திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

252 திருவாசக ஆராய்ச்சியுரை பிணநெஞ்சே, அறிவில்லாத என்னை வலியவந்து அடிமைகொண்டு தன்னை அறிதற்குக் கருவியாகிய உண்மை அறிவினைத் தந்தருளி வீட்டு நெறிகள் எல்லாவற்றையும் புலப்படுத்திய எந்தையும் பந்தனை அறுப் பானுமாகிய இறைவனை எஞ்ஞான்றும் பிரியாமைக்கேதுவாகிய இன்னருள் பெற்றிருந்தும் தடுமாறுகின்றாய்; அத்தடுமாற்றத்தினால் பொய்ந்நெறிக ளெல்லாம் மேற்பட என்னைக் கீழ்ப்படுத்தி விட்டாய்; அங்ஙனம் கீழ்ப் படுத்தமையால் என்னைக் கெடுமாறு பினை என்னென்பேன் என்பதாம். கெடுத்து விட்டாய்; உன் இயல் அறிவு - இறைவனை அறியும் உண்மை அறிவு. புகுந்தாண்டு கொண்டு என்றது இறைவன் தானே.வந்து ஆனாகக் கொண்டு என்றவாறு. "தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்'' திருவெம் 6 பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே "கோயின் மூத் 8. "எனைத்தான் புகுந்தாண்டான் " உயிருண்ணி 4, "பொருளா வென்னைப் புகுந்தாண்டு" திருக்கோவை 73. எனப் பிறாண்டும் அடிகள் அருளியமை காண்க. அறிவதை என்பதில் அது இறைவனை அறியும் உண்மை அறிவை (ஞானத்தைச்) சுட்டியது. மேல்நெறி என்றது வீட்டுநெறியை. புலமரக் கல் - அறியச்செய்தல். பந்தனை அருப்பானை - சிவநெறிக்கட் சேறற்குத் தடையாகவுள்ள பாசப்பிணிப்பை ஒழிப்பவனை. " பந்தமறுத் தென்னை யாண்டுகொண்ட பாண்டிப்பிரான் " பூவல் 2. *"பந்த மறுக்கும் ஆனந்த மாக்கடலே '' கோயிற்9. "அடியார் பந்தளை விண்ட றநல்கும் எங்கள் பரமன் '' "பந்தமறுத் தாண்டு... அருளி வாறு '' அச்சோ 6. வார்த் 5. என அடிகள் அருளியவாறுங் காண்க. எந்தையை, அறுப்பானை னும் இரண்டாம் வேற்றுமைகள் 'பிறிவு' என்னும் தொழிற்பெயரைக் கொண்டு முடிந்தன. பிறிவு-பிரிவு. "பிறியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனை குலாப் 1. பிறிவிலாத அருள் - தன்னை பிரியாமைக்கு ஏதுவாகிய அருள். இலாத என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு. என்றும் இன்னருள் - இனிய அருள். "மண்ணுழை யாவுமறிதில்லை மன்னன தீன் னருள் போல் '" திருக்கோவை 348. இன்னருள் பெற்றிருந்தும் என்ப தில் உம்மை, தடுமாறாதிருப்பதற்குரிய அருள்கள் பெற்றிருந்தும் பயற்சி வயத்தால் தடுமாறுகின்றாய் என உயர்வு சிறப்பு. மாறாடுதல் - தடுமாறு தல். கிறி-பொய். வஞ்சனையுமாம். "கிறியும் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்' அற்புதப் 10. மாறாடுதலினால் பொய்ந்நெறிகளெல்லாம் என் திருச்சதகம் 253 மேலோங்குதலின் 'கிறியெலாமிக' என்றார். அங்ஙனம் மிகுதலால் யான் கீழ்படுதலின் கீழ்ப்படுத்தாய்' என்றார். கெடுமாறு கெடுத்தாய் எனக் கூட்டுக. மேலைத் திருப்பாட்டில் (சத 31) நெஞ்சு தூய்மையடைவதற்கு உதவி யான பாடல் ஆடல் முதலிய செயல்கள் அற்றுக் கிடந்தமையைக் கூறி, இத்திருப்பாட்டால் உதவி செய்யாமையோடு மாறாடிக் கீழ்ப்படுத்தி என்னை ஒருவாற்றானும் உய்திகூடாதபடி கெடுத்து விட்டாய் எனப் பய னற்றுக்கிடக்கும் மனம் என்னைப் பயனற்றுப் போகும் வண்ணம் செய்தத னைச் கூறியருளினார். இதன்கண், பிறிவிலாத இன்னருள் பெற்றிருந்தும் கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்துக் கெடுத்த தம் மனத்தினைக் கடிந்து கூறும் வாயிலாக அத னைத் தூய்மைசெய்து தரல் வேண்டுமென வேண்டிக் கோடல் புலப்படு தலின் ஆத்துமசுத்தி என்னும் நான்கரம்பத்து நுதவிய பொருள் போதரு தல் காண்க. 3.2. 37. மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையெம்மதியிலி மடநெஞ்சே தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன்திரடோண்மேல் நீறு நின்றது கண்டளை யாயினும் நெக்கிலை யிக்காயம் கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே. பாரை: எம் மதி இலி மட நெஞ்சே -யாம் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுதலில்லாத அறியாமையுடைய மனமே, எனை மாறி நின்று - என்னை மாறுபட்டு நின்று, கெட கிடந்தனையை-யான் கெடுமாறு என்பாற் கிடந்தாற்போலுவை. இனி உனை சிக்கென தேறுகின்றிலம் - உன் னை உறுதியாகத் தெளியமாட்டோம். சிவன் அவன் திரள் தோள் மேல் - சிவ பெருமானாகிய அவ்விறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளிய பொழுது அவனது திரண்ட தோள்களின்மீது, நிறு நின்றது. கண்டனை ஆயினும்- திருவெண்ணீறு நிலைபெற்று விளங்குதலைக் காட்சியளவையாற் கண்டாயா யினும், நெக்கிலை -அவனை நினைந்து அன்பினால் உருகுகின்றாயில்லை; உன் பரிசு கெடுவது.இவற்றால் உன் தன்மை கெட்டுப்போவதாகும். இது கேட்க வும் இல்லேன்- நான் இதனைக் கேட்கவும் ஆற்றலில்லேன். எம்மதியிலி மடநெஞ்சே, என்னை மாறுபட்டு நின்று யான்கெடுமாறு என்பாற் கிடந்தாற் போலுவை: ஆதலால் உன்னை உறுதியாகத் தெளிய மாட்டோம். சிவபெருமானாகிய அவ்விறைவனுடைய திரண்ட தோளின் மீது திருவெண்ணிறு நிலைபெற்று விளங்குகலைக் கண்டளையாயினும் அவனை தினைந்து அன்பினால் உருகுகின்றாயில்லை; இவ்வுடம்பைக் கீறுகின்றாயில்வை; இவற்றால் உன்தன்மை கெட்டுப்போவதாகும். இதனைக் கேட்கவும் ஆற்ற லில்லேன் என்பதாம்.
252 திருவாசக ஆராய்ச்சியுரை பிணநெஞ்சே அறிவில்லாத என்னை வலியவந்து அடிமைகொண்டு தன்னை அறிதற்குக் கருவியாகிய உண்மை அறிவினைத் தந்தருளி வீட்டு நெறிகள் எல்லாவற்றையும் புலப்படுத்திய எந்தையும் பந்தனை அறுப் பானுமாகிய இறைவனை எஞ்ஞான்றும் பிரியாமைக்கேதுவாகிய இன்னருள் பெற்றிருந்தும் தடுமாறுகின்றாய் ; அத்தடுமாற்றத்தினால் பொய்ந்நெறிக ளெல்லாம் மேற்பட என்னைக் கீழ்ப்படுத்தி விட்டாய் ; அங்ஙனம் கீழ்ப் படுத்தமையால் என்னைக் கெடுமாறு பினை என்னென்பேன் என்பதாம் . கெடுத்து விட்டாய் ; உன் இயல் அறிவு - இறைவனை அறியும் உண்மை அறிவு . புகுந்தாண்டு கொண்டு என்றது இறைவன் தானே.வந்து ஆனாகக் கொண்டு என்றவாறு . தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல் ' ' திருவெம் 6 பொருளா வென்னைப் புகுந்தாண்ட பொன்னே கோயின் மூத் 8 . எனைத்தான் புகுந்தாண்டான் உயிருண்ணி 4 பொருளா வென்னைப் புகுந்தாண்டு திருக்கோவை 73 . எனப் பிறாண்டும் அடிகள் அருளியமை காண்க . அறிவதை என்பதில் அது இறைவனை அறியும் உண்மை அறிவை ( ஞானத்தைச் ) சுட்டியது . மேல்நெறி என்றது வீட்டுநெறியை . புலமரக் கல் - அறியச்செய்தல் . பந்தனை அருப்பானை - சிவநெறிக்கட் சேறற்குத் தடையாகவுள்ள பாசப்பிணிப்பை ஒழிப்பவனை . பந்தமறுத் தென்னை யாண்டுகொண்ட பாண்டிப்பிரான் பூவல் 2 . * பந்த மறுக்கும் ஆனந்த மாக்கடலே ' ' கோயிற் 9 . அடியார் பந்தளை விண்ட றநல்கும் எங்கள் பரமன் ' ' பந்தமறுத் தாண்டு ... அருளி வாறு ' ' அச்சோ 6 . வார்த் 5 . என அடிகள் அருளியவாறுங் காண்க . எந்தையை அறுப்பானை னும் இரண்டாம் வேற்றுமைகள் ' பிறிவு ' என்னும் தொழிற்பெயரைக் கொண்டு முடிந்தன . பிறிவு - பிரிவு . பிறியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனை குலாப் 1. பிறிவிலாத அருள் - தன்னை பிரியாமைக்கு ஏதுவாகிய அருள் . இலாத என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு . என்றும் இன்னருள் - இனிய அருள் . மண்ணுழை யாவுமறிதில்லை மன்னன தீன் னருள் போல் ' திருக்கோவை 348. இன்னருள் பெற்றிருந்தும் என்ப தில் உம்மை தடுமாறாதிருப்பதற்குரிய அருள்கள் பெற்றிருந்தும் பயற்சி வயத்தால் தடுமாறுகின்றாய் என உயர்வு சிறப்பு . மாறாடுதல் - தடுமாறு தல் . கிறி - பொய் . வஞ்சனையுமாம் . கிறியும் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் ' அற்புதப் 10. மாறாடுதலினால் பொய்ந்நெறிகளெல்லாம் என் திருச்சதகம் 253 மேலோங்குதலின் ' கிறியெலாமிக ' என்றார் . அங்ஙனம் மிகுதலால் யான் கீழ்படுதலின் கீழ்ப்படுத்தாய் ' என்றார் . கெடுமாறு கெடுத்தாய் எனக் கூட்டுக . மேலைத் திருப்பாட்டில் ( சத 31 ) நெஞ்சு தூய்மையடைவதற்கு உதவி யான பாடல் ஆடல் முதலிய செயல்கள் அற்றுக் கிடந்தமையைக் கூறி இத்திருப்பாட்டால் உதவி செய்யாமையோடு மாறாடிக் கீழ்ப்படுத்தி என்னை ஒருவாற்றானும் உய்திகூடாதபடி கெடுத்து விட்டாய் எனப் பய னற்றுக்கிடக்கும் மனம் என்னைப் பயனற்றுப் போகும் வண்ணம் செய்தத னைச் கூறியருளினார் . இதன்கண் பிறிவிலாத இன்னருள் பெற்றிருந்தும் கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்துக் கெடுத்த தம் மனத்தினைக் கடிந்து கூறும் வாயிலாக அத னைத் தூய்மைசெய்து தரல் வேண்டுமென வேண்டிக் கோடல் புலப்படு தலின் ஆத்துமசுத்தி என்னும் நான்கரம்பத்து நுதவிய பொருள் போதரு தல் காண்க . 3.2 . 37. மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையெம்மதியிலி மடநெஞ்சே தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன்திரடோண்மேல் நீறு நின்றது கண்டளை யாயினும் நெக்கிலை யிக்காயம் கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே . பாரை : எம் மதி இலி மட நெஞ்சே -யாம் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுதலில்லாத அறியாமையுடைய மனமே எனை மாறி நின்று - என்னை மாறுபட்டு நின்று கெட கிடந்தனையை - யான் கெடுமாறு என்பாற் கிடந்தாற்போலுவை . இனி உனை சிக்கென தேறுகின்றிலம் - உன் னை உறுதியாகத் தெளியமாட்டோம் . சிவன் அவன் திரள் தோள் மேல் - சிவ பெருமானாகிய அவ்விறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளிய பொழுது அவனது திரண்ட தோள்களின்மீது நிறு நின்றது . கண்டனை ஆயினும் திருவெண்ணீறு நிலைபெற்று விளங்குதலைக் காட்சியளவையாற் கண்டாயா யினும் நெக்கிலை -அவனை நினைந்து அன்பினால் உருகுகின்றாயில்லை ; உன் பரிசு கெடுவது.இவற்றால் உன் தன்மை கெட்டுப்போவதாகும் . இது கேட்க வும் இல்லேன்- நான் இதனைக் கேட்கவும் ஆற்றலில்லேன் . எம்மதியிலி மடநெஞ்சே என்னை மாறுபட்டு நின்று யான்கெடுமாறு என்பாற் கிடந்தாற் போலுவை : ஆதலால் உன்னை உறுதியாகத் தெளிய மாட்டோம் . சிவபெருமானாகிய அவ்விறைவனுடைய திரண்ட தோளின் மீது திருவெண்ணிறு நிலைபெற்று விளங்குகலைக் கண்டளையாயினும் அவனை தினைந்து அன்பினால் உருகுகின்றாயில்லை ; இவ்வுடம்பைக் கீறுகின்றாயில்வை ; இவற்றால் உன்தன்மை கெட்டுப்போவதாகும் . இதனைக் கேட்கவும் ஆற்ற லில்லேன் என்பதாம் .