திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

254 திருவாசக ஆராய்ச்சியுரை மாறிநிற்றல் உயிர்க்கு உதவியாய் இறைவழிபாட்டில் நில்லாது பயிற்சி வயத்தான் உலகியல்வழி நிற்றல். கிடந்தாலனையை என்பது கிடந்தனையை என விகாரப்பட்டது. எம்மதி - உயிராகிய எம்மை அறியும் அறிவு எனினு மாம். தாம் கூறும் அறிவுரையை ஏற்று அதன்படி ஒழுகாமைபற்றி * எம்மதியிலி மடநெஞ்சே ' என்றார். மடம் - அறியாமை. ''வருந்தினை யளியவென் மடங்கெழு நெஞ்சே " (கலி 123:19) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. என்னை ஆதாரமாகக் கொண்டு கிடக்கும் நீ எனக்கு உறுதுணையா காது என்கேட்டிற்கு உறுதுணையாகின் குயாதலால் இனிமேல் உன்னை உறிதியாகத் தெளிய மாட்டோம் என்பார் தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கென' என்றார். தேறுதல் - தெளிதல், "தேறினும் தேறாவிடினும்'' குறள் 870, சிக்கென - உறுதியாக. "தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே'' (பாண்டிப் 10) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சிவனவன் என்பதில் அவன் என்னும் பண்டறிசுட்டு இறைவனது இறைமைக் குணங்களைச் சுட்டியது. திரள்தோள் - திரண்டதோள். "மல்ல யங்கு திரன்தோள்கள் " (ஞான 211:4)"செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னை (நாவு 298:2) எனத் தேவாரத்து வருவனவும் காண்க. திரள்தோள்மேல் நீறு நின்றது "சின்பவளத் திரண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின்றாளால்'' (நாவு 6: 1) எனத் தேவா ரத்தும், "தோட்கொண்ட நீற்றன்" (அம்மானை 3.) * தோளுவா நீற்றன் " (அச்சப் 6) என இத்திருவாசகத்தும், "அவன் தோள் பூசு அத்திருநீ றென" ''தவளத்த நிறணியும் தடந்தோளண்ணல் (109,112) எனத் திருக்கோவையாரினும் வருவனவற்றாலும் அறிக. திரள்தோள் என்ற உபலட்சணத்தால் திருமேனி முழுவதும் கொள்ளப்படும். " நீறு பயில் கின்ற மெய்யுடையான் (ஞான 103:5) எனவும் மெய்யெல்லாம் வெண் ணீறு சண்ணித்தமேனி" (நாவு 5: 1) எனவும் தேவாரத்து வருவன காண்க இறைவன் திருமேனியிலுள்ள திருவெண்ணீற்றின் குறிப்பு உல கம் முழுவதும் பேரூழிக்காலத்து வெந்து சாம்பராகி அங்ஙனம் செய்த இறைவனிடத்திலேயே தங்கியிருப்பதை உணர்த்துவதாகும். நீற்றினை எடுத்துக் கூறினாராயினும் உபலக்கணத்தாற் கண்டிகையுங் கொள்க. " கண்டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்... உடையார் ** 'கண்டிகை பூண்டு கடிசூத்திரமேற் கபாலவடம்... வைத்திட்ட " (நாவு 2:3, 112:9) எனத் தேவாரத்து வருவனவும் காண்க, கண்டனையாயினும் என்பதில் உம்மை, நூல்வாயிலாகக் கேட்டதேயன்றிக் காட்சியளவையாற் கண்டும் என இறந்ததுதழீ இயவெச்சவும்மை. கண்டணையாயினும் நெக்கிலையென் றது முழுமுதல் இறைவனைக் கண்டிருந்தும் அன்பினால் உருகுகின் றாயில்லை மென்றவாறு. திருச்சதகம் இக்காயம் கீறுகின்றாயில்லைன்றது இவ்வுடம்பினாற் பெறவேண்டிய வீடுபேற்றினைப் பெறுதற்குரிய நிலைமையைப் பெற்றிருந்தும் இவ்வுடம் போடு கூடிவாழும் வாழ்க்கையை விரும்புகின்றாய் என்பதை உணர்த்தி யது. கேட்கவும் கில்லேன் என்றது நெஞ்சே நின்தீய இயல்புகளைச் செவிவாயிலாகக் கேட்டுப் பொறுக்குமா ற்றலில்லாத யான் கண்டு எங்ங னம் ஆற்றுவேன் என்னும் பொருள்பட நின்றது. கில்-ஆற்றறுணர்த்தும் இடைச்சொல் முன்போல் வேட்டையினின் முயலகில்லேன் " (பெரிய புரா.கண்ணப் 45) என்புழிப்பேர்ல 255 கெடக்கிடா இதன்கண். மடநெஞ்சே என்னை மாறிநின்று யான் தாலனைய தன்மையையுடையை : அதனால் உன்னைச் சிக்கெனத் தேறு கின்றிலம்; நெக்கிலை; இக்காயம் கீறுகின்றிலை,இதனைக் கேட்கவும் கில் லேன் எனத் தனது உயிரின் தூய்மைக்கு உதவியாய் நிற்க வேண்டியமனம் அவ்வழி நில்லாமையைக் கூறுமுகத்தால் அம்மனத்தினை எனக்கு உதவு மாறு அருள்செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டமை புலப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 38. கிற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாவிளத் தளிர்பிரித் திருந்துநீ உண்டன வெல்லாமுன் அற்ற வாறுநின் னறிவுநின் பெருமையும் அலுவறுக் - 33. கில்லேனே. ப-ரை: அடி நாயேனை எவாம். மனமே- நெஞ்சமே, உடையான் - உலகத்தை உடைமையாக விற்று வும் அடிமையாகவும் உடையவனும், மிக ஆள்வதற்குரியவன் அடிமையாகிய நாய் போன்ற இழிவை யுடைய எளியேனை விலைப்படுத்தியாயினும் எனக்கு எல்லா நலங்களும் மிகுமாறு ஆண்டுகொள்வதற்கு உரிமையுடையவனுமாகிய இறைவனுடைய, விரை மலர் திரு பாத முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து - நறு மணம் பொருந்திய தாமரைமலர் போன்ற திருவடிகளாகிய எக்காலத்தும் முற்றுதலில்லாத இளந்தளிர்களை நீங்கியிருந்து, முன் நீ உண்டன எல்லாம் அற்ற ஆறும் - முன்னர் நீ நுகர்ந்திருந்த இன்பங்கள் எல்லாம் நீங்கிய தன்மையையும், நின் அறிவும் நின் பெருமையும் -அதனை அறியாத நின் அறிவையும், நின் இழிவின் மிகுதியையும், அளவு அறுக்கில்லேன்-அள விட்டு வரையறுக்கும் ஆற்றலுடையேனல்லேன்; ஆதலால், கிற்றவா கெடுவாய் - நீ செய்தவாற்றான் கெடுவாய்; அதனை நீ அறிந்திலை. 11:05 O மனமே, உடையானும் நலன்களும் அடிநாயேனை விற்று எல்லா மிகுமாறு ஆண்டு கொள்வதற்குரிமையுடையவனுமாகிய இறைவனுடைய விரைமலர்த் திருப்பாதமாகிய முற்றுதலில்லாத இளந்தளிர்களைப் பிரிங் திருந்து அதனால் முன்னர் நீ நுகர்ந்தவையெல்லாம் அற்றவாற்றையும்
254 திருவாசக ஆராய்ச்சியுரை மாறிநிற்றல் உயிர்க்கு உதவியாய் இறைவழிபாட்டில் நில்லாது பயிற்சி வயத்தான் உலகியல்வழி நிற்றல் . கிடந்தாலனையை என்பது கிடந்தனையை என விகாரப்பட்டது . எம்மதி - உயிராகிய எம்மை அறியும் அறிவு எனினு மாம் . தாம் கூறும் அறிவுரையை ஏற்று அதன்படி ஒழுகாமைபற்றி * எம்மதியிலி மடநெஞ்சே ' என்றார் . மடம் - அறியாமை . ' ' வருந்தினை யளியவென் மடங்கெழு நெஞ்சே ( கலி 123 : 19 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . என்னை ஆதாரமாகக் கொண்டு கிடக்கும் நீ எனக்கு உறுதுணையா காது என்கேட்டிற்கு உறுதுணையாகின் குயாதலால் இனிமேல் உன்னை உறிதியாகத் தெளிய மாட்டோம் என்பார் தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கென ' என்றார் . தேறுதல் - தெளிதல் தேறினும் தேறாவிடினும் ' ' குறள் 870 சிக்கென - உறுதியாக . தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே ' ' ( பாண்டிப் 10 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சிவனவன் என்பதில் அவன் என்னும் பண்டறிசுட்டு இறைவனது இறைமைக் குணங்களைச் சுட்டியது . திரள்தோள் - திரண்டதோள் . மல்ல யங்கு திரன்தோள்கள் ( ஞான 211 : 4 ) செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னை ( நாவு 298 : 2 ) எனத் தேவாரத்து வருவனவும் காண்க . திரள்தோள்மேல் நீறு நின்றது சின்பவளத் திரண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின்றாளால் ' ' ( நாவு 6 : 1 ) எனத் தேவா ரத்தும் தோட்கொண்ட நீற்றன் ( அம்மானை 3. ) * தோளுவா நீற்றன் ( அச்சப் 6 ) என இத்திருவாசகத்தும் அவன் தோள் பூசு அத்திருநீ றென ' ' தவளத்த நிறணியும் தடந்தோளண்ணல் ( 109 ) எனத் திருக்கோவையாரினும் வருவனவற்றாலும் அறிக . திரள்தோள் என்ற உபலட்சணத்தால் திருமேனி முழுவதும் கொள்ளப்படும் . நீறு பயில் கின்ற மெய்யுடையான் ( ஞான 103 : 5 ) எனவும் மெய்யெல்லாம் வெண் ணீறு சண்ணித்தமேனி ( நாவு 5 : 1 ) எனவும் தேவாரத்து வருவன காண்க இறைவன் திருமேனியிலுள்ள திருவெண்ணீற்றின் குறிப்பு உல கம் முழுவதும் பேரூழிக்காலத்து வெந்து சாம்பராகி அங்ஙனம் செய்த இறைவனிடத்திலேயே தங்கியிருப்பதை உணர்த்துவதாகும் . நீற்றினை எடுத்துக் கூறினாராயினும் உபலக்கணத்தாற் கண்டிகையுங் கொள்க . கண்டிகையு முளைத்தெழு மூவிலை வேலும் ... உடையார் ** ' கண்டிகை பூண்டு கடிசூத்திரமேற் கபாலவடம் ... வைத்திட்ட ( நாவு 2 : 3 112 : 9 ) எனத் தேவாரத்து வருவனவும் காண்க கண்டனையாயினும் என்பதில் உம்மை நூல்வாயிலாகக் கேட்டதேயன்றிக் காட்சியளவையாற் கண்டும் என இறந்ததுதழீ இயவெச்சவும்மை . கண்டணையாயினும் நெக்கிலையென் றது முழுமுதல் இறைவனைக் கண்டிருந்தும் அன்பினால் உருகுகின் றாயில்லை மென்றவாறு . திருச்சதகம் இக்காயம் கீறுகின்றாயில்லைன்றது இவ்வுடம்பினாற் பெறவேண்டிய வீடுபேற்றினைப் பெறுதற்குரிய நிலைமையைப் பெற்றிருந்தும் இவ்வுடம் போடு கூடிவாழும் வாழ்க்கையை விரும்புகின்றாய் என்பதை உணர்த்தி யது . கேட்கவும் கில்லேன் என்றது நெஞ்சே நின்தீய இயல்புகளைச் செவிவாயிலாகக் கேட்டுப் பொறுக்குமா ற்றலில்லாத யான் கண்டு எங்ங னம் ஆற்றுவேன் என்னும் பொருள்பட நின்றது . கில் - ஆற்றறுணர்த்தும் இடைச்சொல் முன்போல் வேட்டையினின் முயலகில்லேன் ( பெரிய புரா.கண்ணப் 45 ) என்புழிப்பேர்ல 255 கெடக்கிடா இதன்கண் . மடநெஞ்சே என்னை மாறிநின்று யான் தாலனைய தன்மையையுடையை : அதனால் உன்னைச் சிக்கெனத் தேறு கின்றிலம் ; நெக்கிலை ; இக்காயம் கீறுகின்றிலை இதனைக் கேட்கவும் கில் லேன் எனத் தனது உயிரின் தூய்மைக்கு உதவியாய் நிற்க வேண்டியமனம் அவ்வழி நில்லாமையைக் கூறுமுகத்தால் அம்மனத்தினை எனக்கு உதவு மாறு அருள்செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டமை புலப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 38. கிற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாவிளத் தளிர்பிரித் திருந்துநீ உண்டன வெல்லாமுன் அற்ற வாறுநின் னறிவுநின் பெருமையும் அலுவறுக் - 33 . கில்லேனே . - ரை : அடி நாயேனை எவாம் . மனமே- நெஞ்சமே உடையான் - உலகத்தை உடைமையாக விற்று வும் அடிமையாகவும் உடையவனும் மிக ஆள்வதற்குரியவன் அடிமையாகிய நாய் போன்ற இழிவை யுடைய எளியேனை விலைப்படுத்தியாயினும் எனக்கு எல்லா நலங்களும் மிகுமாறு ஆண்டுகொள்வதற்கு உரிமையுடையவனுமாகிய இறைவனுடைய விரை மலர் திரு பாத முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து - நறு மணம் பொருந்திய தாமரைமலர் போன்ற திருவடிகளாகிய எக்காலத்தும் முற்றுதலில்லாத இளந்தளிர்களை நீங்கியிருந்து முன் நீ உண்டன எல்லாம் அற்ற ஆறும் - முன்னர் நீ நுகர்ந்திருந்த இன்பங்கள் எல்லாம் நீங்கிய தன்மையையும் நின் அறிவும் நின் பெருமையும் -அதனை அறியாத நின் அறிவையும் நின் இழிவின் மிகுதியையும் அளவு அறுக்கில்லேன் - அள விட்டு வரையறுக்கும் ஆற்றலுடையேனல்லேன் ; ஆதலால் கிற்றவா கெடுவாய் - நீ செய்தவாற்றான் கெடுவாய் ; அதனை நீ அறிந்திலை . 11:05 O மனமே உடையானும் நலன்களும் அடிநாயேனை விற்று எல்லா மிகுமாறு ஆண்டு கொள்வதற்குரிமையுடையவனுமாகிய இறைவனுடைய விரைமலர்த் திருப்பாதமாகிய முற்றுதலில்லாத இளந்தளிர்களைப் பிரிங் திருந்து அதனால் முன்னர் நீ நுகர்ந்தவையெல்லாம் அற்றவாற்றையும்