திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

260 திருவாசக ஆராய்ச்சியுரை விட்டு நெறியிற் போதற்குரிய இறைவனை நினைத்தலும் கழல்பணிதலு மாகியவற்றைச் செய்திலை என்பார், 'உளம் பெருங்களஞ் செய்ததுமிலை கழல் பணிந்திலை பரகதி புகுவானே' என்றார். ''மலர்பறித்திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யும் சித்தனே' (அருட் 8) என அடிகள் பிராண்டு அருளியமையும் காண்க. அங்கங்கள் இதன்கண் நெஞ்சே என முன்னிலைப்படுத்தி உளகறுத்து உளம் பெருங்களன் செய்ததுமிலை எனவும், பளகறுத்து உடையான் கழல் பணிந்ததுமிலை எனவும் கூறியிருப்பினும் ஆத்தும சுத்திக்குரிய இத் தன்மைகளை எனக்கருள வேண்டுமென இறைவனை வேண்டுதலே கருத்தா கலின் ஆத்துமசுத்தியென்றும் நான்காம்பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க. 35. 40.புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற். குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் கழற்கன்பு, நெகுவ தாவதும் நித்தலு மமுதொடு தேனொடு பால்காட்டி, மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்வேன் வீனையேனே. ப-ரை: புகுவதாவதும்- சென்று அடைதற்குரிய நெறியையுடைய தும், போதரவு இல்லதும்-மீண்டு வருதற்குரிய நெறி இல்லாததுமாகிய, பொன்நகர் புக போதற்கு சிவநகருட் புகுதற்காகச் செல்லுதற்கு உகுவது ஆவதும் - நீங்கவேண்டிய அகப்பற்றுப் புறப்பற்றுக்கள் நீங்குவதும், எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவதாவதும்- எங்கள் தந்தையும் எங்கள் தலைவனும் என்னை ஆட்கொண்டவனுமாகிய இறைவனுடைய திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் நெகிழவேண்டியதும். நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி மிகுவது ஆவதும்-எப்பொழு தம் அமுதும் தேனும் பாலும் கருப்புக்கட்டியும் போலும் இனிய பேரின்பச் சுவையானது மிகவேண்டியதும், இன்றெனின் - இப்பொழுது எனக்கு இல்லையானால், வினையேன் இதற்கு என் செய்கேன் - எடுத்த உடம்பு முகந்து நின்ற வினையை அநுபவித்தற்குரிய யான் இந்நிலைமைக்கு யாது செய்யவல்லேன். ESPERT சென்றடைதற்குரிய நெறியையுடையதும் அடைந்தோர்கள் மீண்டு வருதற்குரிய நெறியில்லாததுமாகிய பொன்னகர் புகப்போதற்கு அகப் பற்று புறப்பற்றுக்கள் நீங்குவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பினால் நெஞ்சம். நெகிழவேண்டியதும் நித்தலும் அமுதும் தேனும் பாலும் கருப்புக்கட்டியும் போலும் இனிய பேரின்பச் சுவை மிகவேண்டியதும் இப்பொழுது எனக்கு இல்லையானால் வினையேன் இந்நிலைமைக்கு யாது செய்யவல்லேன் என்பதாம். புகுவதாவதும் போதரவில்லதும் என்றதனால் இறைவன் அருளும் திருவடிநிழலாகிய வீடு பக்குவமடைந்த உயிர்களுக்குச் சென்றடைதற்குரிய திருச்சதகம் நெறியையுடையதாயும், அடைந்தால் மீள்தற்குரிய நெறியையில்லாததாயும் என அதன் சிறப்பியல்பு கூறப்பட்டது. மீண்டு வாரா வழியருள் புரிபவன் " கீர்த் 117. "வாராவுலகத் தந்து வந்தாட் கொள்வோனே "பிறிவறியா வன்பர்நின் னருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார்" அடைக் 9. "வரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா வமுதா யமைந்தன்றே" வெண்பா7. ''வாரா வுலக் நெறியேறக், கோலங்காட்டி யாண்டானை " ஆனந்த 3. என அடிகளும், ஆசைப்?. 261 "வாரா வுலகருள வல்லான் றன்னை" தே. 217:2. என அப்பரடிகளும் அருளியவாறும் காண்க. போதரவு - திரும்பி வருதல். ஈண்டு திரும்பி வருதற்குரிய நெறியை யுணர்த்தியது. போதரவில்லதுமாகிய எனப் பண்புருபு விரித்துப் பொருள் கொள்க. பொன்னகர்-வீடாகிய அழகிய நகர்; சிவநகர். போரேறே நின் பொன்னகர்வாய் நீ போந்தருளி" (சதகம் 53) என அடிகள் அருளியமையுங் காண்க. உகுவதாவது - நீங்கவேண்டிய அகப்புறப் பற்றுக் கள். இவை பொன்னகர் புகப்போதற்குத் தடையாக வுள்ளனவாத லின், 'பொன்னகர் புகப்போதற்குத் உகுவதாவதும்' என்றார். ''யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்" (குறள்) என்பதும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. உகுவதாவது-கெடவேண்டி யது : நீங்கவேண்டியது. உகுதல் - கெடுதல் என்னும் பொருட்டாதல் அழிந்துகு நெஞ்சத்தே மல்ல அழப்ப" (கவி 72 :23) என்புழிக் காண்க. கழற்கு அன்பு-திருவடிக்கு அன்பு. "வேண்டு நின்கழற்கண் அன்பு'' (சத ?74) என் அடிகள் அருளியமையுங் காண்க. அன்பு நெகுவதாவது அன்பினால் மனம் நெகிழவேண்டியது. நாயினேன் நெகுமன்பில்லை'' (சத 60) "அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை யானந்தமாய்க் கசின் துருக'' (கோயிற் 2 . " அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி * (ஏசறவு?) என வருவனவுங் காண்க.யா அமுதொடு தேனொடு என்ற ஒடுக்கள் எண்ணுப்பொருளில் வந்தன. அவற்றைப் பால் கட்டி என்பவற்றோடும் கூட்டுக. அமுது தேன் பால் கட்டி என்பன உவம் ஆகுபெயராய் இறைவன் அருளும் பேரின்பச் சுவையை உணர்த்தின. தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலைச் சிவனை '' "தேனே யமுதே கரும்பின் தெளிவே சிவனே " சத 55, தேனைப் பாலைக் கன்னலின் தெளியை சத 58. Pi " சத 38.
260 திருவாசக ஆராய்ச்சியுரை விட்டு நெறியிற் போதற்குரிய இறைவனை நினைத்தலும் கழல்பணிதலு மாகியவற்றைச் செய்திலை என்பார் ' உளம் பெருங்களஞ் செய்ததுமிலை கழல் பணிந்திலை பரகதி புகுவானே ' என்றார் . ' ' மலர்பறித்திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யும் சித்தனே ' ( அருட் 8 ) என அடிகள் பிராண்டு அருளியமையும் காண்க . அங்கங்கள் இதன்கண் நெஞ்சே என முன்னிலைப்படுத்தி உளகறுத்து உளம் பெருங்களன் செய்ததுமிலை எனவும் பளகறுத்து உடையான் கழல் பணிந்ததுமிலை எனவும் கூறியிருப்பினும் ஆத்தும சுத்திக்குரிய இத் தன்மைகளை எனக்கருள வேண்டுமென இறைவனை வேண்டுதலே கருத்தா கலின் ஆத்துமசுத்தியென்றும் நான்காம்பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க . 35 . 40.புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் . குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் கழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலு மமுதொடு தேனொடு பால்காட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்வேன் வீனையேனே . - ரை : புகுவதாவதும்- சென்று அடைதற்குரிய நெறியையுடைய தும் போதரவு இல்லதும் - மீண்டு வருதற்குரிய நெறி இல்லாததுமாகிய பொன்நகர் புக போதற்கு சிவநகருட் புகுதற்காகச் செல்லுதற்கு உகுவது ஆவதும் - நீங்கவேண்டிய அகப்பற்றுப் புறப்பற்றுக்கள் நீங்குவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவதாவதும் எங்கள் தந்தையும் எங்கள் தலைவனும் என்னை ஆட்கொண்டவனுமாகிய இறைவனுடைய திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் நெகிழவேண்டியதும் . நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி மிகுவது ஆவதும் - எப்பொழு தம் அமுதும் தேனும் பாலும் கருப்புக்கட்டியும் போலும் இனிய பேரின்பச் சுவையானது மிகவேண்டியதும் இன்றெனின் - இப்பொழுது எனக்கு இல்லையானால் வினையேன் இதற்கு என் செய்கேன் - எடுத்த உடம்பு முகந்து நின்ற வினையை அநுபவித்தற்குரிய யான் இந்நிலைமைக்கு யாது செய்யவல்லேன் . ESPERT சென்றடைதற்குரிய நெறியையுடையதும் அடைந்தோர்கள் மீண்டு வருதற்குரிய நெறியில்லாததுமாகிய பொன்னகர் புகப்போதற்கு அகப் பற்று புறப்பற்றுக்கள் நீங்குவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பினால் நெஞ்சம் . நெகிழவேண்டியதும் நித்தலும் அமுதும் தேனும் பாலும் கருப்புக்கட்டியும் போலும் இனிய பேரின்பச் சுவை மிகவேண்டியதும் இப்பொழுது எனக்கு இல்லையானால் வினையேன் இந்நிலைமைக்கு யாது செய்யவல்லேன் என்பதாம் . புகுவதாவதும் போதரவில்லதும் என்றதனால் இறைவன் அருளும் திருவடிநிழலாகிய வீடு பக்குவமடைந்த உயிர்களுக்குச் சென்றடைதற்குரிய திருச்சதகம் நெறியையுடையதாயும் அடைந்தால் மீள்தற்குரிய நெறியையில்லாததாயும் என அதன் சிறப்பியல்பு கூறப்பட்டது . மீண்டு வாரா வழியருள் புரிபவன் கீர்த் 117 . வாராவுலகத் தந்து வந்தாட் கொள்வோனே பிறிவறியா வன்பர்நின் னருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார் அடைக் 9 . வரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா வமுதா யமைந்தன்றே வெண்பா 7 . ' ' வாரா வுலக் நெறியேறக் கோலங்காட்டி யாண்டானை ஆனந்த 3 . என அடிகளும் ஆசைப் ?. 261 வாரா வுலகருள வல்லான் றன்னை தே . 217 : 2 . என அப்பரடிகளும் அருளியவாறும் காண்க . போதரவு - திரும்பி வருதல் . ஈண்டு திரும்பி வருதற்குரிய நெறியை யுணர்த்தியது . போதரவில்லதுமாகிய எனப் பண்புருபு விரித்துப் பொருள் கொள்க . பொன்னகர் - வீடாகிய அழகிய நகர் ; சிவநகர் . போரேறே நின் பொன்னகர்வாய் நீ போந்தருளி ( சதகம் 53 ) என அடிகள் அருளியமையுங் காண்க . உகுவதாவது - நீங்கவேண்டிய அகப்புறப் பற்றுக் கள் . இவை பொன்னகர் புகப்போதற்குத் தடையாக வுள்ளனவாத லின் ' பொன்னகர் புகப்போதற்குத் உகுவதாவதும் ' என்றார் . ' ' யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும் ( குறள் ) என்பதும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . உகுவதாவது - கெடவேண்டி யது : நீங்கவேண்டியது . உகுதல் - கெடுதல் என்னும் பொருட்டாதல் அழிந்துகு நெஞ்சத்தே மல்ல அழப்ப ( கவி 72 : 23 ) என்புழிக் காண்க . கழற்கு அன்பு - திருவடிக்கு அன்பு . வேண்டு நின்கழற்கண் அன்பு ' ' ( சத ? 74 ) என் அடிகள் அருளியமையுங் காண்க . அன்பு நெகுவதாவது அன்பினால் மனம் நெகிழவேண்டியது . நாயினேன் நெகுமன்பில்லை ' ' ( சத 60 ) அன்பினா லடியேன் ஆவியோ டாக்கை யானந்தமாய்க் கசின் துருக ' ' ( கோயிற் 2 . அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி * ( ஏசறவு ? ) என வருவனவுங் காண்க.யா அமுதொடு தேனொடு என்ற ஒடுக்கள் எண்ணுப்பொருளில் வந்தன . அவற்றைப் பால் கட்டி என்பவற்றோடும் கூட்டுக . அமுது தேன் பால் கட்டி என்பன உவம் ஆகுபெயராய் இறைவன் அருளும் பேரின்பச் சுவையை உணர்த்தின . தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலைச் சிவனை ' ' தேனே யமுதே கரும்பின் தெளிவே சிவனே சத 55 தேனைப் பாலைக் கன்னலின் தெளியை சத 58 . Pi சத 38 .