திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

238 திருவாசக ஆராய்ச்சியுரை நூலறி அநுபவ அறிவு என்றும் உரைப்பர். இருவினைகள் நீங்கியிருப் அடிகள் திருமேனி நில்லாது. வினைப்போகமே யொருதேகங் கண்டாய்'' எனப் பட்டினத்தடிகள் அருளியமையுங் காண்க. ஆக்கக் கேடுகள் நீங்கியிருப்பின் அஃது இடைப்பட்ட பயனாமன்றி அடிகளின் குறிக்கோளன்றாம். நூலறிவு அநுபவ வறிவு எனக் கொள்ளின் ஈரெட் டாண்டெல்லைதனில் எக்கலையுங் கற்றுணர்ந்து முதன் மந்திரியாய் அமழிந் திருந்த அடிகளுக்கு அவ்வறிவுகள் இல்லையெனல் அமையாது. பின்னை. இரண்டும் என்றது என்னையெனின் இறை உலகு என்னும் மூன்றனுள் இறை சத்து; உலகு அசத்து; உயிர் இறையை நோக்க அசத் தாதலும் உலகினை நோக்கச் சத்தாதலும் உடைமையின் சதசத்து இரு திற னறிவுள திரண்டலா தான்மா' எனச் சிவஞானபோதம் ஏழாஞ் சூத்திரத்து வருதலும், 'பாரிசேட வளவையான் இருதிறனறிவுள தொன் றுண்டென்பது பெறப்படுதலின் அதுவே சத்தாதற் றன்மையும் அசத் தாதற் றன்மையுமாகிய இரண்டு மின்றிச் சதசத்தாயுள்ள உயிராம்' என்னும் அப்பகுதிப் பொழிப்புரையும் ஈண்டறியற்பாலன. உயிர்களுக் குச் சார்ந்ததன் வண்ணம் உண்மையால் கடவுளைச் சார்ந்து அறிவிக்க அறிந்து ஈடேறுதலும்,உலகினைச் சார்ந்து பிறப்பு இறப்பு அடைந்து உழலுதலுமுண்டு. உயிர் வியாபக சத்தாகிய இறையுள் அடங்கிய வியாப் பியச் சத்தாகும். உலகு வியாப்பிய அசத்தாகும். இங்ஙனம் உயிருக்குச் சத்தாதற் றன்மையும் அசத்தாதற் றன்மையும் உண்டெனின் அத்தன்மைத் தான பிறபொருள்களுமுண்டோ என்னும் வினா நிகழும். அதற்கு விடை கரண்டற்கருவியாகிய கண் தனக்கு ஒளியின் உதவி கிடைத்தவழி காண்ட லும் அஃதில்வழி காணமாட்டாமையும். சார்ந்ததன் வண்ணமாகிய பளிங்கு ஒளியின் உதவி பெற்றவழி விளங்குதலும் அஃதில்வழி விளங் காமையும் காண்டுமன்றே. ஆதலால் இரண்டு மிலித்தனியனேன் என்றது முழுவதும் சத்தாதலும் முழுவதும் அசத்தாதலும் இன்றிச் சதசத்தாயிருக் கின்ற தனியனேன் என்றவாறு. இன்னும் உணர்வு சிறிதுமில்லாத உல கினை நோக்கச் சிற்றறிவுடைய உயிர் சித்தாதலும், பேரறிவுடைய இறை வனை நோக்க அசித்தாதலுமுண்மையின் சிதித்தாயிருக்கின்ற தனியேன் எனவும் உரைக்கலாம். உயிரைச் சதசத்து எனவோ ஈதசித்து எனவோ கொள்ளுதல் சத்தாதல் அசத்தாதல்; சீத்தாதல் அசித்தாதல் நிரம்பப் பெறாமைபற்றியாகும். தனியனேற்கு உன்னைத் தந்தனை என முடிக்க, இதன்கன் என் மனமொழிமெய்கள் நின்னைச் சிந்தித்தலும் புகழ்ந் துரைத்தலும் வழிபடுதலுமாகிய செயல்கள் செய்யுமாறு ஆக்கி உன்னைத் தந்தனை என்பதனால், மனமொழிமெட்கள் தாமாக நினைந்து புகழ்ந்து வழிபடமாட்டா என்பது பெறப்படுதலீன் சுட்டறுத்தல் என்னும் முன் றாம்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க, திருச்சதகம் 31. தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்றென் றின்றிக் கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு கரமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா நென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே. 239 ப-ரை: முனைவனே - வினையினீங்கி விளங்கிய அறிவினையுடையவனே, தனியனேன் - இரண்டுமிவியாகிய தனித்தன்மையுடையனாகிய யான், பிறவி பெரு பெளவத்து - பிறவியாகிய பெரிய கடலில் விழுந்து, எவ்வ தட திரையால் ஏற்றுண்டு - பிறவித் துன்பமாகிய பெரிய அலைகளால் எறி யப்பட்டு, பற்று ஒன்று இன்றி - பற்றுக்கோடு யாதும் இல்லாமல், கனியை நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு - கொவ்வைப் பழத்தினை ஒத்த சிவந்த வாயினையுடைய மகளிர் என்னும் சுழல் காற்றி னால் மனக்கலக்கம் எய்தி, காம வான் சுறலின் வாய்ப்பட்டு -காமமாகிய பெரிய சுருமினின் வலையில் அகப்பட்டு.இனி உய்யும் ஆறு என் என்று எண்ணி - வருந்துகின்ற இந்நிலையில் உய்வதற்கு வழி யாது என்று கால் நினைந்து, அஞ்சு எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை - திரு வைந்தெழுத்தாகிய தெப்பத்தைப் பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு கிடக்கின்றவனாகிய என்னை, ஆட்கொண்டு அடிமை கொண்டருளி, மூர்க்கனேற்கு முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டினாய்-மாறு பட்ட குணத்தினையுடைய எனக்கு தோற்றமும் அழிவுமில்லாத வளப் பம் பொருந்திய முத்திக்கரையைக் காட்டியருளினாய். நின் பெருங்கரு ணையை என்லென்பேன். பல முனைவனே,தனியனேன் பிறவியாகிய பெருங்கடலில் விழுந்து பிற வித் துன்பமாகிய பேரங்களால் எறியப்பட்டுப் பற்றுக்கோடு யாதும் இல்லாமல் மகளிர் என்னும் சுழல்காற்றாற் கலக்குண்டு காமமாழிய பெரிய சுறவின் வாயில் அகப்பட்டு வருந்துகின்ற இந்நிலையில் உய்வதற்கு வழி எதுவாம் என்று எண்ணித் திருவைந்தெழுத்தாகிய தெப்பத்தினைப் பற் றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு கிடந்தவனாகிய என்னை ஆட்கொண்டு மூர்க்கனேற்கு தோற்றமும் அழிவுமில்லாத முத்திக்கரையைக் காட்டி யருளினாய். ஈன்பெருங்கருணையை என்னென்பேன் என்பதாம்.
238 திருவாசக ஆராய்ச்சியுரை நூலறி அநுபவ அறிவு என்றும் உரைப்பர் . இருவினைகள் நீங்கியிருப் அடிகள் திருமேனி நில்லாது . வினைப்போகமே யொருதேகங் கண்டாய் ' ' எனப் பட்டினத்தடிகள் அருளியமையுங் காண்க . ஆக்கக் கேடுகள் நீங்கியிருப்பின் அஃது இடைப்பட்ட பயனாமன்றி அடிகளின் குறிக்கோளன்றாம் . நூலறிவு அநுபவ வறிவு எனக் கொள்ளின் ஈரெட் டாண்டெல்லைதனில் எக்கலையுங் கற்றுணர்ந்து முதன் மந்திரியாய் அமழிந் திருந்த அடிகளுக்கு அவ்வறிவுகள் இல்லையெனல் அமையாது . பின்னை . இரண்டும் என்றது என்னையெனின் இறை உலகு என்னும் மூன்றனுள் இறை சத்து ; உலகு அசத்து ; உயிர் இறையை நோக்க அசத் தாதலும் உலகினை நோக்கச் சத்தாதலும் உடைமையின் சதசத்து இரு திற னறிவுள திரண்டலா தான்மா ' எனச் சிவஞானபோதம் ஏழாஞ் சூத்திரத்து வருதலும் ' பாரிசேட வளவையான் இருதிறனறிவுள தொன் றுண்டென்பது பெறப்படுதலின் அதுவே சத்தாதற் றன்மையும் அசத் தாதற் றன்மையுமாகிய இரண்டு மின்றிச் சதசத்தாயுள்ள உயிராம் ' என்னும் அப்பகுதிப் பொழிப்புரையும் ஈண்டறியற்பாலன . உயிர்களுக் குச் சார்ந்ததன் வண்ணம் உண்மையால் கடவுளைச் சார்ந்து அறிவிக்க அறிந்து ஈடேறுதலும் உலகினைச் சார்ந்து பிறப்பு இறப்பு அடைந்து உழலுதலுமுண்டு . உயிர் வியாபக சத்தாகிய இறையுள் அடங்கிய வியாப் பியச் சத்தாகும் . உலகு வியாப்பிய அசத்தாகும் . இங்ஙனம் உயிருக்குச் சத்தாதற் றன்மையும் அசத்தாதற் றன்மையும் உண்டெனின் அத்தன்மைத் தான பிறபொருள்களுமுண்டோ என்னும் வினா நிகழும் . அதற்கு விடை கரண்டற்கருவியாகிய கண் தனக்கு ஒளியின் உதவி கிடைத்தவழி காண்ட லும் அஃதில்வழி காணமாட்டாமையும் . சார்ந்ததன் வண்ணமாகிய பளிங்கு ஒளியின் உதவி பெற்றவழி விளங்குதலும் அஃதில்வழி விளங் காமையும் காண்டுமன்றே . ஆதலால் இரண்டு மிலித்தனியனேன் என்றது முழுவதும் சத்தாதலும் முழுவதும் அசத்தாதலும் இன்றிச் சதசத்தாயிருக் கின்ற தனியனேன் என்றவாறு . இன்னும் உணர்வு சிறிதுமில்லாத உல கினை நோக்கச் சிற்றறிவுடைய உயிர் சித்தாதலும் பேரறிவுடைய இறை வனை நோக்க அசித்தாதலுமுண்மையின் சிதித்தாயிருக்கின்ற தனியேன் எனவும் உரைக்கலாம் . உயிரைச் சதசத்து எனவோ ஈதசித்து எனவோ கொள்ளுதல் சத்தாதல் அசத்தாதல் ; சீத்தாதல் அசித்தாதல் நிரம்பப் பெறாமைபற்றியாகும் . தனியனேற்கு உன்னைத் தந்தனை என முடிக்க இதன்கன் என் மனமொழிமெய்கள் நின்னைச் சிந்தித்தலும் புகழ்ந் துரைத்தலும் வழிபடுதலுமாகிய செயல்கள் செய்யுமாறு ஆக்கி உன்னைத் தந்தனை என்பதனால் மனமொழிமெட்கள் தாமாக நினைந்து புகழ்ந்து வழிபடமாட்டா என்பது பெறப்படுதலீன் சுட்டறுத்தல் என்னும் முன் றாம்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க திருச்சதகம் 31. தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையா லெற்றுண்டு பற்றென் றின்றிக் கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு கரமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா நென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே . 239 - ரை : முனைவனே - வினையினீங்கி விளங்கிய அறிவினையுடையவனே தனியனேன் - இரண்டுமிவியாகிய தனித்தன்மையுடையனாகிய யான் பிறவி பெரு பெளவத்து - பிறவியாகிய பெரிய கடலில் விழுந்து எவ்வ தட திரையால் ஏற்றுண்டு - பிறவித் துன்பமாகிய பெரிய அலைகளால் எறி யப்பட்டு பற்று ஒன்று இன்றி - பற்றுக்கோடு யாதும் இல்லாமல் கனியை நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு - கொவ்வைப் பழத்தினை ஒத்த சிவந்த வாயினையுடைய மகளிர் என்னும் சுழல் காற்றி னால் மனக்கலக்கம் எய்தி காம வான் சுறலின் வாய்ப்பட்டு -காமமாகிய பெரிய சுருமினின் வலையில் அகப்பட்டு.இனி உய்யும் ஆறு என் என்று எண்ணி - வருந்துகின்ற இந்நிலையில் உய்வதற்கு வழி யாது என்று கால் நினைந்து அஞ்சு எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை - திரு வைந்தெழுத்தாகிய தெப்பத்தைப் பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு கிடக்கின்றவனாகிய என்னை ஆட்கொண்டு அடிமை கொண்டருளி மூர்க்கனேற்கு முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டினாய் - மாறு பட்ட குணத்தினையுடைய எனக்கு தோற்றமும் அழிவுமில்லாத வளப் பம் பொருந்திய முத்திக்கரையைக் காட்டியருளினாய் . நின் பெருங்கரு ணையை என்லென்பேன் . பல முனைவனே தனியனேன் பிறவியாகிய பெருங்கடலில் விழுந்து பிற வித் துன்பமாகிய பேரங்களால் எறியப்பட்டுப் பற்றுக்கோடு யாதும் இல்லாமல் மகளிர் என்னும் சுழல்காற்றாற் கலக்குண்டு காமமாழிய பெரிய சுறவின் வாயில் அகப்பட்டு வருந்துகின்ற இந்நிலையில் உய்வதற்கு வழி எதுவாம் என்று எண்ணித் திருவைந்தெழுத்தாகிய தெப்பத்தினைப் பற் றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு கிடந்தவனாகிய என்னை ஆட்கொண்டு மூர்க்கனேற்கு தோற்றமும் அழிவுமில்லாத முத்திக்கரையைக் காட்டி யருளினாய் . ஈன்பெருங்கருணையை என்னென்பேன் என்பதாம் .