திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

348 திருவாசக ஆராய்ச்சியுரை மேனியில் இவ்விருவடிவும் உண்மை பற்றி இங்ஙனம் கூறினார் எனினு மமையும். "மாதுற்ற மேனி" (கோவை 174.) ஆரமுதே யென்றார் கழி பெருஞ் சுவை யோடுறுதி பயத்தலுடைமையான். நின் பிரிவாற்றாது செத்தே போவேன் என்பதைத் துணிவு பற்றிப் போயினேன் என இறந்த காலத்தாற் கூறினார். ஏண் - நின்னைக் காணும் வலி. ஏண்-வலி என்னும் பொருட்டாதல் "ஏணிலான் சேவகமும்" (சிறு பஞ்ச 12) என்புழியுங் காண்க. ஏண்-திண்மை (சீவக 770 நச்.) நாண் - நின்னைக் காணமுடியாத போது இறந்துபட வேண்டிய நாணம். பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும். நானொ ணாததொர் நாண மெய்தி'' (திருக்கமு 4) என வருதலும் காண்க. என் கொண்டெழுகேன் என்றது எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு உயந்தெழுவேன்? யான் பற்றுக் கோடாகப் பற்றி எழுவதற்கு நின் னருளன்றிப் பிறிதொன் றுமில்லை என்றவாறு. - d இதன்கண் 'காணுமாறு காணேன்" என்பதாலும் "என் கொண் டெழுகேன்" என்பதாலும் வின்னருளால் காணுமாறு காட்டியருள வேண்டுமென்பது பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்ப தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 84. 89. மானேர் நோக்கி யுடையாள் பங்கா மறையீற்றியா மறை யோனே தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுக போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. F உணர் ப-ரை: மான் நேர் நோக்கி உடையாள் பங்கா-மானினது நோக் கினை ஒத்த நோக்கினையுடையவளும் எல்லாவற்றையும் உடையவளுமா கிய உமையை ஒரு கூற்றிலுடையவனே; மறை ஈறு அறியா மறை யோனே- வேதங்களும் அவற்றின் முடிபாகிய உபநிடதங்களும் முடியாத மறைபொருளாக உள்ளவனே, தேனே- தேன் போன்றவனே; அமுதே - அமுதம் போன்றவனே ; சிந்தைக்கு அறியாய் - மனத்துக்கும் அறி தற்கரியவனே : சிறியேன் பிழை பொறுக்கும் கோனே-சிறுமையுடையே ஞாகிய என் குற்றங்களைப் பொறுத்து என்னை ஆட்கொண்டருளிய தலை வனே; சிறிது கொடுமை பறைந்தேன் - ஆட்கொண்டருளிய நின்னைப் பிரிந்த ஆற்றமை மிகுதியால் சிறிதளவு கொடுஞ் சொற்களைக் கூறி விட்டேன்; அடியார் மா சிவநகர் குறுகப்போனார் - நின் மெய்யடியார்கள் பெருமையையுடைய சிவபுரத்தை அணுகச் சென்றார்கள்: யானும் பொய் யும் புறமே போந்தோம் - யானும் பொய்யாகிய உடலும் அதற்குப் புறம் பான வழியீற் போனோம். அடியார் போனவழியிற் போக அருள் செய்ய வேண்டும். STRON திருச்சதகம் 349 உடையாள் பங்கா, மறையும் மறையின் ஈறும் அறிய முடியாத மறை யோனே. தேனே, அமுதே, சிந்தைக்கரியவனே, சிறியேன் பிழை பொறுக் கும் கோனே.பின்னைப் பிரிந்த ஆற்றாமை மிகுதியால் சிறிது கொடுஞ் சொற்களைச் சொல்லி விட்டேன்; மெய்யடியார்கள் சிவமாநகர் குறுகப் போனார். யானும் பொய்யாகிய உடலும் அதற்குப் புறம்பான வழியிற் போனோம். அவர் போன வழியிற் போக அருள் செய்யவேண்டும் என்ப தாம். "" நேரச்சி "மானேர். உடையாள் " என்றது உமையம்மையை. 'மானேர் நோக்கி மணாள் போற்றி '' (போற்றி 135). " மானேர் நோக்கி உமையாள் ' (சத 55), 'மானேர் நோக்கி மணவாள" (குழைத் 4), "உடையாள் உன்றன் நடுவிருக்கும் " (கோயில் மூத் 1) என உடையாள் - எல்லாவற்றையும் இனி எம்மையாளாகவுடையாள் எனிறுமாம். ளுடையா ளிட்டிடையின்', (திருவெம் 16) என வருதலுங் காண்க. வருவன கான்க, 257 பேர். உடையாள் திருக்கோவை "எம்மையா மறை ஈறு - மறையும் ஈறும் என உம்மைத்தொகை. வேதங்களும் அவற்றின் முடிவாகிய உபநிடதங்களும் என்றபடி. மறைாறு அறியா என்பதற்கு வேதமும் முடிவை அறியாத எனினுமாம். மறையோன் - மறை பொருளாயுள்ளவன், அந்தணன். கோவை 218 பேர் இறைவன் தேன் - போலவும் அமுதம் போலவும் இனிமை பயக்குந் தன்மை பற்றித் தேனே அமுதே என்றார். தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெரு மான்'' (ஏசற 10) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. அமுது போற் கழிபெருஞ் சுவையோடுறுதிபயத்தலுடையவனே என் பார். அமுதே என்றார் எனினுமாம். மனங்கழிய மீன்றமையின் இறை வனைச் சிந்தைக் கரியாய் என்றார். "சிந்தைக் கரிய சிவமே போற்றி " (போற்றி 204), சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே" (சத 47) என 280: 9) என அடிகளும். " அறிவறிய சிந்தையானை" அப்பரடி களும் அருளியமை காண்க. சிந்தைக்கரியாய் என்றதனால் வாக்குக்கும் அறிய வன் என்பதும் கொள்க. '"சொல்லற் கரியானை " (சிவபுரா 22), "சொற் கழிந்தவனே" (நீத் 48, " சொற்பதங் கடந்த அப்பன் '" (அச்சப் 6) என வருவனவுங் காண்க. சிறிதே கொடுமை பறைந்தேன் அதனைப் பொறுத்தருள வேண்டு மென்பார், "சிறியேன் பிழை பொறுக்கும் கோனே" என்றார். "வெறுப் பனவே செய்யுமென் சிறுமையை நின் பொறுமையினாற் பொறுப்பவனே" (அடைக் 2 பேயேன துள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை'' (கோத் 12) என வருவன காண்க. ''அத்தர வுன் னடியேனை யன்பாலார்த் தாய்...பேயேனாயேன் பிழைத்தனகளெத்தனையும் பொறுத்தாயன்றே (தே.308:8) என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க. "1 கொடுமை-கடுஞ்சொல். பறைதல் சொல்லுதல். "ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன் பறைந்தோர் பார்ப்பான் அன்றிது செய்யான்""
348 திருவாசக ஆராய்ச்சியுரை மேனியில் இவ்விருவடிவும் உண்மை பற்றி இங்ஙனம் கூறினார் எனினு மமையும் . மாதுற்ற மேனி ( கோவை 174. ) ஆரமுதே யென்றார் கழி பெருஞ் சுவை யோடுறுதி பயத்தலுடைமையான் . நின் பிரிவாற்றாது செத்தே போவேன் என்பதைத் துணிவு பற்றிப் போயினேன் என இறந்த காலத்தாற் கூறினார் . ஏண் - நின்னைக் காணும் வலி . ஏண் - வலி என்னும் பொருட்டாதல் ஏணிலான் சேவகமும் ( சிறு பஞ்ச 12 ) என்புழியுங் காண்க . ஏண் - திண்மை ( சீவக 770 நச் . ) நாண் - நின்னைக் காணமுடியாத போது இறந்துபட வேண்டிய நாணம் . பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும் . நானொ ணாததொர் நாண மெய்தி ' ' ( திருக்கமு 4 ) என வருதலும் காண்க . என் கொண்டெழுகேன் என்றது எதனைப் பற்றுக் கோடாகக் கொண்டு உயந்தெழுவேன் ? யான் பற்றுக் கோடாகப் பற்றி எழுவதற்கு நின் னருளன்றிப் பிறிதொன் றுமில்லை என்றவாறு . - d இதன்கண் ' காணுமாறு காணேன் என்பதாலும் என் கொண் டெழுகேன் என்பதாலும் வின்னருளால் காணுமாறு காட்டியருள வேண்டுமென்பது பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்ப தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 84 . 89. மானேர் நோக்கி யுடையாள் பங்கா மறையீற்றியா மறை யோனே தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுக போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே . F உணர் - ரை : மான் நேர் நோக்கி உடையாள் பங்கா - மானினது நோக் கினை ஒத்த நோக்கினையுடையவளும் எல்லாவற்றையும் உடையவளுமா கிய உமையை ஒரு கூற்றிலுடையவனே ; மறை ஈறு அறியா மறை யோனே- வேதங்களும் அவற்றின் முடிபாகிய உபநிடதங்களும் முடியாத மறைபொருளாக உள்ளவனே தேனே- தேன் போன்றவனே ; அமுதே - அமுதம் போன்றவனே ; சிந்தைக்கு அறியாய் - மனத்துக்கும் அறி தற்கரியவனே : சிறியேன் பிழை பொறுக்கும் கோனே - சிறுமையுடையே ஞாகிய என் குற்றங்களைப் பொறுத்து என்னை ஆட்கொண்டருளிய தலை வனே ; சிறிது கொடுமை பறைந்தேன் - ஆட்கொண்டருளிய நின்னைப் பிரிந்த ஆற்றமை மிகுதியால் சிறிதளவு கொடுஞ் சொற்களைக் கூறி விட்டேன் ; அடியார் மா சிவநகர் குறுகப்போனார் - நின் மெய்யடியார்கள் பெருமையையுடைய சிவபுரத்தை அணுகச் சென்றார்கள் : யானும் பொய் யும் புறமே போந்தோம் - யானும் பொய்யாகிய உடலும் அதற்குப் புறம் பான வழியீற் போனோம் . அடியார் போனவழியிற் போக அருள் செய்ய வேண்டும் . STRON திருச்சதகம் 349 உடையாள் பங்கா மறையும் மறையின் ஈறும் அறிய முடியாத மறை யோனே . தேனே அமுதே சிந்தைக்கரியவனே சிறியேன் பிழை பொறுக் கும் கோனே.பின்னைப் பிரிந்த ஆற்றாமை மிகுதியால் சிறிது கொடுஞ் சொற்களைச் சொல்லி விட்டேன் ; மெய்யடியார்கள் சிவமாநகர் குறுகப் போனார் . யானும் பொய்யாகிய உடலும் அதற்குப் புறம்பான வழியிற் போனோம் . அவர் போன வழியிற் போக அருள் செய்யவேண்டும் என்ப தாம் . நேரச்சி மானேர் . உடையாள் என்றது உமையம்மையை . ' மானேர் நோக்கி மணாள் போற்றி ' ' ( போற்றி 135 ) . மானேர் நோக்கி உமையாள் ' ( சத 55 ) ' மானேர் நோக்கி மணவாள ( குழைத் 4 ) உடையாள் உன்றன் நடுவிருக்கும் ( கோயில் மூத் 1 ) என உடையாள் - எல்லாவற்றையும் இனி எம்மையாளாகவுடையாள் எனிறுமாம் . ளுடையா ளிட்டிடையின் ' ( திருவெம் 16 ) என வருதலுங் காண்க . வருவன கான்க 257 பேர் . உடையாள் திருக்கோவை எம்மையா மறை ஈறு - மறையும் ஈறும் என உம்மைத்தொகை . வேதங்களும் அவற்றின் முடிவாகிய உபநிடதங்களும் என்றபடி . மறைாறு அறியா என்பதற்கு வேதமும் முடிவை அறியாத எனினுமாம் . மறையோன் - மறை பொருளாயுள்ளவன் அந்தணன் . கோவை 218 பேர் இறைவன் தேன் - போலவும் அமுதம் போலவும் இனிமை பயக்குந் தன்மை பற்றித் தேனே அமுதே என்றார் . தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெரு மான் ' ' ( ஏசற 10 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . அமுது போற் கழிபெருஞ் சுவையோடுறுதிபயத்தலுடையவனே என் பார் . அமுதே என்றார் எனினுமாம் . மனங்கழிய மீன்றமையின் இறை வனைச் சிந்தைக் கரியாய் என்றார் . சிந்தைக் கரிய சிவமே போற்றி ( போற்றி 204 ) சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே ( சத 47 ) என 280 : 9 ) என அடிகளும் . அறிவறிய சிந்தையானை அப்பரடி களும் அருளியமை காண்க . சிந்தைக்கரியாய் என்றதனால் வாக்குக்கும் அறிய வன் என்பதும் கொள்க . ' சொல்லற் கரியானை ( சிவபுரா 22 ) சொற் கழிந்தவனே ( நீத் 48 சொற்பதங் கடந்த அப்பன் ' ( அச்சப் 6 ) என வருவனவுங் காண்க . சிறிதே கொடுமை பறைந்தேன் அதனைப் பொறுத்தருள வேண்டு மென்பார் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே என்றார் . வெறுப் பனவே செய்யுமென் சிறுமையை நின் பொறுமையினாற் பொறுப்பவனே ( அடைக் 2 பேயேன துள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை ' ' ( கோத் 12 ) என வருவன காண்க . ' ' அத்தர வுன் னடியேனை யன்பாலார்த் தாய் ... பேயேனாயேன் பிழைத்தனகளெத்தனையும் பொறுத்தாயன்றே ( தே .308 : 8 ) என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க . 1 கொடுமை - கடுஞ்சொல் . பறைதல் சொல்லுதல் . ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன் பறைந்தோர் பார்ப்பான் அன்றிது செய்யான்