திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

270 திருவாசக ஆராய்ச்சியுரை தீயில் வீழ்தலும் திண்வரை யுருள்தலும் செழுங்கடல் புகுதலுஞ் செய்யமாட்டாமை இறைபணிக்கு முரணாகும் என்பதுபற்றியாகும். அன்றியும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் உடனே கதியடையப்பெருாத வாறு பிராரத்தவினை உளதாதல் பற்றியுமாகும். துன்பமிகுதியாற் சாதற் குத் துணிவார் தீயில் வீழ்தல் முதலியன செய்தல். " இன்னுயி ரிவ ரீயா ராயி னன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்'' மணி 2 : 44-5. எனவும், "கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஒங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சார னாட குறும்89 எனவும் வருவனவற்றலு மறிக. புகுவேனே என்பதில் ஏகாரம் வினாப் பொருளிலும் எதிர்மறைப் பொருளிலும் வந்தது. இதன்கண், அடிகள் இறைவனது அருட்காட்சியை இழந்து நெடும் பொழுது இருக்க ஆற்றாதவராய் அவ்வாற்றாமையைத் தீர்த்தற்குத் தீயில் வீழ்ந்தும் திண்வரை உருண்டும் கடல்புக்கும் உயிர் விடவும் முடியா மைக்கு இரங்கி நனது உயிரின் தூய்மைக்கு வினைமாசினை நீக்கியருள வேண்டும் என்னும் குறிப்பினால் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாது காண்க. லிய பொருள் பே வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினை. யாதே. மானி லானிய நோக்கியர். படிறிடை மத்திடு தயிராகித், தேனி லாவிய திருவருள் புரிந்த வென் சிவனகர் புகப்போகேன். ஊனி லாவியை யோம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 11 ப-ரை : தேன் நிலாவிய திரு அருள் புரிந்த-தேனின் இனியதன்மை விளங்கும் திருவருளை விரும்பிச் செய்த, என் சிவன் நகர் புக போகேன்- என்னுடைய சிவபெருமானது பொன்னகருட் புகுதற்றுப் போகமாட்டா தவனாகிய யான், மான் நிலாவிய நேர்க்கியர் படிறு. இடை - மானினது நோக்கம்போல்து விளங்கும் நோக்கினையுடைய மகளிரது பொய்வாழ்வின் கண், மத்து இடு தயிர் ஆகி மத்திட்டுக் கடைந்த தவிர்போல மனம் கலக்குண்டு, வேனில்வேள் கணை கிழித்திட -இளவேனிற் காலத்திற்குரிய கருவேளாகிய மன்மதனின் மலரம்பு மனத்தைப் பிளக்க, மதி சூடும் அது தனை நினையாது- அப்பிளவில் மதியின் நிலவு கடுகின்ற மாறுபட்ட அந்தத் தன்பநிலையைக் கருதாமல், ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டு-அவற் றிற்கு உதவுவதாகிய இந்த ஊனுடர்பில் உயிரை வைத்துப் பாதுகாத் தற் பொருட்டு, உண்டு உடுத்து இருந்தேன் - இன்னமும் உண்டும் உடுத் தும் இருக்கின்றேன்; என் அறியாமையை என்னென்பேன். யை என்னென் திருச்சதகம் 271 தேனின் இனிமைத் தன்மை விளங்கும் திருவருளை விரும்பிச் செய்த என்னுடைய சிவபெருமானது சிவனருட் புகுதற்குப் போகமாட்டாதவனா கிய யான் மானிலாவிய நோக்கினையுடைய மகளிரது பொய் வாழ்வின் கண் மத்திட்ட தயிர்போல மனம் கலக்குண்டு அதனால் வேனில்வேன் கணை மனத்தைக் கிழித்திட அப்பிளப்பில் மதியின் நிலவு சுடுகின்றமாறு பட்ட அத்துன்பநிலையைக் கருதாமல் அவற்றிற்கு உதவுவதாகிய இந்த பாதுகாத்தற்பொருட்டு இன்னமும் ஊனுடம்பில் உயிரை வைத்துப் உண்டு உடுத்து இருக்கின்றேன். என் அறியாமையை என்னென்பேன். வேனில் - இளவேனிற்காலம், சித்திரை வைகாசி மாதங்கள். அக்காலத்து என்றார். மன்மதனது தொழிற்பாடு மிகுதியாதலின் கணை - அம்பு - 'வேளில்வேள் ' அவை ஐவகை மலர்கள். கிழித்தல் மனத்தை வருத்துதல். கூறுதல் காண்க. " சுறாஅக்கொடியான் கொடுமையை" (கலி 147 : 42) எனப் பிறரும் மதிசுட என்றது மதியின் நிலவு உடலிற்பட அது மனத்திற்குச் சூடாகத் தோன்ற என்றவாறு. "பிரிந் துலந்தவர்க்குயிர் சுடு விடமாய்...மவர்ந்தது நெடுநிலா மதனல் வேண்டவே" (கம்ப உண் டாட்டு 2) எனவும், "சுடர்கான்றெழுந்த வெண்டிங்கா ளென்னே சுடுதி', (நைடதம். சந்திரோபாவம்பனப் 10) எனவும் வருவன ஈண்டைக்கேற்ப அறியற்பாலன. அதுதனை என்றது மலரம்பு கிழிக்க மதிநிலவு சுடுதலா கிய உலகியலுக்கு மாறுபட்ட துன்பநிலையைக் குறித்தது. மனை ம மான் நிலாவிய நோக்கியர் என்றது மானினது நோக்கம் போன்று விளங்கும் நோக்கினையுடைய மகளிர் என்றவாறு. "மான் மறித் தனைய நேக்கி" "மானை நோக்கியர்" (சுந்8:2: 54:0) மானுவா மழைக் நிலாவு கணார்'" (நாவு 07:6, எனத் தேவாரத்து வருவளவுங் காண்க. தல் - விளங்குதல்."நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக வென்று வாழ்த்தி'" (திருப்பொற் 4) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈண்டு நோக்கியர் என்றது மானின் மருண்ட நோக்குப் போலும் அழகிய நோக்கத்தினால் நோய்நோக்கு நோக்கவல்ல மகளிரை. படிறு - பொய். படிறு-பொய் சூது களவு" எனப் பிங்கலந்தையில் 110: 727) வரு தல் காண்க. ஈண்டுப் பொய்வாழ்வை உணர்த்தியது. இனி வஞ்சனை யெனினுமமையும். "படிறு குய்யம் பகர்வ வஞ்சனை'' எனத் திவாகரத்து வருதலும் காண்க. மத்திடு தயிராதல்-மத்திட்ட தயிர்போல மனம் கலக்குண்டல். மந்துறு தண்டயி ரிற்புவன் தீக்கதுவக் கலங்கி ''மீத் 134. *மகளிர் நோக்கு பொதுநோக்கும் நோய்நோக்கும் அதனைத் தீர்க்குமருந்து நோக்குமென முவகைப்படும். "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்கு தல், காதலர் கண்ணேயுள" இருகோக் சிவளுண்க ணுள்ள தொரு நோக்கு. நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள் 1099; 1092) என வருவன காண்க. **
270 திருவாசக ஆராய்ச்சியுரை தீயில் வீழ்தலும் திண்வரை யுருள்தலும் செழுங்கடல் புகுதலுஞ் செய்யமாட்டாமை இறைபணிக்கு முரணாகும் என்பதுபற்றியாகும் . அன்றியும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டும் உடனே கதியடையப்பெருாத வாறு பிராரத்தவினை உளதாதல் பற்றியுமாகும் . துன்பமிகுதியாற் சாதற் குத் துணிவார் தீயில் வீழ்தல் முதலியன செய்தல் . இன்னுயி ரிவ ரீயா ராயி னன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர் ' ' மணி 2 : 44-5 . எனவும் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஒங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சார னாட குறும் 89 எனவும் வருவனவற்றலு மறிக . புகுவேனே என்பதில் ஏகாரம் வினாப் பொருளிலும் எதிர்மறைப் பொருளிலும் வந்தது . இதன்கண் அடிகள் இறைவனது அருட்காட்சியை இழந்து நெடும் பொழுது இருக்க ஆற்றாதவராய் அவ்வாற்றாமையைத் தீர்த்தற்குத் தீயில் வீழ்ந்தும் திண்வரை உருண்டும் கடல்புக்கும் உயிர் விடவும் முடியா மைக்கு இரங்கி நனது உயிரின் தூய்மைக்கு வினைமாசினை நீக்கியருள வேண்டும் என்னும் குறிப்பினால் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாது காண்க . லிய பொருள் பே வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினை . யாதே . மானி லானிய நோக்கியர் . படிறிடை மத்திடு தயிராகித் தேனி லாவிய திருவருள் புரிந்த வென் சிவனகர் புகப்போகேன் . ஊனி லாவியை யோம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே . 11 - ரை : தேன் நிலாவிய திரு அருள் புரிந்த - தேனின் இனியதன்மை விளங்கும் திருவருளை விரும்பிச் செய்த என் சிவன் நகர் புக போகேன் என்னுடைய சிவபெருமானது பொன்னகருட் புகுதற்றுப் போகமாட்டா தவனாகிய யான் மான் நிலாவிய நேர்க்கியர் படிறு . இடை - மானினது நோக்கம்போல்து விளங்கும் நோக்கினையுடைய மகளிரது பொய்வாழ்வின் கண் மத்து இடு தயிர் ஆகி மத்திட்டுக் கடைந்த தவிர்போல மனம் கலக்குண்டு வேனில்வேள் கணை கிழித்திட -இளவேனிற் காலத்திற்குரிய கருவேளாகிய மன்மதனின் மலரம்பு மனத்தைப் பிளக்க மதி சூடும் அது தனை நினையாது- அப்பிளவில் மதியின் நிலவு கடுகின்ற மாறுபட்ட அந்தத் தன்பநிலையைக் கருதாமல் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டு - அவற் றிற்கு உதவுவதாகிய இந்த ஊனுடர்பில் உயிரை வைத்துப் பாதுகாத் தற் பொருட்டு உண்டு உடுத்து இருந்தேன் - இன்னமும் உண்டும் உடுத் தும் இருக்கின்றேன் ; என் அறியாமையை என்னென்பேன் . யை என்னென் திருச்சதகம் 271 தேனின் இனிமைத் தன்மை விளங்கும் திருவருளை விரும்பிச் செய்த என்னுடைய சிவபெருமானது சிவனருட் புகுதற்குப் போகமாட்டாதவனா கிய யான் மானிலாவிய நோக்கினையுடைய மகளிரது பொய் வாழ்வின் கண் மத்திட்ட தயிர்போல மனம் கலக்குண்டு அதனால் வேனில்வேன் கணை மனத்தைக் கிழித்திட அப்பிளப்பில் மதியின் நிலவு சுடுகின்றமாறு பட்ட அத்துன்பநிலையைக் கருதாமல் அவற்றிற்கு உதவுவதாகிய இந்த பாதுகாத்தற்பொருட்டு இன்னமும் ஊனுடம்பில் உயிரை வைத்துப் உண்டு உடுத்து இருக்கின்றேன் . என் அறியாமையை என்னென்பேன் . வேனில் - இளவேனிற்காலம் சித்திரை வைகாசி மாதங்கள் . அக்காலத்து என்றார் . மன்மதனது தொழிற்பாடு மிகுதியாதலின் கணை - அம்பு - ' வேளில்வேள் ' அவை ஐவகை மலர்கள் . கிழித்தல் மனத்தை வருத்துதல் . கூறுதல் காண்க . சுறாஅக்கொடியான் கொடுமையை ( கலி 147 : 42 ) எனப் பிறரும் மதிசுட என்றது மதியின் நிலவு உடலிற்பட அது மனத்திற்குச் சூடாகத் தோன்ற என்றவாறு . பிரிந் துலந்தவர்க்குயிர் சுடு விடமாய் ... மவர்ந்தது நெடுநிலா மதனல் வேண்டவே ( கம்ப உண் டாட்டு 2 ) எனவும் சுடர்கான்றெழுந்த வெண்டிங்கா ளென்னே சுடுதி ' ( நைடதம் . சந்திரோபாவம்பனப் 10 ) எனவும் வருவன ஈண்டைக்கேற்ப அறியற்பாலன . அதுதனை என்றது மலரம்பு கிழிக்க மதிநிலவு சுடுதலா கிய உலகியலுக்கு மாறுபட்ட துன்பநிலையைக் குறித்தது . மனை மான் நிலாவிய நோக்கியர் என்றது மானினது நோக்கம் போன்று விளங்கும் நோக்கினையுடைய மகளிர் என்றவாறு . மான் மறித் தனைய நேக்கி மானை நோக்கியர் ( சுந் 8 : 2 : 54 : 0 ) மானுவா மழைக் நிலாவு கணார் ' ( நாவு 07 : 6 எனத் தேவாரத்து வருவளவுங் காண்க . தல் - விளங்குதல் . நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக வென்று வாழ்த்தி ' ( திருப்பொற் 4 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈண்டு நோக்கியர் என்றது மானின் மருண்ட நோக்குப் போலும் அழகிய நோக்கத்தினால் நோய்நோக்கு நோக்கவல்ல மகளிரை . படிறு - பொய் . படிறு - பொய் சூது களவு எனப் பிங்கலந்தையில் 110 : 727 ) வரு தல் காண்க . ஈண்டுப் பொய்வாழ்வை உணர்த்தியது . இனி வஞ்சனை யெனினுமமையும் . படிறு குய்யம் பகர்வ வஞ்சனை ' ' எனத் திவாகரத்து வருதலும் காண்க . மத்திடு தயிராதல் - மத்திட்ட தயிர்போல மனம் கலக்குண்டல் . மந்துறு தண்டயி ரிற்புவன் தீக்கதுவக் கலங்கி ' ' மீத் 134 . * மகளிர் நோக்கு பொதுநோக்கும் நோய்நோக்கும் அதனைத் தீர்க்குமருந்து நோக்குமென முவகைப்படும் . ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்கு தல் காதலர் கண்ணேயுள இருகோக் சிவளுண்க ணுள்ள தொரு நோக்கு . நோய்நோக்கொன் றந்நோய் மருந்து ( குறள் 1099 ; 1092 ) என வருவன காண்க . **