திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

316 திருவாசக ஆராய்ச்சியுரை இழித்தளன் என்னை யானே என்றது, நின்னால் ஆட்கொள்ளப்பட்டு ஆன்மாவாகிய என்னியல்பை அறிந்த பின் என்னை யானே இழிவுபடுத்தி னேன் என்பதாம். உன்னைப் பழித்திலேன் என்றது இழிவுடைய என்னை ஆட்கொண்டருளிய கின் பேரருளைப் பழித்திலேன் என்பதாம். ஆளுடைப்பாதம் என்பதற்கு ஆட்கொண்டருளிய பாதம் எனினுமாம். இறைவன் திருவடியைக் காட்டி அடிகளை ஆட்கொண்டருளியமையின் இங்ஙனம் கூறினார். 'பெருந்துறையிற் கண்ணார் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட, அண்ணாமலையானை" (அம் 10) என அடிகள் அருளியமை யுங் காண்க. பிழைத்தவை என்றது நின் அடிமையாகிய யான். என்னை இழிவு படுத்தியது நின் அடிமைத் தொண்டினையும் இழிவுபடுத்தியதாகும். அங்ங னம் இழிவுபடுத்தியதாகிய அப்பிழை என்றவாறு. பிழைத்தவை யெல் லாம் எனக் கூட்டுக. பொறுக்கை பெரியவர் கடமை என்றது அப்பிழை களைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியார் கடமையாதலின் பெரியவனா கிய நீயும் அடியேன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்ப தாம், "பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே" (நீத்து) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. பிழைத்ததெவாம் பொறுத்தருள் செய் பெரியோ னென்னும்'' "உன்பாலன்பர் பிழைபொறுத்தி யென்பதும் பெரியோய் நின்றன் கடனன்றே' காவு 201-7 எனத் தேவாரத்தும், "சிறியவர் ஒரு பிழை செய்யின் மேலவர் பொறையொடு பின்னரும் போற்ற வல்லதை இறையதும் வெகுள்வரோ" சூரனமைச் (170) எனக் கந்தபுராணத்தும். நாவு 245 : 5. 'பெரியவ சிறியேன் செய்த பிழை பொறுத் தருளென் றன்பிற் றிருவடி கேன் பரவி'' 12:11. என நம்பி திருவிளையாடற் புராணத்தும் வருவனவும் ஈண்டு அறியற் பாலன. பிழைத்தவை பொறுக்கை பெரியவர் கடமை என்றதனால் பிழை செய்தவர் சிறியவர் என்பது பெறப்படும். பெரியோர் பொறுப்பரன்றே சிறியோர்கள் பிழைத்தனவே" எனத் தஞ்சைவாணன் கோவையினும் (397) வருதல் காண்க. ஒழித்திடு இவ்வாழ்வு என்றார் இவ்வுடலோடு கூடிவாழும் வாழ்க்கை திருவடியை எய்துதற்குத் தடையாக இருத்தலினால். உம்பர் நாடு என் திருச்சதகம் றது எல்லாவுலகங்களுக்கும் மேலாகிய சிவலோகத்தை. சிவலோகத்துள்ள இறைவனே எமக்குத் தலைவன் என்பார் '"உம்பர் நாட்டெம்பிரானே" என்றார். 317 இதன்கண், ''ஒழித்திடிவ் வாழ்வு என வேண்டிக் கொள்ளுதலால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் 66, காண்க. 71. எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போ ற்றி கொம்பரார் மருங்கும் மங்கை கூற வெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை யொருவ போற்றி. னை ஆரூ படரை: எம்பிரான் போற்றி - எங்கள் தலைவனே நினக்கு வணக் கம்; வானத்து அவர் அவர் ஏறு போற்றி - விண்ணுலகத்திலுள்ள பதவி களில் இருக்கும் அவ்வத் தேவர்களுக்கெல்லாம் ஏறு போல்பவனே நினக்கு வணக்கம்; கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற - பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையினையுடைய உமையம்மையை ஒரு கூற்றில் உடைய வனே; வெண் நீற போற்றி - திருவெண்மீற்றையுடையவனே நினக்கு வணக்கம்; செம்பிரான் போற்றி செம்மேனியையுடைய பெருமானே நினக்கு வணக்கம்; தில்வைச் திருச்சிற்றம் பலவ போற்றி - தில்லையிற் திருச்சிற்றம்பலத்தையுடைய கூத்தப் பிரானே நினக்கு வணக்கம்; உம்பரா போற்றி மேலாகிய சிவலோகத்தையுடையவனே நினக்கு வணக்கம்; என்னை ஆளுடை ஒருவ போற்றி - என்னை ஆளாகவுடைய ஒப்பற்றவனே நினக்கு வணக்கம். உடலிது களைந் திட்டு ஒல்லை உம்பர் தந்தருள்வாயாக என்பதாம். எங்கள் தலைவனே வணக்கம்; விண்ணுலகத்துள்ள பதவிகளில் இருக் கும் அவ்வத்தேவர்களுக்கெல்லாம் ஏறு போல்பவனே நினக்கு வணக்கம்; உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே நினக்கு வணக்கம்; திருவெண் ணீற்றையுடையவனே நினக்கு வணக்கம்; செம்மேனியையுடைய பெரு மானே நினக்கு வணக்கம்; தில்லையிற் திருச்சிற்றம்பலமுடைய கூத்தப் பிரானே நினக்கு வணக்கம்: மேலாகிய சிவலோகத்தையுடையவனே நினக்கு வணக்கம்; என்னை ஆளாகவுடைய ஒப்பற்றவனே நினக்கு வணக்கம். வானத்தவரவர் என்றது விண்ணுலகத்தில் ஆங்காங்குள்ள திருமால், பிரமன். இந்திரன் முதலிய தேவத்தலைவர்களைக் குறித்தது. அவர் என் றது அவரவர் என்று சுட்டு இரட்டித்தது, வெவ்வேறு பதவிகளில் இருக்கும் தேவர்களின் பன்மை தோன்றற் கென்பது. ஏறு - சிங்கேறு "சிங்கமே யுன்னடிக்கே போதுகின்றேன்" (நாவு 313: 2) எனத் தேவா ரத்தும் வருதல் காண்க. இறைவன் விண்ணவர்க் கெல்லாம் தலைவனாதல் தோன்ற 'வானத்தவரவர் ஏறு" என்றார். '"வானவர் தலைவனே '
316 திருவாசக ஆராய்ச்சியுரை இழித்தளன் என்னை யானே என்றது நின்னால் ஆட்கொள்ளப்பட்டு ஆன்மாவாகிய என்னியல்பை அறிந்த பின் என்னை யானே இழிவுபடுத்தி னேன் என்பதாம் . உன்னைப் பழித்திலேன் என்றது இழிவுடைய என்னை ஆட்கொண்டருளிய கின் பேரருளைப் பழித்திலேன் என்பதாம் . ஆளுடைப்பாதம் என்பதற்கு ஆட்கொண்டருளிய பாதம் எனினுமாம் . இறைவன் திருவடியைக் காட்டி அடிகளை ஆட்கொண்டருளியமையின் இங்ஙனம் கூறினார் . ' பெருந்துறையிற் கண்ணார் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட அண்ணாமலையானை ( அம் 10 ) என அடிகள் அருளியமை யுங் காண்க . பிழைத்தவை என்றது நின் அடிமையாகிய யான் . என்னை இழிவு படுத்தியது நின் அடிமைத் தொண்டினையும் இழிவுபடுத்தியதாகும் . அங்ங னம் இழிவுபடுத்தியதாகிய அப்பிழை என்றவாறு . பிழைத்தவை யெல் லாம் எனக் கூட்டுக . பொறுக்கை பெரியவர் கடமை என்றது அப்பிழை களைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியார் கடமையாதலின் பெரியவனா கிய நீயும் அடியேன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்ப தாம் பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே ( நீத்து ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . பிழைத்ததெவாம் பொறுத்தருள் செய் பெரியோ னென்னும் ' ' உன்பாலன்பர் பிழைபொறுத்தி யென்பதும் பெரியோய் நின்றன் கடனன்றே ' காவு 201-7 எனத் தேவாரத்தும் சிறியவர் ஒரு பிழை செய்யின் மேலவர் பொறையொடு பின்னரும் போற்ற வல்லதை இறையதும் வெகுள்வரோ சூரனமைச் ( 170 ) எனக் கந்தபுராணத்தும் . நாவு 245 : 5 . ' பெரியவ சிறியேன் செய்த பிழை பொறுத் தருளென் றன்பிற் றிருவடி கேன் பரவி ' ' 12:11 . என நம்பி திருவிளையாடற் புராணத்தும் வருவனவும் ஈண்டு அறியற் பாலன . பிழைத்தவை பொறுக்கை பெரியவர் கடமை என்றதனால் பிழை செய்தவர் சிறியவர் என்பது பெறப்படும் . பெரியோர் பொறுப்பரன்றே சிறியோர்கள் பிழைத்தனவே எனத் தஞ்சைவாணன் கோவையினும் ( 397 ) வருதல் காண்க . ஒழித்திடு இவ்வாழ்வு என்றார் இவ்வுடலோடு கூடிவாழும் வாழ்க்கை திருவடியை எய்துதற்குத் தடையாக இருத்தலினால் . உம்பர் நாடு என் திருச்சதகம் றது எல்லாவுலகங்களுக்கும் மேலாகிய சிவலோகத்தை . சிவலோகத்துள்ள இறைவனே எமக்குத் தலைவன் என்பார் ' உம்பர் நாட்டெம்பிரானே என்றார் . 317 இதன்கண் ' ' ஒழித்திடிவ் வாழ்வு என வேண்டிக் கொள்ளுதலால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் 66 காண்க . 71. எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போ ற்றி கொம்பரார் மருங்கும் மங்கை கூற வெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை யொருவ போற்றி . னை ஆரூ படரை : எம்பிரான் போற்றி - எங்கள் தலைவனே நினக்கு வணக் கம் ; வானத்து அவர் அவர் ஏறு போற்றி - விண்ணுலகத்திலுள்ள பதவி களில் இருக்கும் அவ்வத் தேவர்களுக்கெல்லாம் ஏறு போல்பவனே நினக்கு வணக்கம் ; கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற - பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையினையுடைய உமையம்மையை ஒரு கூற்றில் உடைய வனே ; வெண் நீற போற்றி - திருவெண்மீற்றையுடையவனே நினக்கு வணக்கம் ; செம்பிரான் போற்றி செம்மேனியையுடைய பெருமானே நினக்கு வணக்கம் ; தில்வைச் திருச்சிற்றம் பலவ போற்றி - தில்லையிற் திருச்சிற்றம்பலத்தையுடைய கூத்தப் பிரானே நினக்கு வணக்கம் ; உம்பரா போற்றி மேலாகிய சிவலோகத்தையுடையவனே நினக்கு வணக்கம் ; என்னை ஆளுடை ஒருவ போற்றி - என்னை ஆளாகவுடைய ஒப்பற்றவனே நினக்கு வணக்கம் . உடலிது களைந் திட்டு ஒல்லை உம்பர் தந்தருள்வாயாக என்பதாம் . எங்கள் தலைவனே வணக்கம் ; விண்ணுலகத்துள்ள பதவிகளில் இருக் கும் அவ்வத்தேவர்களுக்கெல்லாம் ஏறு போல்பவனே நினக்கு வணக்கம் ; உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே நினக்கு வணக்கம் ; திருவெண் ணீற்றையுடையவனே நினக்கு வணக்கம் ; செம்மேனியையுடைய பெரு மானே நினக்கு வணக்கம் ; தில்லையிற் திருச்சிற்றம்பலமுடைய கூத்தப் பிரானே நினக்கு வணக்கம் : மேலாகிய சிவலோகத்தையுடையவனே நினக்கு வணக்கம் ; என்னை ஆளாகவுடைய ஒப்பற்றவனே நினக்கு வணக்கம் . வானத்தவரவர் என்றது விண்ணுலகத்தில் ஆங்காங்குள்ள திருமால் பிரமன் . இந்திரன் முதலிய தேவத்தலைவர்களைக் குறித்தது . அவர் என் றது அவரவர் என்று சுட்டு இரட்டித்தது வெவ்வேறு பதவிகளில் இருக்கும் தேவர்களின் பன்மை தோன்றற் கென்பது . ஏறு - சிங்கேறு சிங்கமே யுன்னடிக்கே போதுகின்றேன் ( நாவு 313 : 2 ) எனத் தேவா ரத்தும் வருதல் காண்க . இறைவன் விண்ணவர்க் கெல்லாம் தலைவனாதல் தோன்ற ' வானத்தவரவர் ஏறு என்றார் . ' வானவர் தலைவனே '