திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

290 திருவாசக ஆராய்ச்சியுரை என் பிறவி நாசனே எனது பிறப்பை ஒழிப்பவனே. தேசனே - ஞான ஒளி வடிவினனே,அம்பலவனே - சிதாகாயத்தையுடையவனே, யாதும் ஒன்று அல்லா பொல்லா நாயான நீசனேனை ஏதும் ஒரு பொருளாக மதிக்கப் படாத தீமையுடைய நாயாகவுள்ள இழிவுடையவனாகிய என்னை,ஆண் டாய்க்கு-ஆட்கொண்டருளிய கின்னை, நான் நினைக்க மாட்டேன்-நான் இடையீடின்றி நினைக்கமாட்டாதவனாயிருக்கின்றேன், செய்வது ஒன்றும் அறியேன் - அதனால் செய்யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன். இனிச்ே ஈசனே, என் எம்மானே,எந்தைபெருமானே, என்பிறவி நாசனே, தேசனே அம்பலவனே. யாதும் ஒருபொருளாக மதிக்கப்படாத பொல்லா நாயாகவுள்ள நீசனேனை ஆட்கொண்டருளிய நின்னை நான் இடையீடின்றி நினைக்கவுமாட்டாதவனாயிருக்கின்றேன்; அதனால் யான் இனிச் செய்யத் தக்கது ஒன்றையும் அறிகின் றிலேன் என்பதாம். ஈசன்.சித்தம் அசித்துமாகிய பிரபஞ்சங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் "ஈசான; சர்வ வித்யானாம் ஈஸ்வர. சர்வ பூதானாம்" என வேதம் கூறுமாறும் காண்க, என் எம்மானே என்றது இறைவன் அருள் செய்யவேண்டி வலிய எழுந்தருளி வந்த உரிமைபற்றியாகும். எந்தைபெருமான் என்பதில் விளியுருபாகிய ஏ தொக்கது "யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்'' (சத) எனப் பிறிதோ ரிடத்து அருளிச் செய்த அடிகள், ஈண்டு என்பிறவி நாசனே என்றது இனிப்பிறவி உண்டாகாதலாறு என்பிறவியை நாசஞ் செய்தமையால் எடுத்த பிறவியின் ஒழிவாகிய இறவியினால் துன்பமுனதாகாது என்னும் கருத்துப் பற்றியாகும். ஆண்டாய்க்கு என்னும் நான்காவது இரண்டாவதன் பொருட்கண் வந்தது. நினைத்தல், ஈண்டு இடையீடின்றி நினைத்தலைக் குறித்தது. அங்ஙனம் நினைக்க முடியாமை உலக அனுபவங்கள் தாக்குவதாலாகும். அத்தாக்குதலை மீக்கியருள வேண்டும் என்பதே இப்பாட்டில் வேண்டிக் கொண்ட பொருளாகும். தேசன் - ஒளிவடிவினன். தேசு-ஒளி. செய்வதொன்றும் அறியேனே என்றது எடுத்தபிறப்புக்குரிய பிரா ரத்த வினையை அநுபவித்துக் கொண்டிருக்கும் யான் அந்த அநுபோகங் களினால் தாக்குதலடைந்து நின்னை இடையீடின் றி நினைக்கும் வழி ஒன்றை யும் அறிகின்றிலேன் என்பதாம். இதன்கன், நீசனேனை ஆண்டாயை நினைக்கமாட்டேன் என்றமை யாலும், செய்வதொன்றுமறியேன் என்றமையாலும் பிராரத்த அனுபவங் கள் தாக்குகின்றன; அவற்றை நீக்கியருளவேண்டும் என்னும் வேண்டு கோள் பெறப்படுதலின், அதுபோகசுத்தி யென்னும் ஆரும்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 51. 56. திருச்சதகம் செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற்பாத மலர்கரணாப் பொய்யர் பெறும்பே நத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாத மேவக் கண்டுங் கேட்டிருந்தும் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. பெய்ய 291 னேன் நாள் . பரை: போர் ஏறே-பொறி வாயில்களாகிய ஐந்து யானைகளையும் அழிக்கும் போரில் அரியேறு போன்றவனே, பொய் இலா மெய்யர்- நிலையில்லாத பொய்யாகிய உலகவாழ்விற் பற்றற்ற மெய்யன்பர்கள், வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும்-நறுமணம் நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடிகளை அடைதலை நேரிற் கண்டும், கேட்டிருந்தும் - நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும், பொய்யனேன். நான்-அந்நெறியிற் றலைப்படமாட்டாது நிலையற்ற பொய்யாகிய உடலோடு கூடிவாழும் வாழ்க்கையை உடையேனாகிய யான், உண்டு உடுத்து இங்கு இருப்பதா னேன் - இவ்வுடலைப் பேணும் பொருட்டு உண்டும் உடுத்தும் இருப்பவ னாயினேன்; செய்வது அறியா சிறுநாயேன் - இந்நிலையினை நீக்குதற்குச் செய்யத்தக்கது இன்னதென்று அறியாத கீழாகிய நாய்போன்ற யான். செம்பொன் பாத மலர் காணா-சிவந்த பொன்போன்ற திருவடிமலர்களைக் காணும் பேறு இல்லாத, பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறு தற்கு உரியேன் - நிலையில்லாத உலக வாழ்க்கையையுடையார் பெறுகின்ற துன்பப்பேறுகள் அவ்வளவினையும் பெறுதற்குரியவனாகின்றேன்; இது தகுமோ? போரேறே,நிலையில்லாத உலக வாழ்விற் பற்றற்ற மெய்யன்பர்கள் திருவடியடைதலை நேரிற் கண்டும் நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும் அந்நெறியிற் றலைப்படமாட்டாது பொய்யாகிய உடலோடு கூடிவாழும் வாழ்க்கையையுடையேனாகிய யான், இவ்வுடலை ஓம்புதற் பொருட்டு உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்; இந் நிலையினை நீக்குதற்குச் செய் யத்தக்கது இன்னதென்று அறியாத சிறுநாயேன், செம்பொற்பாத மலர் களைக் காணும் பேறில்வாத பொய்யர் பெறும் துன்பப் பேறுகள் அத் னையும் பெறுவதற்குரியவனாகின்றேன்; இது தருமமோ என்பதாம். செய்வதறியா என்றது உண்டு உடுத்து இங்கு இருப்பதாகிய பொய் யுலக வாழ்வை நீக்குதற்குச் செய்யத்தக்கது இன்னதென்றறியா என்ற வாது. சிறுமை - இழிவு. செம்பொற் பாதமலர் காணாப் பொய்யர்! என்றமையான் அப்பாத மலரைக் கண்டு வைத்தும் பொய்யுடல் வாழ்க் கையையுடைமையையாற் பொய்யர் போலாயினேன் என்பது பெறப்படும். பேறு என்றது பொய்யர் பெறும் துன்பப் பேற்றை உணர்த்தியது. உளி யேன் என்பது உரியவனாவேன் என்னும் பொருள்பட நின்றது. அதனால், செம்பொற்பாத மலர்கண்டும் மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் நீ அறிவுறுத்தியருளக் கேட்டும் இருக்கும் யான் துன்பநிலையினை அடைதல் தகுமோ ? அதனால் அத்துன்ப நிலையை நீக்கியருளவேண்டும் என்பது குறிப்பெச்சம்.
290 திருவாசக ஆராய்ச்சியுரை என் பிறவி நாசனே எனது பிறப்பை ஒழிப்பவனே . தேசனே - ஞான ஒளி வடிவினனே அம்பலவனே - சிதாகாயத்தையுடையவனே யாதும் ஒன்று அல்லா பொல்லா நாயான நீசனேனை ஏதும் ஒரு பொருளாக மதிக்கப் படாத தீமையுடைய நாயாகவுள்ள இழிவுடையவனாகிய என்னை ஆண் டாய்க்கு - ஆட்கொண்டருளிய கின்னை நான் நினைக்க மாட்டேன் - நான் இடையீடின்றி நினைக்கமாட்டாதவனாயிருக்கின்றேன் செய்வது ஒன்றும் அறியேன் - அதனால் செய்யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன் . இனிச்ே ஈசனே என் எம்மானே எந்தைபெருமானே என்பிறவி நாசனே தேசனே அம்பலவனே . யாதும் ஒருபொருளாக மதிக்கப்படாத பொல்லா நாயாகவுள்ள நீசனேனை ஆட்கொண்டருளிய நின்னை நான் இடையீடின்றி நினைக்கவுமாட்டாதவனாயிருக்கின்றேன் ; அதனால் யான் இனிச் செய்யத் தக்கது ஒன்றையும் அறிகின் றிலேன் என்பதாம் . ஈசன்.சித்தம் அசித்துமாகிய பிரபஞ்சங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் ஈசான ; சர்வ வித்யானாம் ஈஸ்வர . சர்வ பூதானாம் என வேதம் கூறுமாறும் காண்க என் எம்மானே என்றது இறைவன் அருள் செய்யவேண்டி வலிய எழுந்தருளி வந்த உரிமைபற்றியாகும் . எந்தைபெருமான் என்பதில் விளியுருபாகிய தொக்கது யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் ' ' ( சத ) எனப் பிறிதோ ரிடத்து அருளிச் செய்த அடிகள் ஈண்டு என்பிறவி நாசனே என்றது இனிப்பிறவி உண்டாகாதலாறு என்பிறவியை நாசஞ் செய்தமையால் எடுத்த பிறவியின் ஒழிவாகிய இறவியினால் துன்பமுனதாகாது என்னும் கருத்துப் பற்றியாகும் . ஆண்டாய்க்கு என்னும் நான்காவது இரண்டாவதன் பொருட்கண் வந்தது . நினைத்தல் ஈண்டு இடையீடின்றி நினைத்தலைக் குறித்தது . அங்ஙனம் நினைக்க முடியாமை உலக அனுபவங்கள் தாக்குவதாலாகும் . அத்தாக்குதலை மீக்கியருள வேண்டும் என்பதே இப்பாட்டில் வேண்டிக் கொண்ட பொருளாகும் . தேசன் - ஒளிவடிவினன் . தேசு - ஒளி . செய்வதொன்றும் அறியேனே என்றது எடுத்தபிறப்புக்குரிய பிரா ரத்த வினையை அநுபவித்துக் கொண்டிருக்கும் யான் அந்த அநுபோகங் களினால் தாக்குதலடைந்து நின்னை இடையீடின் றி நினைக்கும் வழி ஒன்றை யும் அறிகின்றிலேன் என்பதாம் . இதன்கன் நீசனேனை ஆண்டாயை நினைக்கமாட்டேன் என்றமை யாலும் செய்வதொன்றுமறியேன் என்றமையாலும் பிராரத்த அனுபவங் கள் தாக்குகின்றன ; அவற்றை நீக்கியருளவேண்டும் என்னும் வேண்டு கோள் பெறப்படுதலின் அதுபோகசுத்தி யென்னும் ஆரும்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 51 . 56 . திருச்சதகம் செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற்பாத மலர்கரணாப் பொய்யர் பெறும்பே நத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாத மேவக் கண்டுங் கேட்டிருந்தும் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே . பெய்ய 291 னேன் நாள் . பரை : போர் ஏறே - பொறி வாயில்களாகிய ஐந்து யானைகளையும் அழிக்கும் போரில் அரியேறு போன்றவனே பொய் இலா மெய்யர் நிலையில்லாத பொய்யாகிய உலகவாழ்விற் பற்றற்ற மெய்யன்பர்கள் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் - நறுமணம் நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடிகளை அடைதலை நேரிற் கண்டும் கேட்டிருந்தும் - நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும் பொய்யனேன் . நான் - அந்நெறியிற் றலைப்படமாட்டாது நிலையற்ற பொய்யாகிய உடலோடு கூடிவாழும் வாழ்க்கையை உடையேனாகிய யான் உண்டு உடுத்து இங்கு இருப்பதா னேன் - இவ்வுடலைப் பேணும் பொருட்டு உண்டும் உடுத்தும் இருப்பவ னாயினேன் ; செய்வது அறியா சிறுநாயேன் - இந்நிலையினை நீக்குதற்குச் செய்யத்தக்கது இன்னதென்று அறியாத கீழாகிய நாய்போன்ற யான் . செம்பொன் பாத மலர் காணா - சிவந்த பொன்போன்ற திருவடிமலர்களைக் காணும் பேறு இல்லாத பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறு தற்கு உரியேன் - நிலையில்லாத உலக வாழ்க்கையையுடையார் பெறுகின்ற துன்பப்பேறுகள் அவ்வளவினையும் பெறுதற்குரியவனாகின்றேன் ; இது தகுமோ ? போரேறே நிலையில்லாத உலக வாழ்விற் பற்றற்ற மெய்யன்பர்கள் திருவடியடைதலை நேரிற் கண்டும் நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும் அந்நெறியிற் றலைப்படமாட்டாது பொய்யாகிய உடலோடு கூடிவாழும் வாழ்க்கையையுடையேனாகிய யான் இவ்வுடலை ஓம்புதற் பொருட்டு உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் ; இந் நிலையினை நீக்குதற்குச் செய் யத்தக்கது இன்னதென்று அறியாத சிறுநாயேன் செம்பொற்பாத மலர் களைக் காணும் பேறில்வாத பொய்யர் பெறும் துன்பப் பேறுகள் அத் னையும் பெறுவதற்குரியவனாகின்றேன் ; இது தருமமோ என்பதாம் . செய்வதறியா என்றது உண்டு உடுத்து இங்கு இருப்பதாகிய பொய் யுலக வாழ்வை நீக்குதற்குச் செய்யத்தக்கது இன்னதென்றறியா என்ற வாது . சிறுமை - இழிவு . செம்பொற் பாதமலர் காணாப் பொய்யர் ! என்றமையான் அப்பாத மலரைக் கண்டு வைத்தும் பொய்யுடல் வாழ்க் கையையுடைமையையாற் பொய்யர் போலாயினேன் என்பது பெறப்படும் . பேறு என்றது பொய்யர் பெறும் துன்பப் பேற்றை உணர்த்தியது . உளி யேன் என்பது உரியவனாவேன் என்னும் பொருள்பட நின்றது . அதனால் செம்பொற்பாத மலர்கண்டும் மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் நீ அறிவுறுத்தியருளக் கேட்டும் இருக்கும் யான் துன்பநிலையினை அடைதல் தகுமோ ? அதனால் அத்துன்ப நிலையை நீக்கியருளவேண்டும் என்பது குறிப்பெச்சம் .