திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை (குழைத் 2) உணர்த்தியது. உடலம் துன்பத்தினைப் பயத்தலின் செடி சேருடல் என் றார். செடிசே ருடலைச் சிதையாதது எத்துக்கு '" என வருதலும் காண்க. உடலம்-உடல், 'வம்பு பழுத்துடலம் மாண்டிங்கன் போகாமே" (குலாப் 8) என வருதலும் காண்க. சிவலோகத்தை அடைதற்குத் தடையாயுள்ள செடிசேருடலை நீக்கக் கருதியும் அதனை நீக்கமாட்டாமையின் செடிசேருடலம் இது நீக்க மாட்டேன் '' என்றார். “செடிசே ருடலைச் செலரிக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்" (யாத்4 ) என்பதனால் சிவலோகத்தையடைதற்கு உடலை உடலம் தடையாதலறிசு. உடலை நீக்க மாட்டேன் என்றார், நீக்கின் அது தற்கொலையாகிய பரவத்தைத் தருவதுடன் கோலமார் தரு பொதுவினில் வருகென்ற கட்டளையைக் கடந்த தீமையையும் தருதல் பற்றி யென்க. நீக்கவும் என்ற உம்மை தொக்கது. 346 கடியேன் - உருக்கமில்லாத நெஞ்சுடையேன். "கல்வகை மனத்தேன் '' (சத 48), ''கல் நேரனைய மனக்கடையாய" (ஆனந்த 1) என வருவன் காண்க. கடியேன் என்று அடிகள் தம்மைக் கூறுதலை "கடியேனுடைய கடுவிளையைக் களைந்து" (பிரார்த்த 2) என்புழியும் காண்க. கண்ணூரக் காணல் - கண்குளிரக் காணல், என்றது நன்றாகக் காணல். ஞானாசாரியனாக எழுந்தருளி வந்த திருக்கோலத்தை மீண்டும் கண்ணாரக் காண்டத்குரிய நெறியையும் அறிந்திலேன் என்பார் "கானுமாறு காணேன்" என்றார். காணுமாறும் என்னும் உம்மை தொக்கது. காட்டி யருளுதி என் அவாய் நிலையால் வருவித்து முடிக்க. இங்ஙனம் காட்டி வேண்டியருளுதல் யருளுதி என இறைவன் கட்டலையைக் கடந்த தாகாதோவெனின் இறைவனைப் பிரிந்த ஆற்றுமை மிகுதியால் வேண்டிக் கொள்ளப்பட்டதாகலின் ஆகாதென்க. இதன்கண் கண்ணாரக் காணுமாறு காணேன் காட்டியருளுதி என வேண்டிக் கொள்ளுதலால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 88. காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி யென்றன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆரமுநே அத்தா செத்தே போயினேன் எணான் இல்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மரனே. பாரை: பரஞ்சோதி-மேலான ஒளிப்பிழம்பாக உள்ளவனே; ஆனே, பெண்ணே ஆர் அமுதே - ஆணுாகவும், பெண்ணாகவும் அரிய அமுதமாக வும் உள்ளவனே; அத்தா - எங்கள் தந்தையே; எம்மானே - எங்கள் தலை வனே! உன்னை அந்தாள் கண்டேனும் - உன்னை ஆட்கொண்டருளிய அந் நாளில் காணப்பெற்றும்; கானும் ஆ காணேன் - இப்பொழுத உள்னைக் காணும் நெறியைக் கண்டிலேன்; பாணே பேசி என்தன்னை படுத்தது 347 திருச்சதகம் என்ன - இச்சக வார்த்தையைப் பேசி என்னை அகப்படுத்திக் கொண்டது யாது பயன் கருதி; அத்தா செத்தே போயினேன் - எங்கள் தந்தையே நின் பிரிவைப் பொறாது இறந்து போகும் நிலையிலுள்ளேன்; ஏண் நாண் இல்லா நாயினேன் - வலிமையும் நாணமும் இல்லாத நாயினேன்; என் கொண்டு எழுகேன் - எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு உய்ந்தெழுவேன். பரஞ்சோதி, ஆணாகவும் பெண்ணாகவும் அரிய அமுதமாகவும் உள்ள வனே, எம்மானே, ஆட்கொண்ட நாளில் உன்ளை காணப்பெற்றும் இப் பொழுது உன்னைக் காணும் நெறியைக் கண்டிலேன், பாணே பேசி என்னை அகப்படுத்திக் கொண்டது யாது பயன் கருதி? அத்தா. மின் பிரி வைப் பொறாது செத்துப் போகும் நிலையிலுள்ளேன்; வலியும் நாணமும் இல்லாத நாயினேன் எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு எழுவேன்; யான் பற்றாகப் பற்றி எழுதற்கு நின் அருளன்றிப் பிறிதொன் நமில்லை என்பதாம். உன்னை அந்நாட் கண்டேனும் காணும் ஆறுகாணேன் என்றது திருப்பெருந்துறையிற் குருந்த மரமிழலில் ஆட்கொண்டருளிய அந்நாளில் உனதருளால் உன்னைப் காணப்பெற்றும் இப்பொழுது காணும் நெறியைக் காணாதவனாயினேன். என்றவாறு. அந்நாட் கண்டமை கண்ணால் யானுங் கண்டேன் காண்க (திருவண்ட 581) 'கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர'' "திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணி கொண்டாய்"" (குழைத்த 9; 10) என வருவன வற்றாலும் அறிக. காணுமாறு காணாமை "கடியேன் உன்னைக் கண்ணா ரக் காணுமாறு காணே" (சத 83) என்பதனாலுமறிக. காண்பதற்கும் இறையருள் வேண்டுமென்பது "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே' (தே.நாவு 300:3) என்னும் அப்பர் அருண்மொழியானுமறிக. கண்டேனும் - உம்மை உயர்வு சிறப்பு. பாண் - இச்சகவார்த்தை "யாது பாண் குலாய்ப் படுக்கல் வேண்டா (சீவக 2515.) இனி பான்-கள்; அது ஆகுபெயராய் மயக்கந்தரும் சொற்களை உணர்த்தியது, பாருமுளர். படுத்தது - அகப்படுத்திக் கொண்டது. என் றது அடிமை கொண்டது. என் என்றது யாது பயன் கருதி நீ பெற்ற தொன்றென்பால்'' (கோயிற் 10) என அடிகள் அருளியவாறுங் காண்க. நினக்கு என்னால் யாதும் பயனில்லை என்பது கூற வேண்டா... எனக்குப் பயன் கருதியே என்னை அகப்படுத்திக் கொண்டாயாயின் இப் போது உன்னைக் காணும் நெறியறியாதவனாய் இருத்தலால் எனக்கும் பயனின்றாகின்றதே, காணுமாறு காட்டியருள் என்பது குறிப்பு. பரஞ் சோதி - எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய வொளி (திருக்கோவை 131 பேர்.) எவ்வாவுயிர்க்கும் தந்தையாந் தன்மையும் தாயாந் தன்மையும் உடைய வன் இறைவனாதலின் "ஆணை, பெண்ணே" என்றார். இனி ஒரே திரு
திருவாசக ஆராய்ச்சியுரை ( குழைத் 2 ) உணர்த்தியது . உடலம் துன்பத்தினைப் பயத்தலின் செடி சேருடல் என் றார் . செடிசே ருடலைச் சிதையாதது எத்துக்கு ' என வருதலும் காண்க . உடலம் - உடல் ' வம்பு பழுத்துடலம் மாண்டிங்கன் போகாமே ( குலாப் 8 ) என வருதலும் காண்க . சிவலோகத்தை அடைதற்குத் தடையாயுள்ள செடிசேருடலை நீக்கக் கருதியும் அதனை நீக்கமாட்டாமையின் செடிசேருடலம் இது நீக்க மாட்டேன் ' ' என்றார் . செடிசே ருடலைச் செலரிக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் ( யாத் 4 ) என்பதனால் சிவலோகத்தையடைதற்கு உடலை உடலம் தடையாதலறிசு . உடலை நீக்க மாட்டேன் என்றார் நீக்கின் அது தற்கொலையாகிய பரவத்தைத் தருவதுடன் கோலமார் தரு பொதுவினில் வருகென்ற கட்டளையைக் கடந்த தீமையையும் தருதல் பற்றி யென்க . நீக்கவும் என்ற உம்மை தொக்கது . 346 கடியேன் - உருக்கமில்லாத நெஞ்சுடையேன் . கல்வகை மனத்தேன் ' ' ( சத 48 ) ' ' கல் நேரனைய மனக்கடையாய ( ஆனந்த 1 ) என வருவன் காண்க . கடியேன் என்று அடிகள் தம்மைக் கூறுதலை கடியேனுடைய கடுவிளையைக் களைந்து ( பிரார்த்த 2 ) என்புழியும் காண்க . கண்ணூரக் காணல் - கண்குளிரக் காணல் என்றது நன்றாகக் காணல் . ஞானாசாரியனாக எழுந்தருளி வந்த திருக்கோலத்தை மீண்டும் கண்ணாரக் காண்டத்குரிய நெறியையும் அறிந்திலேன் என்பார் கானுமாறு காணேன் என்றார் . காணுமாறும் என்னும் உம்மை தொக்கது . காட்டி யருளுதி என் அவாய் நிலையால் வருவித்து முடிக்க . இங்ஙனம் காட்டி வேண்டியருளுதல் யருளுதி என இறைவன் கட்டலையைக் கடந்த தாகாதோவெனின் இறைவனைப் பிரிந்த ஆற்றுமை மிகுதியால் வேண்டிக் கொள்ளப்பட்டதாகலின் ஆகாதென்க . இதன்கண் கண்ணாரக் காணுமாறு காணேன் காட்டியருளுதி என வேண்டிக் கொள்ளுதலால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 88. காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி யென்றன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆரமுநே அத்தா செத்தே போயினேன் எணான் இல்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மரனே . பாரை : பரஞ்சோதி - மேலான ஒளிப்பிழம்பாக உள்ளவனே ; ஆனே பெண்ணே ஆர் அமுதே - ஆணுாகவும் பெண்ணாகவும் அரிய அமுதமாக வும் உள்ளவனே ; அத்தா - எங்கள் தந்தையே ; எம்மானே - எங்கள் தலை வனே ! உன்னை அந்தாள் கண்டேனும் - உன்னை ஆட்கொண்டருளிய அந் நாளில் காணப்பெற்றும் ; கானும் காணேன் - இப்பொழுத உள்னைக் காணும் நெறியைக் கண்டிலேன் ; பாணே பேசி என்தன்னை படுத்தது 347 திருச்சதகம் என்ன - இச்சக வார்த்தையைப் பேசி என்னை அகப்படுத்திக் கொண்டது யாது பயன் கருதி ; அத்தா செத்தே போயினேன் - எங்கள் தந்தையே நின் பிரிவைப் பொறாது இறந்து போகும் நிலையிலுள்ளேன் ; ஏண் நாண் இல்லா நாயினேன் - வலிமையும் நாணமும் இல்லாத நாயினேன் ; என் கொண்டு எழுகேன் - எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு உய்ந்தெழுவேன் . பரஞ்சோதி ஆணாகவும் பெண்ணாகவும் அரிய அமுதமாகவும் உள்ள வனே எம்மானே ஆட்கொண்ட நாளில் உன்ளை காணப்பெற்றும் இப் பொழுது உன்னைக் காணும் நெறியைக் கண்டிலேன் பாணே பேசி என்னை அகப்படுத்திக் கொண்டது யாது பயன் கருதி ? அத்தா . மின் பிரி வைப் பொறாது செத்துப் போகும் நிலையிலுள்ளேன் ; வலியும் நாணமும் இல்லாத நாயினேன் எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு எழுவேன் ; யான் பற்றாகப் பற்றி எழுதற்கு நின் அருளன்றிப் பிறிதொன் நமில்லை என்பதாம் . உன்னை அந்நாட் கண்டேனும் காணும் ஆறுகாணேன் என்றது திருப்பெருந்துறையிற் குருந்த மரமிழலில் ஆட்கொண்டருளிய அந்நாளில் உனதருளால் உன்னைப் காணப்பெற்றும் இப்பொழுது காணும் நெறியைக் காணாதவனாயினேன் . என்றவாறு . அந்நாட் கண்டமை கண்ணால் யானுங் கண்டேன் காண்க ( திருவண்ட 581 ) ' கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர ' ' திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணி கொண்டாய் ( குழைத்த 9 ; 10 ) என வருவன வற்றாலும் அறிக . காணுமாறு காணாமை கடியேன் உன்னைக் கண்ணா ரக் காணுமாறு காணே ( சத 83 ) என்பதனாலுமறிக . காண்பதற்கும் இறையருள் வேண்டுமென்பது காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே ' ( தே.நாவு 300 : 3 ) என்னும் அப்பர் அருண்மொழியானுமறிக . கண்டேனும் - உம்மை உயர்வு சிறப்பு . பாண் - இச்சகவார்த்தை யாது பாண் குலாய்ப் படுக்கல் வேண்டா ( சீவக 2515. ) இனி பான் - கள் ; அது ஆகுபெயராய் மயக்கந்தரும் சொற்களை உணர்த்தியது பாருமுளர் . படுத்தது - அகப்படுத்திக் கொண்டது . என் றது அடிமை கொண்டது . என் என்றது யாது பயன் கருதி நீ பெற்ற தொன்றென்பால் ' ' ( கோயிற் 10 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . நினக்கு என்னால் யாதும் பயனில்லை என்பது கூற வேண்டா ... எனக்குப் பயன் கருதியே என்னை அகப்படுத்திக் கொண்டாயாயின் இப் போது உன்னைக் காணும் நெறியறியாதவனாய் இருத்தலால் எனக்கும் பயனின்றாகின்றதே காணுமாறு காட்டியருள் என்பது குறிப்பு . பரஞ் சோதி - எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய வொளி ( திருக்கோவை 131 பேர் . ) எவ்வாவுயிர்க்கும் தந்தையாந் தன்மையும் தாயாந் தன்மையும் உடைய வன் இறைவனாதலின் ஆணை பெண்ணே என்றார் . இனி ஒரே திரு