திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

264 " திருவாசக ஆராய்ச்சியுரை ஆள்வதற்குரியவன் விரைமலாத் திருப்பாத முற்றிலா விளந்தளிர் பிரிந்திருந்தும்'' சத 34. பொருளா வெனைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை'' கோயின் மூத் 8. என வருவனவற்றாலுமறிக. முனைவன்-கடவுள். 'முனைவனே முறையோ'' முனைவனே ஆட்கொண்டாய்" (சத 22: 27) என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க. முட்டிலேன் தலைகிறேன் என்றது முட்டிப்பிளந்திவேன் என்றவாறு. தலையை மோதிப் பிழத்தற்கு மோதப்படும் பொருள் வலிதாயிருக்க வேண்டுமாதலின் கற்றூண் என்பது வருவிக்கப்பட்டது. துள்ளித் தூண் மூட்டுமாங் கீழ்" என்றார் நாலடியாரினும். இனையன் - தன்மை ஒருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர். ** பாவனை - இடைவிடாத் தியானம் "பாவனை யாய கருத்தினில் வந்த பராவமுதாகாதே " (திருப்படையாட்சி 3) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. அதனை இரும்பு என உருவகித்தது அன்பாகிய கசிவின்மை பற்றியாகும். மனத்தைக் கல் என்றது இறைவனது அருளுருவக் காட் சியை உள்ளுணர்வாற் கண்டிருந்தும் அவன் பிரிவை ஆற்றியிருக்கும் தன்மைபற்றியாகும். செவி இன்னதென்று அறியேன் என்றது இறை வனது அருளுபதேசங்களைக் கேட்ட செவி இப்பொழுது யாதாயிற்று என அறிகிலேன் என்றவாறு. இதன்கண்,முனைவன் பாதநன்மலர் பிரிந்திருத்தற்கேதுவான பிரா ரத்த வினையுடையேன் செய்யும் பாவனையும், அதற்கேதுவான மனமும், பாவனை செய்தற்குரிய அருளுபதேசத்தைப் பெற்ற செவியும் உயிரின் தூய்மைக்கேற்ற நிலையில் நில்லாமையைக் கூறுமுகத்தால் அவற்றை அதற் கேற்ற முறையில் அமையுமாறு அருள வேண்டுமென வேண்டிக்கொள்ளு தலால் ஆத்துமசுத்தி யென்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 37. 42. ஏனை யாவரு மெய்திட அலுற்றுமற் றின்னதென் றறியாத, தேனை ஆனெயைக் கரும்பிளின் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மானை நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம், ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயிர் ஓயாதே. ப-ரை: ஏனை யாலரும் எய்திடல் உற்று இன்னது என்று அறி யாத - மெய்யன்பரல்லாத மற்றை நான்முகன் முதலிய பிறர் எவரும் திருச்சதகம் 265 எய்தி இத்தன்மையுடையது என்று அறிய முடியாத. தேனை - தேன் போன்றனும்,ஆன் நெய்யை- பசுவின் நெய் போன் றனனும், கரும்பின் இன் தேறலை தருப்பஞ் சாற்றின் இனிய தெளிவு போன் றவனும் சிவனை சிவனெனும் நாமந் தனக்கேயுடையவனும், என் சிவலோகக் கோனை என்னையாளாகவுடைய சிவலோக நாயகனும், மான் அன்ன நோக்கிதன் கூறனை-மனின் நோக்குப்போலும் நோக்கினையுடைய உமையம்மையை இடப்பரகத்திலுடையவனுமாகிய இறைவனை, குருகிலேன்-யான் அடையப் பெற்றிலேன். யான் நெடுங்காலம் இருந்து ஊனை ஓம்புகின்றேன் -யான் உலகில் நெடுங்காலம் வாழ்ந்திருந்து ஊனுடம்பைப் பாதுகாக்க வேண்டி யவனாகின்றேன்; அதனால், உயிர் ஓயாதே கெடுவேன் - அதனால் என் உயிர் ஒழியாது கெடப்பெறுவேன். மெய்யன்பரல்லாத பிறர் எவரும் எய்திட லுற்று இத்தன்மையுடையது என்று அறியமுடியாத தேன் போன்றவனும் பசுவின் நெய்போன் நவனும் கருப்பஞ் சாற்றின் தெனிவு போன்றவலும் செம்பொருளாயுள்ளவனும் எனது சிவலோகநமகனும் உமையம்மையை இடப்பாகத்திலுடையவனு மாகிய இறைவனை அடையப்பெற்றிலேன்; யான் உலகில் நெடுங்காலம் வாழ்ந்திருந்து ஊனுடம்பைப் பாதுகாக்க வேண்டியவனாயிருக்கின்றேன். அதனால் என் உயிர் ஒழியாது கெடப்பெறுவேன் என்றவாறு. 2006. ஏனை யாவரும் என்றது இறைவனருளால் அவனைச் சார்ந்து அறிதற் குரிய மெய்யன்பரல்லாத மற்றைபோரைக் குறித்த. " யாவராயினு மன்பரன்றி யறியொணாமலர்ச் சோதியான்'' (சென்னிப் 1) என அடி கள் அருளியமையும் காண்க. ஏனையோராவார், "திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்" (120) என்பது முதலாக "ஒன்றுண் டில்லை யென் றறிவொளித்தும்'" (139) என்பது ஈருகத் திருவண்டப்பகுதியில் அருளிச் செய்யப்பட்டவர்களாவர். எய்திடதுற்று இன்னதென்றறியாதவென்றது எய்திடலுறதும் இன்ன தென்று அறிதலும் இல்லாத வென்றவாறு. "எய்தடலுற்று மற்றின்னதென் றறியாத" என்ற அடைமொழி தேனை, ஆளயை, கரும்பினின் தேறலை சிவனை. சிலலோகக்கோனை, மாலை ரோககிதன் கூறனை என்பவற்றறம் தனித்தவி சென்றியையும். இன்னது என அஃறிணை வாய்பாட்டாற் கூறியது பரம்பொருளை 'அது' எனக்கூறும் வடமொழிக் கொள்கைபற்றியாகும். தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலை என்று அடுக்கிக் கூறியது தனித்தனி போலுதலன்றி அவற்றின் கலப்புப் போன்றும் இருக்கும் இறைவன் அருளியன்பு பற்றியாகும். அவை "தேனையும் பாகியுங் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து" நீத்21. "நேனையும் பாகூயுங் கன்னிலையும் ஒத்து அம் 14. "
264 திருவாசக ஆராய்ச்சியுரை ஆள்வதற்குரியவன் விரைமலாத் திருப்பாத முற்றிலா விளந்தளிர் பிரிந்திருந்தும் ' ' சத 34 . பொருளா வெனைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை ' ' கோயின் மூத் 8 . என வருவனவற்றாலுமறிக . முனைவன் - கடவுள் . ' முனைவனே முறையோ ' ' முனைவனே ஆட்கொண்டாய் ( சத 22 : 27 ) என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க . முட்டிலேன் தலைகிறேன் என்றது முட்டிப்பிளந்திவேன் என்றவாறு . தலையை மோதிப் பிழத்தற்கு மோதப்படும் பொருள் வலிதாயிருக்க வேண்டுமாதலின் கற்றூண் என்பது வருவிக்கப்பட்டது . துள்ளித் தூண் மூட்டுமாங் கீழ் என்றார் நாலடியாரினும் . இனையன் - தன்மை ஒருமைக் குறிப்பு வினையாலணையும் பெயர் . ** பாவனை - இடைவிடாத் தியானம் பாவனை யாய கருத்தினில் வந்த பராவமுதாகாதே ( திருப்படையாட்சி 3 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . அதனை இரும்பு என உருவகித்தது அன்பாகிய கசிவின்மை பற்றியாகும் . மனத்தைக் கல் என்றது இறைவனது அருளுருவக் காட் சியை உள்ளுணர்வாற் கண்டிருந்தும் அவன் பிரிவை ஆற்றியிருக்கும் தன்மைபற்றியாகும் . செவி இன்னதென்று அறியேன் என்றது இறை வனது அருளுபதேசங்களைக் கேட்ட செவி இப்பொழுது யாதாயிற்று என அறிகிலேன் என்றவாறு . இதன்கண் முனைவன் பாதநன்மலர் பிரிந்திருத்தற்கேதுவான பிரா ரத்த வினையுடையேன் செய்யும் பாவனையும் அதற்கேதுவான மனமும் பாவனை செய்தற்குரிய அருளுபதேசத்தைப் பெற்ற செவியும் உயிரின் தூய்மைக்கேற்ற நிலையில் நில்லாமையைக் கூறுமுகத்தால் அவற்றை அதற் கேற்ற முறையில் அமையுமாறு அருள வேண்டுமென வேண்டிக்கொள்ளு தலால் ஆத்துமசுத்தி யென்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 37 . 42. ஏனை யாவரு மெய்திட அலுற்றுமற் றின்னதென் றறியாத தேனை ஆனெயைக் கரும்பிளின் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மானை நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயிர் ஓயாதே . - ரை : ஏனை யாலரும் எய்திடல் உற்று இன்னது என்று அறி யாத - மெய்யன்பரல்லாத மற்றை நான்முகன் முதலிய பிறர் எவரும் திருச்சதகம் 265 எய்தி இத்தன்மையுடையது என்று அறிய முடியாத . தேனை - தேன் போன்றனும் ஆன் நெய்யை- பசுவின் நெய் போன் றனனும் கரும்பின் இன் தேறலை தருப்பஞ் சாற்றின் இனிய தெளிவு போன் றவனும் சிவனை சிவனெனும் நாமந் தனக்கேயுடையவனும் என் சிவலோகக் கோனை என்னையாளாகவுடைய சிவலோக நாயகனும் மான் அன்ன நோக்கிதன் கூறனை - மனின் நோக்குப்போலும் நோக்கினையுடைய உமையம்மையை இடப்பரகத்திலுடையவனுமாகிய இறைவனை குருகிலேன் - யான் அடையப் பெற்றிலேன் . யான் நெடுங்காலம் இருந்து ஊனை ஓம்புகின்றேன் -யான் உலகில் நெடுங்காலம் வாழ்ந்திருந்து ஊனுடம்பைப் பாதுகாக்க வேண்டி யவனாகின்றேன் ; அதனால் உயிர் ஓயாதே கெடுவேன் - அதனால் என் உயிர் ஒழியாது கெடப்பெறுவேன் . மெய்யன்பரல்லாத பிறர் எவரும் எய்திட லுற்று இத்தன்மையுடையது என்று அறியமுடியாத தேன் போன்றவனும் பசுவின் நெய்போன் நவனும் கருப்பஞ் சாற்றின் தெனிவு போன்றவலும் செம்பொருளாயுள்ளவனும் எனது சிவலோகநமகனும் உமையம்மையை இடப்பாகத்திலுடையவனு மாகிய இறைவனை அடையப்பெற்றிலேன் ; யான் உலகில் நெடுங்காலம் வாழ்ந்திருந்து ஊனுடம்பைப் பாதுகாக்க வேண்டியவனாயிருக்கின்றேன் . அதனால் என் உயிர் ஒழியாது கெடப்பெறுவேன் என்றவாறு . 2006 . ஏனை யாவரும் என்றது இறைவனருளால் அவனைச் சார்ந்து அறிதற் குரிய மெய்யன்பரல்லாத மற்றைபோரைக் குறித்த . யாவராயினு மன்பரன்றி யறியொணாமலர்ச் சோதியான் ' ' ( சென்னிப் 1 ) என அடி கள் அருளியமையும் காண்க . ஏனையோராவார் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் ( 120 ) என்பது முதலாக ஒன்றுண் டில்லை யென் றறிவொளித்தும் ' ( 139 ) என்பது ஈருகத் திருவண்டப்பகுதியில் அருளிச் செய்யப்பட்டவர்களாவர் . எய்திடதுற்று இன்னதென்றறியாதவென்றது எய்திடலுறதும் இன்ன தென்று அறிதலும் இல்லாத வென்றவாறு . எய்தடலுற்று மற்றின்னதென் றறியாத என்ற அடைமொழி தேனை ஆளயை கரும்பினின் தேறலை சிவனை . சிலலோகக்கோனை மாலை ரோககிதன் கூறனை என்பவற்றறம் தனித்தவி சென்றியையும் . இன்னது என அஃறிணை வாய்பாட்டாற் கூறியது பரம்பொருளை ' அது ' எனக்கூறும் வடமொழிக் கொள்கைபற்றியாகும் . தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலை என்று அடுக்கிக் கூறியது தனித்தனி போலுதலன்றி அவற்றின் கலப்புப் போன்றும் இருக்கும் இறைவன் அருளியன்பு பற்றியாகும் . அவை தேனையும் பாகியுங் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து நீத் 21 . நேனையும் பாகூயுங் கன்னிலையும் ஒத்து அம் 14 .