திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை காருணியத்திரங்கல் காருணியத்திரங்கல் என்பது இறைவனது திருவருளின் பொருட்டு இரங்குதல் என்னும் பொருளுடையது. காருணியம்-திருவருள். காருணி யத்துக்கு இரங்கல் எனக் குவ்வுருபு விரிக்க. 306 7. அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் 65. தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி நில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. பரை: காய வாழ்க்கை தரிக்கிலேன் - உடம்போடு இவ்வுலகில் வாழும் வாழ்க்கையைப் பொறுக்குமாற்றலுடையேனல்லேன்; சங்கரா போற்றி - சுகத்தைச் செய்பவனே பாதுகாத்தருள்க. வான விருத்தனே போற்றி - சிதாகாயத்தில் விளங்கும் முதியோனே காத்தருள்க; எங்கள் விடலையே போற்றி - எங்கள் பெருமையிற் சிறந்தோனே பாதுகாத்தருள்க. ஒப்பு இல் ஒருத்தனே போற்றி - ஒப்பற்ற ஒருவனே பாதுகாத்தருள்க; உம்பர் தம்பிரான் போற்றி-வானவர்க்குத் தலைவனே பாதுகாத்தருள்க; தில்லை நிருத்தனே போற்றி-தில்லைச் சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றுபவனே பாதுகாத்தருள்க; எங்கள் நின்மலா போற்றி போற்றி. பாசபந்தமுடைய எங்களுக்கு அதனை நீக்கியருளும் இயல்பாகவே பாச பந்தங்களினீங்கியவனே பாதுகாத்தருள்க பாதுகாத்தருள்க. உடம்போடு வாழும் வாழ்க்கையைப் பொறுக்குமாற்றலுடையே னல்லேன்; ஆதவால் சங்கரா, வானவிருத்தனே. எங்கள் விட லையே, ஒப்பில் ஒருத்தனே, உம்பர் தம்பிரானே, தில்லைநிருத்தனே, எங்கள் நின் மலா பாதுகாத்தருள்க பாதுகாத்தருள்க என்பதாம். காய வாழ்க்கை - காயத்தோடு கூடி வாழும் வாழ்க்கை. காயம் - உடல் பிராரத்த வினையுடைமையால் உடலோடு கூடிவாழும் வாழ்க்கை உளதாக அதனால் இறைவனது திருவுருவக்காட்சியைப் பிரிய நேர்ந்தமையால் உள தாகும் துன்பமிகுதி பற்றித் 'தரிக்கிலேன் காய வாழ்க்கை" என்றார். "தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே' (நீத் 39) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. சங்கரன் - சம் + கரன். பேரின்பமாகிய சுகத்தைச் செய்பவன் என் பது பொருள். போற்றி என்பது வணக்கம் என்னும் பொருள் தருவதாயி னும் ஈண்டு பாதுகாத்தருள்க என்னும் பொருளில் வந்தது. "போற்றி னரியவை போற்றல்" (குறள் 693) என்புழியும் இப்பொருட்டாதல் தூரண்சு. வானம் என்றது சிதாகாயத்தை. இறைவன் காலதத்துவத்தைக் கடந்தோனாகலின் 'விருத்தனே' எனறார். திருச்சதகம் 'நிருத்த னவன் நீதி மவன் நித்த னெறியாய விருத்தனவன்'' ஞான 167: 5. 307 "விருத்தன்காண் விண்ணவர்க்கு மேலானான் காண்" "வெண்காடு மேய, விருத்தனாய வேதன் றன்னை '' சுந்6:10. எனத் தேவாரத்தும் வருவன காண்க. விடலை - தலைவன் ; பெருமையிற் கிறந்தோன். நா வு 299: 2. "திண்ணி யோனுந் தலைவனும் பாலை யிறைவனுங் காமத்துறைவனும் விடலை' 10.1030. எனப் பிங்கலந்தையில் வருதலுங் காண்க. இறைவன் பெருமையிற் சிறந்தோனாகலின் விடலையே என்றார். மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால் வெந்தழி தர வெய்த விடலையர் " தே. ஞான 344:5. "விடலையானை விரைகமழ் தேன் கொன்றைப் படலையானை " தே. நாவு 208.4. என வருவனவுங் காண்க. ஒருத்தன் என்பதே ஒப்பற்றவன் எனப் பொருள்படவும் ஒப்பில் ஒருத்தனே என்றது இறைவன் ஒப்பும் உயர்வும் அற்ற தனிமுதல்வன் என்பதைப் புலப்படுத்தற் பொருட்டென் க. "ஒப்பிலா வொருவன் றன்னை மற்றாரும் தன்னொப்பாரில்லாதான் காண்" நாவு 238-10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. உம்பர் தம்பிரான் - தேவர் தலைவன். 'உம்பரார் தம் பராபரா (சத 97) என இத்திருவாசகத்தும், " உம்பர் பெருமான்''. தேவர் பிரான்', உம்பர் தம்பிரான் நா வு 180:6) எனத் தேவாரத்தும் 'உறுதுணை நந்தியை உம்பர்பிரானை " எனத் திருமந்திரத்தும் (2030) வருவன காண்க. உம்பர்- வானவர். "சூளாமணி யும்பர்க் காயவன்" என்னும் திருக்கோவையாரி னும் *) இப்பொருட்டாதல் காண்க, ** தில்லை நிருத்தன் - தில்லைச்சிற்றம்பலத்து இடைவிடாது நிருத்தஞ் செய்ப வன்; "நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து '' எனத் திருக்கோவையாரில் (62) அடிகள் அருளியமையுங் காண்க. கிருத்தம்-கூத்து. உம்பர் தம்பிரானாயினும் அவர்க்கரியனாய் எம்மனோர்க் கெளியனாய் தில்லைச்சிற் றம்பலத்துத் திருக்கூத்து இயற்றும் பேரருளாளன் என்பது தோன்றத் தில்லை நிருத்தனே என்றார். ''விண்ணிறந்தார் நிலம்விண்டார் என்று மிக்காரிருவர், கண்ணிறந்தார் தில்லையம்பலத்தார்"" (107) எனத் திருக் கோவையாரில் அடிகள் அருளியமை ஈண்டு சிந்திக்கற்பாலது.
திருவாசக ஆராய்ச்சியுரை காருணியத்திரங்கல் காருணியத்திரங்கல் என்பது இறைவனது திருவருளின் பொருட்டு இரங்குதல் என்னும் பொருளுடையது . காருணியம் - திருவருள் . காருணி யத்துக்கு இரங்கல் எனக் குவ்வுருபு விரிக்க . 306 7 . அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் 65. தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி நில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி . பரை : காய வாழ்க்கை தரிக்கிலேன் - உடம்போடு இவ்வுலகில் வாழும் வாழ்க்கையைப் பொறுக்குமாற்றலுடையேனல்லேன் ; சங்கரா போற்றி - சுகத்தைச் செய்பவனே பாதுகாத்தருள்க . வான விருத்தனே போற்றி - சிதாகாயத்தில் விளங்கும் முதியோனே காத்தருள்க ; எங்கள் விடலையே போற்றி - எங்கள் பெருமையிற் சிறந்தோனே பாதுகாத்தருள்க . ஒப்பு இல் ஒருத்தனே போற்றி - ஒப்பற்ற ஒருவனே பாதுகாத்தருள்க ; உம்பர் தம்பிரான் போற்றி - வானவர்க்குத் தலைவனே பாதுகாத்தருள்க ; தில்லை நிருத்தனே போற்றி - தில்லைச் சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்து இயற்றுபவனே பாதுகாத்தருள்க ; எங்கள் நின்மலா போற்றி போற்றி . பாசபந்தமுடைய எங்களுக்கு அதனை நீக்கியருளும் இயல்பாகவே பாச பந்தங்களினீங்கியவனே பாதுகாத்தருள்க பாதுகாத்தருள்க . உடம்போடு வாழும் வாழ்க்கையைப் பொறுக்குமாற்றலுடையே னல்லேன் ; ஆதவால் சங்கரா வானவிருத்தனே . எங்கள் விட லையே ஒப்பில் ஒருத்தனே உம்பர் தம்பிரானே தில்லைநிருத்தனே எங்கள் நின் மலா பாதுகாத்தருள்க பாதுகாத்தருள்க என்பதாம் . காய வாழ்க்கை - காயத்தோடு கூடி வாழும் வாழ்க்கை . காயம் - உடல் பிராரத்த வினையுடைமையால் உடலோடு கூடிவாழும் வாழ்க்கை உளதாக அதனால் இறைவனது திருவுருவக்காட்சியைப் பிரிய நேர்ந்தமையால் உள தாகும் துன்பமிகுதி பற்றித் ' தரிக்கிலேன் காய வாழ்க்கை என்றார் . தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே ' ( நீத் 39 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . சங்கரன் - சம் + கரன் . பேரின்பமாகிய சுகத்தைச் செய்பவன் என் பது பொருள் . போற்றி என்பது வணக்கம் என்னும் பொருள் தருவதாயி னும் ஈண்டு பாதுகாத்தருள்க என்னும் பொருளில் வந்தது . போற்றி னரியவை போற்றல் ( குறள் 693 ) என்புழியும் இப்பொருட்டாதல் தூரண்சு . வானம் என்றது சிதாகாயத்தை . இறைவன் காலதத்துவத்தைக் கடந்தோனாகலின் ' விருத்தனே ' எனறார் . திருச்சதகம் ' நிருத்த னவன் நீதி மவன் நித்த னெறியாய விருத்தனவன் ' ' ஞான 167 : 5 . 307 விருத்தன்காண் விண்ணவர்க்கு மேலானான் காண் வெண்காடு மேய விருத்தனாய வேதன் றன்னை ' ' சுந் 6 : 10 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . விடலை - தலைவன் ; பெருமையிற் கிறந்தோன் . நா வு 299 : 2 . திண்ணி யோனுந் தலைவனும் பாலை யிறைவனுங் காமத்துறைவனும் விடலை ' 10.1030 . எனப் பிங்கலந்தையில் வருதலுங் காண்க . இறைவன் பெருமையிற் சிறந்தோனாகலின் விடலையே என்றார் . மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால் வெந்தழி தர வெய்த விடலையர் தே . ஞான 344 : 5 . விடலையானை விரைகமழ் தேன் கொன்றைப் படலையானை தே . நாவு 208.4 . என வருவனவுங் காண்க . ஒருத்தன் என்பதே ஒப்பற்றவன் எனப் பொருள்படவும் ஒப்பில் ஒருத்தனே என்றது இறைவன் ஒப்பும் உயர்வும் அற்ற தனிமுதல்வன் என்பதைப் புலப்படுத்தற் பொருட்டென் . ஒப்பிலா வொருவன் றன்னை மற்றாரும் தன்னொப்பாரில்லாதான் காண் நாவு 238-10 எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . உம்பர் தம்பிரான் - தேவர் தலைவன் . ' உம்பரார் தம் பராபரா ( சத 97 ) என இத்திருவாசகத்தும் உம்பர் பெருமான் ' ' . தேவர் பிரான் ' உம்பர் தம்பிரான் நா வு 180 : 6 ) எனத் தேவாரத்தும் ' உறுதுணை நந்தியை உம்பர்பிரானை எனத் திருமந்திரத்தும் ( 2030 ) வருவன காண்க . உம்பர் வானவர் . சூளாமணி யும்பர்க் காயவன் என்னும் திருக்கோவையாரி னும் * ) இப்பொருட்டாதல் காண்க ** தில்லை நிருத்தன் - தில்லைச்சிற்றம்பலத்து இடைவிடாது நிருத்தஞ் செய்ப வன் ; நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து ' ' எனத் திருக்கோவையாரில் ( 62 ) அடிகள் அருளியமையுங் காண்க . கிருத்தம் - கூத்து . உம்பர் தம்பிரானாயினும் அவர்க்கரியனாய் எம்மனோர்க் கெளியனாய் தில்லைச்சிற் றம்பலத்துத் திருக்கூத்து இயற்றும் பேரருளாளன் என்பது தோன்றத் தில்லை நிருத்தனே என்றார் . ' ' விண்ணிறந்தார் நிலம்விண்டார் என்று மிக்காரிருவர் கண்ணிறந்தார் தில்லையம்பலத்தார் ( 107 ) எனத் திருக் கோவையாரில் அடிகள் அருளியமை ஈண்டு சிந்திக்கற்பாலது .