திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "தேனே யமுதே சிந்தைக் கரியாய் ''சத 85. "தேனே அமுதே கரும்பின் தெளிவே நித்திக்கு,மானே " சத 20. "தேனையும் பாலையுங் கன்னலையு மொத்தினிய கோனவன் போல் வந்து" அம் 14. 262 "ஊனா யுயிராய் உணர்வாயென் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் அம் 16, தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை புணர்ச் 4. 'தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் '' ஏசறவு 10. என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. கட்டி கரும்புக்கட்டி. "கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும்' (சீவக 1938) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. "கன்னல் கட்டி கற்கண்டாகும் " என்பது பிங்கலந்தை (6:44). மிகுவதாஙது - அப் பேரின்பச்சுவை மிகவேண்டியது; இன்றெனின் என்பதன் ஆற்றலால் இப்பொழுது இல்லையாயின் என உரைக்கப்பட்டது. மற்று- அசை. வினை யேன் என்றது உடம்பு முகந்து நின்ற வினையை அனுபவித்தற்குரியேன் என்றவாறு. இதன்கண் பொன்னகர் புகப்போதற்கு உகவேண்டியதும் ஆண்ட வன் கழற்கு அன்பு நெகவேண்டியதும் வித்தலும் பேரின்பச் சுவை மிக வேண்டியதும் உயிரின் தாய்மைக்குரியன வாதலின் அவற்றை அருள வேண்டுமென இறைவனை வேண்டுமுகத்தால் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க, 36. 41. வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை யான் அடி நாயே னைத். தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே. முணைவன் பாததன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் தவைகீறேன், இணையன் பாவனை யிரும்புகன் மனஞ்செளி யின்னதென் றறியேனே. என் போல் வினை உடையார் பிறர் ஆர்-என்னைப்போல இறைவனைப் பிரிந்து உலகில் வாழ்வதற்கேதுவாகிய பிராரத்த வினை யுடையவர் பிறர் யாவர் உளர்; ஒருவருமில்லை. உடையான் அடி நாயேனை தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று என்னை ஆளாகவுடையான் அடிமையாகிய நாய்போன்ற இறிவுடையேனைத் தினையின் பாதியளவு பொழுதாயினும் பிரிந்திருத்தல் அவனது திருவுள்ளக் கருத்தன்று; அத னால் - அப்பிராரத்த வினையினால், முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும்- வினையினிங்கிய விளங்கிய அறிவினையுடைய இறைவனுடைய திருவடிகளா கிய நல்ல மலர்கள அணுகியிராது பிரிந்திருந்தும், நான் தலை முட்டிலேன் கீறேன்- நான் அப்பிரிவினை ஆற்றாது தலையைக் கற்றூணில் மோதுதல் செய்திலேன்; அதனாற் பிளத்தலும் செய்திலேன்; இனையன் பாவனை இரும்பு. ப-ரை: N 263 திருச்சதகம் இத்தன்மையுடையேனது இடையறத் தியானம் அன்பின்மையால் வன்மை யான இரும்பாகவுள்ளது; மனம் கல் எனது மளமும் இளகுதலில்லாத கல்லாகவுள்ளது: செவி இன்னது என்று அறியேன் - இறைவனது உபதேசத் தினைக் கேட்ட செவி இன்ன பொருளாகவுள்ளது என்று சொல்லுமாற்றி யேன். என்னைப்போற் பிராரத்தவினையுடையார் பிறர் யாவர் உளர்! என்னை ஆளரகவுடையான் அடிநாயேனைத் தினையின் பாதியளவு பொழுதாயினும் பிரிந்திருத்தல் அவனது திருவுள்ளக்குறிப்பன் று; அதனால் முனைவனுடைய திருவடிகளாகிய நல்ல மலர்களைப் பிரிந்திருந்தும் அப்பிரிவினை ஆற்றாது யான் தலையை முட்டிலேன்; கீறேன்; இத்தன்மையுடையேனது பாவனை இரும்பு: மனம் கல்; செவி இன்னபொருளாகவுள்ளது என்று சொல்லுமா றறியேன் என்பதாம். வினை என்போல் உடையார் பிறர் ஆர், என்றது இறைவன் வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்றிருந்தும் உடனே கதிபெறமாட்டாது உலகில் வாழ்வதற்கு ஏதுவாயிருந்த பிராரத்த வினையை என்னைப்போல உடைய வர் பிறர் யாவர் என்றவாறு. ஒருவருமில்லை என்பது குறிப்பு. D அடிநாயேனை- அடிமையாகிய நாய்போன்ற இழிவுடையேனை. இங் கிருந்த லழகோ அடிநாயேன்" (பிரார்த் 4) "அடிநாயேன் அரற்றுகின் நேன்'' (குழைத்த 10) என வருவனவும் காண்க. தினையின் பாகமும் பிறிவது அவன் திருக்குறிப்பன்று என்றது இறைவன் எப்பொழுதும் என்னை அணுகியிருப்பதன்றித் தினையின் பாகியளவு பொழுதாயினும் என்னைப் பிரிந்திருப்பது அவனது திருவுள்ளக்கருத்தன்று என்றவாறு. பாகம் - கூறு; பகுதி. 'பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவதேய மன்னன் சீவக 2278. தினையின் பாகம் - தினையின் கூறு. "தினைப்பிளந்தன்ன சிறுமையரேனும் எ எனத் திருமந்திரத்து (2007 ) வருதலுங் காண்க. பொரு ளின் சிறுமையாற் காலதின் சிறுமையைக் கூறினார். "தினைத்துனையேனும் பொறேன் துயராக்கைத் திண் வலையே (நீத் 38) என அடிகள் பிறாண்டு பிறிவது- பிரிவது. அருளியமையுங் காண்க. "பிறிவிலாத வின்னருள் பெற்றிருந்தும்'' (சத 32) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, திருக் குறிப்பு - திருவுள்ளக்கருத்து. தென் றில்லைக்கோனே உன்றன் திருக் குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட" (சத 55) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. பிறிவது திருக்குறிப்பன்று என்றார் இறைவன் தகுதி யிருப்பின் விடளிக்கும் விருப்புடையான் என்ற கருத்துப்பற்றி. அதனால் என்றது உடனே கதிபெருமைக்கு ஏதுவாகத் தடுத்திருந்த அப்பிராரத்த வினையினால் என்றவாறு. அதனால் இறைவன் திருவடி மலர்களைப் பிரிய நேர்ந்தமையின் அதனால் முனைவன் பாதகன் மலர் பிரிந்திருந்தும்' என்றார். அடிகள் இறைவனைப் பிரிந்திருந்தமை,
திருவாசக ஆராய்ச்சியுரை தேனே யமுதே சிந்தைக் கரியாய் ' ' சத 85 . தேனே அமுதே கரும்பின் தெளிவே நித்திக்கு மானே சத 20 . தேனையும் பாலையுங் கன்னலையு மொத்தினிய கோனவன் போல் வந்து அம் 14 . 262 ஊனா யுயிராய் உணர்வாயென் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் அம் 16 தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை புணர்ச் 4 . ' தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் ' ' ஏசறவு 10 . என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . கட்டி கரும்புக்கட்டி . கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும் ' ( சீவக 1938 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கன்னல் கட்டி கற்கண்டாகும் என்பது பிங்கலந்தை ( 6:44 ) . மிகுவதாஙது - அப் பேரின்பச்சுவை மிகவேண்டியது ; இன்றெனின் என்பதன் ஆற்றலால் இப்பொழுது இல்லையாயின் என உரைக்கப்பட்டது . மற்று- அசை . வினை யேன் என்றது உடம்பு முகந்து நின்ற வினையை அனுபவித்தற்குரியேன் என்றவாறு . இதன்கண் பொன்னகர் புகப்போதற்கு உகவேண்டியதும் ஆண்ட வன் கழற்கு அன்பு நெகவேண்டியதும் வித்தலும் பேரின்பச் சுவை மிக வேண்டியதும் உயிரின் தாய்மைக்குரியன வாதலின் அவற்றை அருள வேண்டுமென இறைவனை வேண்டுமுகத்தால் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க 36 . 41. வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை யான் அடி நாயே னைத் . தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே . முணைவன் பாததன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் தவைகீறேன் இணையன் பாவனை யிரும்புகன் மனஞ்செளி யின்னதென் றறியேனே . என் போல் வினை உடையார் பிறர் ஆர் - என்னைப்போல இறைவனைப் பிரிந்து உலகில் வாழ்வதற்கேதுவாகிய பிராரத்த வினை யுடையவர் பிறர் யாவர் உளர் ; ஒருவருமில்லை . உடையான் அடி நாயேனை தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று என்னை ஆளாகவுடையான் அடிமையாகிய நாய்போன்ற இறிவுடையேனைத் தினையின் பாதியளவு பொழுதாயினும் பிரிந்திருத்தல் அவனது திருவுள்ளக் கருத்தன்று ; அத னால் - அப்பிராரத்த வினையினால் முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் வினையினிங்கிய விளங்கிய அறிவினையுடைய இறைவனுடைய திருவடிகளா கிய நல்ல மலர்கள அணுகியிராது பிரிந்திருந்தும் நான் தலை முட்டிலேன் கீறேன்- நான் அப்பிரிவினை ஆற்றாது தலையைக் கற்றூணில் மோதுதல் செய்திலேன் ; அதனாற் பிளத்தலும் செய்திலேன் ; இனையன் பாவனை இரும்பு . - ரை : N 263 திருச்சதகம் இத்தன்மையுடையேனது இடையறத் தியானம் அன்பின்மையால் வன்மை யான இரும்பாகவுள்ளது ; மனம் கல் எனது மளமும் இளகுதலில்லாத கல்லாகவுள்ளது : செவி இன்னது என்று அறியேன் - இறைவனது உபதேசத் தினைக் கேட்ட செவி இன்ன பொருளாகவுள்ளது என்று சொல்லுமாற்றி யேன் . என்னைப்போற் பிராரத்தவினையுடையார் பிறர் யாவர் உளர் ! என்னை ஆளரகவுடையான் அடிநாயேனைத் தினையின் பாதியளவு பொழுதாயினும் பிரிந்திருத்தல் அவனது திருவுள்ளக்குறிப்பன் று ; அதனால் முனைவனுடைய திருவடிகளாகிய நல்ல மலர்களைப் பிரிந்திருந்தும் அப்பிரிவினை ஆற்றாது யான் தலையை முட்டிலேன் ; கீறேன் ; இத்தன்மையுடையேனது பாவனை இரும்பு : மனம் கல் ; செவி இன்னபொருளாகவுள்ளது என்று சொல்லுமா றறியேன் என்பதாம் . வினை என்போல் உடையார் பிறர் ஆர் என்றது இறைவன் வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்றிருந்தும் உடனே கதிபெறமாட்டாது உலகில் வாழ்வதற்கு ஏதுவாயிருந்த பிராரத்த வினையை என்னைப்போல உடைய வர் பிறர் யாவர் என்றவாறு . ஒருவருமில்லை என்பது குறிப்பு . D அடிநாயேனை- அடிமையாகிய நாய்போன்ற இழிவுடையேனை . இங் கிருந்த லழகோ அடிநாயேன் ( பிரார்த் 4 ) அடிநாயேன் அரற்றுகின் நேன் ' ' ( குழைத்த 10 ) என வருவனவும் காண்க . தினையின் பாகமும் பிறிவது அவன் திருக்குறிப்பன்று என்றது இறைவன் எப்பொழுதும் என்னை அணுகியிருப்பதன்றித் தினையின் பாகியளவு பொழுதாயினும் என்னைப் பிரிந்திருப்பது அவனது திருவுள்ளக்கருத்தன்று என்றவாறு . பாகம் - கூறு ; பகுதி . ' பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவதேய மன்னன் சீவக 2278. தினையின் பாகம் - தினையின் கூறு . தினைப்பிளந்தன்ன சிறுமையரேனும் எனத் திருமந்திரத்து ( 2007 ) வருதலுங் காண்க . பொரு ளின் சிறுமையாற் காலதின் சிறுமையைக் கூறினார் . தினைத்துனையேனும் பொறேன் துயராக்கைத் திண் வலையே ( நீத் 38 ) என அடிகள் பிறாண்டு பிறிவது- பிரிவது . அருளியமையுங் காண்க . பிறிவிலாத வின்னருள் பெற்றிருந்தும் ' ' ( சத 32 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க திருக் குறிப்பு - திருவுள்ளக்கருத்து . தென் றில்லைக்கோனே உன்றன் திருக் குறிப்புக் கூடுவார் நின்கழல் கூட ( சத 55 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . பிறிவது திருக்குறிப்பன்று என்றார் இறைவன் தகுதி யிருப்பின் விடளிக்கும் விருப்புடையான் என்ற கருத்துப்பற்றி . அதனால் என்றது உடனே கதிபெருமைக்கு ஏதுவாகத் தடுத்திருந்த அப்பிராரத்த வினையினால் என்றவாறு . அதனால் இறைவன் திருவடி மலர்களைப் பிரிய நேர்ந்தமையின் அதனால் முனைவன் பாதகன் மலர் பிரிந்திருந்தும் ' என்றார் . அடிகள் இறைவனைப் பிரிந்திருந்தமை