திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நள்ளுளும் என்பது நள்ளும் என நின்றது. நள் - நடு. நள்ளிராவும் நண்பகலும்' (திவ். திருவாய் (4) 7 2) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. நள் கீழ் மேல் என்பன நடுவுலகம் கீழுலகம் மேலுலகங்களைக் குறித்தன. உள்ளும் உம்மும் இடப்பொருளையும் எண்ணுப் பொருயும் குறித்தன. கள்ளும் கீபூளும் மேலுளும் என்றபின் யாவுளும் என்றது அவ்வுலகங்களிலுள்ள இயங்குநிணை நிலத்திணையான எல்லாப்பொருள் களையும் குறித்தது. எள்ளும் எண்ணெயும் போல்கின்ற என்றது எள்ளின் கண் எண்ணெய் எங்குங் கலந்து மறைந்து நிற்றல் போல இறைவன் எங்கும் வியாபித்து மறைந்திருத்தலைக் குறித்தது. 282 "வீறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமறைச் சோதியான் ” (தே. 204:10) என்ற ஆளுடையரசர் வாக்கும் ஈண்டு கருதத்தக்கது. எந்தை கொன்றையான் அன்பரிற் கூய் எனைப்பணி கொள்ளும் கில் என முடிக்க. இதங்கண், இறைவன் என்னைக் கூய்ப்பணி கொள்ளுமாயின் கைம் மாறு கொடுக்கப்பெறலாமே என்னும் ஆகாரம் தோன்றுதலால் கைம் மாறு கொடுத்தல் என்னும் ஐந்தார்பத்து நூதலியபொருள் போந்தவாறு கண்க, 51. எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தளன் யாவரும் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 46. ப-ரை : எந்தை யாய் எம்பிரான்-எமக்குத் தந்தையும் தாயும் தலை வனுமாயுள்ளவன் ; மற்றும் யாவர்க்கும் தங்கை தாய் தம்பிரான்-மற்றும் தேவர் முதலிய யாவர்க்கும் தந்தையும் தாயும் தலைவனுமாவன்; தனக்கு அஃது இலான்-ஆயின் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனுமாகிய அம் முறைமை இல்லாதவன்; யாவரும் சிந்தையாலும் அறிவு அரும் செல்வன் எவ்வகை மேம்பட்டிவரும் மனத்தாலும் அறிதற்கரிய விடுபெறாகிய செல் வத்தை அருள்பவன்; முந்தி என் உள் புகுந்தனன்-முன்னர் என் உள் ளத்தினுள் புகுந்தனன்; பின்னர்க் காட்சியையுந் தந்து ஆட்சிகொண்டருளி மறைந்தனன். எந்தையும் தாயும் எம்பிரானுமாயுள்ளவன்; மற்றும் யாவர்க்கும் தந்தை தாய் எம்பிரானுமாவன்; ஆயின் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனு யாகிய அம்முறைமை இல்லாதவன்; எவ்வ:ை நீர்பட்டினம் சிந்தை யானும் அறிதற்கரிய செல்வன்; முந்தி என் புதர்தளன்; பின்னர்க் காட்சியைத் தந்து ஆட்கொண்டருளி மறைந்தனை என்பதாம். "எம் தந்தை-எந்தை என்றயது, யாம்-தாய். கடுங்கா தலகள், யெந்தையு நிவதுறப்பொருகள் கசிய என்ணி ம் 12. 12) என் திருச்சதகம் 283 புழியும் இப்பொருட்டாதல் காண்க. எமக்குத் தந்தையாயும் தாயாயும் தலைவனுபாயுள்ளான் இறைவனே என்பார் 'எந்தை யாயெம்பிரான்' என்றார். 'எந்தையு மெந்தை தந்தை தந்தையுமாய வீசர்" (நாவு 64: 7) எனவும் "எந்தையை எந்தை தந்தைபிரானை'' (சுந் 57 : 4) எனவும் தேவா ரத்து வருவனவுங் காண்க. யாவர்க்கும் என்னும் உம்மை உயர்வுப்பொருளிலும் முற்றுப் பிரமன் பொருளிலும் வந்தது. யாவர்க்கும் என்றதனால் திருமால் முனிவர் முதலாயிஞருங் கொள்ளப்படுவர். ஒருவற்குத் தந்தையும் தாயும் தலைவனுமாருள்ளார் தயக்கும் அம்முறையையீனையுடையராவர். முமு முதலிறைவன் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனுமில்ல தவனாதலின் தனக்கு அஃதிலான்' என்றார். "தாயுமிலி தந்தையிலி தான் றனியன்" (ஏாழல் 3) அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க. 'அவர் இலான்' என்னாது அல்லேன் என அஃறிணைவாய்பாட்டாற் கூறியது தந்தை தாய் தலைவன் உலகிலுள்ள முறைமை இல்லாதவன் என்பது விளக்குதற் பொருட்டாகும். " அடிகள் உலகவாழ்விற் பயனில்லையெனத் தெளிந்து இறைவன் அருள்வாழ்விற் புகுதற்குரிய பக்குவநிலை உண்டானபொழுதே இறைவன் தன்னுள் புகுந்தனன் என்பார். "முந்தி யென்னுள் புகுந்தனன் என் றார். அருள் வாழ்வை விரும்புவார் அடையும் பக்குவநிலை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். அந்நால்வகை நி ை யுள் அடிகள் தீவிரதம் என்னும் நிலைக்கண் இருந்தனர் என்பது இறை வன் வலியவந்து ஆட்கொண்டமையாலறியப்படும். அடிகளின் பக்குவ நிக்கண்டு உள்ளத்திற் புகுந்த இறைவன், வெளிப்பட்டுப் பரமாசாரிய னாய்க் காட்சிகொடுத்து ஆட்கொண்டருளி மறைந்தமையை நினைந்து வருந்துகின்ற அடிகள் முந்தியென்னுள் புகுந்தனன்; பின்னர் பரமாசாரிய வடிவங்காட்டி ஆட்கொண்டருளினன்: இப்பொழுது மறைந்து விட்டனன் என்று இரங்கிக் கூறும் தொனிப்பொருள் 'முந்தியென்னுள் புகுந்த "ன்' என்பதனுள் அடங்கியுள்ளது. உலகத்தில் ஒரு பொருளை அறியுங்கால் காண்டல் கருதல் உரை என்னும் மூவகை அளவைகளால் அறியப்படும். காட்சியளவையானும் உரையளவையாலும் அறியப்படாத இறைவன் கருதவளவையால் அறி யப்படுவனோவெனின் அதனாலும் அறியப்படான். அங்ஙனமாயின் இறை வன் இல்பொருளோவெனின் அற்றன்று; இறைவன் பிரமாணங்களால் அறியப்படாத அப்பிரமேயனாகலின். யாவரும் என்புழி உம்மை உயர்வுப் பொருளிலும் முற்றுப்பொருளிலும் வந்தது. மொழியாலன்றிச் சிந்தையா லும் என உம்மை இறந்ததுகழீஇய எச்சவும்மை, இதுபற்றி இறைவன் வாக்குமனாதிதன் எனப்படுவான்.
திருவாசக ஆராய்ச்சியுரை நள்ளுளும் என்பது நள்ளும் என நின்றது . நள் - நடு . நள்ளிராவும் நண்பகலும் ' ( திவ் . திருவாய் ( 4 ) 7 2 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . நள் கீழ் மேல் என்பன நடுவுலகம் கீழுலகம் மேலுலகங்களைக் குறித்தன . உள்ளும் உம்மும் இடப்பொருளையும் எண்ணுப் பொருயும் குறித்தன . கள்ளும் கீபூளும் மேலுளும் என்றபின் யாவுளும் என்றது அவ்வுலகங்களிலுள்ள இயங்குநிணை நிலத்திணையான எல்லாப்பொருள் களையும் குறித்தது . எள்ளும் எண்ணெயும் போல்கின்ற என்றது எள்ளின் கண் எண்ணெய் எங்குங் கலந்து மறைந்து நிற்றல் போல இறைவன் எங்கும் வியாபித்து மறைந்திருத்தலைக் குறித்தது . 282 வீறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமறைச் சோதியான் ( தே . 204 : 10 ) என்ற ஆளுடையரசர் வாக்கும் ஈண்டு கருதத்தக்கது . எந்தை கொன்றையான் அன்பரிற் கூய் எனைப்பணி கொள்ளும் கில் என முடிக்க . இதங்கண் இறைவன் என்னைக் கூய்ப்பணி கொள்ளுமாயின் கைம் மாறு கொடுக்கப்பெறலாமே என்னும் ஆகாரம் தோன்றுதலால் கைம் மாறு கொடுத்தல் என்னும் ஐந்தார்பத்து நூதலியபொருள் போந்தவாறு கண்க 51. எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தளன் யாவரும் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே . 46 . - ரை : எந்தை யாய் எம்பிரான் - எமக்குத் தந்தையும் தாயும் தலை வனுமாயுள்ளவன் ; மற்றும் யாவர்க்கும் தங்கை தாய் தம்பிரான் - மற்றும் தேவர் முதலிய யாவர்க்கும் தந்தையும் தாயும் தலைவனுமாவன் ; தனக்கு அஃது இலான் - ஆயின் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனுமாகிய அம் முறைமை இல்லாதவன் ; யாவரும் சிந்தையாலும் அறிவு அரும் செல்வன் எவ்வகை மேம்பட்டிவரும் மனத்தாலும் அறிதற்கரிய விடுபெறாகிய செல் வத்தை அருள்பவன் ; முந்தி என் உள் புகுந்தனன் - முன்னர் என் உள் ளத்தினுள் புகுந்தனன் ; பின்னர்க் காட்சியையுந் தந்து ஆட்சிகொண்டருளி மறைந்தனன் . எந்தையும் தாயும் எம்பிரானுமாயுள்ளவன் ; மற்றும் யாவர்க்கும் தந்தை தாய் எம்பிரானுமாவன் ; ஆயின் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனு யாகிய அம்முறைமை இல்லாதவன் ; எவ்வ :ை நீர்பட்டினம் சிந்தை யானும் அறிதற்கரிய செல்வன் ; முந்தி என் புதர்தளன் ; பின்னர்க் காட்சியைத் தந்து ஆட்கொண்டருளி மறைந்தனை என்பதாம் . எம் தந்தை - எந்தை என்றயது யாம் - தாய் . கடுங்கா தலகள் யெந்தையு நிவதுறப்பொருகள் கசிய என்ணி ம் 12. 12 ) என் திருச்சதகம் 283 புழியும் இப்பொருட்டாதல் காண்க . எமக்குத் தந்தையாயும் தாயாயும் தலைவனுபாயுள்ளான் இறைவனே என்பார் ' எந்தை யாயெம்பிரான் ' என்றார் . ' எந்தையு மெந்தை தந்தை தந்தையுமாய வீசர் ( நாவு 64 : 7 ) எனவும் எந்தையை எந்தை தந்தைபிரானை ' ' ( சுந் 57 : 4 ) எனவும் தேவா ரத்து வருவனவுங் காண்க . யாவர்க்கும் என்னும் உம்மை உயர்வுப்பொருளிலும் முற்றுப் பிரமன் பொருளிலும் வந்தது . யாவர்க்கும் என்றதனால் திருமால் முனிவர் முதலாயிஞருங் கொள்ளப்படுவர் . ஒருவற்குத் தந்தையும் தாயும் தலைவனுமாருள்ளார் தயக்கும் அம்முறையையீனையுடையராவர் . முமு முதலிறைவன் தனக்குத் தந்தையும் தாயும் தலைவனுமில்ல தவனாதலின் தனக்கு அஃதிலான் ' என்றார் . தாயுமிலி தந்தையிலி தான் றனியன் ( ஏாழல் 3 ) அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க . ' அவர் இலான் ' என்னாது அல்லேன் என அஃறிணைவாய்பாட்டாற் கூறியது தந்தை தாய் தலைவன் உலகிலுள்ள முறைமை இல்லாதவன் என்பது விளக்குதற் பொருட்டாகும் . அடிகள் உலகவாழ்விற் பயனில்லையெனத் தெளிந்து இறைவன் அருள்வாழ்விற் புகுதற்குரிய பக்குவநிலை உண்டானபொழுதே இறைவன் தன்னுள் புகுந்தனன் என்பார் . முந்தி யென்னுள் புகுந்தனன் என் றார் . அருள் வாழ்வை விரும்புவார் அடையும் பக்குவநிலை மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நால்வகைப்படும் . அந்நால்வகை நி யுள் அடிகள் தீவிரதம் என்னும் நிலைக்கண் இருந்தனர் என்பது இறை வன் வலியவந்து ஆட்கொண்டமையாலறியப்படும் . அடிகளின் பக்குவ நிக்கண்டு உள்ளத்திற் புகுந்த இறைவன் வெளிப்பட்டுப் பரமாசாரிய னாய்க் காட்சிகொடுத்து ஆட்கொண்டருளி மறைந்தமையை நினைந்து வருந்துகின்ற அடிகள் முந்தியென்னுள் புகுந்தனன் ; பின்னர் பரமாசாரிய வடிவங்காட்டி ஆட்கொண்டருளினன் : இப்பொழுது மறைந்து விட்டனன் என்று இரங்கிக் கூறும் தொனிப்பொருள் ' முந்தியென்னுள் புகுந்த ன் ' என்பதனுள் அடங்கியுள்ளது . உலகத்தில் ஒரு பொருளை அறியுங்கால் காண்டல் கருதல் உரை என்னும் மூவகை அளவைகளால் அறியப்படும் . காட்சியளவையானும் உரையளவையாலும் அறியப்படாத இறைவன் கருதவளவையால் அறி யப்படுவனோவெனின் அதனாலும் அறியப்படான் . அங்ஙனமாயின் இறை வன் இல்பொருளோவெனின் அற்றன்று ; இறைவன் பிரமாணங்களால் அறியப்படாத அப்பிரமேயனாகலின் . யாவரும் என்புழி உம்மை உயர்வுப் பொருளிலும் முற்றுப்பொருளிலும் வந்தது . மொழியாலன்றிச் சிந்தையா லும் என உம்மை இறந்ததுகழீஇய எச்சவும்மை இதுபற்றி இறைவன் வாக்குமனாதிதன் எனப்படுவான் .