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்குங் காணலன் ' ' ( சூரன் அமைச் 127 ) எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டு அறியத்தக்கது . அரியான் எத்தகைய மேம்பாட்டினரும் அறிதற்கும் காண்டற்கும் அரியவன் . .. A அந்தமாதி யயனுமாலு மார்க்கும் அறிவரியான் ஒன்று மறிவானவர்க்கு மறியாமை நின்ற அரன் ! ஒருவர்க்கு முணர்வரியான் ஞான 319 : 6 . யாவரு மறிதற் கரியான்றனை நாவு 176 : 2 . ' ' அவள் இவன் என் றியாவர்க்கும் அறியவொண்ணாச் செம்பொன் காண் காவு 299 : 3 . ' ' காண்டற்கரிய கடவுள் கண்டாய் நாவு 237 : 1 எனத் தேவாரத்து வருவனவும் காண்க . ஞான 73 : 9 . ஞான 224 : 4 இதன்கண் மொழியினாற் பாடியும் பரவியும் இன்பமடைதலினும் மெய்யன்பினால் விரவித் திருவடிக் காட்சியைப் பெறுதலே சிறந்ததாகும் என்னும் உண்மையை இறைவனை முன்னிலைப்படுத்திக் கூறுங் குறிப்பி னான் நெஞ்சிற்கு அறிவுறுத்தமையின் அறிவுறுத்தல் என்னும் இரண் டாம்பத்து நுதலிய பொருள் பாதருதல் காண்க . 22. அறியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே . - ரை : யாவர்க்கும் அரியானே.எத்தகைய மேம்பாட்டினர்க்கும் அறி தற்கும் காண்டற்கும் அரியவனே அம்பரவா - சிதாகாயத்தையுடையவனே அம்பலத்து எம் பெரியானே - தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடும் எங்கள் பெரியோனே சிறியேனை ஆட்கொண்ட பெய் சுழல் கீழ்- சிறிய திருச்சதகம் 219 வனாகிய என்னை ஆட்கொண்டருளிய இட்ட வீரக்கழலினையுடைய திரு வடியின்கண் . விரை ஆர்ந்த மலர் தூவேன் - நறுமணம் பொருந்திய மலர்களை இட்டு வழிபடேன் ; வியந்து அலறேன்- பெறுதற்கரிய நின் திரு வடிக் காட்சியைப் பெற்று வியப்படைந்து வாய்குழறேன் ; நயந்து உரு கேள் - விரும்பி அன்பினால் மனம் உருகேன் ; நான் ஆம் ஆறு என் - அடி யேன் உய்யும் வழி யாது ? அதனை அருளாதொழியின் தரியேன் - உனக்கு ஆளாகிய யான் மலர் தூவல் வியந்தலறல் நயந்துருகல் செய்யாமல் இவ் வுலகில் தங்கி வாழேன் ; நான் சரவேன் சாவேன் - அதனால் நான் இறந்துடு வேன் இறந்துபடுவேன் . யாவர்க்கும் அறியாளே . அம்பரவா அம்பலத்தெம் பெரியோனே . சிறி வியந் யேனை ஆட்கொண்டருளிய உன் திருவடிக்கண் மலர்தூவேன் : கலறேன் ; விரும்பி அன்பினால் மனமுருகேன் : இவைகளைச் செய்யாத யான் உய்யும் வழி யாது ? மன மொழி மெய்களால் நின்னை வழிபடாது . இவ்வுலகில் தங்கி வாழேன் : இறந்துபடுவேன் ; இறந்துபடுவேன் என்ப தாம் . யாவர்க்கும் என்பதில் உம்மை முற்றுப்பொருளைத் தருவதாயினும் அறிவாற்றல்களிற் குறைந்தவர்களைக் குறியாது அவற்றின் மேம்பட்டுயர்ந்த திருமால் பீரமன் இந்திரன் முனிவர் முதலியோரைக் குறித்தது . தேவர் முனிவர் முதலிய யாவர்க்கும் இறைவன் அறிதற்கரியான் என்பது . ' தேவரு மறியாச் சிவனே காண்க அண்ட 50 . ' கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி போற்றி 143 . தேவர்கோ வறியாத தேவதேவன் ' ' சத 30 . பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் அம்மானை 2 . # * யாராலுங் காண்டற் கரியான் வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனுங் கானின்று வற்றியுங் காண்பரிய கனைகழலோன் அம்மானை 4 . ' மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த வெண்பா . தேவருங் காணச் சிவபெருமான் ' ' உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாட என இத் திருவாசசுத்தும் சத 4 . தன்னையார்க்கு மறிவரியான் திருமலை 1 . சார்வரு தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரை யடவி சார்ந்துங் காணுதற் கரியான் ' கண்ணப் 128 . எனப் பெரியபுராணத்தும் வருவனவற்றாலுமறிக . அம்பரம் - ஆகாசம் . 4 அம்பர மனல் கால் ' 8 : 8 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ( திவ் . பெரிய தி . ( 1 ) இதனைச் சிதாகாசம்