திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இது புணர்ப்பதாக அன்றாக என்றது நின்னொடு என்னைப் புணர்ப்ப தாகிய இப்பக்குவகாலம் என்னை நின்னொடு புணர்ப்பதாயினும் புணர்க்க: அன்றி ஒழியினும் ஒழிக; அதுபற்றி யான் கவலேன் என்றவாறு. நின் சுழற்கண் அன்பு புங்கமான போகம் புணர்ப்பதாக என்றது, நின் திரு வடிக்கணுள்ள மெய்யன்பு உயர்ந்த சிவானந்த போகத்தை இயைவிப்ப தாக அருள் செய்ய வேண்டும் என்றவாது. 326 "கழற்கண் அன்பு", "அடியேன் நின் பூங்கழல்கள் அவையல்லா எவை யாதும் புகழேன்" (புலம் 1) + தென்னன் வார்கழலே நினைந்து (தென் 15) "கழற்போதிறைஞ்சி" (பாண்டிப் 1) என்பனவற்றாலுமறிக. அங்க ணாளன்-கண்னோட்டமுடையவன் என நச்சினார்க்கினியார் உரைத்த மையுங் காண்க. இறைவன் அங்கண்மை, "அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணன்" "நேசமின் மனச் சமணர் தேரர் கணிரந்தமொழி பொய்கள் அகல்வித் தாசை கொள் மனத்தை அடியாரவர் தமக்கருளும் அங்கணன்" (ஞான 330: 8:337:10) எனத் தேவாரந்து வரு வனவற்குறுமறிக. புங்கம்-உயர்ச்சி. *"அம்புக்குதை துகில் உயர்ச்சியும் புங்கம்" (பிங் 10-819) என வருதல் காண்க. புங்கமான போசும் உயர்ந்த போகம்: உயர்ச்சி ஒப்பின் மையும் அழிவின்மையும் பற்றியாகும். போகம் என்றது சிவானந்த போகத்தை 'உணர்வி னேர் பெற வருஞ் சிவபோகம்" (சம்பர் 161) எனப் பெரியபுராணத்து வருதலுங் காண்க. இதன்கண் புங்கமான போகம் புணர்ப்பதாக' என்றதனால் ஆனத் தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க 71. 76. போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும் ஏக நின் கழவி ணைய லாதி லேனென் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே. பரை: ஏக-ஒருவனே; என் எம்பிரான்-என்னுடைய எம்பிரானே; ஐயனே - ஞானாசாரியனே; போகம் வேண்டி -சிவானந்த போகத்தை விரும் புதலால்; புரந்தரன் ஆதி இன்பமும் வேண்டிலேன் - இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களையும் விரும்புகின்றிவேன்; நின் கழல் இணை அலாது இலேன்- நின் திருவடிகள் இரண்டும் அல்லது வேறொரு பற்றுக்கோடும் இல்லேன்; ஆகம் விண்டு கம்பம் வந்து - மனம் விரிந்து நெகிழவும் உடல் நடுங்கவும்; என் அஞ்சவி கை குஞ்சிக் கண்ணே ஆக- எனது குவிந்த கைகள் சிரசின்கண்ணே பொருந்தவும்; கண்கள் தாரை ஆறது ஆக-கண்களிலிருந்து ஒழுகும் ஆனந்த நீர் ஒழுக்கு ஆறாகப் பெருக வும் அருளுக. திருச்சதகம் 327 ஏக. என் எம்பிரான், ஐயனே, சிவபோகத்தை விரும்புதலால் இந்தி ரன் முதலிய இறையவர் பகங்களுக்குரிய இன்பங்களையும் விரும்புகின் றி லேன்; நின் திருவடிகள் இரண்டு மல்லாது வேருெரு பற்றுக்கோடும் இல்லேன்; மனம் விரிந்து நெகிழ உடல் நடுங்க என் அஞ்சலிக்கை சிர சின் கண்ணே பொருந்தவும். கண்களினின்று ஒழுகும் ஆனந்த நீர் ஒழுக்கு ஆறாகப் பெருகவும் அருஞக என்பதாம். பலம், போகமென்பது சிவானந்த போகத்தை. இதனையே அடிகள் விரும்பி "அன்பு நின்கழற்கணே புணர்ப்பதாக அங்களுாள புங்கமான போகமே'' (சத 71) என அருளியமையாலுமறிக. போகம் வேண்டி என்புழி வேண்டி என்னும் செய்தெனெச்சம் ஏதுப் பொருளில் வந்தது. தேவர்களின் பதங்கள் பலவற்றுள்ளும் இந்திரபதத்தால் வரும் இன்பம் சிறந்ததாதலின் புரந்தராதி இன்பமும் என்றார். புரந்தராதி என்பது வடநூன் முடிவு. இன்பமும் என்புழி உம்மை சிறப்புப் பொருளில் வந் தது. இந்திரன் முதலிய தேவர்களுக்குரிய இன்பங்களிலும் சிவானந்த போகமே சிறந்ததாதலின் " போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்'' என்றார். "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு (சத 2) எனவும், "வேண்டேன் மண்ணும் விண்ணும்' (உயிருண்ணி ?) என வும் வருவனவும் ஈண்டறியற்பாலன. ஏகன் - ஒருவன். "ஏக பெருந்தகை யாய பெம்மான் (ஞான +:4) "எந்தையே ஏகமூர்த்தி (நாவு 414) என்று வருவன காண்க. இறைவனை ஏகன் என்றது ஒப்பொருவனில் லாதவனாதலின் ஒப்பிலா ஒருவன் ", "ஒப்பொருவர் இல்லாத ஒருவன்''' (நாவு 289:4, 248:9) எனத் தேவாரத்தும் வருவன காண்க. "கழலிணைய லாது இலேன்" என்றது மின் கழலிணையே பற்றுக் கோடன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன் என்றவாறு. "போற்றியோ நமச்சிவாய புக லிடம் பிறிதொன்றில்லை" (சத 62, எனவும், பொருளே தமியேன் புகலி டமே" (நீத் 17) எனவும் அடிகள் அருளியமை காண்க. இனிநின் திரு வடிகளின் மேற் பற்றல்லது வேறொரு பற்று உடையேனல்லேன் எனினு மாம். 'செப்பரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையுமற வெறிவார் (பெரிய: விறன்மிண்ட 4) என வருதல் காண்க. செய் பரிவு நீங்கி" (சீவக 1737) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறைவனை அகநெகிழ்ந்து இறைஞ்சுங்கால் உடலும் நடுங்குதலின் 'ஆகம் விண்டு கம்பம் வந்து' என்றார். மெய்ம் முழுதுங் கம்பித் தமுமடியா ரிடை" (நீத் 7 ) என அடிகள் அருளியமையுங் காண்க. விண்டு வந்து என்னும் செய்தெனேச்சங்களைச் செயவெனெச்சமாகக் கொள்க. என் அஞ்சலிக்கை குஞ்சிக்கண்ணே ஆக என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. குஞ்சி ஆண்மான் மயிர் குஞ்சி பித்தை யோர் ஆண் மான் மயிர் பிங்க 339 அஞ்சலி என் றது இரண்டு கையும் பதாகையாய் அகமொன்று வது என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்பதி 3:18 உரை), அஞ்சவிக்கணே என்பதற்குத் தொழுதலின் கண்ணே எனினுமாம். அஞ்சலி தொழுதல்
திருவாசக ஆராய்ச்சியுரை இது புணர்ப்பதாக அன்றாக என்றது நின்னொடு என்னைப் புணர்ப்ப தாகிய இப்பக்குவகாலம் என்னை நின்னொடு புணர்ப்பதாயினும் புணர்க்க : அன்றி ஒழியினும் ஒழிக ; அதுபற்றி யான் கவலேன் என்றவாறு . நின் சுழற்கண் அன்பு புங்கமான போகம் புணர்ப்பதாக என்றது நின் திரு வடிக்கணுள்ள மெய்யன்பு உயர்ந்த சிவானந்த போகத்தை இயைவிப்ப தாக அருள் செய்ய வேண்டும் என்றவாது . 326 கழற்கண் அன்பு அடியேன் நின் பூங்கழல்கள் அவையல்லா எவை யாதும் புகழேன் ( புலம் 1 ) + தென்னன் வார்கழலே நினைந்து ( தென் 15 ) கழற்போதிறைஞ்சி ( பாண்டிப் 1 ) என்பனவற்றாலுமறிக . அங்க ணாளன் - கண்னோட்டமுடையவன் என நச்சினார்க்கினியார் உரைத்த மையுங் காண்க . இறைவன் அங்கண்மை அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணன் நேசமின் மனச் சமணர் தேரர் கணிரந்தமொழி பொய்கள் அகல்வித் தாசை கொள் மனத்தை அடியாரவர் தமக்கருளும் அங்கணன் ( ஞான 330 : 8 : 337 : 10 ) எனத் தேவாரந்து வரு வனவற்குறுமறிக . புங்கம் - உயர்ச்சி . * அம்புக்குதை துகில் உயர்ச்சியும் புங்கம் ( பிங் 10-819 ) என வருதல் காண்க . புங்கமான போசும் உயர்ந்த போகம் : உயர்ச்சி ஒப்பின் மையும் அழிவின்மையும் பற்றியாகும் . போகம் என்றது சிவானந்த போகத்தை ' உணர்வி னேர் பெற வருஞ் சிவபோகம் ( சம்பர் 161 ) எனப் பெரியபுராணத்து வருதலுங் காண்க . இதன்கண் புங்கமான போகம் புணர்ப்பதாக ' என்றதனால் ஆனத் தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க 71 . 76. போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும் ஏக நின் கழவி ணைய லாதி லேனென் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே . பரை : ஏக - ஒருவனே ; என் எம்பிரான் - என்னுடைய எம்பிரானே ; ஐயனே - ஞானாசாரியனே ; போகம் வேண்டி -சிவானந்த போகத்தை விரும் புதலால் ; புரந்தரன் ஆதி இன்பமும் வேண்டிலேன் - இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களையும் விரும்புகின்றிவேன் ; நின் கழல் இணை அலாது இலேன்- நின் திருவடிகள் இரண்டும் அல்லது வேறொரு பற்றுக்கோடும் இல்லேன் ; ஆகம் விண்டு கம்பம் வந்து - மனம் விரிந்து நெகிழவும் உடல் நடுங்கவும் ; என் அஞ்சவி கை குஞ்சிக் கண்ணே ஆக எனது குவிந்த கைகள் சிரசின்கண்ணே பொருந்தவும் ; கண்கள் தாரை ஆறது ஆக - கண்களிலிருந்து ஒழுகும் ஆனந்த நீர் ஒழுக்கு ஆறாகப் பெருக வும் அருளுக . திருச்சதகம் 327 ஏக . என் எம்பிரான் ஐயனே சிவபோகத்தை விரும்புதலால் இந்தி ரன் முதலிய இறையவர் பகங்களுக்குரிய இன்பங்களையும் விரும்புகின் றி லேன் ; நின் திருவடிகள் இரண்டு மல்லாது வேருெரு பற்றுக்கோடும் இல்லேன் ; மனம் விரிந்து நெகிழ உடல் நடுங்க என் அஞ்சலிக்கை சிர சின் கண்ணே பொருந்தவும் . கண்களினின்று ஒழுகும் ஆனந்த நீர் ஒழுக்கு ஆறாகப் பெருகவும் அருஞக என்பதாம் . பலம் போகமென்பது சிவானந்த போகத்தை . இதனையே அடிகள் விரும்பி அன்பு நின்கழற்கணே புணர்ப்பதாக அங்களுாள புங்கமான போகமே ' ' ( சத 71 ) என அருளியமையாலுமறிக . போகம் வேண்டி என்புழி வேண்டி என்னும் செய்தெனெச்சம் ஏதுப் பொருளில் வந்தது . தேவர்களின் பதங்கள் பலவற்றுள்ளும் இந்திரபதத்தால் வரும் இன்பம் சிறந்ததாதலின் புரந்தராதி இன்பமும் என்றார் . புரந்தராதி என்பது வடநூன் முடிவு . இன்பமும் என்புழி உம்மை சிறப்புப் பொருளில் வந் தது . இந்திரன் முதலிய தேவர்களுக்குரிய இன்பங்களிலும் சிவானந்த போகமே சிறந்ததாதலின் போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் ' ' என்றார் . கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு ( சத 2 ) எனவும் வேண்டேன் மண்ணும் விண்ணும் ' ( உயிருண்ணி ? ) என வும் வருவனவும் ஈண்டறியற்பாலன . ஏகன் - ஒருவன் . ஏக பெருந்தகை யாய பெம்மான் ( ஞான + : 4 ) எந்தையே ஏகமூர்த்தி ( நாவு 414 ) என்று வருவன காண்க . இறைவனை ஏகன் என்றது ஒப்பொருவனில் லாதவனாதலின் ஒப்பிலா ஒருவன் ஒப்பொருவர் இல்லாத ஒருவன் ' ' ' ( நாவு 289 : 4 248 : 9 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கழலிணைய லாது இலேன் என்றது மின் கழலிணையே பற்றுக் கோடன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன் என்றவாறு . போற்றியோ நமச்சிவாய புக லிடம் பிறிதொன்றில்லை ( சத 62 எனவும் பொருளே தமியேன் புகலி டமே ( நீத் 17 ) எனவும் அடிகள் அருளியமை காண்க . இனிநின் திரு வடிகளின் மேற் பற்றல்லது வேறொரு பற்று உடையேனல்லேன் எனினு மாம் . ' செப்பரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையுமற வெறிவார் ( பெரிய : விறன்மிண்ட 4 ) என வருதல் காண்க . செய் பரிவு நீங்கி ( சீவக 1737 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இறைவனை அகநெகிழ்ந்து இறைஞ்சுங்கால் உடலும் நடுங்குதலின் ' ஆகம் விண்டு கம்பம் வந்து ' என்றார் . மெய்ம் முழுதுங் கம்பித் தமுமடியா ரிடை ( நீத் 7 ) என அடிகள் அருளியமையுங் காண்க . விண்டு வந்து என்னும் செய்தெனேச்சங்களைச் செயவெனெச்சமாகக் கொள்க . என் அஞ்சலிக்கை குஞ்சிக்கண்ணே ஆக என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . குஞ்சி ஆண்மான் மயிர் குஞ்சி பித்தை யோர் ஆண் மான் மயிர் பிங்க 339 அஞ்சலி என் றது இரண்டு கையும் பதாகையாய் அகமொன்று வது என்பர் அடியார்க்கு நல்லார் ( சிலப்பதி 3:18 உரை ) அஞ்சவிக்கணே என்பதற்குத் தொழுதலின் கண்ணே எனினுமாம் . அஞ்சலி தொழுதல்