திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கிளை - தந்தை தாய் முதலிய சுற்றம், இறைவன் யாவர்க்கும் தந்தை தாய் முதலிய சுற்றமாவனே யன்றித் தனக்கு அஃகிலானாதலின் 'கிளை யிலான் என்றார். 242 "எந்தை யாய்எம்பிரான் மற்று மியாவர்க்குக் தந்தை தாய்தம் பிரான்றனக் கஃதிலான் சத 47. என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. எல்லாமறிபவனாதலின் 'கேளாதே யெல்லாங் கேட்டான்' என்றார். இறைவன் நாட்டார்கள் விழித்திருப்பவென்றது நாட்டிலுள்ளார் தாம் கதி யடைதற்குத் தகுதியின்மையாற் பார்த்துக் கொண்டிருப்ப என்றவாறு. விழித்திருப்ப ஆட்கொண்டான் என இயையும் நாயினேற்கு இருக்கை அளித்தது, இழிவுடைய நாய்க்கு உயர்ந்த ஆசனத்தை இட்டது போலு மென்பார் 'நாயினுக்குத் தவிசிட்டு' என்றார். காட்டாதன யென்பதும் கேளாதன கேட்பித்து என்பதும் கல்வி கேள்வி அறிவுகளால் காட்டி முழுவதும் அறிய முடியாத இறையியல்பு, உயிரியல்பு பாசவியல்பு என்ப உணர்த்தி உபதேசஞ் செய்து அனுபவஞானத்தால் வைத்தமையை உணர்த்துவன வாகும். வைகளை உணர மீண்டேயும் என்பது எதுகைநோக்கி வலித்தது. பிறவாமற் காத்தல் என்றது பிறப்பித்துப் பக்குவநிலையை அடையச் செய்த இறைவன் உயிரை மீண்டும் பிறத்தற்கு ஏதுவான இயல்பு அடையாதிருக்கும்படி பாதுகாத்தல் என்றவாறு. அதன் பயன் அழிவிலா இன்பநுகர்ச்சி. காத்தாட கொண் டான் என்பதனை ஆட்கொண்டு காத்தான் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. காட்டாதன காட்டுதலும் கேளாதன கேட்பித்தலும் வியப்புக் குரிய செயல்களாதலின் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே என்றார். இதன்கண் கேட்டாரும் அறியாதான் முதலிய இறையியல்புகளும் காட்டாதன காட்டுதல் முதலிய உயிரியல்பு பாசவியல்புகளும், சுட்டி யுணரப்படுவனவாகாமல் இறையருளினாற் றெளியத்தக்கன வாகலிற் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு 28. காண்க, 33, விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுத முறி யகநெவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்ணலியா காச மாகி பாரழலாய் அந்தமாய் அப்பா னின்ற செச்சைமா மஎர்புரையு மேனி யெங்கள் சிவபெருமா னெம்பெருமான் றேவர் கோவே, திருச்சதகம் 243 ப-ரை: அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி-தந்தையும் அவன் அவள் அது என்னும் உலகப்பொருட்டொகுதியும் ஞானப்பரவெளியும் ஆகியும், ஆர் அழலாய் -அப்பரவெளிக்கணுள்ள அரிய அழல்போன்ற சுடர்வடிவாகியும், அந்தம் ஆய்-முடிவிடன் ஆகியும், அப்பால் நின்ற - பிரகிருகிமாயைக்கு எப்பாலாகியும் நிலைபெற்ற, செச்சை மா மலர் புரையும் மேனி - வெட்சியின் சிறந்த மவரையொத்த செவ்விய திருமேனியையுடைய, எங்கள் சிவபெருமான் எங்கள் சிவபெருமானும், எம்பெருமான் - எங்கள் தலைவனும், தேவர்கோ-தேவர்களுக்குத் தலைவனுமாகிய இறைவன், மிகு காதல் அடியராதம் அடியன் ஆக்கி-மிக்க அன்பினையுடைய தன் அடியார்க்கு என்னை அடியவனாகச் செய்து, அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்-அதனால் பழைய மலவாதனை மீட்டும் தாக்குங்கொல்லோ என்னும் அச்சத்தினை நீக்கி ஆளாகக் கொண்டான்; அமுதம் ஊறி அகம் நெக-அமுதம்போன்ற இன்பம் ஊற்றெடுத்து உள்ளம் அன்பினால் நெகிறவும் அன்பு கூர- மெய்யன்பு மிகவும். புகுந்து ஆண்டாள்-எனது உள்ளத்தினுள்ளே புகுந்து ஆட்கொண்டருளினான்; கேட்கின் - இங்ஙனம் இறைவன் செய்த அருட் செயலைக் கேட்கப்புகுந்தால், இது ஒப்பது வீச்சை உண்டோ-எனக்குச் செய்த இதனை ஒத்ததாகிய வியத்தகுசெயல் வேறுஉண்டோ? இல்லை. தந்தையும் அவன் அவள் அது என்னும் உலகப்பொருட்டொகுதியும் ஞானப்பரவெளியும் ஆகியும், அப்பரவெளிக்கணுள்ள அழல் போன்ற சுடர்வடிவாகியும், அந்தத்தைச் செய்பவனாகியும் பிரகிருகி மாயைக்கு அப்பாலாகியும் நிலைபெற்ற, வெட்சியின் மலரை ஒத்த சிவந்த திருமேனியை யுடைய எங்கள் சிவபெருமானும் எங்கள் தலைவனும் தேவர்களுக்குத் தலைவனுமாகிய இறைவன் மிக்க அன்பினையுடைய தன் அடியாரிக்கு என்னை அடியவனாகச் செய்து அச்சம்தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் போன்ற இன்பம்' ஊற்றெடுத்து உள்ளம் நெகிறவும் மெய்யன்பு மிகவும் என் உள்ளத்தினுள்ளே புகுந்து ஆட்கொண்டருளினான். இங்ஙனம் இறை வன் செய்த அருட்செயலைக் கேட்கப்புகுந்தால் எனக்குச் செய்த இதனை ஒத்ததாகிய வியத்தகு செயல்வேறு உண்டோ? இல்லை. Cl விச்சை-வித்தைதான் - அசை. உண்டோ என்பதில் ஓகார எதிர் மறை. கேட்கின் என்றது இறைவன் ஆட்கொண்டருளும் அருட்செயலை ஆராயப்புகின் என்றவாறு. இருவினை யொப்பு மலபரிபாகமெய்திய அடிகளை இறைவன் ஆட்கொண்டு ஆணவமல ஆற்றலைக் கெடுத்தவிடத்தும் எத்த னையோ காலமாகப் பயின்று வந்த பயிற்சி வயத்தான் பெருங்காயம் வைத்த பாத்திரத்தில் அதனை எடுத்த விடத்தும் அதன் மணம் நிங்காமை போல வாசனாமலம் உயிரைக்காக்குமாதலின் அதனை நீக்கும்பி ாருட்டு அனபினையுடைய அடியவர்களுக்கு அடியவனாகச் செய்து ஆட் கொண்டமையின் மிகுகாத லடியார்த மடியனாக்கி யச்சந்தீர்த் தாட் கொண்டான் என்றார் பிகுகாதலடியார் -கணந்தோறும் மிகாநின்ற அன்பினையுடைய மெய்யடியார். அடியார்தம் அடியனாக்கியமை,
திருவாசக ஆராய்ச்சியுரை கிளை - தந்தை தாய் முதலிய சுற்றம் இறைவன் யாவர்க்கும் தந்தை தாய் முதலிய சுற்றமாவனே யன்றித் தனக்கு அஃகிலானாதலின் ' கிளை யிலான் என்றார் . 242 எந்தை யாய்எம்பிரான் மற்று மியாவர்க்குக் தந்தை தாய்தம் பிரான்றனக் கஃதிலான் சத 47 . என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . எல்லாமறிபவனாதலின் ' கேளாதே யெல்லாங் கேட்டான் ' என்றார் . இறைவன் நாட்டார்கள் விழித்திருப்பவென்றது நாட்டிலுள்ளார் தாம் கதி யடைதற்குத் தகுதியின்மையாற் பார்த்துக் கொண்டிருப்ப என்றவாறு . விழித்திருப்ப ஆட்கொண்டான் என இயையும் நாயினேற்கு இருக்கை அளித்தது இழிவுடைய நாய்க்கு உயர்ந்த ஆசனத்தை இட்டது போலு மென்பார் ' நாயினுக்குத் தவிசிட்டு ' என்றார் . காட்டாதன யென்பதும் கேளாதன கேட்பித்து என்பதும் கல்வி கேள்வி அறிவுகளால் காட்டி முழுவதும் அறிய முடியாத இறையியல்பு உயிரியல்பு பாசவியல்பு என்ப உணர்த்தி உபதேசஞ் செய்து அனுபவஞானத்தால் வைத்தமையை உணர்த்துவன வாகும் . வைகளை உணர மீண்டேயும் என்பது எதுகைநோக்கி வலித்தது . பிறவாமற் காத்தல் என்றது பிறப்பித்துப் பக்குவநிலையை அடையச் செய்த இறைவன் உயிரை மீண்டும் பிறத்தற்கு ஏதுவான இயல்பு அடையாதிருக்கும்படி பாதுகாத்தல் என்றவாறு . அதன் பயன் அழிவிலா இன்பநுகர்ச்சி . காத்தாட கொண் டான் என்பதனை ஆட்கொண்டு காத்தான் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க . காட்டாதன காட்டுதலும் கேளாதன கேட்பித்தலும் வியப்புக் குரிய செயல்களாதலின் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே என்றார் . இதன்கண் கேட்டாரும் அறியாதான் முதலிய இறையியல்புகளும் காட்டாதன காட்டுதல் முதலிய உயிரியல்பு பாசவியல்புகளும் சுட்டி யுணரப்படுவனவாகாமல் இறையருளினாற் றெளியத்தக்கன வாகலிற் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு 28 . காண்க 33 விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுத முறி யகநெவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்ணலியா காச மாகி பாரழலாய் அந்தமாய் அப்பா னின்ற செச்சைமா மஎர்புரையு மேனி யெங்கள் சிவபெருமா னெம்பெருமான் றேவர் கோவே திருச்சதகம் 243 - ரை : அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி - தந்தையும் அவன் அவள் அது என்னும் உலகப்பொருட்டொகுதியும் ஞானப்பரவெளியும் ஆகியும் ஆர் அழலாய் -அப்பரவெளிக்கணுள்ள அரிய அழல்போன்ற சுடர்வடிவாகியும் அந்தம் ஆய் - முடிவிடன் ஆகியும் அப்பால் நின்ற - பிரகிருகிமாயைக்கு எப்பாலாகியும் நிலைபெற்ற செச்சை மா மலர் புரையும் மேனி - வெட்சியின் சிறந்த மவரையொத்த செவ்விய திருமேனியையுடைய எங்கள் சிவபெருமான் எங்கள் சிவபெருமானும் எம்பெருமான் - எங்கள் தலைவனும் தேவர்கோ - தேவர்களுக்குத் தலைவனுமாகிய இறைவன் மிகு காதல் அடியராதம் அடியன் ஆக்கி - மிக்க அன்பினையுடைய தன் அடியார்க்கு என்னை அடியவனாகச் செய்து அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் - அதனால் பழைய மலவாதனை மீட்டும் தாக்குங்கொல்லோ என்னும் அச்சத்தினை நீக்கி ஆளாகக் கொண்டான் ; அமுதம் ஊறி அகம் நெக - அமுதம்போன்ற இன்பம் ஊற்றெடுத்து உள்ளம் அன்பினால் நெகிறவும் அன்பு கூர மெய்யன்பு மிகவும் . புகுந்து ஆண்டாள் - எனது உள்ளத்தினுள்ளே புகுந்து ஆட்கொண்டருளினான் ; கேட்கின் - இங்ஙனம் இறைவன் செய்த அருட் செயலைக் கேட்கப்புகுந்தால் இது ஒப்பது வீச்சை உண்டோ - எனக்குச் செய்த இதனை ஒத்ததாகிய வியத்தகுசெயல் வேறுஉண்டோ ? இல்லை . தந்தையும் அவன் அவள் அது என்னும் உலகப்பொருட்டொகுதியும் ஞானப்பரவெளியும் ஆகியும் அப்பரவெளிக்கணுள்ள அழல் போன்ற சுடர்வடிவாகியும் அந்தத்தைச் செய்பவனாகியும் பிரகிருகி மாயைக்கு அப்பாலாகியும் நிலைபெற்ற வெட்சியின் மலரை ஒத்த சிவந்த திருமேனியை யுடைய எங்கள் சிவபெருமானும் எங்கள் தலைவனும் தேவர்களுக்குத் தலைவனுமாகிய இறைவன் மிக்க அன்பினையுடைய தன் அடியாரிக்கு என்னை அடியவனாகச் செய்து அச்சம்தீர்த்து ஆட்கொண்டான் ; அமுதம் போன்ற இன்பம் ' ஊற்றெடுத்து உள்ளம் நெகிறவும் மெய்யன்பு மிகவும் என் உள்ளத்தினுள்ளே புகுந்து ஆட்கொண்டருளினான் . இங்ஙனம் இறை வன் செய்த அருட்செயலைக் கேட்கப்புகுந்தால் எனக்குச் செய்த இதனை ஒத்ததாகிய வியத்தகு செயல்வேறு உண்டோ ? இல்லை . Cl விச்சை - வித்தைதான் - அசை . உண்டோ என்பதில் ஓகார எதிர் மறை . கேட்கின் என்றது இறைவன் ஆட்கொண்டருளும் அருட்செயலை ஆராயப்புகின் என்றவாறு . இருவினை யொப்பு மலபரிபாகமெய்திய அடிகளை இறைவன் ஆட்கொண்டு ஆணவமல ஆற்றலைக் கெடுத்தவிடத்தும் எத்த னையோ காலமாகப் பயின்று வந்த பயிற்சி வயத்தான் பெருங்காயம் வைத்த பாத்திரத்தில் அதனை எடுத்த விடத்தும் அதன் மணம் நிங்காமை போல வாசனாமலம் உயிரைக்காக்குமாதலின் அதனை நீக்கும்பி ாருட்டு அனபினையுடைய அடியவர்களுக்கு அடியவனாகச் செய்து ஆட் கொண்டமையின் மிகுகாத லடியார்த மடியனாக்கி யச்சந்தீர்த் தாட் கொண்டான் என்றார் பிகுகாதலடியார் -கணந்தோறும் மிகாநின்ற அன்பினையுடைய மெய்யடியார் . அடியார்தம் அடியனாக்கியமை