திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

6 சிவபுராணம் கும் என்ற விளையினால் பிறவியாகிய மரத்தை வேரோடறுக்கும் உரைக்கப்பட்டது. என "பிறவியை வேரொடுங் களைந் தாண்டு கொள் '' நீத் 19. "என் பிறவிக் கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை " தென் 2. "பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா" பிடித் பீ. "என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான்' அடைக்3 என அடிகள் அருளியமை காண்க. அறுத்தல் திருவருளால் என்க. நின் திருவருளால் என்பிறவியை வேரறுப்பவனே '' (அடைக் 2) என வருதல் காண்க பிஞ்ஞகம் - சடைமுடியாகிய தலைக்கோலம். பெய் i" அளித் கழல் - இட்ட வீரக்கழல், பெய்தல் - செறித்தல் எனினுமாம். தலும் பெய்தலும் செறித்தலாகும்'' எனப் பிங்கலந்தையில் வருதலும் காண்க. கழல், திருவடிக்கு ஆகுபெயர். இறைவன் பிரமன் தலையையும், அந்தகாசுரனையும் முப்புரங்களையும், தக்கனையும், சலந்கரனையும், கஜன் என்னும் யானையையும், காமனையும் யமனையும் அழித்து வெற்றி கொண்ட பெருவீரனாதலின் வீரக்கழலணிந்த திருவடியையுடையனாயினான். இவ்வெட்டு வீரங்களையும் அட்ட வீரம் என்பர். கழல் - மலவாற்றல் தவிர்க்கும் வெற்றிப்பாடு குறித்தது எனினும் மையும். தன்னிடத்து அன்பு கொண்டு சார்தலின்றி உலகப் பொருள்களைச் சார்ந்து நிற்பார்க்கு உணரப்படானாகலின் புறத்தார்க்குச் சேயோன்" என்றார். 'யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் (சென்னிப் 1) என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலது. பூங்கழல் என்பதற்குப் பொலிவு பெற்ற கழல் எனினுமாம். கழல் திருவடிக்கு ஆகுபெயர். # இறைவனிடத்து அன்புடையார் கைகுவித்து வணங்குதலும், கண்ணீர் வார்தலும், மெய்ம்மயிர் சிலிர்த்தலும் உடையராதலீன், சிறப்புப் பற்றிக் கரங்குவிதலை எடுத்துக் கூறினார். இறைவனை நினைக்குந்தோறும் அடியார்க்கு மனத்தின்கண் பெருமகிழ்ச்சி தோன்றுதலின் 'உண்மகிமும்' என்றார். மகிழும்கோன் -மகிழ்தற்கேதுவாகிய கோன். சிரம்குவிதல் - இறைவன் திருவடிகளிற் சிரசு ஒடுங்குதல். தாள் + தலை என்பது தாடலை என இயைந்து நிற்பது போல அத்துவித பாவனை யினால் இறைவன் திருவருளிற் கலந்து நிற்றல். குவிதல் - ஓடுங்குதல். '' குவிதலுடன் விரிதலற்று " (தாயுமா.சின்மயா 8) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. சீரம் குவியும் அன்பரை இறைவன் உயர்வடை யச் செய்தலின் 'ஓங்குவீக்கும்' என்றார். சீர் என்னுஞ் சொல், புகழ் அழகு செல்வம் முதலிய பொருள்கள் திருதவின் சீரோன் அவையெல் லாம் நிறைந்தவன் எனினுமாம். திருவாசக ஆராய்ச்சியுரை 11-16. ஈசன் அடி போற்றி ஐசுவரியத்தையுடையவனது திரு வடிக்கு வணக்கம்; எந்தை அடி போற்றி - எமது தந்தையினது திருவடிக்கு வணக்கம்; தேசன் அடி போற்றி - ஞான ஒளிவடிவையுடைய பரமாசாரிய னது திருவடிக்கு வணக்கம்: சிவன் சே அடி போற்றி- சிவபெருமானது சிவந்த திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அன்பரது அன்பின்கண் அன்புருவாய் நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம், மாயம் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - மாயையினா லுண்டாகும் பிறவியை வேரோடறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்; நீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி, சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் பரமாசாரியராய் எழுந்தருளிய நமது கடவுளது திருவடிக்கு வணக்கம்: ஆராத இன்பம் அருளும் மலை போற்றி, தெவிட் டாத இன்ப அருவியை ஈந்தருளும் மலையை ஒப்பவனுக்கு வணக்கம். 5002 ஈசன் - ஐசுவரியத்தையுடையவன். ஈண்டு ஐசுவரியம் என்றது வீடு பேருாகிய உயர்திருவினை. இத்திருவினை 'டத்திருட்ட லக்ஷ்மி' என உப நிடதம் கூறும். தேக-ஒளி. தேசன் ஒளிவடிவினன். தேசன் என் பது ஈண்டு பரமாசாரியத் திருவுருவை யுணர்த்தியது சிவன் - செம்பொருளாதலின் அவன் திருவடி சேவடியாயிற்று. சேவடி- சிவந்த திருவடி. மாயம்- மாயை. மாயையினாலேயே தனு கரண புவன போகமாகிய பிரிவுகளையுடைய பிறப்பு உண்டாகின்றது. அதனால் மாயப் பிறப்பு என்றார். அறுக்கும் என்ற வினையினால் பிறவியை மரமாகக் கொள்க. 'சீரார்" என்னும் அடை தேவனுக்காய்ப் பின்னர் அவன் எழுந்தருளியிருக்கும் பெருந்துறையாயிற்று. இறைவன் திருப்பெருந்துறை யில் குருந்தமர நீழலிற் பரமாசாரியனாக அமர்ந்து தம்மை ஆட்கொண்டமை யின் ' நம் தேவன்' என்றார். உலகியல் இன்பங்கள் அனுபவித்த அளவில் தெவிட்டுந்தன்மையன இறைவன் அருளாற்பெறும் இன்பமோ என்றும் தெவிட்டாவியல்பிற்றாத லின் அதனை 'ஆராத இன்பம்' என்றார். இறைவனை மலையென தேசவுருவகஞ் செய்தமையால், என்றும் வற்குது இறைவனருளால் உண்டா கும் இன்பம் அருவிநீராகக் கொள்ளப்பட்டது. 17-22. கண் நுதலான் - அழற்கண் அமைந்த நெற்றியையுடைய இறைவன். எண்ணுதற்கு எட்டாத ஏழில் ஆர் கழல் இறைஞ்சி - நினைத் தற்கும் எட்டா அழகுபொருந்திய வீரக்கழல் அமைந்த திருவடிகள் அருமையில் எளியவாய்ப் பூமியில் தாழ்ந்து, வந்து எய்தி - திருப்பெருந் துறையின்கண் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளிவந்து, தன் கருணை கண் காட்ட - தனது அருட்பார்வையாகிய நயன தீக்கையினைச் செய்து ஞானோபதேசஞ் செய்தலால், அவன் சிவன் என் சிந்தையுள் நின்ற அத னால் - அக்கண்ணுதலானாகிய சிவபெருமான் என் மனத்தில் நீங்காது வி
6 சிவபுராணம் கும் என்ற விளையினால் பிறவியாகிய மரத்தை வேரோடறுக்கும் உரைக்கப்பட்டது . என பிறவியை வேரொடுங் களைந் தாண்டு கொள் ' ' நீத் 19 . என் பிறவிக் கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை தென் 2 . பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பிடித் பீ . என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் ' அடைக் 3 என அடிகள் அருளியமை காண்க . அறுத்தல் திருவருளால் என்க . நின் திருவருளால் என்பிறவியை வேரறுப்பவனே ' ' ( அடைக் 2 ) என வருதல் காண்க பிஞ்ஞகம் - சடைமுடியாகிய தலைக்கோலம் . பெய் i அளித் கழல் - இட்ட வீரக்கழல் பெய்தல் - செறித்தல் எனினுமாம் . தலும் பெய்தலும் செறித்தலாகும் ' ' எனப் பிங்கலந்தையில் வருதலும் காண்க . கழல் திருவடிக்கு ஆகுபெயர் . இறைவன் பிரமன் தலையையும் அந்தகாசுரனையும் முப்புரங்களையும் தக்கனையும் சலந்கரனையும் கஜன் என்னும் யானையையும் காமனையும் யமனையும் அழித்து வெற்றி கொண்ட பெருவீரனாதலின் வீரக்கழலணிந்த திருவடியையுடையனாயினான் . இவ்வெட்டு வீரங்களையும் அட்ட வீரம் என்பர் . கழல் - மலவாற்றல் தவிர்க்கும் வெற்றிப்பாடு குறித்தது எனினும் மையும் . தன்னிடத்து அன்பு கொண்டு சார்தலின்றி உலகப் பொருள்களைச் சார்ந்து நிற்பார்க்கு உணரப்படானாகலின் புறத்தார்க்குச் சேயோன் என்றார் . ' யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் ( சென்னிப் 1 ) என அடிகள் அருளியமை ஈண்டறியற்பாலது . பூங்கழல் என்பதற்குப் பொலிவு பெற்ற கழல் எனினுமாம் . கழல் திருவடிக்கு ஆகுபெயர் . # இறைவனிடத்து அன்புடையார் கைகுவித்து வணங்குதலும் கண்ணீர் வார்தலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் உடையராதலீன் சிறப்புப் பற்றிக் கரங்குவிதலை எடுத்துக் கூறினார் . இறைவனை நினைக்குந்தோறும் அடியார்க்கு மனத்தின்கண் பெருமகிழ்ச்சி தோன்றுதலின் ' உண்மகிமும் ' என்றார் . மகிழும்கோன் -மகிழ்தற்கேதுவாகிய கோன் . சிரம்குவிதல் - இறைவன் திருவடிகளிற் சிரசு ஒடுங்குதல் . தாள் + தலை என்பது தாடலை என இயைந்து நிற்பது போல அத்துவித பாவனை யினால் இறைவன் திருவருளிற் கலந்து நிற்றல் . குவிதல் - ஓடுங்குதல் . ' ' குவிதலுடன் விரிதலற்று ( தாயுமா.சின்மயா 8 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . சீரம் குவியும் அன்பரை இறைவன் உயர்வடை யச் செய்தலின் ' ஓங்குவீக்கும் ' என்றார் . சீர் என்னுஞ் சொல் புகழ் அழகு செல்வம் முதலிய பொருள்கள் திருதவின் சீரோன் அவையெல் லாம் நிறைந்தவன் எனினுமாம் . திருவாசக ஆராய்ச்சியுரை 11-16 . ஈசன் அடி போற்றி ஐசுவரியத்தையுடையவனது திரு வடிக்கு வணக்கம் ; எந்தை அடி போற்றி - எமது தந்தையினது திருவடிக்கு வணக்கம் ; தேசன் அடி போற்றி - ஞான ஒளிவடிவையுடைய பரமாசாரிய னது திருவடிக்கு வணக்கம் : சிவன் சே அடி போற்றி- சிவபெருமானது சிவந்த திருவடிக்கு வணக்கம் ; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அன்பரது அன்பின்கண் அன்புருவாய் நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம் மாயம் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - மாயையினா லுண்டாகும் பிறவியை வேரோடறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம் ; நீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் பரமாசாரியராய் எழுந்தருளிய நமது கடவுளது திருவடிக்கு வணக்கம் : ஆராத இன்பம் அருளும் மலை போற்றி தெவிட் டாத இன்ப அருவியை ஈந்தருளும் மலையை ஒப்பவனுக்கு வணக்கம் . 5002 ஈசன் - ஐசுவரியத்தையுடையவன் . ஈண்டு ஐசுவரியம் என்றது வீடு பேருாகிய உயர்திருவினை . இத்திருவினை ' டத்திருட்ட லக்ஷ்மி ' என உப நிடதம் கூறும் . தேக - ஒளி . தேசன் ஒளிவடிவினன் . தேசன் என் பது ஈண்டு பரமாசாரியத் திருவுருவை யுணர்த்தியது சிவன் - செம்பொருளாதலின் அவன் திருவடி சேவடியாயிற்று . சேவடி சிவந்த திருவடி . மாயம்- மாயை . மாயையினாலேயே தனு கரண புவன போகமாகிய பிரிவுகளையுடைய பிறப்பு உண்டாகின்றது . அதனால் மாயப் பிறப்பு என்றார் . அறுக்கும் என்ற வினையினால் பிறவியை மரமாகக் கொள்க . ' சீரார் என்னும் அடை தேவனுக்காய்ப் பின்னர் அவன் எழுந்தருளியிருக்கும் பெருந்துறையாயிற்று . இறைவன் திருப்பெருந்துறை யில் குருந்தமர நீழலிற் பரமாசாரியனாக அமர்ந்து தம்மை ஆட்கொண்டமை யின் ' நம் தேவன் ' என்றார் . உலகியல் இன்பங்கள் அனுபவித்த அளவில் தெவிட்டுந்தன்மையன இறைவன் அருளாற்பெறும் இன்பமோ என்றும் தெவிட்டாவியல்பிற்றாத லின் அதனை ' ஆராத இன்பம் ' என்றார் . இறைவனை மலையென தேசவுருவகஞ் செய்தமையால் என்றும் வற்குது இறைவனருளால் உண்டா கும் இன்பம் அருவிநீராகக் கொள்ளப்பட்டது . 17-22 . கண் நுதலான் - அழற்கண் அமைந்த நெற்றியையுடைய இறைவன் . எண்ணுதற்கு எட்டாத ஏழில் ஆர் கழல் இறைஞ்சி - நினைத் தற்கும் எட்டா அழகுபொருந்திய வீரக்கழல் அமைந்த திருவடிகள் அருமையில் எளியவாய்ப் பூமியில் தாழ்ந்து வந்து எய்தி - திருப்பெருந் துறையின்கண் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளிவந்து தன் கருணை கண் காட்ட - தனது அருட்பார்வையாகிய நயன தீக்கையினைச் செய்து ஞானோபதேசஞ் செய்தலால் அவன் சிவன் என் சிந்தையுள் நின்ற அத னால் - அக்கண்ணுதலானாகிய சிவபெருமான் என் மனத்தில் நீங்காது வி