திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

344 திருவாசக ஆராய்ச்சியுரை பேசப்படுதல் புகழ்ந்துரைக்கப்படுதல். இறைவன் குருந்தமர நிழலில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து ஆட்கொண்ட காலத்து இறைவனால் அடிகளுக்குத் திருவெண்ணீறு அணியப்பட்டமையின் திருநீறு பூசப் பட்டேன் " என்றார். என்னையுந் தன் சுண்ண வெண்ணீ நணிவித்துத் தூ நெறியே சேரும் வண்ணம், அண்ணலெனக்கருளியவாருார் பெறுவார் அச்சோவே" (அச்சோ 4) என அடிகள் பிறிதோரிடத்து அருளியதும் ஈண்டறியற்பாலது. திருநீறு - வீடு பேற்றிற்கு அறிகுறி. அதனால் அதற்கு 'விபூதி' என்னும் பெயருண்மையுமறிக. பூசப்பட்டேன் என்றதன் ஆற்ற லால் பூசற்கு வினை முதலாகிய நின்னால் என்பது வருவிக்கப்பட்டது. பூதவர் என்றது ஈண்டுப் பூவுலகத்துள்ள பொது மக்களைக் குறித்தது. ஏசப்படுதல்-முதன் மந்திரியாகிய பதவியைக் கைவிட்டுச் சிவனுக்கு அடி யவனாகி அலைந்து திரியும் அறிவிலி என இகழப்படுதல். "நாடவர் பழித் துரை பூணதுவாக" (போற் 89-70) ''பித்தனென்றெனை யுலகவர் பகர்வ தோர் காரணமிது கேளீர்'' (அதிசய 4) என்பன ஈண்டறியற்பாலன. உள் அடியானென்றேசப்பட்டேன் என்றது உன் அடியனாகிய எனக்கு வரும் துன்பத்தை நீக்கிப் பாதுகாத்தல் நின்மேலது என்பன உட்கொண்டு. படுத்தல் - துன்பப்படுதல். அமையாது என்றது நின்திருவருட்டிறத் திற்குப் பொருந்தாது என்றவாறு. ஆல்-ஏசை. ஆட்பட்டேன் - ஆசைப் பட்டேன் என மாறிக் கூட்டி எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க. ஆசைப்பட்டேன் என்பதில் ஆசைக்குரிய வீடு பேற்றின்பம் வருவிக்கப் பட்டது. இதன்கண், வீடுபேற்றின்பத்தினைப் பெற ஆசைப்பட்டேன் என்ற தனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 82. 87. அடியேன் அல்லேன் கொள்ளோ தானெளை ஆட்கொண்டிலை அடியா ரானார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார். செடிசேர் உடலம் இது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. கொல்லோ ப-ரை : எங்கள் சிவலோகா-ாங்கள் சிவலோகநாதனே. அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்-உன் மெய்யடியாராயினார் எல்லோரும் கின்பால் வந்து நின் திருவடி மிழலை அடைந்தனர். செடி சேர் உடலம் இது நீக்கமாட்டேன் - துன்பத்தினைத் தருகின்ற கிய இதனை ஒழிக்கவும் மாட்டேன்; கடியேன் - கசிவீல்வாத கடின மனத்தை யுடையவனாகிய யான்: உன்னை கண் ஆர காணும் ஆறு காணேன்-நிலை பேறான பேரின்பத்தினைத் தரும் நின்னைக் கண் குளிரக் காணும் வழியை உடலமா திருச்சதகம் 345 யும் கண்டிலேன்; அதலால், அடியேன் அல்லேன் கொல்லோ-யான் நினக்கு அடியேன் அல்லேனோ? தான் என்னை ஆட்கொண்டிலை கொல்லோ -நீ தான் என்னை ஆட்கொண்டதில்லையோ? எங்கள் சிவலோகா, உன் மெய்யடியாராயினார் எல்லாரும் வந்து உன் திருவடி நிழலை அடைந்தனர். செடிசேர் உடலமாகிய இதனை ஒழிக்கவும் மாட்டேன்; சுடியவனாகிய யான் உள்ளைக் கண்ணூாரக் காணும் வழியை யும் கண்டிலேன்; ஆதலால் யான் நினக்கு அடியேன் அல்லேனோ? நீ தான் என்னை ஆட்கொண்டிலை கொல்லோ? ஆட்கொண்டதுண்டாயின் நின்னைக் காணுமாறு காட்டியருள்க என்பதாம். இறைவனுடன் போந்த மெய்யடியார்கள் எல்லாரும் இறைவன் தாளைச்சேர, தாம் அங்ஙனம் சேராமைபற்றி, அடியேனல்லேன் கொல்லோ தானெனை ஆண்டிலை கொல்லோ என்றருளிச் செய்வாராயினர். "அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ ?" (சத 93) என அடிகள் பிறிதோரிடத்து அரு ளியமையுங் காண்க. கொல் இரண்டும் அசைநிலை. கொண்டது என்னும் முற்றுவினை கொண்டு எனச் செய்யுள் விகாரத்தால் திரிந்து நின்றது. அடியாரானார் என்றது இறைவனுடன் போந்த மெய்யடியார்களை. உன் தாள் சேர்ந்தார்-அவர்கள் நின் திருவடி நீழலை யடைந்தனர். "அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர் ஒன்ற ஒன்ற உடன் கலந் தருளியும் பாதம் எய்தினர் பாதம் எய்தவும்' கீர்த்தி 130-7. என அடிகள் அருளியவாறுங் காண்க. ங் காண்ண அடியாரானார் நின் தாள் சேர்ந்தார், உடலம் இது நீக்கமாட்டேன் என்றது நின் மெய்யடியாராயினார் நின் திருவடி நிழலை அடைந்தனர்; யானோ இவ்வுடலோடிருந்து வருந்துவேனாயினேன்; இதனை ஒழிக்கவும் மாட்டேனாயினேன் என்றவாறு. ''அடியார் சிலருன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் (பிராத்த 2) " அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளர ராக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே (பிராத்த 3) செடி-பாவம்."செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்' (குலாப் 2) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. தீவினை மறமே செடியே யகமே துரிதங் கலுடம் பாலமாமே" (7.140) எனப் பிங்கலத்தை கூறுதலுங் காண்க. செடி ஈண்டுப் பாவத்தின் பயனாய துன்பத்தை 44 #
344 திருவாசக ஆராய்ச்சியுரை பேசப்படுதல் புகழ்ந்துரைக்கப்படுதல் . இறைவன் குருந்தமர நிழலில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து ஆட்கொண்ட காலத்து இறைவனால் அடிகளுக்குத் திருவெண்ணீறு அணியப்பட்டமையின் திருநீறு பூசப் பட்டேன் என்றார் . என்னையுந் தன் சுண்ண வெண்ணீ நணிவித்துத் தூ நெறியே சேரும் வண்ணம் அண்ணலெனக்கருளியவாருார் பெறுவார் அச்சோவே ( அச்சோ 4 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியதும் ஈண்டறியற்பாலது . திருநீறு - வீடு பேற்றிற்கு அறிகுறி . அதனால் அதற்கு ' விபூதி ' என்னும் பெயருண்மையுமறிக . பூசப்பட்டேன் என்றதன் ஆற்ற லால் பூசற்கு வினை முதலாகிய நின்னால் என்பது வருவிக்கப்பட்டது . பூதவர் என்றது ஈண்டுப் பூவுலகத்துள்ள பொது மக்களைக் குறித்தது . ஏசப்படுதல் - முதன் மந்திரியாகிய பதவியைக் கைவிட்டுச் சிவனுக்கு அடி யவனாகி அலைந்து திரியும் அறிவிலி என இகழப்படுதல் . நாடவர் பழித் துரை பூணதுவாக ( போற் 89-70 ) ' ' பித்தனென்றெனை யுலகவர் பகர்வ தோர் காரணமிது கேளீர் ' ' ( அதிசய 4 ) என்பன ஈண்டறியற்பாலன . உள் அடியானென்றேசப்பட்டேன் என்றது உன் அடியனாகிய எனக்கு வரும் துன்பத்தை நீக்கிப் பாதுகாத்தல் நின்மேலது என்பன உட்கொண்டு . படுத்தல் - துன்பப்படுதல் . அமையாது என்றது நின்திருவருட்டிறத் திற்குப் பொருந்தாது என்றவாறு . ஆல் - ஏசை . ஆட்பட்டேன் - ஆசைப் பட்டேன் என மாறிக் கூட்டி எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க . ஆசைப்பட்டேன் என்பதில் ஆசைக்குரிய வீடு பேற்றின்பம் வருவிக்கப் பட்டது . இதன்கண் வீடுபேற்றின்பத்தினைப் பெற ஆசைப்பட்டேன் என்ற தனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 82 . 87. அடியேன் அல்லேன் கொள்ளோ தானெளை ஆட்கொண்டிலை அடியா ரானார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார் . செடிசேர் உடலம் இது நீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே . கொல்லோ - ரை : எங்கள் சிவலோகா -ாங்கள் சிவலோகநாதனே . அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் - உன் மெய்யடியாராயினார் எல்லோரும் கின்பால் வந்து நின் திருவடி மிழலை அடைந்தனர் . செடி சேர் உடலம் இது நீக்கமாட்டேன் - துன்பத்தினைத் தருகின்ற கிய இதனை ஒழிக்கவும் மாட்டேன் ; கடியேன் - கசிவீல்வாத கடின மனத்தை யுடையவனாகிய யான் : உன்னை கண் ஆர காணும் ஆறு காணேன் - நிலை பேறான பேரின்பத்தினைத் தரும் நின்னைக் கண் குளிரக் காணும் வழியை உடலமா திருச்சதகம் 345 யும் கண்டிலேன் ; அதலால் அடியேன் அல்லேன் கொல்லோ - யான் நினக்கு அடியேன் அல்லேனோ ? தான் என்னை ஆட்கொண்டிலை கொல்லோ -நீ தான் என்னை ஆட்கொண்டதில்லையோ ? எங்கள் சிவலோகா உன் மெய்யடியாராயினார் எல்லாரும் வந்து உன் திருவடி நிழலை அடைந்தனர் . செடிசேர் உடலமாகிய இதனை ஒழிக்கவும் மாட்டேன் ; சுடியவனாகிய யான் உள்ளைக் கண்ணூாரக் காணும் வழியை யும் கண்டிலேன் ; ஆதலால் யான் நினக்கு அடியேன் அல்லேனோ ? நீ தான் என்னை ஆட்கொண்டிலை கொல்லோ ? ஆட்கொண்டதுண்டாயின் நின்னைக் காணுமாறு காட்டியருள்க என்பதாம் . இறைவனுடன் போந்த மெய்யடியார்கள் எல்லாரும் இறைவன் தாளைச்சேர தாம் அங்ஙனம் சேராமைபற்றி அடியேனல்லேன் கொல்லோ தானெனை ஆண்டிலை கொல்லோ என்றருளிச் செய்வாராயினர் . அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ ? ( சத 93 ) என அடிகள் பிறிதோரிடத்து அரு ளியமையுங் காண்க . கொல் இரண்டும் அசைநிலை . கொண்டது என்னும் முற்றுவினை கொண்டு எனச் செய்யுள் விகாரத்தால் திரிந்து நின்றது . அடியாரானார் என்றது இறைவனுடன் போந்த மெய்யடியார்களை . உன் தாள் சேர்ந்தார் - அவர்கள் நின் திருவடி நீழலை யடைந்தனர் . அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர் ஒன்ற ஒன்ற உடன் கலந் தருளியும் பாதம் எய்தினர் பாதம் எய்தவும் ' கீர்த்தி 130-7 . என அடிகள் அருளியவாறுங் காண்க . ங் காண்ண அடியாரானார் நின் தாள் சேர்ந்தார் உடலம் இது நீக்கமாட்டேன் என்றது நின் மெய்யடியாராயினார் நின் திருவடி நிழலை அடைந்தனர் ; யானோ இவ்வுடலோடிருந்து வருந்துவேனாயினேன் ; இதனை ஒழிக்கவும் மாட்டேனாயினேன் என்றவாறு . ' ' அடியார் சிலருன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் ( பிராத்த 2 ) அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளர ராக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே ( பிராத்த 3 ) செடி - பாவம் . செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் ' ( குலாப் 2 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . தீவினை மறமே செடியே யகமே துரிதங் கலுடம் பாலமாமே ( 7.140 ) எனப் பிங்கலத்தை கூறுதலுங் காண்க . செடி ஈண்டுப் பாவத்தின் பயனாய துன்பத்தை 44 #