திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வாங்குதல் - இழுத்தல் "கைபுனை வேழம், புரிபுனை பூங்கயிற்றிற்பைய வாங்கி'' (கலி 80 : 6-7) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க வாங்கு தல் வேண்டும் பாசபந்தத்தினின்றும் பிறவித் துன்பத்தினின்றும் இழுத்து நீக்குதல் வேண்டும். பாசபந்தத்தினின்றும் பிறவித் துன்பத்தினின்றும் நீங் குகற்கருமை தோன்ற "வாங்கிட வேண்டும்" என்றார். இனி நின்பால் வாங்கிட வேண்டும் என்பதற்கு நின்னிடத்து அணைத்துக் கொள்ளல் வேண் வாங்கி வாங்கிட டும் எனினுமாம். வேண்டும் என்பது வாங்கியருளி எச்சப்பொருட்டாய் நின் பாதந் தருக என்பதனோடு முடியும். நின்பாதம் தருக என மாறிக் கூட்டுக. திருவடியைத் தந்தருள்க அடிகள் வேண்டுதலை. என என 320 "தணியார் பாதம் வந்தொல்லை தாராய்'' சத 89. "தணியா தொல்லை வந்தருளித் தளிர்பொற்பாதந் தாராயே' ர்த்8. 2012 எனப் பிறாண்டு வருவனவற்றாலுமறிக. தமியனேன் என்பதற்கு உணர் விழந்த யான் எனினுமமையும். தனிமை என்றது இறைவனைப் பிரிந் தமையாலுள தாகும் துன்பத்தை. இதன்கண், '' நின்பால் வாங்கிட வேண்டும்'' "தருக நின்பாதம் என்பவற்றால் இறைவன் திருவருளைப் பெற இரங்குதலில் பெறப்படுத் லின் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க. 68. 31 73. தீர்ந்த அன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்தும் என் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின் று வானோர்க் கமுதம்ச வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. ப-ரை: தீர்ந்த அன்பு ஆய அன்பர்க்கு முடிவாகிய பேரன்பு அமைந்த மெய்யடியார்களுக்கு; அவரினும் அன்ப போற்றி - அவர் அன் பளவினும் மேம்பட்ட பேரருளினால் அவர்களை ஆட்கொள்பவனே நினக்கு வணக்கம் பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி - மீண்டும் எனது பொய்ம்மையன் பினையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண்டு அருள் செய்த பெருமையுடையவனே நினக்கு வணக்கம்; வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி - திருப்பாற்கடலில் பொங்கி எழுந்த நஞ்சை உண்டு தேவர்களுக்கு அமு தத்தினைக் கொடுத்தருளிய அருள் வள்ளலே நினக்கு வணக்கம்; ஆர்ந்த நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி-நலமார்ந்த நின் திரு வடிகளை நாயின் தன்மையுடைய சிறியேனுக்குத் தந்தருள வேண்டும் நினக்கு வணக்கம், திருச்சதகம் 321 முடிவாகிய பேரன்பு அமைந்த மெய்யன்பர்க்கு அவரினும் மேம் பட்ட பேரருளினால் அவர்களை ஆட்கொள்பலனே நினக்கு வணக்கம்; மீண்டும் எனது பொய்யன்பினையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண்டு அருள் செய்த பெருந்தன்மையுடையவனே நினக்கு வணக்கம்: வார்ந்த நஞ்சினை உண்டு தேவர்களுக்கு அமுதத்தினை ஈந்தருளிய வள்ளலே நினக்கு வணக்கம்; நவமார்ந்த நின் இருவடிகளை நாயேற்குத் தந்தருள் வேண்டும் நினக்கு வணக்கம் என்பதாம். தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப என்பதற்கு முடிவா கிய பேரன்பு அமைந்த மெய்படியார்களுக்கு அவர் அன்பளவிலும் மேற் பட்ட பேரன்புடையவனே என்பது பொருளாயினும் இறைவன் உயிர்க ளிடத்துச் செய்யும் அன்பு சுருள் எனப்படுதலின் பேரருள் என உரைத்து, அது பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை என்பதனாலும் தெளியப்படும். தீர்ந்த என்பதற்கு இருவகைப் பற்றினை யும் வீட்ட எனவும், அன்பாய என்பதற்கு அன்புருவாய் எனவும் உரைப் பாருமுளர். பேர்ந்தும் என்புழி உய்மை, மெய்யனபுடையவர்களை ஆட் கொள்வதன்றி, மீண்டும் பொய்ாமை அன்பிணையும் பொருளாகக் கொண்டு ஆட்கொள்ளுதலையுணர்த்தலின் இறந்தது எச்ச வும்மை "பொய்யவனேனைப் பொருளென வாண்டொன்று பொத்திக் கொண்ட மெய்டனே " (நீத்7) என அடிகள் அருளியமையுங் காண்க பெருமை என்பது பெருமையுடையவனே என்னும் பொருள் தந்து நின்றது. வார்ந்த-நீண்ட, வார்தல் என்னும் உரிச்சொல் நெடுமையாகிய பண் புணர்த்தும் என்பது வார்தல், போகல், ஒழுகல் மூன்றும் நேர்பு நெடுமை யுஞ் செய்யும் பொருள (உரி 21) என்னும் தொல்காப்பியத்தாலும் அறிக. ஈண்டும் பொங்கி எழுந்த என்னும் பொருட்டாய் நின்றது. பொங்கி நின்றெழுந்த கடல் நஞ்சினை (காவு 140: 6, எனத் தேவா ரத்து வருதலும் காண்க. தீமை பயக்கும் கொடிய நஞ்சைத் தானுண்டு நன்மை பயக்கும் அருதத்திணைத் தேவர்க்குக் கொடுத்தருளியமையின் இறை வன் வள்ளல் என்றார். வரு இறைவன் நஞ்சண்டு தேவர்க்கு அமுதருளியமை ""கடல் சேர்தரு விடமுண் டமுதம் அமரர்க்கருள் செய்த விடை சேர்தரு கொடியாவ்'" ஞான 13:10. ஆழ்தரு மால் கடல் நஞ்சினையுண்டு ஆரமுதம் அமரர்க்கருளி'' சீ ஞான 39:8. கலமார் கடலுவ் விடமுண்டு அமரர்க்க முதம் அருள் செய்த " 40 ஞான 08:5.
திருவாசக ஆராய்ச்சியுரை வாங்குதல் - இழுத்தல் கைபுனை வேழம் புரிபுனை பூங்கயிற்றிற்பைய வாங்கி ' ' ( கலி 80 : 6-7 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க வாங்கு தல் வேண்டும் பாசபந்தத்தினின்றும் பிறவித் துன்பத்தினின்றும் இழுத்து நீக்குதல் வேண்டும் . பாசபந்தத்தினின்றும் பிறவித் துன்பத்தினின்றும் நீங் குகற்கருமை தோன்ற வாங்கிட வேண்டும் என்றார் . இனி நின்பால் வாங்கிட வேண்டும் என்பதற்கு நின்னிடத்து அணைத்துக் கொள்ளல் வேண் வாங்கி வாங்கிட டும் எனினுமாம் . வேண்டும் என்பது வாங்கியருளி எச்சப்பொருட்டாய் நின் பாதந் தருக என்பதனோடு முடியும் . நின்பாதம் தருக என மாறிக் கூட்டுக . திருவடியைத் தந்தருள்க அடிகள் வேண்டுதலை . என என 320 தணியார் பாதம் வந்தொல்லை தாராய் ' ' சத 89 . தணியா தொல்லை வந்தருளித் தளிர்பொற்பாதந் தாராயே ' ர்த் 8 . 2012 எனப் பிறாண்டு வருவனவற்றாலுமறிக . தமியனேன் என்பதற்கு உணர் விழந்த யான் எனினுமமையும் . தனிமை என்றது இறைவனைப் பிரிந் தமையாலுள தாகும் துன்பத்தை . இதன்கண் ' ' நின்பால் வாங்கிட வேண்டும் ' ' தருக நின்பாதம் என்பவற்றால் இறைவன் திருவருளைப் பெற இரங்குதலில் பெறப்படுத் லின் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க . 68 . 31 73. தீர்ந்த அன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்தும் என் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின் று வானோர்க் கமுதம்ச வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி . - ரை : தீர்ந்த அன்பு ஆய அன்பர்க்கு முடிவாகிய பேரன்பு அமைந்த மெய்யடியார்களுக்கு ; அவரினும் அன்ப போற்றி - அவர் அன் பளவினும் மேம்பட்ட பேரருளினால் அவர்களை ஆட்கொள்பவனே நினக்கு வணக்கம் பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி - மீண்டும் எனது பொய்ம்மையன் பினையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண்டு அருள் செய்த பெருமையுடையவனே நினக்கு வணக்கம் ; வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் வள்ளல் போற்றி - திருப்பாற்கடலில் பொங்கி எழுந்த நஞ்சை உண்டு தேவர்களுக்கு அமு தத்தினைக் கொடுத்தருளிய அருள் வள்ளலே நினக்கு வணக்கம் ; ஆர்ந்த நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி - நலமார்ந்த நின் திரு வடிகளை நாயின் தன்மையுடைய சிறியேனுக்குத் தந்தருள வேண்டும் நினக்கு வணக்கம் திருச்சதகம் 321 முடிவாகிய பேரன்பு அமைந்த மெய்யன்பர்க்கு அவரினும் மேம் பட்ட பேரருளினால் அவர்களை ஆட்கொள்பலனே நினக்கு வணக்கம் ; மீண்டும் எனது பொய்யன்பினையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண்டு அருள் செய்த பெருந்தன்மையுடையவனே நினக்கு வணக்கம் : வார்ந்த நஞ்சினை உண்டு தேவர்களுக்கு அமுதத்தினை ஈந்தருளிய வள்ளலே நினக்கு வணக்கம் ; நவமார்ந்த நின் இருவடிகளை நாயேற்குத் தந்தருள் வேண்டும் நினக்கு வணக்கம் என்பதாம் . தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப என்பதற்கு முடிவா கிய பேரன்பு அமைந்த மெய்படியார்களுக்கு அவர் அன்பளவிலும் மேற் பட்ட பேரன்புடையவனே என்பது பொருளாயினும் இறைவன் உயிர்க ளிடத்துச் செய்யும் அன்பு சுருள் எனப்படுதலின் பேரருள் என உரைத்து அது பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை என்பதனாலும் தெளியப்படும் . தீர்ந்த என்பதற்கு இருவகைப் பற்றினை யும் வீட்ட எனவும் அன்பாய என்பதற்கு அன்புருவாய் எனவும் உரைப் பாருமுளர் . பேர்ந்தும் என்புழி உய்மை மெய்யனபுடையவர்களை ஆட் கொள்வதன்றி மீண்டும் பொய்ாமை அன்பிணையும் பொருளாகக் கொண்டு ஆட்கொள்ளுதலையுணர்த்தலின் இறந்தது எச்ச வும்மை பொய்யவனேனைப் பொருளென வாண்டொன்று பொத்திக் கொண்ட மெய்டனே ( நீத் 7 ) என அடிகள் அருளியமையுங் காண்க பெருமை என்பது பெருமையுடையவனே என்னும் பொருள் தந்து நின்றது . வார்ந்த - நீண்ட வார்தல் என்னும் உரிச்சொல் நெடுமையாகிய பண் புணர்த்தும் என்பது வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பு நெடுமை யுஞ் செய்யும் பொருள ( உரி 21 ) என்னும் தொல்காப்பியத்தாலும் அறிக . ஈண்டும் பொங்கி எழுந்த என்னும் பொருட்டாய் நின்றது . பொங்கி நின்றெழுந்த கடல் நஞ்சினை ( காவு 140 : 6 எனத் தேவா ரத்து வருதலும் காண்க . தீமை பயக்கும் கொடிய நஞ்சைத் தானுண்டு நன்மை பயக்கும் அருதத்திணைத் தேவர்க்குக் கொடுத்தருளியமையின் இறை வன் வள்ளல் என்றார் . வரு இறைவன் நஞ்சண்டு தேவர்க்கு அமுதருளியமை கடல் சேர்தரு விடமுண் டமுதம் அமரர்க்கருள் செய்த விடை சேர்தரு கொடியாவ் ' ஞான 13:10 . ஆழ்தரு மால் கடல் நஞ்சினையுண்டு ஆரமுதம் அமரர்க்கருளி ' ' சீ ஞான 39 : 8 . கலமார் கடலுவ் விடமுண்டு அமரர்க்க முதம் அருள் செய்த 40 ஞான 08 : 5 .