திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

288 திருவாசக ஆராய்ச்சியுரை மாறன்றி முன்னது அகரத்தைக் குறிப்பது எனவும், பின்னது உகரத்தை யும் மகரத்தையும் குறிப்பது எனவும் கொண்டு அம்மூன்று எழுத்துக் களும் சேர்ந்து பிரணவத்தைக் குறிக்கும் எனப்பொருள் கோடல் இயை யாமை காண்க. இனி, எட்டினோடிரண்டு பத்து: அது இறைவன் பால் வைக்கும் பத்திக்குப் பெயராய் அப்பத்தியில்லாத என்னை எனவும் பொருள் படும். பத்து என்பது பத்தியைக் குறித்தலை "பத்துடை யடியவர்க் கெளியவன்" (தவ். திருவாய் (1) 3:1) என்புழிக் காண்க. இதன்கண், என்னை ஆண்டு பட்டிமண்டபம் ஏற்றினை எனவும் என்னியல்பை அறியாத என்னை உயர்வடையச் செய்தனை எனவும் அடி கள் கூறுமுகத்தால் இவற்றிற்கு மாள் செய்யும் கைம்மாறு யாதோவென அடிகள் வருந்துதல் குறிப்பிற் புலப்படுதலால் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 49. 54. அறின னேயமு தேயடி நாயினேன் அறின னாகக்கொண் டோஎனை யாண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிய றோவல்ல ஜோவரு ளீ+னே. படரை: அறிவனே - அறிவுருவானவனே, அமுதே-அமுகத்தன்மை யுடையவனே, அடி நாயினேன் எனை- கீழாகிய நயின் தன்மையடையவ னாகிய என்னை அறிவன் ஆக கொண்டோ ஆண்டது - அறியத்தக்கவன் எனத் திருவுள்ளம் பற்றியோ ஆட்கொண்டாளியது ? ஆண்ட நாள் கண் டது அறிவிலாமை அன்றே அடியேனை ஆட்கொண்டருளீய காவத்தில் யான் கண்டது அறிவிலாமை அன்னே? அறிவனோ அல்லனோ ஈசனே அருள். இந்நிலையில் யான் அறிவுடையேனோ அறிவில்லேனோ அருளிச் செய்வாயாக. அறிவனே அதே கீழாகிய நாயின் தன்மையுடையேனாகிய என்னை அறியத்தக்கவன் எனத் திருவுள்ளம் பற்றியோ ஆட்கொண்டருளியது ? அடியேனை ஆட்கொண்டருளிய நாளில் யான் கண்டது அறிவிலாமை அன்றே; இந்நிலையில் யான் அறிவுடையேனோ அறிவில்லேனோ அருளிச் செய்வாயாக என்பதாம். கரை அறிவது என்பது இயல்பாகவே எல்லாமறிபவன் என்னும் அவனது இறைமைக் குணத்தைக் குறித்து. உண்டாரை அமுது தன்னை திரை மூப்புச் சாக்காடுகளின்றி இனிதிருக்கச் செய்வது. இறைவனும் தம்மையடைந்த பக்குவள்களுக்குப் பேராவோமிலாப் பிரிவில்லா மறவர் நிளையா அளவிலா இன்பத்தன்மையை அருளுதலின் அமுதே என்றார். அடி என்பது ஈண்டு கீழ்மைப் பொருட்டு. அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது என்றது அறியுந் தகுதி என்பாலீருப்பதாகத் திருவுள்ளமபற்றியோ என்னை ஆட்கொண்டருளியது திருச்சதகம் 289 என்றவாறு, இங்ஙனம் அடிகள் வினாவுமாற்றால் தகுதியுடையேன் அல் லன் என்பது கூறியதாகும். அதனை 'அறிவிலாமை யன்றே யான் கண் டது' என்பதும் வலியுறுத்தும். ஆண்டநாள் கண்டது அறியாமை யன்றே என்றது, அடிகள் இறை வன் தம்மை ஆட்கொண்டபொழுது தம்பால் தாம் கண்டது அறியாமை யல்லவா என்பதனால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு மெய்யுணர்வினை அடைந்த அடிகள் தமது முன்னைய நிலையை எண்ணிக் கூறியதாகும். இதனை அறிதோ றறியாமை கண்டற்றால்' என்னும் திருக்குறள் வலி யுறுத்தி நிற்றல் காண்க. அறிவனோ அல்லனோ அருள் என்றது அறியுந் தகுதியுடையேனாகக் கொண்டு நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் ஆட்கொண்டபின் அறி விலாமையாகிய முன்னைய நிலையை அறிந்தேன்; ஆட்கொண்டமையால் அறிவுடையேனாயின் நின் அருட்காட்சியைக் கண்ட யான் பின் அதனைப் பிரியப்பெறேன் இப்பொழுது பிரியப்பெற்றமையால் அறிவிலனாகின் றேன். ஆதலால் அறிவிலனாகின்ற நிலைமையை நீக்கி நின் திருவடிக் காட்சியைத் தந்தருளவேண்டும் என்பது கருத்து. இதன்கண், இறைவனது அருட்காட்சியைப் பிரிந்த அடிகள் கைம் மாறு கொடுக்கமாட்டாமையொடு பிரிந்தமையையும் ஆற்றாராய் அக்காட் சியை அருளவேண்டும் என்னும் கருத்துத் தோன்றுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 50. 6. அநுபோக சுத்தி அநுபோக சுத்தியென்பது சிவானுபவத்தின் பொருட்டு உயிர் தன் அநுபவங்களைச் சுத்திசெய்தல். அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம். 55. ஈ னேயென் ளேம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேயம் பலவனே செய்வ தொவ்றும் அறியேனே. ப-ரை: ஈசனே -எல்லா வுயிர்களுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் இறைவனே, என் எம்மானே-எனக்கு அருள் செய்யுமாறு எழுந்தருளிவந்த எங்கள் தலைவனே எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெரியோனே, 37
288 திருவாசக ஆராய்ச்சியுரை மாறன்றி முன்னது அகரத்தைக் குறிப்பது எனவும் பின்னது உகரத்தை யும் மகரத்தையும் குறிப்பது எனவும் கொண்டு அம்மூன்று எழுத்துக் களும் சேர்ந்து பிரணவத்தைக் குறிக்கும் எனப்பொருள் கோடல் இயை யாமை காண்க . இனி எட்டினோடிரண்டு பத்து : அது இறைவன் பால் வைக்கும் பத்திக்குப் பெயராய் அப்பத்தியில்லாத என்னை எனவும் பொருள் படும் . பத்து என்பது பத்தியைக் குறித்தலை பத்துடை யடியவர்க் கெளியவன் ( தவ் . திருவாய் ( 1 ) 3 : 1 ) என்புழிக் காண்க . இதன்கண் என்னை ஆண்டு பட்டிமண்டபம் ஏற்றினை எனவும் என்னியல்பை அறியாத என்னை உயர்வடையச் செய்தனை எனவும் அடி கள் கூறுமுகத்தால் இவற்றிற்கு மாள் செய்யும் கைம்மாறு யாதோவென அடிகள் வருந்துதல் குறிப்பிற் புலப்படுதலால் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 49 . 54. அறின னேயமு தேயடி நாயினேன் அறின னாகக்கொண் டோஎனை யாண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிய றோவல்ல ஜோவரு ளீ + னே . படரை : அறிவனே - அறிவுருவானவனே அமுதே - அமுகத்தன்மை யுடையவனே அடி நாயினேன் எனை- கீழாகிய நயின் தன்மையடையவ னாகிய என்னை அறிவன் ஆக கொண்டோ ஆண்டது - அறியத்தக்கவன் எனத் திருவுள்ளம் பற்றியோ ஆட்கொண்டாளியது ? ஆண்ட நாள் கண் டது அறிவிலாமை அன்றே அடியேனை ஆட்கொண்டருளீய காவத்தில் யான் கண்டது அறிவிலாமை அன்னே ? அறிவனோ அல்லனோ ஈசனே அருள் . இந்நிலையில் யான் அறிவுடையேனோ அறிவில்லேனோ அருளிச் செய்வாயாக . அறிவனே அதே கீழாகிய நாயின் தன்மையுடையேனாகிய என்னை அறியத்தக்கவன் எனத் திருவுள்ளம் பற்றியோ ஆட்கொண்டருளியது ? அடியேனை ஆட்கொண்டருளிய நாளில் யான் கண்டது அறிவிலாமை அன்றே ; இந்நிலையில் யான் அறிவுடையேனோ அறிவில்லேனோ அருளிச் செய்வாயாக என்பதாம் . கரை அறிவது என்பது இயல்பாகவே எல்லாமறிபவன் என்னும் அவனது இறைமைக் குணத்தைக் குறித்து . உண்டாரை அமுது தன்னை திரை மூப்புச் சாக்காடுகளின்றி இனிதிருக்கச் செய்வது . இறைவனும் தம்மையடைந்த பக்குவள்களுக்குப் பேராவோமிலாப் பிரிவில்லா மறவர் நிளையா அளவிலா இன்பத்தன்மையை அருளுதலின் அமுதே என்றார் . அடி என்பது ஈண்டு கீழ்மைப் பொருட்டு . அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது என்றது அறியுந் தகுதி என்பாலீருப்பதாகத் திருவுள்ளமபற்றியோ என்னை ஆட்கொண்டருளியது திருச்சதகம் 289 என்றவாறு இங்ஙனம் அடிகள் வினாவுமாற்றால் தகுதியுடையேன் அல் லன் என்பது கூறியதாகும் . அதனை ' அறிவிலாமை யன்றே யான் கண் டது ' என்பதும் வலியுறுத்தும் . ஆண்டநாள் கண்டது அறியாமை யன்றே என்றது அடிகள் இறை வன் தம்மை ஆட்கொண்டபொழுது தம்பால் தாம் கண்டது அறியாமை யல்லவா என்பதனால் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு மெய்யுணர்வினை அடைந்த அடிகள் தமது முன்னைய நிலையை எண்ணிக் கூறியதாகும் . இதனை அறிதோ றறியாமை கண்டற்றால் ' என்னும் திருக்குறள் வலி யுறுத்தி நிற்றல் காண்க . அறிவனோ அல்லனோ அருள் என்றது அறியுந் தகுதியுடையேனாகக் கொண்டு நின்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் ஆட்கொண்டபின் அறி விலாமையாகிய முன்னைய நிலையை அறிந்தேன் ; ஆட்கொண்டமையால் அறிவுடையேனாயின் நின் அருட்காட்சியைக் கண்ட யான் பின் அதனைப் பிரியப்பெறேன் இப்பொழுது பிரியப்பெற்றமையால் அறிவிலனாகின் றேன் . ஆதலால் அறிவிலனாகின்ற நிலைமையை நீக்கி நின் திருவடிக் காட்சியைத் தந்தருளவேண்டும் என்பது கருத்து . இதன்கண் இறைவனது அருட்காட்சியைப் பிரிந்த அடிகள் கைம் மாறு கொடுக்கமாட்டாமையொடு பிரிந்தமையையும் ஆற்றாராய் அக்காட் சியை அருளவேண்டும் என்னும் கருத்துத் தோன்றுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 50 . 6. அநுபோக சுத்தி அநுபோக சுத்தியென்பது சிவானுபவத்தின் பொருட்டு உயிர் தன் அநுபவங்களைச் சுத்திசெய்தல் . அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் . 55. னேயென் ளேம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேயம் பலவனே செய்வ தொவ்றும் அறியேனே . - ரை : ஈசனே -எல்லா வுயிர்களுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் இறைவனே என் எம்மானே - எனக்கு அருள் செய்யுமாறு எழுந்தருளிவந்த எங்கள் தலைவனே எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெரியோனே 37