திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மூதாதை = முது+ தாதை. தந்தைக்குத் தந்தை. பிரமன் முதலியோ ருக்குத் தந்தையாகிய சதாசிவனுக்குத் தந்தையாகவின் இறைவனை மூதாதை என்றார். மாதாளும் பாகந்தெந்தை என் றதனால் உமையம்மை யார் அக்கினியும் குடும்போலக் குணமாகாது இறைவனோடு ஒருங்கு நிற் பவர் என்பது கூறியவாறு. 248 மால் பிரமன் மற்றொழிந்த தேவர்கள் முதலிய எல்லாருக்கும் தலை வன் இறைவனாதலின் 'யாவர் கோன்' என்றார். யாவர்கோன் என்பதில் யாவர்க்கும் கோன் என்னும் நான்கணுருபும் முற்றும்மையும் தொக்கு கின்றன. என்னையும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு. வந்து ஆட் கொண்டான் என்றது அம்முழுமுதல் இறைவன் கைம்மாறு கருதாத பெருங்கருணையினால் தானே வலிய என்னை ஆட்கொண்டான் என்றவாறு. தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்" (திருவெம்.6) என அடிகள் அருளியவாறுங் காண்க. அவ்வாறு இறைவன் ஆட்கொண்டமையால் யாம் இனிப் பிறர் எவர்க்கும் அடிமையல்லோம்; எதற்கும் சிறிதும் அஞ்சோம் என்பார் 'நாமார்க்கும் குடியல்லோம் யாது மஞ்சோம்' என்றார். '"நாமார்க்குங் குடியல்லோம் நமனை மஞ்சோம்... கோமாற்கே நாமென்றும் மீளாவாளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே" (நாவு 312: 1) எனத் தேவாரத்து வருதலும் காண்க. ''அங்கவர்தந் திருவேடம் ஆலயங்கள் எல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப் பாடி எங்குமியாம் ஒருவர்க்கும் எளியோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித் திங்கள் முடி யாரடியார் அடியோ மென்று திரிந்திடுவர்" சூத்.12. எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ஈண்டறியற்பாலது. குடியென் றது ஈண்டு அடிமை என்னும் பொருட்டு தாமார்க்குங் குடியல்லாச் சங்கரன்' (காவு 312:1) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. யாதும் அஞ்சோம் என்பதில் யாதுக்கும் என்னும் நாள்கனுருபு தொக்கது. இனி அதுவே இரட்டுற மொழியால் சிறிதும் என்ற பொருளை யும் தந்தது. யாதும் என்னும் உபலட்சணத்தால் யாவர்க்கும் அஞ்சோம் என்பதும் கொள்க. யாதும் என அஃறியாற் கூறியது உயிர்களுப் பேரச் சத்தைத் தருகின்ற யமனுக்குக்' 'கூற்று' என்னும் அஃறிணைப் பெயரும் உளதாதல் பற்றியாகும் "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்" என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. *கூற்றெனப் பெயரிய கொடுந்தொழிலொருவ, னாற்றல் செற்ற வண்ணல், ii-ந் திரு. திருவாரூர் மும்மணிக் 13. திருச்சதகம் என்னை அடியார் அடியார்-இறைவன் அடியார்க்கு அடியார். "உன்னடியாரடி யாரடியோம்'"அடியா ரடியோம்" (திருப்படை 2, 8) என வருவன வுங் காண்க. அடியாரொடும் மேவினோம் எனக்கூட்டி இறைவன் ஆண்டு அடியாரிற் கூட்டினமையின் அடியாரொடு மேவினோம் என வுரைக்க. "அப்பனாண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" (அதிசய 1) "அடியா ரடிக்கூட்டிய அற்புதமறியேனே" (அற் 8) என அடிகள் அருளியமையுங் காண்க. பேரின்பம், வெள்ளம்போல இடையீ டின்றிப் பெருகுதலினாலும், அதனை நுகரும்தோறும் தெவிட்டப் பெறாமை யானும் "மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே" என்றார். இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர்" (திருப்பாண்டிப் 3) எனவும் ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது" (கோலை 307) எனவும் அடிகள் அருளியமையுங் கொள்க. ஆடுவோம்-பேரின்பத்தில் மூழ்கிய ஆகச் தத்தாற் கூத்தாடுவோம். 249 இதன்கண்; தேவதேவன், மூவர்கோன், மூர்த்தி, மூதாதை மாதாளும் பாகத்தெந்தை, யாவர் கோன் எனக் கூறப்பட்ட இறையியல்புகள் சுட்டி யறியப்படுவனவன்மையின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 80. 4. ஆத்தும சுத்தி ஆத்தும சுத்தி என்பது உயிரினது தூய்மையானநிலை. அது யான் எனது என்னும் அகப்பற்று புறப்பற்றுக்களின் நீக்கமும், அவற்றுக்கு ஏதுவாகிய கன்ம நீக்கமும் உளவாயவழி உண்டாவதாகும். கன்ம நீக்கத் திற்கு இடையறாத இறைபணி வேண்டுவதாகும். அதுவும் தூய்மையுடைய மனமொழி மெய்களாற் செய்யப்படுவதாகும். அறுசீர்க்கழிநெடி வடியாசிரிய விருத்தம். 35. ஆடுகின்றிலை கூத்துடை யான்சுழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையில் பிணதெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன்றறியேனே. சுன்நிலை தெருவுதோ றலறிலை செய்வன ப-ரை: துணை இலி பிண நெஞ்சே-எனக்குத் துணையாதல் இல்லை யான பிணம்போலப் பயனற்றுக் கிடக்கும் நெஞ்சமே, கூத்து உடையான் கழற்கு அன்பு இலை-திருக்கூத்தையுடைய சிவபெருமான் திருவடிக்கண் அன்பு செய்கின்றிலை; என்பு உருகி பாடுகின் றிலை - அன்பின்மையால் என்பு உருகப் பாடுகின்றாயுமில்லை. ஆடுகின் றிலை = பாடலின்மையால் அதற் ற்கேற்ப ஆனந்தக்கூத்து ஆடுகின்றாயுமில்லை. பதைப்பதும் செய்கிலை - இறை வன் திருவருளைப் பெறவேண்டுமென்று துடித்தலும் செய்கின்றாயில்லை; பணிகிலை - வணங்குகின்றாயும் இல்லை; பாத மலர் சூடுகின் றிலை - இறைவன் 32
திருவாசக ஆராய்ச்சியுரை மூதாதை = முது + தாதை . தந்தைக்குத் தந்தை . பிரமன் முதலியோ ருக்குத் தந்தையாகிய சதாசிவனுக்குத் தந்தையாகவின் இறைவனை மூதாதை என்றார் . மாதாளும் பாகந்தெந்தை என் றதனால் உமையம்மை யார் அக்கினியும் குடும்போலக் குணமாகாது இறைவனோடு ஒருங்கு நிற் பவர் என்பது கூறியவாறு . 248 மால் பிரமன் மற்றொழிந்த தேவர்கள் முதலிய எல்லாருக்கும் தலை வன் இறைவனாதலின் ' யாவர் கோன் ' என்றார் . யாவர்கோன் என்பதில் யாவர்க்கும் கோன் என்னும் நான்கணுருபும் முற்றும்மையும் தொக்கு கின்றன . என்னையும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு . வந்து ஆட் கொண்டான் என்றது அம்முழுமுதல் இறைவன் கைம்மாறு கருதாத பெருங்கருணையினால் தானே வலிய என்னை ஆட்கொண்டான் என்றவாறு . தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல் ( திருவெம் .6 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . அவ்வாறு இறைவன் ஆட்கொண்டமையால் யாம் இனிப் பிறர் எவர்க்கும் அடிமையல்லோம் ; எதற்கும் சிறிதும் அஞ்சோம் என்பார் ' நாமார்க்கும் குடியல்லோம் யாது மஞ்சோம் ' என்றார் . ' நாமார்க்குங் குடியல்லோம் நமனை மஞ்சோம் ... கோமாற்கே நாமென்றும் மீளாவாளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே ( நாவு 312 : 1 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . ' ' அங்கவர்தந் திருவேடம் ஆலயங்கள் எல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப் பாடி எங்குமியாம் ஒருவர்க்கும் எளியோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித் திங்கள் முடி யாரடியார் அடியோ மென்று திரிந்திடுவர் சூத் .12 . எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ஈண்டறியற்பாலது . குடியென் றது ஈண்டு அடிமை என்னும் பொருட்டு தாமார்க்குங் குடியல்லாச் சங்கரன் ' ( காவு 312 : 1 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . யாதும் அஞ்சோம் என்பதில் யாதுக்கும் என்னும் நாள்கனுருபு தொக்கது . இனி அதுவே இரட்டுற மொழியால் சிறிதும் என்ற பொருளை யும் தந்தது . யாதும் என்னும் உபலட்சணத்தால் யாவர்க்கும் அஞ்சோம் என்பதும் கொள்க . யாதும் என அஃறியாற் கூறியது உயிர்களுப் பேரச் சத்தைத் தருகின்ற யமனுக்குக் ' ' கூற்று ' என்னும் அஃறிணைப் பெயரும் உளதாதல் பற்றியாகும் நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . * கூற்றெனப் பெயரிய கொடுந்தொழிலொருவ னாற்றல் செற்ற வண்ணல் ii- ந் திரு . திருவாரூர் மும்மணிக் 13 . திருச்சதகம் என்னை அடியார் அடியார் - இறைவன் அடியார்க்கு அடியார் . உன்னடியாரடி யாரடியோம் ' அடியா ரடியோம் ( திருப்படை 2 8 ) என வருவன வுங் காண்க . அடியாரொடும் மேவினோம் எனக்கூட்டி இறைவன் ஆண்டு அடியாரிற் கூட்டினமையின் அடியாரொடு மேவினோம் என வுரைக்க . அப்பனாண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே ( அதிசய 1 ) அடியா ரடிக்கூட்டிய அற்புதமறியேனே ( அற் 8 ) என அடிகள் அருளியமையுங் காண்க . பேரின்பம் வெள்ளம்போல இடையீ டின்றிப் பெருகுதலினாலும் அதனை நுகரும்தோறும் தெவிட்டப் பெறாமை யானும் மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே என்றார் . இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் ( திருப்பாண்டிப் 3 ) எனவும் ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது ( கோலை 307 ) எனவும் அடிகள் அருளியமையுங் கொள்க . ஆடுவோம் - பேரின்பத்தில் மூழ்கிய ஆகச் தத்தாற் கூத்தாடுவோம் . 249 இதன்கண் ; தேவதேவன் மூவர்கோன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை யாவர் கோன் எனக் கூறப்பட்ட இறையியல்புகள் சுட்டி யறியப்படுவனவன்மையின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 80 . 4. ஆத்தும சுத்தி ஆத்தும சுத்தி என்பது உயிரினது தூய்மையானநிலை . அது யான் எனது என்னும் அகப்பற்று புறப்பற்றுக்களின் நீக்கமும் அவற்றுக்கு ஏதுவாகிய கன்ம நீக்கமும் உளவாயவழி உண்டாவதாகும் . கன்ம நீக்கத் திற்கு இடையறாத இறைபணி வேண்டுவதாகும் . அதுவும் தூய்மையுடைய மனமொழி மெய்களாற் செய்யப்படுவதாகும் . அறுசீர்க்கழிநெடி வடியாசிரிய விருத்தம் . 35. ஆடுகின்றிலை கூத்துடை யான்சுழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையில் பிணதெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன்றறியேனே . சுன்நிலை தெருவுதோ றலறிலை செய்வன - ரை : துணை இலி பிண நெஞ்சே - எனக்குத் துணையாதல் இல்லை யான பிணம்போலப் பயனற்றுக் கிடக்கும் நெஞ்சமே கூத்து உடையான் கழற்கு அன்பு இலை - திருக்கூத்தையுடைய சிவபெருமான் திருவடிக்கண் அன்பு செய்கின்றிலை ; என்பு உருகி பாடுகின் றிலை - அன்பின்மையால் என்பு உருகப் பாடுகின்றாயுமில்லை . ஆடுகின் றிலை = பாடலின்மையால் அதற் ற்கேற்ப ஆனந்தக்கூத்து ஆடுகின்றாயுமில்லை . பதைப்பதும் செய்கிலை - இறை வன் திருவருளைப் பெறவேண்டுமென்று துடித்தலும் செய்கின்றாயில்லை ; பணிகிலை - வணங்குகின்றாயும் இல்லை ; பாத மலர் சூடுகின் றிலை - இறைவன் 32