திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை புயங்கன்- பாம்பை அணிந்தவன். "புயங்கன் ஆள்வான் பொன் னடிக்கே '' திருப்புயங்கன் அருளார் பெறுவார்" (யாத்திரைப்3,10) என அடிகள் மேலும் கூறுதல் காண்க. மயங்குகின்றேன் என்பது எனது அருளுருவக்காட்சியை இழந்து, பிராரத்த வினையோடு கூடிய உடலோடு வாழ்தலின் அவ்வினையின் அனுபவத்தால் மயக்கமடைகின்றேன் என்ற வாறு. மயக்கம் - திரிபுணர்ச்சி, புகலிடம்-தஞ்சம். அம்மயக்கினை நீக்கு தற்குத் தஞ்சமான இடம் நீயன்றிப் பிறிதில்லையென்பார், 'புகலிடம் பிறிதொன்றில்கூல" என்றார். இறைவனே புகவிடம் என்பது "பொருளே தமியேன் புகலிடமே" (நீத் 17) எனவும், "எமக்குப் புகலாம் விருப் பாக்கு (திருக்கோவை 143) எனவும் அடிகள் அருளியமையானறிக. புறமெனைப் போக்கல் என்றது நின்சார்பினின்றும் பிரித்து மலச் சார்பிலே செல்லுமாறு என்னைப் போக்காதொழிக வென்றவாறு. போக்கல் என்னும் முன்னிலை எதிர்மறை ஒருமை வினைமுற்று போக்காது என வினையெச்சப் பொருட்டாய் போற்றி' என்பதனோடு முடிந்தது. டாய் முன்னிலை அசை. இறுதியிலுள்ள போற்றி போற்றி என்பதற்கு வணக்கம் வணக்கம் எனப் பொருளுரைக்கினும் இழுக்காகாது. கண் 310 இதன்கண், மயங்குகின்றேன் புகலிடம் பிறிதொன்றில்லை, புறமே னைப் போக்கல்கண்டாய் என்பவற்றால் எனக்கருள் செய்ய வேண்டுமென் பது புலப்படுதலின் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 62. 67. போற்றியென் போலும் பொய்யர் தம்மையாட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே. பரை: என் போறும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி - என்னைப் போன்ற மெய்யடியார் போல் நடிக்கும் பொய்யர்களை யும் அடிமைகொண்டருளும் வள்ளலே காத்தருள்க; நின்பாதம் போற்றி போற்றி - நின் திருவடிக்கு வணக்கம் வணக்கம்; நாதனே போற்றி போற்றி - தலைவனே காத்தருள்க காத்தருள்க; புவனம் நீர் தீ காற்று வானம் இருசுடர் இயமானன் கடவுளானே-நிலம் நீர் நெருப்பு காற்று விசும்பு ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எண்வகைப் பொருள்களையும் அட்டமூர்த்தங்களாகக் கொண்டு அவற்றுள் மூர்த்திமானாக விளங்கும் கடவுளே, நின் கருணை வெள்ளம் புது மது போற்றி - நினது அருட் பெருக்காகிய புதியதேன் என்னைக் காத்தருள்க. என்போலும் பொய்யர்தம்மை அடிமை கொண்டருளும் வள்ளலே காத்தருள்க; நின் திருவடிக்கு வணக்கம் வணக்கம்; நாதனே காத்தருள்க காத்தருள்க; புவனம் நீர் தீ காற்று வானம் ஞாயிறு திங்கள் உயிர் திருச்சதகம் 311 என்னும் எண்வகைப் பொருள்களையும் அட்டமூர்த்தங்களாகக் கொண்டு அவற்றுள் மூர்த்திமானாக விளங்கும் கடவுளே மீன் அருட்பெருக்காகிய புதியதேன் என்னைக் காத்தருள்க என்பதாம். என்போலும் பொய்யர் என்றது மெய்யன்பின்றி என்னைப்போன்று மெய்யர்போல் நடிக்கின்ற பொய்யர்களை. "நாடகத்தர லுன்னடியார் போல் நடித்து (சதகம் 11) என அடிகள் அருளியமையுங் காண்க, அத்தகைய பொய்யரையும் இறைவன் ஆட்கொள்ளுதலின் பொய்யர் தம்மை யாட்கொள்ளும் வள்ளல்' என்றார். "பொய்யவனேனைப் பொரு ளென வாண்டொன்று பொத்திக் கொண்ட, மெய்யவனே " (டூத் 7) எனவும். ''வான் பழித்திம் மண்புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல்" (குயிற் 4) எனவும் வருவன காண்க. தகுதியுடையார் தகுதி இல்லார் என்னும் வேறுபாடு கருதாது தகுதியில்லாரையும் ஆட்கொண்டு வரை வள்ளல் என்றார். வள்ளல் அண்மைவிளி. போற்றி யாது வழங்குதலி நின்பாதம் போற்றி என்பதில் போற்றி என்பது வணக்கம் என்ற பொருளிலும், நாதனே போற்றி என்பதிற் காத்தருள்க என வேண்டிக் கோடற் பொருளிலும் வந்தன. B புவனம் நீர் தீ காற்று இயமானன் வானம் செஞ்சுடர் வெண்சுடர் என்னும் இவையன்றி உலகத்துப் பொருள்கள் பிற இன்மையின் இவ் வெட்டுப் பகுப்பையும் எட்டு முகூர்த்தங்களாகக் கொண்டு தான் அவற் றில் மூர்த்திமானாக விளங்குபவன் என்பதும். அங்ஙனம் விளங்கினும் அவற்றிற்கு அப்பாற்பட்டும் உளன் என்பதும் "புவனம் நீர் தீக், காற் றியமானன் வானம் இருசுடர் கடவுளானே" என்பதால் இனிது விளங் கும் இறைவனுக்கும் அட்டமுகூர்த்தமுண்மை, "நிலம் நீர் நெருப்புயிர் நீள் வீசும்பு நிலாப் பகவோன். புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" (தோணோ 5) அட்டமூர்த்தி யழகன் " (சென் னிப் 2) "அட்ட மூர்த்தி யழல் போலுருவன் ''' (தே.ஞான 253:8) - அட்டமா வுருவினானே யாவடு துறையுளானே " (தே. நாவு 57 : 3) " அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை யாரூரானை' (தே.சு 59:2) என வருடம் திருவாக்குக்களானும் அறிக. இயமானன்-உயிர். "இயமான னாம்விமலா" சிவபுராணம் 96, கடவுள் என்றது கடத்தல் என்னும் பொருளுடைத்தாய் உலகப்பொருள்கள் எல்லாவற்றையுங் கடந்து எங்கும் நிறைந்துள்ள இறைவனை ஆகுபெயராய் உணர்த்தியது. இறைவனது கருணை வெள்ளம்போன்றமையின் * கருணைவெள்ளம்' என்றார். "தன் கருணை வெள்ளத் தழுத்தி "அம்5. 'வாள் தருனை வெள்ளப் பிரான்' கோத் 16. ''தன் கருணை வெள்ளத்து மன்னூற "பொன்னூசல் 3. என அடிகள் பிரண்டும் அருளியவாறுங் காண்க..
திருவாசக ஆராய்ச்சியுரை புயங்கன்- பாம்பை அணிந்தவன் . புயங்கன் ஆள்வான் பொன் னடிக்கே ' ' திருப்புயங்கன் அருளார் பெறுவார் ( யாத்திரைப் 3 ) என அடிகள் மேலும் கூறுதல் காண்க . மயங்குகின்றேன் என்பது எனது அருளுருவக்காட்சியை இழந்து பிராரத்த வினையோடு கூடிய உடலோடு வாழ்தலின் அவ்வினையின் அனுபவத்தால் மயக்கமடைகின்றேன் என்ற வாறு . மயக்கம் - திரிபுணர்ச்சி புகலிடம் - தஞ்சம் . அம்மயக்கினை நீக்கு தற்குத் தஞ்சமான இடம் நீயன்றிப் பிறிதில்லையென்பார் ' புகலிடம் பிறிதொன்றில்கூல என்றார் . இறைவனே புகவிடம் என்பது பொருளே தமியேன் புகலிடமே ( நீத் 17 ) எனவும் எமக்குப் புகலாம் விருப் பாக்கு ( திருக்கோவை 143 ) எனவும் அடிகள் அருளியமையானறிக . புறமெனைப் போக்கல் என்றது நின்சார்பினின்றும் பிரித்து மலச் சார்பிலே செல்லுமாறு என்னைப் போக்காதொழிக வென்றவாறு . போக்கல் என்னும் முன்னிலை எதிர்மறை ஒருமை வினைமுற்று போக்காது என வினையெச்சப் பொருட்டாய் போற்றி ' என்பதனோடு முடிந்தது . டாய் முன்னிலை அசை . இறுதியிலுள்ள போற்றி போற்றி என்பதற்கு வணக்கம் வணக்கம் எனப் பொருளுரைக்கினும் இழுக்காகாது . கண் 310 இதன்கண் மயங்குகின்றேன் புகலிடம் பிறிதொன்றில்லை புறமே னைப் போக்கல்கண்டாய் என்பவற்றால் எனக்கருள் செய்ய வேண்டுமென் பது புலப்படுதலின் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 62 . 67. போற்றியென் போலும் பொய்யர் தம்மையாட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே . பரை : என் போறும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி - என்னைப் போன்ற மெய்யடியார் போல் நடிக்கும் பொய்யர்களை யும் அடிமைகொண்டருளும் வள்ளலே காத்தருள்க ; நின்பாதம் போற்றி போற்றி - நின் திருவடிக்கு வணக்கம் வணக்கம் ; நாதனே போற்றி போற்றி - தலைவனே காத்தருள்க காத்தருள்க ; புவனம் நீர் தீ காற்று வானம் இருசுடர் இயமானன் கடவுளானே - நிலம் நீர் நெருப்பு காற்று விசும்பு ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எண்வகைப் பொருள்களையும் அட்டமூர்த்தங்களாகக் கொண்டு அவற்றுள் மூர்த்திமானாக விளங்கும் கடவுளே நின் கருணை வெள்ளம் புது மது போற்றி - நினது அருட் பெருக்காகிய புதியதேன் என்னைக் காத்தருள்க . என்போலும் பொய்யர்தம்மை அடிமை கொண்டருளும் வள்ளலே காத்தருள்க ; நின் திருவடிக்கு வணக்கம் வணக்கம் ; நாதனே காத்தருள்க காத்தருள்க ; புவனம் நீர் தீ காற்று வானம் ஞாயிறு திங்கள் உயிர் திருச்சதகம் 311 என்னும் எண்வகைப் பொருள்களையும் அட்டமூர்த்தங்களாகக் கொண்டு அவற்றுள் மூர்த்திமானாக விளங்கும் கடவுளே மீன் அருட்பெருக்காகிய புதியதேன் என்னைக் காத்தருள்க என்பதாம் . என்போலும் பொய்யர் என்றது மெய்யன்பின்றி என்னைப்போன்று மெய்யர்போல் நடிக்கின்ற பொய்யர்களை . நாடகத்தர லுன்னடியார் போல் நடித்து ( சதகம் 11 ) என அடிகள் அருளியமையுங் காண்க அத்தகைய பொய்யரையும் இறைவன் ஆட்கொள்ளுதலின் பொய்யர் தம்மை யாட்கொள்ளும் வள்ளல் ' என்றார் . பொய்யவனேனைப் பொரு ளென வாண்டொன்று பொத்திக் கொண்ட மெய்யவனே ( டூத் 7 ) எனவும் . ' ' வான் பழித்திம் மண்புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல் ( குயிற் 4 ) எனவும் வருவன காண்க . தகுதியுடையார் தகுதி இல்லார் என்னும் வேறுபாடு கருதாது தகுதியில்லாரையும் ஆட்கொண்டு வரை வள்ளல் என்றார் . வள்ளல் அண்மைவிளி . போற்றி யாது வழங்குதலி நின்பாதம் போற்றி என்பதில் போற்றி என்பது வணக்கம் என்ற பொருளிலும் நாதனே போற்றி என்பதிற் காத்தருள்க என வேண்டிக் கோடற் பொருளிலும் வந்தன . B புவனம் நீர் தீ காற்று இயமானன் வானம் செஞ்சுடர் வெண்சுடர் என்னும் இவையன்றி உலகத்துப் பொருள்கள் பிற இன்மையின் இவ் வெட்டுப் பகுப்பையும் எட்டு முகூர்த்தங்களாகக் கொண்டு தான் அவற் றில் மூர்த்திமானாக விளங்குபவன் என்பதும் . அங்ஙனம் விளங்கினும் அவற்றிற்கு அப்பாற்பட்டும் உளன் என்பதும் புவனம் நீர் தீக் காற் றியமானன் வானம் இருசுடர் கடவுளானே என்பதால் இனிது விளங் கும் இறைவனுக்கும் அட்டமுகூர்த்தமுண்மை நிலம் நீர் நெருப்புயிர் நீள் வீசும்பு நிலாப் பகவோன் . புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் ( தோணோ 5 ) அட்டமூர்த்தி யழகன் ( சென் னிப் 2 ) அட்ட மூர்த்தி யழல் போலுருவன் ' ' ' ( தே.ஞான 253 : 8 ) - அட்டமா வுருவினானே யாவடு துறையுளானே ( தே . நாவு 57 : 3 ) அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை யாரூரானை ' ( தே.சு 59 : 2 ) என வருடம் திருவாக்குக்களானும் அறிக . இயமானன் - உயிர் . இயமான னாம்விமலா சிவபுராணம் 96 கடவுள் என்றது கடத்தல் என்னும் பொருளுடைத்தாய் உலகப்பொருள்கள் எல்லாவற்றையுங் கடந்து எங்கும் நிறைந்துள்ள இறைவனை ஆகுபெயராய் உணர்த்தியது . இறைவனது கருணை வெள்ளம்போன்றமையின் * கருணைவெள்ளம் ' என்றார் . தன் கருணை வெள்ளத் தழுத்தி அம் 5 . ' வாள் தருனை வெள்ளப் பிரான் ' கோத் 16 . ' ' தன் கருணை வெள்ளத்து மன்னூற பொன்னூசல் 3 . என அடிகள் பிரண்டும் அருளியவாறுங் காண்க ..