திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

256 திருவாசக ஆராய்ச்சியுரை அதனை அறியாத நின் அறிவையும், நின் இழிவின் மிகுதியையும் அள விட்டு வரையறுக்கும் ஆற்றலுடையேனல்லேன்: ஆதலால் நீ செய்த வாற்றான் கெடுவாய்; அதனை நீ அறிந்திலை என்பதாம். Di ஈறுகெட்டு கிற்றல் - செய்தல். கிற்றவாறு என்பது கிற்றவா என நின்றது. மனம் கிற்றவாறு என்னையெனின், இறைவன் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து அருளுபதேசம் செய்தபொழுது அவனை அணுகி யிருந்து நுகர்ந்த இன்பங்களெல்லாம் அவன் மறைந்தவிடத்து நீங்கிய தன்மையைப் பொறுத்திருந்ததாகும். கிற்றவாற்றல் என மூன்றாவது விரித்து அதனைக் கெடுவாய் என்பதனோடு முடிக்க. இனி, கில் தவா எனப் பிரித்து உலகப் பற்றிச் செல்லும் ஆற்றல்கெடாத எனவும், கிற்று அவர் எனப்பிரித்து ஆற்றலுடைத்தாகிய அவாவினை மேற்கொண்ட எனவும் பொருளுரைப்பாருமுளர். உடையா உலகத்துள்ள பொருள் எல்லாவற்றையும் உடைமையாகவும் அடிமை யாகவும் உடையானாதலின் இறைவனை உடையான் என்றார். னாகிய இறைவனது அளவற்ற உயர்வினை நோக்கத் தம்நிலை மிகக் கீழான தாதல் பற்றி 'அடிநாமேனை' என்றார். "யாவர்க்கும் மேலாம் அளவி லாச் சீருடையான், யாவர்க்கும் கீழாம் அடியேனை" (திருவெண்பா 8) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. விற்றல்-உலகிய வில் ஒன்றனை விற்று அதன் விலையைத் தாம் பெற்றுக் கொள்ளும் தன்மையையுடையது. ஈண்டு இறைவன் உயிரைவிற்றுத் தான் அடையும் பேறு ஒன்றுமின்மையின், அவ்வுயிர்க்கே எல்லா நலமும் மிகுமாறு செய் கின்றானாதவின் 'விற்றெலாம் மிக' என்றார். ஆணவமலத்தோடு விரவிச் செயலற்றுக் கிடந்த உயிரை இறைவன் உய்விக்குமாறு திருவுளங்கொண்டு வினைக்கீடாகச் செய்தலே ஈண்டு விற்றலாகும். அதனால் உயிர் வினைக் கீடாகப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை அநுபவித்த லால் ஆணவவலி கெடப்பெற்று இருவினையொப்பு மலபரிபாகமாகிய பக்குவநிலையையடையும். அந்நிலையில் இறைவன் அவ்வுயிரை ஆட்கொண்டு அவ்வுயிர்க்கு எல்வா நலமும் மிகச் செய்வான். இதனை விளக்கவே 'விற்றெலாமிக ஆள்வதற்குரியவன்' என்றார். ஆள்பவன் என்னாது ஆள் வதற்குரியவன் என விதந்து கூறியது. மற்றைத் தேவர்கள் உ உயிர்க்குறுதி பயக்கும் ஐந்தொழிற்குமுரியரல்லாமையால் அவ்வைந்தொழிற்குமுரிய இறைவனே ஆள்வதற்குரியன் என்பது தோற்றுதற் பொருட்டென்க. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர்த் தமது கருவி கரணங்கள் அருள் வழிப்பட்டு நின்று உண்முகமாகக் கண்டு துகர்ந்த இன்பங்களை விளக்குவார் அவ்விறைவன் திருவடிகளை 'விரைமலர்த் திருப்பாத முற்றிலா விளந்தளிர்" என்று சிறப்பித்துரைத்தார். விரை என்றது ஈண்டு மகரங் தத்தினை.அதனைக் கூறவே, அதனோடு தொடர்புடைய தேனும் அடங்கும். ஆகவே விரை மூக்குணர்விற்கும், தேன் நாவுணர்விற்கும், மலர்த்திருப் திருச்சதகம் 257 பாதத்தளிர் கண்ணுணர்விற்கும், இளமை ஊற்றுணர்விற்கும், தேனைப் பருகிய உயிராகிய தனது ஆரவாரம் செவியுணர்விற்கும் இயையுமாறு காண்க. பொறியுணர்வு கூறவே அந்தக் கரணங்கள் மொழி மெய்கள் எல்லாம் அவ்வின்பநுகர்ச்சியைப் பெற்றமை புலனாம். மலர் என்றது தாமரை மலரை, இறைவன் மூவாமேனி முதல்வனாதலின் அவன் திருப் பாதங்களைத் திருப்பாத முற்றிலா விளந்தளிர்' என்றார். மூவரமேனி முதல்வன் காண்' "மூவாமேனி முதல்வனை " (நாவு 202:8; 274:1) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. பாத இளந்தளிர் என இயை யும். '"நின்னந்தமாஞ் செந்தளிர்கள் " (திருவெம் 20) எனவும், "இடி குரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின், படியிடப் பாலது... கச்சியேகம்பமேய வரதருக்கே"" (பதினொராத். திருவேகம்ப 44) எனவும் வருவன காண்க. மலர்த்திருப்பாதம் என்றது உவமையணியும், பாத முற்றிலா இளந்தளிர் என்றது இல்பொருள் உருவகவணியுமாகும். அவன் பிரிந்திருந்து அற்றவாறும் என இயையும். அறுதல் - இல்லாமற் போதல்.. இறைவனை அணுகியிருந்தபோது நுகர்ந்த இன்பங்களெல்லாம் மறைந்தபோது நீங்கியமையின் பாதவிளந்தளிர் பிரிந்திருந்து உண்டனவெலாம் அற்றவாறும்' என்றார். அறிவும் பெருமையும் என் பன அறியாமையையும் சிறுமையையும் உணர்த்தின. இவற்றின் மிகுதிபற்றி ''அளவறுக்கில்லேன்' என்றார். கு இதன்கண், நெஞ்சை முன்னிலைப் படுத்தி மனமே கிற்றவாற்றாற் கெடுவாய் எனவும், இறைவன் திருவடியைப் பிரிந்தமையால் முன் நுகர்ந்த இன்பங்களெல்லாம் அற்றவாற்றினை நீ அறிந்திலையெனவுங் கூறியிருப்பி னும் அம்மனத்தினை என் உயிர் தூய்மையடைதற்கு உதவுமாறு அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கோடலே கருத்தாகலின் ஆத்தும சுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 84. 4300 39. அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான் நங், களவ றுத்துநின் முண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருத்தே யுங், உளக றுத்துனை நினைத்துளம் பெருங்களன் செய்தது மிலை நெஞ்சே,பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரசுதி புகுவானே. படரை : நெஞ்சே-மனமே. இமையவர்க்கு அளவறுப்பதற்கு அரிய வன் - இறைவன் தேவர்களுக்கும் தன்பெருமையை அளந்து முடிவு செய் தற்கு அரியவன்; ஆயினும், அடியவர்க்கு எளியன் - தன் அடியவர்க்கு எளிவந்து அருள் செய்யும் பேரருளையுடையான்; நம் களவு அறுத்து ஆண்டமை - அவன் நம்மைத் திருடிய பாசங்களை ஒழித்து ஆட்கொண்டருளி நம்மிடத்து நிலைபெற்ற தன்மையை, கருத்தினுள் உணர்ந்து கசிந்திருந்தே யும் - உள்ளத்தில் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்திருந்தும், பரகதி புகுவான்- மேலான வீட்டுநெறியிற் போதற்கு, உனை நினைந்து-உன் இயல்பை 33
256 திருவாசக ஆராய்ச்சியுரை அதனை அறியாத நின் அறிவையும் நின் இழிவின் மிகுதியையும் அள விட்டு வரையறுக்கும் ஆற்றலுடையேனல்லேன் : ஆதலால் நீ செய்த வாற்றான் கெடுவாய் ; அதனை நீ அறிந்திலை என்பதாம் . Di ஈறுகெட்டு கிற்றல் - செய்தல் . கிற்றவாறு என்பது கிற்றவா என நின்றது . மனம் கிற்றவாறு என்னையெனின் இறைவன் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து அருளுபதேசம் செய்தபொழுது அவனை அணுகி யிருந்து நுகர்ந்த இன்பங்களெல்லாம் அவன் மறைந்தவிடத்து நீங்கிய தன்மையைப் பொறுத்திருந்ததாகும் . கிற்றவாற்றல் என மூன்றாவது விரித்து அதனைக் கெடுவாய் என்பதனோடு முடிக்க . இனி கில் தவா எனப் பிரித்து உலகப் பற்றிச் செல்லும் ஆற்றல்கெடாத எனவும் கிற்று அவர் எனப்பிரித்து ஆற்றலுடைத்தாகிய அவாவினை மேற்கொண்ட எனவும் பொருளுரைப்பாருமுளர் . உடையா உலகத்துள்ள பொருள் எல்லாவற்றையும் உடைமையாகவும் அடிமை யாகவும் உடையானாதலின் இறைவனை உடையான் என்றார் . னாகிய இறைவனது அளவற்ற உயர்வினை நோக்கத் தம்நிலை மிகக் கீழான தாதல் பற்றி ' அடிநாமேனை ' என்றார் . யாவர்க்கும் மேலாம் அளவி லாச் சீருடையான் யாவர்க்கும் கீழாம் அடியேனை ( திருவெண்பா 8 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . விற்றல் - உலகிய வில் ஒன்றனை விற்று அதன் விலையைத் தாம் பெற்றுக் கொள்ளும் தன்மையையுடையது . ஈண்டு இறைவன் உயிரைவிற்றுத் தான் அடையும் பேறு ஒன்றுமின்மையின் அவ்வுயிர்க்கே எல்லா நலமும் மிகுமாறு செய் கின்றானாதவின் ' விற்றெலாம் மிக ' என்றார் . ஆணவமலத்தோடு விரவிச் செயலற்றுக் கிடந்த உயிரை இறைவன் உய்விக்குமாறு திருவுளங்கொண்டு வினைக்கீடாகச் செய்தலே ஈண்டு விற்றலாகும் . அதனால் உயிர் வினைக் கீடாகப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை அநுபவித்த லால் ஆணவவலி கெடப்பெற்று இருவினையொப்பு மலபரிபாகமாகிய பக்குவநிலையையடையும் . அந்நிலையில் இறைவன் அவ்வுயிரை ஆட்கொண்டு அவ்வுயிர்க்கு எல்வா நலமும் மிகச் செய்வான் . இதனை விளக்கவே ' விற்றெலாமிக ஆள்வதற்குரியவன் ' என்றார் . ஆள்பவன் என்னாது ஆள் வதற்குரியவன் என விதந்து கூறியது . மற்றைத் தேவர்கள் உயிர்க்குறுதி பயக்கும் ஐந்தொழிற்குமுரியரல்லாமையால் அவ்வைந்தொழிற்குமுரிய இறைவனே ஆள்வதற்குரியன் என்பது தோற்றுதற் பொருட்டென்க . இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர்த் தமது கருவி கரணங்கள் அருள் வழிப்பட்டு நின்று உண்முகமாகக் கண்டு துகர்ந்த இன்பங்களை விளக்குவார் அவ்விறைவன் திருவடிகளை ' விரைமலர்த் திருப்பாத முற்றிலா விளந்தளிர் என்று சிறப்பித்துரைத்தார் . விரை என்றது ஈண்டு மகரங் தத்தினை.அதனைக் கூறவே அதனோடு தொடர்புடைய தேனும் அடங்கும் . ஆகவே விரை மூக்குணர்விற்கும் தேன் நாவுணர்விற்கும் மலர்த்திருப் திருச்சதகம் 257 பாதத்தளிர் கண்ணுணர்விற்கும் இளமை ஊற்றுணர்விற்கும் தேனைப் பருகிய உயிராகிய தனது ஆரவாரம் செவியுணர்விற்கும் இயையுமாறு காண்க . பொறியுணர்வு கூறவே அந்தக் கரணங்கள் மொழி மெய்கள் எல்லாம் அவ்வின்பநுகர்ச்சியைப் பெற்றமை புலனாம் . மலர் என்றது தாமரை மலரை இறைவன் மூவாமேனி முதல்வனாதலின் அவன் திருப் பாதங்களைத் திருப்பாத முற்றிலா விளந்தளிர் ' என்றார் . மூவரமேனி முதல்வன் காண் ' மூவாமேனி முதல்வனை ( நாவு 202 : 8 ; 274 : 1 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . பாத இளந்தளிர் என இயை யும் . ' நின்னந்தமாஞ் செந்தளிர்கள் ( திருவெம் 20 ) எனவும் இடி குரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின் படியிடப் பாலது ... கச்சியேகம்பமேய வரதருக்கே ( பதினொராத் . திருவேகம்ப 44 ) எனவும் வருவன காண்க . மலர்த்திருப்பாதம் என்றது உவமையணியும் பாத முற்றிலா இளந்தளிர் என்றது இல்பொருள் உருவகவணியுமாகும் . அவன் பிரிந்திருந்து அற்றவாறும் என இயையும் . அறுதல் - இல்லாமற் போதல் .. இறைவனை அணுகியிருந்தபோது நுகர்ந்த இன்பங்களெல்லாம் மறைந்தபோது நீங்கியமையின் பாதவிளந்தளிர் பிரிந்திருந்து உண்டனவெலாம் அற்றவாறும் ' என்றார் . அறிவும் பெருமையும் என் பன அறியாமையையும் சிறுமையையும் உணர்த்தின . இவற்றின் மிகுதிபற்றி ' ' அளவறுக்கில்லேன் ' என்றார் . கு இதன்கண் நெஞ்சை முன்னிலைப் படுத்தி மனமே கிற்றவாற்றாற் கெடுவாய் எனவும் இறைவன் திருவடியைப் பிரிந்தமையால் முன் நுகர்ந்த இன்பங்களெல்லாம் அற்றவாற்றினை நீ அறிந்திலையெனவுங் கூறியிருப்பி னும் அம்மனத்தினை என் உயிர் தூய்மையடைதற்கு உதவுமாறு அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கோடலே கருத்தாகலின் ஆத்தும சுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 84 . 4300 39. அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான் நங் களவ றுத்துநின் முண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருத்தே யுங் உளக றுத்துனை நினைத்துளம் பெருங்களன் செய்தது மிலை நெஞ்சே பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரசுதி புகுவானே . படரை : நெஞ்சே - மனமே . இமையவர்க்கு அளவறுப்பதற்கு அரிய வன் - இறைவன் தேவர்களுக்கும் தன்பெருமையை அளந்து முடிவு செய் தற்கு அரியவன் ; ஆயினும் அடியவர்க்கு எளியன் - தன் அடியவர்க்கு எளிவந்து அருள் செய்யும் பேரருளையுடையான் ; நம் களவு அறுத்து ஆண்டமை - அவன் நம்மைத் திருடிய பாசங்களை ஒழித்து ஆட்கொண்டருளி நம்மிடத்து நிலைபெற்ற தன்மையை கருத்தினுள் உணர்ந்து கசிந்திருந்தே யும் - உள்ளத்தில் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்திருந்தும் பரகதி புகுவான் மேலான வீட்டுநெறியிற் போதற்கு உனை நினைந்து - உன் இயல்பை 33