திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கருணையைப் புதுமது என்றார். உலகத்துத் தேன் போலாது புதிது புதிதாக இனீமை தந்துகொண்டிருக்கும் தேனாதல் பற்றி. தெவிட்டாததேன் என்றவாறு "புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்" (9) எனத் திருக்கோவையாரில் வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. மது-தேன். கருணையைத் தேன் என்றல் '' கருணை வான்றேன் கலக்க " (அண்டப் 180) என்புழியுங் காண்க. 312 இதன்கண், பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல், நாதனே போற்றி' 'நின்கருணை வெள்ளப்புதுமது போற்றி என்பவற்றால் இறை வன் பேரருளை வேண்டிக்கோடல் புலப்படுதலின் காருணியத் திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க. -63. 52 ர 68. கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே யுருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தத் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. கடவுளே போற்றி - உலகப்பொருள்கள் எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனே நினக்கு வணக்கம். என்னைக் கண்டுகொண்டு அருளுபோற்றி - அடியேனை இடர்க்கடற் புகாவண்ணம் திருவருணோக்கஞ் செய்து அருளுவாயாக நினக்கு வணக்கம். விட உன் உருக்கு என்னை ஆண்டிட வேண்டும் போற்றி இருவகைப் பற்றுக்களையும் யான் விடு தற்கு அன்பால் என் உள்ளத்தை உருகச் செய்து ஆளாக நிள்பால் வைத்துக்கொள்ளவேண்டும் நினக்கு வணக்கம். உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு போற்றி - வினைவயத்தாற் கிடைத்த தூலதேக மாகிய இந்த உடம்பினை நீக்கி விரைவாக மேலாகிய வீட்டின்பத்தைத் தந்தருள்வாயாக; நினக்கு வணக்கம். சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி. பெருக்கெடுத்து வந்த கங்கையால் உலகிற்குத் தீங்குண்டாகாத வாறு திருச்சடையினுள்ளே அக்கங்கையை வைத்தருளிய சங்கரனே வினக்கு வணக்கம். நிரை ப-ரை: கடவுளே நினக்கு வணக்கம். அடியேனை திருவருணோக்கம் நல்கி அருளுவாயாக நினக்கு வணக்கம். உலகப் பற்று விடுதற்கு என் உள் ளத்தை அன்பால் உருகச் செய்து என்னை ஆட்கொள்ள வேண்டும்; நினக்கு வணக்கம், தூலதேகமாகிய இவ்வுடம்பினை நீக்கி விரைவாக மேலா கிய வீட்டின்பத்தைத் தந்தருளுக; நினக்கு வணக்கம். சடையின் கண்ணே கங்கையை வைத்தருளிய சங்கரனே நினக்கு வணக்கம் என்பதாம். கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். பதிஞானத்தானன்றிப் பசு பாச ஞானங்களால் அறியப்படாதவர். போற்றி -எல்லாம் வணக்கப் பொரு ளன. கண்டுகொண்டு அருளு - துயர்புகா வண்ணம் திருவருள் நோக்கஞ் செய்து அருளுவாயாக. யான் துயர்புகா வண்ணம் அருள் செய்து (அற்2) என வருதலும் காண்க. விட என்னும் எச்சத்திற்குச் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. உள் உள்ளம். திருச்சதகம் 313 ஆண்டிட வேண்டும் என்பது முன்னர் ஆட்கொள்ளப்பட்ட தம்மை மீட்டும் ஆட்கொள்ளவேண்டும் என வேண்டிக்கொண்டதாகாது ஆட் கொண்ட தம்மைப் புறத்தே பிரியவொட்டாது 'ஆளாக நின்பால் வைத் துக்கொள்ள வேண்டும்' என்னும் பொருளில் வந்தது. "புறமெனைப் போக்கல் கண்டாய்" (சத 02) என அடிகள் அருளியமை ஈண்டு அறி யற்பாவது. உம்பர் தந்தருளுதற்கு எடுத்த இவ்வுடல் தடையாக விருத்தலின் இவ் வுடம்பினை நீக்கி விரைவாக மேலாகிய வீட்டின்பத்தைத் தந்தருள வேண் டும் என்பார். உடலிது களைந்திட் டொல்லை யும்பர் தந்தருளு' என்றார். பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை" (குறள் 346) என்றார் திரு வள்ளுவரும்."உடவைச் சிதையாத தெத்தக்கு' (குழைத் 2) செடிசே ருடலைச் செவநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பன் " (யாத். 4) எனவும் அடிகள் அருளியமையும் ஈண்டறியற்பாலன. கங்கை வைத்த - பொங்கும் புனற் கங்கையை வைத்த. ''பொங்கும் புனற் கங்கை தாங்கி '' (திருக்கோவை 75) என வருதலுங் காண்க. யுளே கங்கை சடை வைத்தமை உலகத்தைக் காத்தற்பொருட்டாதவினாலும், சங்கரா என விளித்தமை சுகத்தைச் செய்பவனே என்பதாதலாலும் அடி கள் முன்னர் வேண்டிய வேண்டுகோளுக்கு இயைந்த கருத்துடை அடை கொளி யணியாய் அமைந்தன. " இதன்கண், என்னைக் கண்டுகொண்டருளும்; என்னை ஆண்டிடவேண் டும்; உடலிது களைந்திட் டொல்லை யும்பர் தந்தருளு என இறைவன் கருணையை வேண்டி இரங்குதலினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க. 64. 60. சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா வல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழிந்திட் டேனே. படரை : சங்கரா போற்றி - சுகத்தைச் செய்பவனே நினக்கு வணக் கம்; மற்று ஓர் சரண் இலேன் போற்றி - பிறிதொரு புகவிடம் இல்லேன்; ஆதவாற் காத்தருள்க; பொங்கு அரா அல்குல் - சீற்றங் கொண்ட பாம் பின் படம் போன்ற அல்குலினையும். செவ்வாய் - செய்ய வாயினையும், வெள் நகை - வெள்ளிய நகையினையும், கரிய வாள் கண் - கரிய வாள் போன்ற கண்ணினையுமுடைய, கோல மங்கை ஓர் பங்க போற்றி -அழ கிய உமையம்மையை ஒரு சுற்றிலுடையவனே நினக்கு வணக்கம். மால் விடை ஊர்தி போற்றி = பெரிய விடையை வாகனமாகக் கொண்டவனே நினக்கு வணக்கம். எம்பிரான் . எங்கள் தலைவனே, இங்கு இவ்வாழ்வு ஆற்ற கல்லேன் இழித்திட்டேன் - இவ்வுலகத்தில் இவ்வுடலோடு கூடி 40
திருவாசக ஆராய்ச்சியுரை கருணையைப் புதுமது என்றார் . உலகத்துத் தேன் போலாது புதிது புதிதாக இனீமை தந்துகொண்டிருக்கும் தேனாதல் பற்றி . தெவிட்டாததேன் என்றவாறு புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் ( 9 ) எனத் திருக்கோவையாரில் வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . மது - தேன் . கருணையைத் தேன் என்றல் ' ' கருணை வான்றேன் கலக்க ( அண்டப் 180 ) என்புழியுங் காண்க . 312 இதன்கண் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் நாதனே போற்றி ' ' நின்கருணை வெள்ளப்புதுமது போற்றி என்பவற்றால் இறை வன் பேரருளை வேண்டிக்கோடல் புலப்படுதலின் காருணியத் திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க . -63 . 52 68. கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே யுருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தத் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி . கடவுளே போற்றி - உலகப்பொருள்கள் எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனே நினக்கு வணக்கம் . என்னைக் கண்டுகொண்டு அருளுபோற்றி - அடியேனை இடர்க்கடற் புகாவண்ணம் திருவருணோக்கஞ் செய்து அருளுவாயாக நினக்கு வணக்கம் . விட உன் உருக்கு என்னை ஆண்டிட வேண்டும் போற்றி இருவகைப் பற்றுக்களையும் யான் விடு தற்கு அன்பால் என் உள்ளத்தை உருகச் செய்து ஆளாக நிள்பால் வைத்துக்கொள்ளவேண்டும் நினக்கு வணக்கம் . உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு போற்றி - வினைவயத்தாற் கிடைத்த தூலதேக மாகிய இந்த உடம்பினை நீக்கி விரைவாக மேலாகிய வீட்டின்பத்தைத் தந்தருள்வாயாக ; நினக்கு வணக்கம் . சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி . பெருக்கெடுத்து வந்த கங்கையால் உலகிற்குத் தீங்குண்டாகாத வாறு திருச்சடையினுள்ளே அக்கங்கையை வைத்தருளிய சங்கரனே வினக்கு வணக்கம் . நிரை - ரை : கடவுளே நினக்கு வணக்கம் . அடியேனை திருவருணோக்கம் நல்கி அருளுவாயாக நினக்கு வணக்கம் . உலகப் பற்று விடுதற்கு என் உள் ளத்தை அன்பால் உருகச் செய்து என்னை ஆட்கொள்ள வேண்டும் ; நினக்கு வணக்கம் தூலதேகமாகிய இவ்வுடம்பினை நீக்கி விரைவாக மேலா கிய வீட்டின்பத்தைத் தந்தருளுக ; நினக்கு வணக்கம் . சடையின் கண்ணே கங்கையை வைத்தருளிய சங்கரனே நினக்கு வணக்கம் என்பதாம் . கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர் . பதிஞானத்தானன்றிப் பசு பாச ஞானங்களால் அறியப்படாதவர் . போற்றி -எல்லாம் வணக்கப் பொரு ளன . கண்டுகொண்டு அருளு - துயர்புகா வண்ணம் திருவருள் நோக்கஞ் செய்து அருளுவாயாக . யான் துயர்புகா வண்ணம் அருள் செய்து ( அற் 2 ) என வருதலும் காண்க . விட என்னும் எச்சத்திற்குச் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது . உள் உள்ளம் . திருச்சதகம் 313 ஆண்டிட வேண்டும் என்பது முன்னர் ஆட்கொள்ளப்பட்ட தம்மை மீட்டும் ஆட்கொள்ளவேண்டும் என வேண்டிக்கொண்டதாகாது ஆட் கொண்ட தம்மைப் புறத்தே பிரியவொட்டாது ' ஆளாக நின்பால் வைத் துக்கொள்ள வேண்டும் ' என்னும் பொருளில் வந்தது . புறமெனைப் போக்கல் கண்டாய் ( சத 02 ) என அடிகள் அருளியமை ஈண்டு அறி யற்பாவது . உம்பர் தந்தருளுதற்கு எடுத்த இவ்வுடல் தடையாக விருத்தலின் இவ் வுடம்பினை நீக்கி விரைவாக மேலாகிய வீட்டின்பத்தைத் தந்தருள வேண் டும் என்பார் . உடலிது களைந்திட் டொல்லை யும்பர் தந்தருளு ' என்றார் . பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை ( குறள் 346 ) என்றார் திரு வள்ளுவரும் . உடவைச் சிதையாத தெத்தக்கு ' ( குழைத் 2 ) செடிசே ருடலைச் செவநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பன் ( யாத் . 4 ) எனவும் அடிகள் அருளியமையும் ஈண்டறியற்பாலன . கங்கை வைத்த - பொங்கும் புனற் கங்கையை வைத்த . ' ' பொங்கும் புனற் கங்கை தாங்கி ' ' ( திருக்கோவை 75 ) என வருதலுங் காண்க . யுளே கங்கை சடை வைத்தமை உலகத்தைக் காத்தற்பொருட்டாதவினாலும் சங்கரா என விளித்தமை சுகத்தைச் செய்பவனே என்பதாதலாலும் அடி கள் முன்னர் வேண்டிய வேண்டுகோளுக்கு இயைந்த கருத்துடை அடை கொளி யணியாய் அமைந்தன . இதன்கண் என்னைக் கண்டுகொண்டருளும் ; என்னை ஆண்டிடவேண் டும் ; உடலிது களைந்திட் டொல்லை யும்பர் தந்தருளு என இறைவன் கருணையை வேண்டி இரங்குதலினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க . 64 . 60. சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா வல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழிந்திட் டேனே . படரை : சங்கரா போற்றி - சுகத்தைச் செய்பவனே நினக்கு வணக் கம் ; மற்று ஓர் சரண் இலேன் போற்றி - பிறிதொரு புகவிடம் இல்லேன் ; ஆதவாற் காத்தருள்க ; பொங்கு அரா அல்குல் - சீற்றங் கொண்ட பாம் பின் படம் போன்ற அல்குலினையும் . செவ்வாய் - செய்ய வாயினையும் வெள் நகை - வெள்ளிய நகையினையும் கரிய வாள் கண் - கரிய வாள் போன்ற கண்ணினையுமுடைய கோல மங்கை ஓர் பங்க போற்றி -அழ கிய உமையம்மையை ஒரு சுற்றிலுடையவனே நினக்கு வணக்கம் . மால் விடை ஊர்தி போற்றி = பெரிய விடையை வாகனமாகக் கொண்டவனே நினக்கு வணக்கம் . எம்பிரான் . எங்கள் தலைவனே இங்கு இவ்வாழ்வு ஆற்ற கல்லேன் இழித்திட்டேன் - இவ்வுலகத்தில் இவ்வுடலோடு கூடி 40