திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யர்க்கும் என்புழி உம்மைகள் எண்ணுப் பொருளன. மலர்க்கணைக்குப் பதைத்துக் கண்ணியர்க்கு உருகும் நெஞ்சு என நிரனிறையாகக் கொள்க. மலர்க்கணையால் வருந்தி அதனைத் தீர்த்தற்கு மகளிரைப் பெறும்பொருட்டு உருகும் எனக் காரணகாரிய முறைப்படி கொள்க. மன்மதனுக்குக் கணை யாகும் மலர்கள் தாமரைப்பூ. மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ. கருங்குவ லைப்பூ என்பன. இவை முறையே மகளிர் கூட்டுறவு விருப்பினையும் அதனால் உடல் பசலையடைதலையும் வேறு உலகசிந்தனை ஒழிதலையும் செயலற்றுக் கிடத்தலையும் அறிவு மயங்குதலையும் செய்வனவாம். அவை இங்கே "பதைத்து' என்பதாற் குறிக்கப்பட்டனவாகும். நெஞ்சு இறை வன் பொருட்டுப் பதைத்து உருகாது கண்ணியர் பொருட்டுப் பதைத் துருகுதல் பயனற்ற செயலாதலின் 'பதைத்துருகும் பாழ்நெஞ்சே' என் றார். நெஞ்சு இறைவன் பொருட்டுப் பதைத்துருக வேண்டுமென்பது, வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப், பள்ளந்தாமுமாறு புனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்'' (சத 21) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றனுமறிக. 222 ஊனெலாம் என்பது அகுபெயராய் உடம்பின் எலும்பு முதலிய உறுப்புக்கள் எல்லாவற்றையும் உணர்த்தி நின்றது. நின்று உருக என்ப தனை உருகி நிற்ப என எச்சவிகுதியைப் பிரித்துக்கூட்டி முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்க. ஊனெலாம் உருகப்புகுந்தாண்டான் என்க 'கல்நெஞ்சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட அம்பலவன் '" (கோத் தும்பி 11) "என் என்பெலா முருக்கி எனியையா யாண்ட ஈசனே' (பிடித் 10) "வியனுலகில் எனைத்தான் புகுந்தாண்டாள் '' (உயிருண்ணிப் 4 என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க. போய்-மறைந்து. வான் எனப் பொதுப்படக் கூறினும் ஈண்டு இறை வனுக்குரிய பரவெளியைக் குறித்தது. காணாய்-கண்டிலை. மாளா- மாண் டொழியாமல். வாழ்கின்றாயே என்பதன் ஆற்றலால் உன் அறியாமை இருந்தவாறென்னே என்பது வருவிக்கப்பட்டது. இதன்கண் நெஞ்சை முன்னிலைப்படுத்து விளித்து அதன் இழிவை அறிவுறுத்தமையின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதவிய பொருள் புலப்படுமாறு காண்க. 24. வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை யேத்தாதே சூழ்கின்றாய் கேடுளக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் தீயவலக் கூடலாய வெள்ளத்தே. ப-ரை: வாழாத நெஞ்சமே..அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் வாழ்க் கருதாத நெஞ்சமே, வாழ்கின் ஒய்-அழியும் இயல்புடைய இவ்வுலக இன்ப வாழ்வில் வாழ்ந்து அவ்வளவில் அமைந்திருக்கின் குய்; வல்வினைப் திருச்சதகம் பட்டு ஆழாமல் காப்பானை எத்தாது ஆழ்கின்றாய்-வலிய இருவினைகளின் வயப்பட்டு அழுந்தாமல் நம்மைக் காப்பாற்றும் இறைவனைப் புகழ்ந்து துதியாமல் விடுத்து அவ்விருவினைப் பயன்களில் அழுந்துகின்றாய்; உனக்கு கேடு குழ்கின்றாய் - இவற்றால் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள் ளக் கருதுகின்றாய்; பல்காலும் சொன்னேன்- உனக்குப் பலமுறையும் அறி அறிவுறுத்தி வருகின்றேன்; நீ அதனைக் கேளாதொழியின்,நீ அவலம் ஆய கடல் வெள்ளத்தே வீழ்கின்றாய்-நீ துன்பமாகிய கடற்பெருக் கில் வீழ்ந்தொழிகின்றாய். அரை 223 பேரின்ப வாழ்க்கையில் வாழக் கருதாத நெஞ்சமே, வல்வினைப்பட்டு ஆழாமற் காப்பாற்றும் இறைவனைப் புகழ்ந்து துதியாமல் அவ்விருவினைப் பயன்களில் அழுந்துகின்குய். இவற்றால் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள்ளக் கருதுகின்றாய்; உனக்குப் பலமுறையும் அறிவுரையை அறிவுறுத்தி வருகின்றேன்; அதனைக் கேளாதொழியின் நீ அவலமாகிய கடல்வெள்ளத்து வீழ்ந்தொழிகின்றய். என் செய்வது? என்பதாம். வாழ்தல் - இன்புற்று வாழ்தலைக் குறிப்பதாகலின் வாழ்கிறாய் என் பதற்கு அறியும் இயல்புடைய இவ்வுலக இன்பவாழ்வில் வாழ்ந்து அவ் வளவில் அமைந்திருக்கின்றாய் எனக் குறிக்கப்பட்டது. அழிவில்லாத பேரின்ப வாழ்வில் வாழக்கருதாத நெஞ்சமாதலின் 'வாழாத நெஞ்சமே' என்றார். வல்வினையென்றது பிறவிக்கேதுவாகிய ஒத்த வலியையுடைய வாகிய நல்வினை தீவினை இரண்டினையும் குறித்து நின்றது. நல்வினைப் பட்டு ஆழாமற் காப்பானை எத்தாதே ஆழ்கின்றாய் என மாறிக் கூட்டுக. "" உனக்குக் கேடு சூழ்கின்றாய் என்றது வாழாமல் வாழ்ந்தும் ஆழாமற் காப்பானை ஏத்தாது ஆழ்ந்தும் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள் ளக் கருதுகின்றாய் என்றவாறு. சூந்தல் கருதுதல். ''பலகுழும் மனத் தோடு பைதலேன் யானாக (கவி 46 : 17) என்புழிப்போல. சொல்கின் றேன் பல்காலும் என்றதன் ஆற்றலால் அறிவுறுத்தியும் கேளாதொழி யின் என்பது வருவிக்கப்பட்டது. அலைக் கடலாய வெள்ளம் என்றதனை அவலமாய கடல்வெள்ளம் என ஆய என்பது பிரித்துக் கூட்டப்பட்டது. அவலமாய கடல் - துன்பமாகிய கடல் "அவலக் கடல் வீழ்ந்த, என்னே ரனையேன்'' (ஆனந்த i) என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க. வீழ்வாய் என்னும் எதிர்காலம், துணிவுபற்றி வீழ்கின்றாய் என நிகழ் காலத்தாற் கூறப்பட்டது. இதன்கண், பல்கால் அறிவுறுத்தியும் கேளாமல் வாழாமல் வாழ்ந்தும் ஆழாமற் காப்பானை ஏத்தாது ஆழ்ந்தும் உனக்குக் கேட்டினை நீயே தேடிக் கொள்ளக் கருதுகின்ருய்; அதனால் துன்பமாய கடல்வெள்ளத்தே வீழ்வாய் என நெஞ்சினை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்தமையின் அறி வுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க, 20.
திருவாசக ஆராய்ச்சியுரை யர்க்கும் என்புழி உம்மைகள் எண்ணுப் பொருளன . மலர்க்கணைக்குப் பதைத்துக் கண்ணியர்க்கு உருகும் நெஞ்சு என நிரனிறையாகக் கொள்க . மலர்க்கணையால் வருந்தி அதனைத் தீர்த்தற்கு மகளிரைப் பெறும்பொருட்டு உருகும் எனக் காரணகாரிய முறைப்படி கொள்க . மன்மதனுக்குக் கணை யாகும் மலர்கள் தாமரைப்பூ . மாம்பூ அசோகம்பூ முல்லைப்பூ . கருங்குவ லைப்பூ என்பன . இவை முறையே மகளிர் கூட்டுறவு விருப்பினையும் அதனால் உடல் பசலையடைதலையும் வேறு உலகசிந்தனை ஒழிதலையும் செயலற்றுக் கிடத்தலையும் அறிவு மயங்குதலையும் செய்வனவாம் . அவை இங்கே பதைத்து ' என்பதாற் குறிக்கப்பட்டனவாகும் . நெஞ்சு இறை வன் பொருட்டுப் பதைத்து உருகாது கண்ணியர் பொருட்டுப் பதைத் துருகுதல் பயனற்ற செயலாதலின் ' பதைத்துருகும் பாழ்நெஞ்சே ' என் றார் . நெஞ்சு இறைவன் பொருட்டுப் பதைத்துருக வேண்டுமென்பது வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாமுமாறு புனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர் ' ' ( சத 21 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றனுமறிக . 222 ஊனெலாம் என்பது அகுபெயராய் உடம்பின் எலும்பு முதலிய உறுப்புக்கள் எல்லாவற்றையும் உணர்த்தி நின்றது . நின்று உருக என்ப தனை உருகி நிற்ப என எச்சவிகுதியைப் பிரித்துக்கூட்டி முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்க . ஊனெலாம் உருகப்புகுந்தாண்டான் என்க ' கல்நெஞ்சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட அம்பலவன் ' ( கோத் தும்பி 11 ) என் என்பெலா முருக்கி எனியையா யாண்ட ஈசனே ' ( பிடித் 10 ) வியனுலகில் எனைத்தான் புகுந்தாண்டாள் ' ' ( உயிருண்ணிப் 4 என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க . போய் - மறைந்து . வான் எனப் பொதுப்படக் கூறினும் ஈண்டு இறை வனுக்குரிய பரவெளியைக் குறித்தது . காணாய் - கண்டிலை . மாளா- மாண் டொழியாமல் . வாழ்கின்றாயே என்பதன் ஆற்றலால் உன் அறியாமை இருந்தவாறென்னே என்பது வருவிக்கப்பட்டது . இதன்கண் நெஞ்சை முன்னிலைப்படுத்து விளித்து அதன் இழிவை அறிவுறுத்தமையின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதவிய பொருள் புலப்படுமாறு காண்க . 24. வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை யேத்தாதே சூழ்கின்றாய் கேடுளக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் தீயவலக் கூடலாய வெள்ளத்தே . - ரை : வாழாத நெஞ்சமே..அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் வாழ்க் கருதாத நெஞ்சமே வாழ்கின் ஒய் - அழியும் இயல்புடைய இவ்வுலக இன்ப வாழ்வில் வாழ்ந்து அவ்வளவில் அமைந்திருக்கின் குய் ; வல்வினைப் திருச்சதகம் பட்டு ஆழாமல் காப்பானை எத்தாது ஆழ்கின்றாய் - வலிய இருவினைகளின் வயப்பட்டு அழுந்தாமல் நம்மைக் காப்பாற்றும் இறைவனைப் புகழ்ந்து துதியாமல் விடுத்து அவ்விருவினைப் பயன்களில் அழுந்துகின்றாய் ; உனக்கு கேடு குழ்கின்றாய் - இவற்றால் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள் ளக் கருதுகின்றாய் ; பல்காலும் சொன்னேன்- உனக்குப் பலமுறையும் அறி அறிவுறுத்தி வருகின்றேன் ; நீ அதனைக் கேளாதொழியின் நீ அவலம் ஆய கடல் வெள்ளத்தே வீழ்கின்றாய் - நீ துன்பமாகிய கடற்பெருக் கில் வீழ்ந்தொழிகின்றாய் . அரை 223 பேரின்ப வாழ்க்கையில் வாழக் கருதாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழாமற் காப்பாற்றும் இறைவனைப் புகழ்ந்து துதியாமல் அவ்விருவினைப் பயன்களில் அழுந்துகின்குய் . இவற்றால் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள்ளக் கருதுகின்றாய் ; உனக்குப் பலமுறையும் அறிவுரையை அறிவுறுத்தி வருகின்றேன் ; அதனைக் கேளாதொழியின் நீ அவலமாகிய கடல்வெள்ளத்து வீழ்ந்தொழிகின்றய் . என் செய்வது ? என்பதாம் . வாழ்தல் - இன்புற்று வாழ்தலைக் குறிப்பதாகலின் வாழ்கிறாய் என் பதற்கு அறியும் இயல்புடைய இவ்வுலக இன்பவாழ்வில் வாழ்ந்து அவ் வளவில் அமைந்திருக்கின்றாய் எனக் குறிக்கப்பட்டது . அழிவில்லாத பேரின்ப வாழ்வில் வாழக்கருதாத நெஞ்சமாதலின் ' வாழாத நெஞ்சமே ' என்றார் . வல்வினையென்றது பிறவிக்கேதுவாகிய ஒத்த வலியையுடைய வாகிய நல்வினை தீவினை இரண்டினையும் குறித்து நின்றது . நல்வினைப் பட்டு ஆழாமற் காப்பானை எத்தாதே ஆழ்கின்றாய் என மாறிக் கூட்டுக . உனக்குக் கேடு சூழ்கின்றாய் என்றது வாழாமல் வாழ்ந்தும் ஆழாமற் காப்பானை ஏத்தாது ஆழ்ந்தும் உனக்குக் கேட்டினை நீயே தேடிக்கொள் ளக் கருதுகின்றாய் என்றவாறு . சூந்தல் கருதுதல் . ' ' பலகுழும் மனத் தோடு பைதலேன் யானாக ( கவி 46 : 17 ) என்புழிப்போல . சொல்கின் றேன் பல்காலும் என்றதன் ஆற்றலால் அறிவுறுத்தியும் கேளாதொழி யின் என்பது வருவிக்கப்பட்டது . அலைக் கடலாய வெள்ளம் என்றதனை அவலமாய கடல்வெள்ளம் என ஆய என்பது பிரித்துக் கூட்டப்பட்டது . அவலமாய கடல் - துன்பமாகிய கடல் அவலக் கடல் வீழ்ந்த என்னே ரனையேன் ' ' ( ஆனந்த i ) என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க . வீழ்வாய் என்னும் எதிர்காலம் துணிவுபற்றி வீழ்கின்றாய் என நிகழ் காலத்தாற் கூறப்பட்டது . இதன்கண் பல்கால் அறிவுறுத்தியும் கேளாமல் வாழாமல் வாழ்ந்தும் ஆழாமற் காப்பானை ஏத்தாது ஆழ்ந்தும் உனக்குக் கேட்டினை நீயே தேடிக் கொள்ளக் கருதுகின்ருய் ; அதனால் துன்பமாய கடல்வெள்ளத்தே வீழ்வாய் என நெஞ்சினை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்தமையின் அறி வுறுத்தல் என்னும் இரண்டாம்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க 20 .