திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

சிவபுராணம் பதவுரை: 1-5. நமச்சிவாய வாழ்க - நமச்சிவாயவென்னுந் திரு வைந்தெழுத்து வாழ்வதாக; நாதன் நாள் வாழ்க - எப்பொருட்கும் தலைவ னாகிய இறைவனது திருவடி வாழ்வதாக; இமைப்பொழுதும் என் நெஞ் சில் நீங்காதான் தாள் வாழ்க -கண் இமைக்கும் நுண்ணிய கால அள விற்றானும் என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்வதாக; கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க - திருவாவடுதுறை என்னும் தலத்தினை அரசாட்சி செய்த இறைவனாகிய பரமாசாரியனது திருவடி வாழ்வ தாக; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - வீட்டுநெறி கூறும் ஆகமப் பொருளாகி நின்று உயிர்களைத் தன்பால் அணுகச் செய்து அருள் புரிபவனாகிய இறைவனது திருவடி வாழ்வதாக; ஏகன் அநேகன் இறை வன் அடி வாழ்க - ஓருருவானவனும் ஒன்றல்லாத பலவுருவானவனுமா கிய எப்பொருளிலுந் தங்குகின் றவனது திருவடி வாழ்வதாக, 4 ஆ-ரை. நமச்சிவாய என்பது இறைவனது ஐந்தெழுத்து மகாமந்திர மாகும். இது தூலபஞ்சாட்சரம் எனப்படும். கம: சிவாய என்பது வடமொழி விதிப்படி நமச்சிவாய எனப் புணர்ந்தது. வணக்கம் சிவனுக்கு என்பது பொருள். சைவசித்தாந்த நூலார் இந்த ஐந்தெழுத்து மகாமந் திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளை உணர்த்துவனவாகக் கொள்வர். இது "பதமஞ்சும்" (நா வு 230 : ?) என அப்பரடிகளும் ''அந்தியு நண்பகலு மஞ்சுபதஞ் சொல்லி'" (தேவாரம் 83:1) என ஆளுடைய நம்பி களும் அருளியமையால் விளங்கும். நமச்சிவாய என்பதில் நகரம் திரோ தான சத்தியையும், மகரம் மலத்தினையும், சிகரம் இறைவனையும், வகரம் திருவருட் சத்தியையும், யகரம் உயிரையும் குறிக்கும். இது பந்த நிலையி லுள்ள உயிர்களைப் பிறவிக்கணுய்த்து இருவினைப்படுத்தி மல நீங்கும் நிலை வருவித்து அருள்வாயிலாக வீட்டைதலை உணர்த்துவது; இதுவும் இறைவ னது கைம்மாறு கருதாத பேரருளையே குறித்தலால் திருவடி வாழ்த்தா கவே அமையும். நாதன் - எப்பொருட்குந் தலைவன்: நாத தத்துவத்தால் வெளிப்படு வோன் எனினுமாம். தாள் என்றது திருவருளை. இமைத்தல் - கண்ணிமை கள் சேர்தல்; இமைப்பொழுதும் நீங்காதான் எனவே ஒருபொழுதும் நீங் காதவன் என்பது பொருள். 'திருப்பெருந்துறை யுறைவான். நிச்சம்என நெஞ்சில் மன்னியானாகி நின்றனே' (திருவா : உயிருண்ணி 9) என அடிகள் அருளியமையுங் காண்க. கோகழி - திருவாவடுதுறை. திருப்பெருந்துறையாகாதோவெனின் ஆகாது; என்னை? பண்டாயநான்மறை என்னும் திருப்பதிகத்தில். நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போய்கள் எண்ணி எழுகோகழிக் கரசை (5) என அடிகள் அருளிச் செய்தலாற் கோகழியும் பெருந்துறையும் வேறு தலங்கள் என்பது போதருதலின் கோகழியாண்ட' என அருளியது திருவாசக ஆராய்ச்சியுரை கோகழிக்கரசை' என்பதனோடு இயைபுடைத்தாதல் காண்க.குருமணி ஆசாரியருள் மேம்பட்டவன். ஆகமம் - இறைவனிடத்தினின்றும் வந்தது. இப்பொருளில் வேதமும் ஆகமம் எனப்படும். அன்றியும் பதினெண்வித்தைகளுக்கும் நேரே கர்த்தா குலபாணியாகிய இறைவன் எனக் கூறப்படுதலால் அவைகளும் இறைவ னிடத்திலிருந்து வந்தமையால் ஆகமம் எனப்படும். ஆயினும் ஈண்டு ஆக மம் என்றது வீட்டு நெறியைக் கூறும் சிவாகமங்களேயாகும். 'பொறிவாயி லைந்தவித்தான் பொய்தி ரொழுக்க நெறி (குறள்) என்றதும் ஆகம நூலையேயாம். அண்ணித்தல் - அண்ணுவித்தல்; என்றது உயிர்கள் தன்னை அடையும்படி செய்தல். ஏகன் - ஒருருவானவன்; அநேகன் - ஒன்றல்லாத பலவுருவானவன் ஓருருவான இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யவேண்டிச் சிவம் சத்தி என ஈருருவாயும், பின்னர் அச்சிவமும் சத்தியும் சேர்ந்து ஐவகைச் சாதாக்கிய வடிவங்களாயும், அச்சாதாக்கியத்திலிருந்து ஈசுவரவடிவங்கள் இருபத்தைந்தாயும், காரணேசுரவடிவங்கள் ஐந்தாயும் பிறவாயும் ஆனமை பற்றி ' அநேகன் ' என்றார். 6-10. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - ஆணவ மலத்தின் வெம்மையைக் கெடுத்து அடியேனை ஆண்டருளிய இறைவனது திருவடிகள் வெற்றி பெறுக: பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய் கழல்கள் வெல்க - பிறவியாகிய மரத்தை வேரோடறுக்கும் சடைமுடியா கிய தலைக்கோலத்தையுடைய இறைவனது இடப்பட்ட வீரக்கழல்களை யுடைய திருவடிகள் வெற்றி பெறுக; புறத்தார்க்கு சேயோன்தன் பூங் கழல்கள் வெல்க தன்பால் அன்பரல்லாதார்க்குத் தூரத்தேயுள்ளவனான இறைவனது பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக; கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க-கைகள் குவிய வணங்கும் அன் பர்களது மனமகிழ்தற்கே வாகிய இறைவனது திருவடிகள் வெற்றி பெறுக; ஈரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க தலைகள் தன் தாளில் ஒடுங்கப் பெறுவாரை உயர்வடையச் செய்யும் சிறப்பை யுடைய இறைவனது திருவடிகள் வெற்றிபெறுக. ஆ-ரை. வேகம்- வேம்மை. ஈண்டு ஆணவ மலத்தின் வெம்மையை. வேகம் என்பதற்குப் "பிறவி வெப்பம்' என்றும், 'மனவேகம்' என்றும் உரைப்பாருமுளர். வேந்தன் - இறைவன். '"மாண்டார் சுடலைப் பொடி பூசி மயானத் தீண்டா நடமாடிய வேந்தன் எனத் தேவாரத்தும் (சம்பந் 30 : 9) வருதல் காண்க. வெல்க என்பது வெற்றிபெறுக என ஒரு வகை வாழ்த்துப் பொருளில் வந்தது. இது ஜெய என்பதன் தமிழாக்கம். இறைவன் பிறவியை அறுத்தலின் பிறப்பறுக்கும் பிஞ்ஞகள் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்" (சிவபுரா 48) பிறப்பனுக்கும் பேராளன்'' (வெண்பா 4) என வருவன காண்க. அறுக் என்றார். பின்னப்
சிவபுராணம் பதவுரை : 1-5 . நமச்சிவாய வாழ்க - நமச்சிவாயவென்னுந் திரு வைந்தெழுத்து வாழ்வதாக ; நாதன் நாள் வாழ்க - எப்பொருட்கும் தலைவ னாகிய இறைவனது திருவடி வாழ்வதாக ; இமைப்பொழுதும் என் நெஞ் சில் நீங்காதான் தாள் வாழ்க -கண் இமைக்கும் நுண்ணிய கால அள விற்றானும் என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்வதாக ; கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க - திருவாவடுதுறை என்னும் தலத்தினை அரசாட்சி செய்த இறைவனாகிய பரமாசாரியனது திருவடி வாழ்வ தாக ; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - வீட்டுநெறி கூறும் ஆகமப் பொருளாகி நின்று உயிர்களைத் தன்பால் அணுகச் செய்து அருள் புரிபவனாகிய இறைவனது திருவடி வாழ்வதாக ; ஏகன் அநேகன் இறை வன் அடி வாழ்க - ஓருருவானவனும் ஒன்றல்லாத பலவுருவானவனுமா கிய எப்பொருளிலுந் தங்குகின் றவனது திருவடி வாழ்வதாக 4 - ரை . நமச்சிவாய என்பது இறைவனது ஐந்தெழுத்து மகாமந்திர மாகும் . இது தூலபஞ்சாட்சரம் எனப்படும் . கம : சிவாய என்பது வடமொழி விதிப்படி நமச்சிவாய எனப் புணர்ந்தது . வணக்கம் சிவனுக்கு என்பது பொருள் . சைவசித்தாந்த நூலார் இந்த ஐந்தெழுத்து மகாமந் திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளை உணர்த்துவனவாகக் கொள்வர் . இது பதமஞ்சும் ( நா வு 230 : ? ) என அப்பரடிகளும் ' ' அந்தியு நண்பகலு மஞ்சுபதஞ் சொல்லி ' ( தேவாரம் 83 : 1 ) என ஆளுடைய நம்பி களும் அருளியமையால் விளங்கும் . நமச்சிவாய என்பதில் நகரம் திரோ தான சத்தியையும் மகரம் மலத்தினையும் சிகரம் இறைவனையும் வகரம் திருவருட் சத்தியையும் யகரம் உயிரையும் குறிக்கும் . இது பந்த நிலையி லுள்ள உயிர்களைப் பிறவிக்கணுய்த்து இருவினைப்படுத்தி மல நீங்கும் நிலை வருவித்து அருள்வாயிலாக வீட்டைதலை உணர்த்துவது ; இதுவும் இறைவ னது கைம்மாறு கருதாத பேரருளையே குறித்தலால் திருவடி வாழ்த்தா கவே அமையும் . நாதன் - எப்பொருட்குந் தலைவன் : நாத தத்துவத்தால் வெளிப்படு வோன் எனினுமாம் . தாள் என்றது திருவருளை . இமைத்தல் - கண்ணிமை கள் சேர்தல் ; இமைப்பொழுதும் நீங்காதான் எனவே ஒருபொழுதும் நீங் காதவன் என்பது பொருள் . ' திருப்பெருந்துறை யுறைவான் . நிச்சம்என நெஞ்சில் மன்னியானாகி நின்றனே ' ( திருவா : உயிருண்ணி 9 ) என அடிகள் அருளியமையுங் காண்க . கோகழி - திருவாவடுதுறை . திருப்பெருந்துறையாகாதோவெனின் ஆகாது ; என்னை ? பண்டாயநான்மறை என்னும் திருப்பதிகத்தில் . நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போய்கள் எண்ணி எழுகோகழிக் கரசை ( 5 ) என அடிகள் அருளிச் செய்தலாற் கோகழியும் பெருந்துறையும் வேறு தலங்கள் என்பது போதருதலின் கோகழியாண்ட ' என அருளியது திருவாசக ஆராய்ச்சியுரை கோகழிக்கரசை ' என்பதனோடு இயைபுடைத்தாதல் காண்க.குருமணி ஆசாரியருள் மேம்பட்டவன் . ஆகமம் - இறைவனிடத்தினின்றும் வந்தது . இப்பொருளில் வேதமும் ஆகமம் எனப்படும் . அன்றியும் பதினெண்வித்தைகளுக்கும் நேரே கர்த்தா குலபாணியாகிய இறைவன் எனக் கூறப்படுதலால் அவைகளும் இறைவ னிடத்திலிருந்து வந்தமையால் ஆகமம் எனப்படும் . ஆயினும் ஈண்டு ஆக மம் என்றது வீட்டு நெறியைக் கூறும் சிவாகமங்களேயாகும் . ' பொறிவாயி லைந்தவித்தான் பொய்தி ரொழுக்க நெறி ( குறள் ) என்றதும் ஆகம நூலையேயாம் . அண்ணித்தல் - அண்ணுவித்தல் ; என்றது உயிர்கள் தன்னை அடையும்படி செய்தல் . ஏகன் - ஒருருவானவன் ; அநேகன் - ஒன்றல்லாத பலவுருவானவன் ஓருருவான இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யவேண்டிச் சிவம் சத்தி என ஈருருவாயும் பின்னர் அச்சிவமும் சத்தியும் சேர்ந்து ஐவகைச் சாதாக்கிய வடிவங்களாயும் அச்சாதாக்கியத்திலிருந்து ஈசுவரவடிவங்கள் இருபத்தைந்தாயும் காரணேசுரவடிவங்கள் ஐந்தாயும் பிறவாயும் ஆனமை பற்றி ' அநேகன் ' என்றார் . 6-10 . வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - ஆணவ மலத்தின் வெம்மையைக் கெடுத்து அடியேனை ஆண்டருளிய இறைவனது திருவடிகள் வெற்றி பெறுக : பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய் கழல்கள் வெல்க - பிறவியாகிய மரத்தை வேரோடறுக்கும் சடைமுடியா கிய தலைக்கோலத்தையுடைய இறைவனது இடப்பட்ட வீரக்கழல்களை யுடைய திருவடிகள் வெற்றி பெறுக ; புறத்தார்க்கு சேயோன்தன் பூங் கழல்கள் வெல்க தன்பால் அன்பரல்லாதார்க்குத் தூரத்தேயுள்ளவனான இறைவனது பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக ; கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க - கைகள் குவிய வணங்கும் அன் பர்களது மனமகிழ்தற்கே வாகிய இறைவனது திருவடிகள் வெற்றி பெறுக ; ஈரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க தலைகள் தன் தாளில் ஒடுங்கப் பெறுவாரை உயர்வடையச் செய்யும் சிறப்பை யுடைய இறைவனது திருவடிகள் வெற்றிபெறுக . - ரை . வேகம்- வேம்மை . ஈண்டு ஆணவ மலத்தின் வெம்மையை . வேகம் என்பதற்குப் பிறவி வெப்பம் ' என்றும் ' மனவேகம் ' என்றும் உரைப்பாருமுளர் . வேந்தன் - இறைவன் . ' மாண்டார் சுடலைப் பொடி பூசி மயானத் தீண்டா நடமாடிய வேந்தன் எனத் தேவாரத்தும் ( சம்பந் 30 : 9 ) வருதல் காண்க . வெல்க என்பது வெற்றிபெறுக என ஒரு வகை வாழ்த்துப் பொருளில் வந்தது . இது ஜெய என்பதன் தமிழாக்கம் . இறைவன் பிறவியை அறுத்தலின் பிறப்பறுக்கும் பிஞ்ஞகள் பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் ( சிவபுரா 48 ) பிறப்பனுக்கும் பேராளன் ' ' ( வெண்பா 4 ) என வருவன காண்க . அறுக் என்றார் . பின்னப்