திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தனியனேன் கிடக்கின்றேனை எனக்கூட்டிக் கிடக்கின்ற தனியனேனை என்பது கருத்தாகக் கொள்க, பிறவியைக் கடல் என்றார் காரண காரி யத் தொடர்ச்சியாய் இடையீடின்றி வருதலீன். "பிறவியென்னுமிக் கடலை நீந்த '' (சென்னிப் 4) " மேலைப்பிறப்பு முந்நீர் கடக்க '' (பாண்டி 9) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க, பிறவியைப் பௌவம் என்றதற்கேற்பப் பிறவி அடைந்த உயிர்களைத் தாக்குவனவாகிய தன் னால் வருவதும் பிறவுயிரால் வருவதும் தெய்வத்தால் வருவதுமாகிய பிறவித்துன்பங்களைத் திரையாக உருவகித்தார் பிறவி கடலாக, துன்பங் கள் திரையாக, அக்க லில் எழும் சுழல் காற்றுப் போலாக மாதர் கலக் குதலின் *துவர் வாயார் என்னும் காலால் என உருவகித்தார். என்றது கொவ்வைக் கனியை. 240 "குழல் கொன்றை கொவ்வை செவ்வாய்'' திருக்கோவை 108. என வருதல் காண்க. துவர்- சிவப்பு. 'இன்மொழித் துவர் வாய்" (பொருக 37) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மாதரின் அழகை வாயின் மேலிட்டுத் 'துவர்வாயார்'' என்றார். காமம் - புணர்ச்சி வேட்கை. அதனைப் பிறவிக் கடலில் உள்ள சுரு மீனாக உருவகித்தார். இனி என்றது பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து எவ்வத்திரையால் எற்றுண்டு பற்றுக்கோடின்றித் துவர்வாயார் என்னும் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு வருந்திக் கிடக் கின்ற நிலையையுணர்த்தியது. என் என்று எண்ணி-யாது என்று பல கால் நினைந்து. அதன் பெறுபேறு அஞ்செழுத்தின் புனைபிடித்தலாகும். அஞ்செழுத்தின் என்புழி இன்தவிர்வழி வந்தது. பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் திருவைந்தினைத் தெப்பமாக உருவகித்தார். மில்லா என்பது தோற்றமும் கேடுகில்லாத வீடாகிய கரையைச் சிறப் முதலந்த பித்து. இறைவனுக்கு முதலந்தமின்மையின் அவ்விறைவனால் அருளப் படும் வீட்டிற்கும் அச்சிறப்புக் கூறப்பட்டது. மல்லல் - வளம். மல் லல் வளனே ' என்பது தொல்காப்பியம் (உரி 7) வனம் அந்தமிலின் பம். அது அவ்வின்பத்தினையுடைய வீட்டினை உணர்த்தியது. பிறவியைக் கடலாகக் கூறினமையின் அதனின்று நீங்கி அடையும் வீடுபேற்றினைக் கரையாக உருவகஞ் செய்தாய். ஐந்தெழுத்தின் புணைபிடித்தல் ஆட் கொள்ளுதற்கும் ஆட்கொள்ளல் கரைகாட்டற்கும் ஏதுவாகும். காட்டினாய் என விகுதி பிரித்து மாற்றிக்கூட்டிக் கிடக்கின்றேனை ஆட் கொண்டு கரைகாட்டினாய் எனமுடிக்க. கரை இதன்கண் அடிகள் முதலந்தமில்லா மல்லற்கரைகாட்டக் கண்டன் ராதலின் அதனை மனமொழி மெய்களால் அறியமுடியாமை பெறப்படு தலின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போந்த வாறு காண்கா 22, திருச்சதகம் 32. கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழிதிருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டாள் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 241 ப-ரை : ஆரும் கேட்டு அறியாதரன் - எவ்வகை மேம்பாட்டின ராலும் தம் கேள்வி அறிவால் அறியப்படாதவனும், கேடு ஒன்று இல்லான் அழிவு சிறிதும் இல்லாதவனும், கிளை இலான்-சுற்றத்தினர் இல்லாதவ னும், கேளாதே எல்லாம் கேட்டான் - பிறவாயிலாகக் கேட்டறியாதே இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய இறைவன், நாட் டார்கள் விழித்திருப்ப - நாட்டிலுள்ளார் அனைவரும் பார்த்திருப்பவும், ஞாலத்து உள்ளே-இந்நிலவுலகத்தில், நாயினுக்கு தவிசு இட்டு - ஒரு நாய்க்கு உயர்ந்த ஆசனத்தை இட்டதுபோல இருக்கை அமைத்து, நாயி னே ற்கு காட்டாதன எல்லாம் காட்டி - இறிவுடையேனுக்குக் கல்வியறி வாற் கண்டறிய முடியாதன எல்லாவற்றையும் காட்டியருளி, கேளாதன எல்லாம் கேட்பித்து-கேள்வியறிவாற் கேட்டறிய முடியாதனவற்றையெல் லாம் தன்வாயிலாகக் கேட்டறியும் வண்ணம் செய்து, என்னை ஆட் கொண்டு மீட்டேயும் பிறவாமல் காத்தாள்-தகுதியற்றவனாகிய என்னை அடிமைகொண்டருளி மீட்டும் பிறவாமல் காப்பாற்றியருளினான். பெருமான் செய்திட்ட விச்சைதான்-இஃது எங்கள் தலைவன் செய்த வியப்புக்குரிய திருவிளையாடலாகும். எம் யாவராலும் கேட்டு அறியப்படாதவனும் கேடு ஒரு சிறிதும் இல்லா தவனும் சுற்றத்தினர் இல்லாதவனும் பிறரிடத்துக்கேட்டறியாமவே இயல் பாகவே எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய இறைவன் நாட்டிலுள்ளார் அனைவரும் பார்த்திருப்பவும் இந்நிலவுலகத்தில் (புகுந்து) நாயினுக்குத் தவிசு இட்டது போல இருக்கை அமைத்து இறிவுடையேனுக்குக் காட்ட முடியாதனவெல்லாம் காண்பித்தக் கேள்வியறிவாற் கேட்டறியமுடியா தனவற்றையெல்லாம் தன்வாயிலாகச் கேட்டறியும் வண்ணம் செய்து என்னை ஆட்கொண்டு மீட்டும் பிறவாமல் காத்தருளினான். இஃது எம் பெருமான் செய்த வியப்புக்குரிய திருவிளையாடலாகும். இறைவன் கல்வி கேள்வி அறிவுகளால் ஓரளவு அறியப்படினும் எவ்வகை மேம்பாட்டினராலும் பிறர்பாற் கேட்டு முழுவதும் அறியப் படாதவனாகலின் கேட்டசரு மறியாதான்" என்றள். அறியாதான் - அறி யப்படாதவன். இதில் 'படு' என்னும் செயப்பாட்டு விருது தொக்கது. இறைவன் என்றுமுள்ளவனாகளின் நேடொன்றில்லான்" என்றார். 31
திருவாசக ஆராய்ச்சியுரை தனியனேன் கிடக்கின்றேனை எனக்கூட்டிக் கிடக்கின்ற தனியனேனை என்பது கருத்தாகக் கொள்க பிறவியைக் கடல் என்றார் காரண காரி யத் தொடர்ச்சியாய் இடையீடின்றி வருதலீன் . பிறவியென்னுமிக் கடலை நீந்த ' ' ( சென்னிப் 4 ) மேலைப்பிறப்பு முந்நீர் கடக்க ' ' ( பாண்டி 9 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க பிறவியைப் பௌவம் என்றதற்கேற்பப் பிறவி அடைந்த உயிர்களைத் தாக்குவனவாகிய தன் னால் வருவதும் பிறவுயிரால் வருவதும் தெய்வத்தால் வருவதுமாகிய பிறவித்துன்பங்களைத் திரையாக உருவகித்தார் பிறவி கடலாக துன்பங் கள் திரையாக அக்க லில் எழும் சுழல் காற்றுப் போலாக மாதர் கலக் குதலின் * துவர் வாயார் என்னும் காலால் என உருவகித்தார் . என்றது கொவ்வைக் கனியை . 240 குழல் கொன்றை கொவ்வை செவ்வாய் ' ' திருக்கோவை 108 . என வருதல் காண்க . துவர்- சிவப்பு . ' இன்மொழித் துவர் வாய் ( பொருக 37 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . மாதரின் அழகை வாயின் மேலிட்டுத் ' துவர்வாயார் ' ' என்றார் . காமம் - புணர்ச்சி வேட்கை . அதனைப் பிறவிக் கடலில் உள்ள சுரு மீனாக உருவகித்தார் . இனி என்றது பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து எவ்வத்திரையால் எற்றுண்டு பற்றுக்கோடின்றித் துவர்வாயார் என்னும் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு வருந்திக் கிடக் கின்ற நிலையையுணர்த்தியது . என் என்று எண்ணி - யாது என்று பல கால் நினைந்து . அதன் பெறுபேறு அஞ்செழுத்தின் புனைபிடித்தலாகும் . அஞ்செழுத்தின் என்புழி இன்தவிர்வழி வந்தது . பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் திருவைந்தினைத் தெப்பமாக உருவகித்தார் . மில்லா என்பது தோற்றமும் கேடுகில்லாத வீடாகிய கரையைச் சிறப் முதலந்த பித்து . இறைவனுக்கு முதலந்தமின்மையின் அவ்விறைவனால் அருளப் படும் வீட்டிற்கும் அச்சிறப்புக் கூறப்பட்டது . மல்லல் - வளம் . மல் லல் வளனே ' என்பது தொல்காப்பியம் ( உரி 7 ) வனம் அந்தமிலின் பம் . அது அவ்வின்பத்தினையுடைய வீட்டினை உணர்த்தியது . பிறவியைக் கடலாகக் கூறினமையின் அதனின்று நீங்கி அடையும் வீடுபேற்றினைக் கரையாக உருவகஞ் செய்தாய் . ஐந்தெழுத்தின் புணைபிடித்தல் ஆட் கொள்ளுதற்கும் ஆட்கொள்ளல் கரைகாட்டற்கும் ஏதுவாகும் . காட்டினாய் என விகுதி பிரித்து மாற்றிக்கூட்டிக் கிடக்கின்றேனை ஆட் கொண்டு கரைகாட்டினாய் எனமுடிக்க . கரை இதன்கண் அடிகள் முதலந்தமில்லா மல்லற்கரைகாட்டக் கண்டன் ராதலின் அதனை மனமொழி மெய்களால் அறியமுடியாமை பெறப்படு தலின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போந்த வாறு காண்கா 22 திருச்சதகம் 32. கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழிதிருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டாள் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே . 241 - ரை : ஆரும் கேட்டு அறியாதரன் - எவ்வகை மேம்பாட்டின ராலும் தம் கேள்வி அறிவால் அறியப்படாதவனும் கேடு ஒன்று இல்லான் அழிவு சிறிதும் இல்லாதவனும் கிளை இலான் - சுற்றத்தினர் இல்லாதவ னும் கேளாதே எல்லாம் கேட்டான் - பிறவாயிலாகக் கேட்டறியாதே இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய இறைவன் நாட் டார்கள் விழித்திருப்ப - நாட்டிலுள்ளார் அனைவரும் பார்த்திருப்பவும் ஞாலத்து உள்ளே - இந்நிலவுலகத்தில் நாயினுக்கு தவிசு இட்டு - ஒரு நாய்க்கு உயர்ந்த ஆசனத்தை இட்டதுபோல இருக்கை அமைத்து நாயி னே ற்கு காட்டாதன எல்லாம் காட்டி - இறிவுடையேனுக்குக் கல்வியறி வாற் கண்டறிய முடியாதன எல்லாவற்றையும் காட்டியருளி கேளாதன எல்லாம் கேட்பித்து - கேள்வியறிவாற் கேட்டறிய முடியாதனவற்றையெல் லாம் தன்வாயிலாகக் கேட்டறியும் வண்ணம் செய்து என்னை ஆட் கொண்டு மீட்டேயும் பிறவாமல் காத்தாள் - தகுதியற்றவனாகிய என்னை அடிமைகொண்டருளி மீட்டும் பிறவாமல் காப்பாற்றியருளினான் . பெருமான் செய்திட்ட விச்சைதான் - இஃது எங்கள் தலைவன் செய்த வியப்புக்குரிய திருவிளையாடலாகும் . எம் யாவராலும் கேட்டு அறியப்படாதவனும் கேடு ஒரு சிறிதும் இல்லா தவனும் சுற்றத்தினர் இல்லாதவனும் பிறரிடத்துக்கேட்டறியாமவே இயல் பாகவே எல்லாவற்றையும் அறிந்தவனுமாகிய இறைவன் நாட்டிலுள்ளார் அனைவரும் பார்த்திருப்பவும் இந்நிலவுலகத்தில் ( புகுந்து ) நாயினுக்குத் தவிசு இட்டது போல இருக்கை அமைத்து இறிவுடையேனுக்குக் காட்ட முடியாதனவெல்லாம் காண்பித்தக் கேள்வியறிவாற் கேட்டறியமுடியா தனவற்றையெல்லாம் தன்வாயிலாகச் கேட்டறியும் வண்ணம் செய்து என்னை ஆட்கொண்டு மீட்டும் பிறவாமல் காத்தருளினான் . இஃது எம் பெருமான் செய்த வியப்புக்குரிய திருவிளையாடலாகும் . இறைவன் கல்வி கேள்வி அறிவுகளால் ஓரளவு அறியப்படினும் எவ்வகை மேம்பாட்டினராலும் பிறர்பாற் கேட்டு முழுவதும் அறியப் படாதவனாகலின் கேட்டசரு மறியாதான் என்றள் . அறியாதான் - அறி யப்படாதவன் . இதில் ' படு ' என்னும் செயப்பாட்டு விருது தொக்கது . இறைவன் என்றுமுள்ளவனாகளின் நேடொன்றில்லான் என்றார் . 31