திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

220 திருவாசக ஆராய்ச்சியுரை எனவும் சூக்குமவெளி எனவும் கூறுவர். இதன்கண் விளங்கும் பெரி யோனாகிய இறைவன் திருச்சிற்றம்பலத்தின் கண் யாவரும் காணுமாறு திருக்கூத்தியற்றுதலின் 'அம்பரவா அம்பலத்தெம் பெரியோளே' என் றார். இனி, திகம்பரவா என்பது அம்பரவா என முதற்குறைந்து வந்த தெனக்கொண்டு திசைகளையாடையாகவுடையவனே என உரைத்தலு மொன்று. பெரியோனாகிய இறைவனை நோக்கத் தான் மிகச் சிறியனாதலின் அடிகள் தன்னைச் சிறியேன் என்றார். ஆட்கொள்ளல் - ஆளாக்கொள்ளல்+ ஆட்கொண்ட கழல் என இயையும். "போற்றியாம் உய்யவாட் கொண்டரு ளும் பொன் மலர்கள்" (திருவெம் 20) என, வருதலுங் காண்க. இறைவன் திருவடியைக் காட்டி அடிகளை ஆட்கொண்டமையின் *ஆட்கொண்ட பெய்கழல்' என்றார். கண்ணார் கழல்காட்டி அடியேனை ஆட்கொண்ட அண்ணாமலை யானை அம் 10. நாண்மலர்ப் பாதங்காட்டி... நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள்" பொற்றி. "1 "பாரிடைப் பாதங்கள் காட்டிப் பார மறுத்தெனை யாண்ட ஆருடைப் பொன்மேனி யமுதினை' குயில் 9. "அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி ...என்னையும் ஆட்கொண்டருளும். தேவர்பிரான்'' குயில் 10. "மைப்புலாங் கண்ணால் ஏறண்டு கிடப்பேனை மலாடியிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம்'' அற்7. விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம்" அற்9. பெருந்துறை யாளி யன்று.. தன் கழல்காட்டி.... என்னை ஆண் டருளுங் கிடப்பறிவார்" வார்த்தை 9. என அடிகள் அருளியவாறுங் காண்க. பெய்கறல் - இட்ட வீரக் கழல்"பெய்கழலான்" (பு. வெ.மா.162) என்பதற்கு 'இட்ட வீரக்கழலினையுடையான் ' என அதன் உரையாசிரி யர் உரைத்தமையுங் காண்க. கழல் என்றது கழலையுடைய திருவடியை உணர்த்தியது. விரை-மணம். மலந்தூவேன் என்பது மெய்யின் வழி பாட்டையும், வியந்தவறேன் என்பது மொழியின் வழிபாட்டையும் சுமந் துருகேன் என்பது மனத்தின் வழிபாட்டையும் செய்யாமையைக் குறித் தன. உனக்கு ஆளாகிய யான் மலர்தலல் முதலியவற்றைச் செய்யா மையின் இவ்வுலகில் தங்கியிரேன் என்பார் 'தர்யேன்' என்றார். இதன்கண் : அடிகள் தமது மனமொழி மெய்கள் வழிபாடு செய்யா மையைக் குறித்து வருந்தி இறைவனை முன்னிலைப் படுத்தி இந்நிலையில் 221 திருச்சதகம் இருத்தலினும் சாதலே நன்று என்று கூறுமுகமாகக் குறிப்பினால்அம் மூன்று கருவிகளுக்கும் அறிவுறுத்தமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதவிய பொருள் புலப்படுமாறு காண்க. 18. 23. வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே ஊபினலா நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் காணாய் நீ மாளாவாழ் கின்றாயே. ப-ரை : வேனில்வேன் எவாம் மலர் கணைக்கும். இளவேனிற் காலத்தைத் தனது ஆட்சிக்குரிய சிறந்த காலமாகக் கொள்கின்ற மன்மதன் எய்யும் மலர் அம்பிற்கும், வெள் நகை செவ்வாய் கரிய பானல் ஆர் கண்ணி யர்க்கும் - வெள்ளிய முறுவலையும் சிவந்த வாயினையும் கருங்குவளை மலர் போன்ற கரிய கண்களையுமுடைய மகளிர்பொருட்டும். பதைத்து உருகும் பாழ் நெஞ்சே-பதைத்து உருகும் பயனற்ற நெஞ்சமே, ஊன் கின்று உருக புகுந்து ஆண்டான் என் உடம்பின் உறுப்புக்கள் எல்லாம் உருகி நிற்கும்வண்ணம் என்னுள்ளே புகுந்து ஆட்கொண்ட எம்பெரு மான், இன்று போய் வான் உளான். இன்று நம்மை விட்டு மறைந்து நுண்ணிய பரவெளியின்கண் உள்ளான்; நீகாணாய் -நீ அவனைக் கண்டிலை: 10 CIT வாழ்கின்றாயே அதனால் மாண்டொழியாமல் இன்னும் வாழ் கின்றனையே: உன் அறியாமை இருந்தவாறென்னே. வேனில்வேன் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க் கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பயனற்ற நெஞ்சே. என் உடம்பின் உறுப்புக்கள் எல்லாம் உருகி நிற்கும் வண்ணம் என்னுள்ளே புகுந்தாண்ட எம்பெருமான் இன்று நம்மைவிட்டு மறைந்து வானின்க ணுள்ளான்; நீ அவனைக் கண்டிவை; அதனால் மாண்டொழியாமல் இன் னும் வாழ்கின்றயே; உன் அறியாமை இருந்தவாறென்னே என்பதாம். வேனில் எனப் பொதுப்படக் கூறினும் மலர்க்கணைகள் மலரும் இன் வேனிற்காலமே கொள்ளப்பட்டது. வேள் என்பது முருகனையும் உணர்த்துமாயினும் வேனில்வேள் என்றதனால் மன்மதனைக் குறித்தது. மலர்க்கணை என்றது மன்மதன் ஆற்றலைப் புலப்படுத்தியது. கணை.அம்பு. வெண்ணகை - வெள்ளிய முறுவல். திருக்கோவை 58 பேர். வெண் ணகை, செவ்வாய் என்பன கண்ணியர் என்பதில் விகுதியால் உணர்த்தப் படும் மகளிர் என்பதனோடு முடிந்தன. கரியகண். பானலார் கண் எனத் தனித்தனி இரைடயும். பானல் - சுருங்குவளை. "பானல் கருங்குவளை'" எனப் மிங்கலத்தையில் (9:335) வருலுங் காண்க. ஆர். உமைப்பொருட்டு 'வாழார் மொழிமங்கை" (திருக்கோவை 51) என்புழிப் போல. லார் கரிய கண்ணியர் எனக்கூட்டிக் கருங்குவளை மலர்போலும் கரிய கண்ணீர் எனவுரைக்க. குவளைக் கருங்கட் கொடியே ரிடைக்கொடி" எனத் திருக்கோவையாளில் (51) வருதலுங் காண்க. கணைக்கும் கண்ணி
220 திருவாசக ஆராய்ச்சியுரை எனவும் சூக்குமவெளி எனவும் கூறுவர் . இதன்கண் விளங்கும் பெரி யோனாகிய இறைவன் திருச்சிற்றம்பலத்தின் கண் யாவரும் காணுமாறு திருக்கூத்தியற்றுதலின் ' அம்பரவா அம்பலத்தெம் பெரியோளே ' என் றார் . இனி திகம்பரவா என்பது அம்பரவா என முதற்குறைந்து வந்த தெனக்கொண்டு திசைகளையாடையாகவுடையவனே என உரைத்தலு மொன்று . பெரியோனாகிய இறைவனை நோக்கத் தான் மிகச் சிறியனாதலின் அடிகள் தன்னைச் சிறியேன் என்றார் . ஆட்கொள்ளல் - ஆளாக்கொள்ளல் + ஆட்கொண்ட கழல் என இயையும் . போற்றியாம் உய்யவாட் கொண்டரு ளும் பொன் மலர்கள் ( திருவெம் 20 ) என வருதலுங் காண்க . இறைவன் திருவடியைக் காட்டி அடிகளை ஆட்கொண்டமையின் * ஆட்கொண்ட பெய்கழல் ' என்றார் . கண்ணார் கழல்காட்டி அடியேனை ஆட்கொண்ட அண்ணாமலை யானை அம் 10 . நாண்மலர்ப் பாதங்காட்டி ... நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பொற்றி . 1 பாரிடைப் பாதங்கள் காட்டிப் பார மறுத்தெனை யாண்ட ஆருடைப் பொன்மேனி யமுதினை ' குயில் 9 . அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி ... என்னையும் ஆட்கொண்டருளும் . தேவர்பிரான் ' ' குயில் 10 . மைப்புலாங் கண்ணால் ஏறண்டு கிடப்பேனை மலாடியிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் ' ' அற் 7 . விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அற் 9 . பெருந்துறை யாளி யன்று .. தன் கழல்காட்டி .... என்னை ஆண் டருளுங் கிடப்பறிவார் வார்த்தை 9 . என அடிகள் அருளியவாறுங் காண்க . பெய்கறல் - இட்ட வீரக் கழல் பெய்கழலான் ( பு . வெ.மா .162 ) என்பதற்கு ' இட்ட வீரக்கழலினையுடையான் ' என அதன் உரையாசிரி யர் உரைத்தமையுங் காண்க . கழல் என்றது கழலையுடைய திருவடியை உணர்த்தியது . விரை - மணம் . மலந்தூவேன் என்பது மெய்யின் வழி பாட்டையும் வியந்தவறேன் என்பது மொழியின் வழிபாட்டையும் சுமந் துருகேன் என்பது மனத்தின் வழிபாட்டையும் செய்யாமையைக் குறித் தன . உனக்கு ஆளாகிய யான் மலர்தலல் முதலியவற்றைச் செய்யா மையின் இவ்வுலகில் தங்கியிரேன் என்பார் ' தர்யேன் ' என்றார் . இதன்கண் : அடிகள் தமது மனமொழி மெய்கள் வழிபாடு செய்யா மையைக் குறித்து வருந்தி இறைவனை முன்னிலைப் படுத்தி இந்நிலையில் 221 திருச்சதகம் இருத்தலினும் சாதலே நன்று என்று கூறுமுகமாகக் குறிப்பினால்அம் மூன்று கருவிகளுக்கும் அறிவுறுத்தமை பெறப்படுதலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதவிய பொருள் புலப்படுமாறு காண்க . 18 . 23. வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே ஊபினலா நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் காணாய் நீ மாளாவாழ் கின்றாயே . - ரை : வேனில்வேன் எவாம் மலர் கணைக்கும் . இளவேனிற் காலத்தைத் தனது ஆட்சிக்குரிய சிறந்த காலமாகக் கொள்கின்ற மன்மதன் எய்யும் மலர் அம்பிற்கும் வெள் நகை செவ்வாய் கரிய பானல் ஆர் கண்ணி யர்க்கும் - வெள்ளிய முறுவலையும் சிவந்த வாயினையும் கருங்குவளை மலர் போன்ற கரிய கண்களையுமுடைய மகளிர்பொருட்டும் . பதைத்து உருகும் பாழ் நெஞ்சே - பதைத்து உருகும் பயனற்ற நெஞ்சமே ஊன் கின்று உருக புகுந்து ஆண்டான் என் உடம்பின் உறுப்புக்கள் எல்லாம் உருகி நிற்கும்வண்ணம் என்னுள்ளே புகுந்து ஆட்கொண்ட எம்பெரு மான் இன்று போய் வான் உளான் . இன்று நம்மை விட்டு மறைந்து நுண்ணிய பரவெளியின்கண் உள்ளான் ; நீகாணாய் -நீ அவனைக் கண்டிலை : 10 CIT வாழ்கின்றாயே அதனால் மாண்டொழியாமல் இன்னும் வாழ் கின்றனையே : உன் அறியாமை இருந்தவாறென்னே . வேனில்வேன் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க் கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பயனற்ற நெஞ்சே . என் உடம்பின் உறுப்புக்கள் எல்லாம் உருகி நிற்கும் வண்ணம் என்னுள்ளே புகுந்தாண்ட எம்பெருமான் இன்று நம்மைவிட்டு மறைந்து வானின்க ணுள்ளான் ; நீ அவனைக் கண்டிவை ; அதனால் மாண்டொழியாமல் இன் னும் வாழ்கின்றயே ; உன் அறியாமை இருந்தவாறென்னே என்பதாம் . வேனில் எனப் பொதுப்படக் கூறினும் மலர்க்கணைகள் மலரும் இன் வேனிற்காலமே கொள்ளப்பட்டது . வேள் என்பது முருகனையும் உணர்த்துமாயினும் வேனில்வேள் என்றதனால் மன்மதனைக் குறித்தது . மலர்க்கணை என்றது மன்மதன் ஆற்றலைப் புலப்படுத்தியது . கணை.அம்பு . வெண்ணகை - வெள்ளிய முறுவல் . திருக்கோவை 58 பேர் . வெண் ணகை செவ்வாய் என்பன கண்ணியர் என்பதில் விகுதியால் உணர்த்தப் படும் மகளிர் என்பதனோடு முடிந்தன . கரியகண் . பானலார் கண் எனத் தனித்தனி இரைடயும் . பானல் - சுருங்குவளை . பானல் கருங்குவளை ' எனப் மிங்கலத்தையில் ( 9 : 335 ) வருலுங் காண்க . ஆர் . உமைப்பொருட்டு ' வாழார் மொழிமங்கை ( திருக்கோவை 51 ) என்புழிப் போல . லார் கரிய கண்ணியர் எனக்கூட்டிக் கருங்குவளை மலர்போலும் கரிய கண்ணீர் எனவுரைக்க . குவளைக் கருங்கட் கொடியே ரிடைக்கொடி எனத் திருக்கோவையாளில் ( 51 ) வருதலுங் காண்க . கணைக்கும் கண்ணி