திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

258 திருவாசக ஆராய்ச்சியுரை நினைந்து, உள கறுத்து - பொறிநுகர்ச்சிகளாக உள்ளனவற்றை வெறுத்து நீக்கி, உளம் பெரு களன் செய்ததும் இல்லை - உள்ளத்தை இறைவன் எழுந் தருளியிருத்தற்குரிய பெரிய திருக்கோயிலாகச் செய்ததும் இல்லை; பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை- குற்றங்களை நீக்கி எம்மையுடைய அவ்விறைவன் திருவடிகளை வணங்குகின் குயுமில்லை; நின்தன்மை இருந்த வாறென்னே. இறைவன் தேவர்களுக்கும் தன்பெருமையை அளந்து முடிவு செய் தற்கு அரியவன்; ஆயினும் தன் அடியவர்க்கு எளிவந்து அருள் செய்யும் கொண்டருளி நம்மிடத்து நிலைபெற்ற தன்மையை உள்ளத்தில் உணர்ந்து நெகிழ்ந்திருந்தும் பரகதி புகுவதற்கு உன் இயல்பை நினைந்து பொறி நிகழ்ச்சிகளாக உள்ளனவற்றை வெறுத்து நீக்கி உள்ளத்தை இறைவன் எழுந்தருளியிருக்கும் பெரிய திருக்கோயிலாகச் செய்ததுமில்லை. நின் குற்றங்களை நீக்கி எம்மையுடைய அவ்விறைவன் திருவடிகளை வணங்கு இன்றயுமில்லை; நின் தன்மை இருந்தவாறென்னே. அளவறுத்தல் - காட்சி அனுமானம் முதலிய அளவைகளால் இறைவன் இயல்புகளை அளவிட்டறிதல், இறைவன் சுட்டியறியப்படானாகலின் 'அள வறுப்பதற்கரியவன் என்றார். "ஓரளவில்லாவொருவன் " என்றார் திருக்கோவையாரினும் (308). இமையவர்க்கு என்பதில் உயர்வு சிறப் பும்மை தொக்கது. அடியவர்க்கெளியான் என்றது தன் அடியவர்களுக்கு எளிவந்தருளும் பேரளுடையான் என்றவாறு. ''முன்னை யென்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு " அதிசய 3. என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க. * புரிகொள் சடையர் அடியார்க் கெளியர் ' ஞான 68:2. "வஞ்சகர்க் கரியர்போலு மருவினோர்க் கெளியர் போலும் நாவு 66:7- "எளியவ ரடியார்க் கென்று மின்னம்ப ரீசனாரே" காவு 72:5. "தன்னடியார்க் கெளியான் றன்னை''நாவு 247:3. "உகந்துள்ளி நண்ணாதார்க் கரியானை யடியேற் கெளியானை சுந் 59:7. எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. அடியார்க்கு அளவறுப்பதற்கு எளியவன் என இயைத்துப் பொருளுரைப்பின் இறைவன் சுட்டியறியப் படுபவனாவான். "தன்பெருமை தானறியாத் தன்மையன் காண்" (சாழல் 19) என அடிகள் மற்றோரிடத்து அருளிச் செய்தலின் அவனாலு மறிதற்கரிய அவனது அளவற்ற பெருமையையை அடியவர்கள் எளிதில் அறிவர் எனக் கூறுதல் பொருந்தாமையின் எளிவந்து அருளும் பேரரு ளாளன் எனப் பொருள்கோடலே பொருந்துவதாகும். திருச்சதகம் கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி ' போற்றி 143-4. என்னும் அடிகள் திருவாக்கும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. 259 களவு என்னும் தொழிற்பெயர் நம்மைக் களவு செய்த பாசங்களை உணர்த்தியது. பாசத்தின் களவாவது: இறைவன்பாற் சாராது மனத்தி னைத் தன்பாற் கவர்ந்தமையாகும். பாசமறுத்தாண்டமை. "பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை யாண்ட ஆருடை யம்பொன்மேனி யமுதினை " குயிற் 8. என அடிகள் அருளியமையானுமறிக. நின்றாண்டமை என்பதை ஆண்டு நின்றமை என இயைத்துப் பொருள்கொள்க. கருத்தினுள் உணர்ந்து கசிந்திருந்தேயும் என மாறிக்கூட்டுக. கருத்து உள்ளம். நெஞ்சிற்கு உள் ளம் கூறுதலை, 'வருந்தினை வாழியென் நெஞ்சே... இனிச் சிறக்க நின் இருந்தே உள்ளம்" என அகப்பாட்டில் (19:2-8) வருதலானுமறிக. யும் என்பதில் ஏ அசைவுநிலை. உம்மை, களவறுத்தாண்டமையைச் சுட்டி யுணராயாயினும் என இறந்ததுதழீஇய எச்சவும்மை. உள-உள்ளன. அவை பொறிவாயிலாக வரும் நுகர்வுகள். கறுத்தல்- ஈண்டு வெறுத்தல். உனைநினைதல் - உன் இயல்பினை நினைதல்.உளம் பெருங் களஞ் செய்தல் - உள்ளத்தினை இறைவன் எழுந்தருளியிருக்கும் பெரிய திருக்கோயிலாகச் செய்தல். உள்குவார் உள்ளத்தினை இறைவன் கோயி லாகக் கொள்ளுதல், இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை' ஞான 200:2. "சேவடி, காலையு மாலையுங் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரு சரநெறி யார்க்கே 19 நாவு 17' : 8. "நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்" நாவு 118:1. எனத் தேவாரத்தும், " மறவாமை யானமைத்த மனக் கோயில் உள்ளிருத்தி'வாயி 8. எனப் பெரியபுராணத்தும் வருவனவற்றாலுமறிக. பளகு-குற்றம். "பண்டுனை நினையமாட்டாப் பளகனேன் '" (தே. நாவு 02:5) ''பளகறு கேள்விப் பயிற்சியர்" (காஞ்சி. திருநகர 108) என் பனவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க. அறுத்துப் பணிந்திலை என இயையும். *செய்தது மிலை' என்ற உம்மையைப் பணிந்ததுமிலை எனவும் கூட்டுக. பரகதி-மேலான வீட்டு நெறி. "பரகதி பாண்டியற் கருளினை போற்றி'" (போற் 214) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அவ்
258 திருவாசக ஆராய்ச்சியுரை நினைந்து உள கறுத்து - பொறிநுகர்ச்சிகளாக உள்ளனவற்றை வெறுத்து நீக்கி உளம் பெரு களன் செய்ததும் இல்லை - உள்ளத்தை இறைவன் எழுந் தருளியிருத்தற்குரிய பெரிய திருக்கோயிலாகச் செய்ததும் இல்லை ; பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை- குற்றங்களை நீக்கி எம்மையுடைய அவ்விறைவன் திருவடிகளை வணங்குகின் குயுமில்லை ; நின்தன்மை இருந்த வாறென்னே . இறைவன் தேவர்களுக்கும் தன்பெருமையை அளந்து முடிவு செய் தற்கு அரியவன் ; ஆயினும் தன் அடியவர்க்கு எளிவந்து அருள் செய்யும் கொண்டருளி நம்மிடத்து நிலைபெற்ற தன்மையை உள்ளத்தில் உணர்ந்து நெகிழ்ந்திருந்தும் பரகதி புகுவதற்கு உன் இயல்பை நினைந்து பொறி நிகழ்ச்சிகளாக உள்ளனவற்றை வெறுத்து நீக்கி உள்ளத்தை இறைவன் எழுந்தருளியிருக்கும் பெரிய திருக்கோயிலாகச் செய்ததுமில்லை . நின் குற்றங்களை நீக்கி எம்மையுடைய அவ்விறைவன் திருவடிகளை வணங்கு இன்றயுமில்லை ; நின் தன்மை இருந்தவாறென்னே . அளவறுத்தல் - காட்சி அனுமானம் முதலிய அளவைகளால் இறைவன் இயல்புகளை அளவிட்டறிதல் இறைவன் சுட்டியறியப்படானாகலின் ' அள வறுப்பதற்கரியவன் என்றார் . ஓரளவில்லாவொருவன் என்றார் திருக்கோவையாரினும் ( 308 ) . இமையவர்க்கு என்பதில் உயர்வு சிறப் பும்மை தொக்கது . அடியவர்க்கெளியான் என்றது தன் அடியவர்களுக்கு எளிவந்தருளும் பேரளுடையான் என்றவாறு . ' ' முன்னை யென்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு அதிசய 3 . என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க . * புரிகொள் சடையர் அடியார்க் கெளியர் ' ஞான 68 : 2 . வஞ்சகர்க் கரியர்போலு மருவினோர்க் கெளியர் போலும் நாவு 66 : 7 எளியவ ரடியார்க் கென்று மின்னம்ப ரீசனாரே காவு 72 : 5 . தன்னடியார்க் கெளியான் றன்னை''நாவு 247 : 3 . உகந்துள்ளி நண்ணாதார்க் கரியானை யடியேற் கெளியானை சுந் 59 : 7 . எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . அடியார்க்கு அளவறுப்பதற்கு எளியவன் என இயைத்துப் பொருளுரைப்பின் இறைவன் சுட்டியறியப் படுபவனாவான் . தன்பெருமை தானறியாத் தன்மையன் காண் ( சாழல் 19 ) என அடிகள் மற்றோரிடத்து அருளிச் செய்தலின் அவனாலு மறிதற்கரிய அவனது அளவற்ற பெருமையையை அடியவர்கள் எளிதில் அறிவர் எனக் கூறுதல் பொருந்தாமையின் எளிவந்து அருளும் பேரரு ளாளன் எனப் பொருள்கோடலே பொருந்துவதாகும் . திருச்சதகம் கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி ' போற்றி 143-4 . என்னும் அடிகள் திருவாக்கும் ஈண்டு சிந்திக்கத்தக்கது . 259 களவு என்னும் தொழிற்பெயர் நம்மைக் களவு செய்த பாசங்களை உணர்த்தியது . பாசத்தின் களவாவது : இறைவன்பாற் சாராது மனத்தி னைத் தன்பாற் கவர்ந்தமையாகும் . பாசமறுத்தாண்டமை . பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை யாண்ட ஆருடை யம்பொன்மேனி யமுதினை குயிற் 8 . என அடிகள் அருளியமையானுமறிக . நின்றாண்டமை என்பதை ஆண்டு நின்றமை என இயைத்துப் பொருள்கொள்க . கருத்தினுள் உணர்ந்து கசிந்திருந்தேயும் என மாறிக்கூட்டுக . கருத்து உள்ளம் . நெஞ்சிற்கு உள் ளம் கூறுதலை ' வருந்தினை வாழியென் நெஞ்சே ... இனிச் சிறக்க நின் இருந்தே உள்ளம் என அகப்பாட்டில் ( 19 : 2-8 ) வருதலானுமறிக . யும் என்பதில் அசைவுநிலை . உம்மை களவறுத்தாண்டமையைச் சுட்டி யுணராயாயினும் என இறந்ததுதழீஇய எச்சவும்மை . உள - உள்ளன . அவை பொறிவாயிலாக வரும் நுகர்வுகள் . கறுத்தல் ஈண்டு வெறுத்தல் . உனைநினைதல் - உன் இயல்பினை நினைதல்.உளம் பெருங் களஞ் செய்தல் - உள்ளத்தினை இறைவன் எழுந்தருளியிருக்கும் பெரிய திருக்கோயிலாகச் செய்தல் . உள்குவார் உள்ளத்தினை இறைவன் கோயி லாகக் கொள்ளுதல் இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை ' ஞான 200 : 2 . சேவடி காலையு மாலையுங் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரு சரநெறி யார்க்கே 19 நாவு 17 ' : 8 . நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் நாவு 118 : 1 . எனத் தேவாரத்தும் மறவாமை யானமைத்த மனக் கோயில் உள்ளிருத்தி'வாயி 8 . எனப் பெரியபுராணத்தும் வருவனவற்றாலுமறிக . பளகு - குற்றம் . பண்டுனை நினையமாட்டாப் பளகனேன் ' ( தே . நாவு 02 : 5 ) ' ' பளகறு கேள்விப் பயிற்சியர் ( காஞ்சி . திருநகர 108 ) என் பனவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க . அறுத்துப் பணிந்திலை என இயையும் . * செய்தது மிலை ' என்ற உம்மையைப் பணிந்ததுமிலை எனவும் கூட்டுக . பரகதி - மேலான வீட்டு நெறி . பரகதி பாண்டியற் கருளினை போற்றி ' ( போற் 214 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அவ்