திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ** மழை (பரி6:20;9:11) என்பவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க. இப்பொழுது கூடாதாயினும் காலம் நீட்டியாது விரைந்து வந்து எனப் பொருள் தந்து நின்றது. அங்ஙனம் கொள்ளாக்கால் அடியார் பிணி தீர்த்துப் பாதம் கொடுத்தருளிளை; அது அரிதாயினும் என் வினையைப் பொடியாக்கி ஒல்லை திருவடியைத் தரவேண்டும் என வேண்டுதல் பய னில் கூற்றாம். 356 இதன் கண், ஒல்லை தணியார் பாதம் தாராய் என்றதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 80. 04. யானே பொய்யென் நெஞ்சும் பொய்யென் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. 22 ப.ரை : தித்திக்கும் தேனே அமுதே கரும்பின் தெளிவே-இனிக்கும் தேனும் அமுதும் கரும்பின் தெளிந்த சாறுமாக உள்ளவனே; மானே. பெரியோனே; யானே பொய்-யானும் நிலையில்லாத பொய் வாழ்வுடை யேன்; என் நெஞ்சும் பொய்-என் உள்ளமும் நிலைபேறில்லாத பொய்ம்மை யுடையது; என் அன்பும் பொய்- அவ்வுள்ளத்தினிடத்துளதாகும் அன்பும் இடையீடுபடும் பொய்ம்மையுடையது; ஆனால் - அங்ஙனமாயின்: வினையேன் அழுதால் உன்னை பெறலாமே - பிராரத்த வினையின் பயனை கொண்டிருக்கும் யான் உன்னை அடைய வேண்டுமென்று விரும்பி அழு தால் உன்னை அடைய முடியுமா? அடியேன் உன்னை வந்து உறும் ஆறு அருளாய்-ஆதலால் அடியேன் உன்னை வந்து அடையுமாறு அருள் செய்ய வேண்டும். தேனே அமுதே கரும்பின் தெளிவே மானே, யானே பொய்; என் நெஞ்சும் பொய்மையுடையது. அந்நெஞ்சிடத்துளதாகும் அன்பும் பொய்; அங்ஙனமாயின் உன்னை அடைய வேண்டுமென்று விரும்பி அழுதால் உன்னை அடைய முடியுமா? ஆதலால் அடியேன் நின்னை வந்து அடையு மாறு அருள் செய்ய வேண்டும் என்பதாம். வசி யானே என்பதில் ஏகாரம் எண்ணுப் பொருளது. அடிகள் தம்மை பொய் என்றது நிலையற்ற உலக வாழ்வுடைமை பற்றியாகும். நெஞ்சும் பொய் என்றது ஓரிடத்து நிலை பேறின்றி அலையு நிலைமை பற்றியாகும். தம்முடைய அன்பிரைப் பொய் என்றது எண்ணெய் ஒழுக்குப் போல இடையீடின்றி நிகழாது அன்பு இடையறவுபடுதல் பற்றியாகும். அங்ங னம் இடையறவுபடுதல் உண்டி உறக்கம் முதலியன பற்றியாகும். ஆனால் என்பது முற்கூறிய மூன்றும் பொய்யாகுமாயின் என ஏதுவை வலி யுறுத்தியது. வினையேன் என்றது எடுத்த உடலுக்குரிய பிராரத்த கன் 357 திருச்சதகம் மத்தை அநுபவித்துக் கொண்டிருக்கும் யான் என்றவாறு. வினையேன்- குறிப்பு வினையாலணையும் பெயர். பெறலாமே என்பதில் ஏகாரம் எதிர் மறைப் பொருளில் வந்தது. அடியேன் வந்து உறுமாறு அருளாய் எனப் பின்னர் அடிகள் வேண்டிக் கொள்ளுமாற்றானும் அவ்வேகாரம் எதிர் மறை என்பது இனிது விளங்கும். தித்திக்கும் என்பதனை தேன் அமுது கரும்பின் தெளிவுகளுக்கு இனம் விலக்காது இயல்புகூறும் அடை மொழியாக்குக. தேன் முதலியன போல இறைவன் இனியனாக விளங்குதல் தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே (சத 55) என அடிகள் அருளியவாற்றானுமறிக. தேன் அமுது கரும்பின் தெளிவு என்பன அறிவு இச்சை செயல்களுக்கு இன்பந்தருபவன என்பதைக் குறிப்பனவாகும். தித்திக்கும் மானே என இயைத்து இனிமைதரும் பெரியோனே உரைப்பினும் அமையும். மான் என்பது மகான் என்பதின் திரிபு. பெரி யோன் என்பது கருத்து, அருளாய் முன்னிலை உடன்பாட்டு எதிர்கால வினைமுற்று. என இதன் கண், அடியேன் உனைவந்து உறுமாறு அருளாய் என்பதனால் உன்னை வந்து அடைந்து பெறும் ஆனந்தத்தினால் பரவசமடைய விரும்பு தல் பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 90. 10.ஆனந்தாதீதம் ஆனந்தாதீதம்- வடநூன் முடிபு. ஆனந்த அதீதம் எனப் பிரிக்கப் படும். ஆனந்தம் பேரின்பம். அதீதம் அதன் மேற்பட்ட நிலை. இறை வனது முத்தியின்பத்தில் தன்னை மறத்தல் பரவசமாகும். அதன் முதிர்ந்த நிலையே அதீதமாகும். இந்நிலையையடையும் உயிருக்குத் தன்னுணர்வும் தான் நுகரும் உணர்வும் உளவாகா. எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 95. மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர் கொள் தாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்ற நின் மெய்ம்மை யன்பருள் மெய்ம்மை மேவினார் சறி லாதநீ எனியை யாய்வந் தொளி செய் மானுட மாக நோக்கியும் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே.
திருவாசக ஆராய்ச்சியுரை ** மழை ( பரி 6 : 20 ; 9 : 11 ) என்பவற்றிலும் இப்பொருட்டாதல் காண்க . இப்பொழுது கூடாதாயினும் காலம் நீட்டியாது விரைந்து வந்து எனப் பொருள் தந்து நின்றது . அங்ஙனம் கொள்ளாக்கால் அடியார் பிணி தீர்த்துப் பாதம் கொடுத்தருளிளை ; அது அரிதாயினும் என் வினையைப் பொடியாக்கி ஒல்லை திருவடியைத் தரவேண்டும் என வேண்டுதல் பய னில் கூற்றாம் . 356 இதன் கண் ஒல்லை தணியார் பாதம் தாராய் என்றதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 80 . 04. யானே பொய்யென் நெஞ்சும் பொய்யென் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே . 22 ப.ரை : தித்திக்கும் தேனே அமுதே கரும்பின் தெளிவே - இனிக்கும் தேனும் அமுதும் கரும்பின் தெளிந்த சாறுமாக உள்ளவனே ; மானே . பெரியோனே ; யானே பொய் - யானும் நிலையில்லாத பொய் வாழ்வுடை யேன் ; என் நெஞ்சும் பொய் - என் உள்ளமும் நிலைபேறில்லாத பொய்ம்மை யுடையது ; என் அன்பும் பொய்- அவ்வுள்ளத்தினிடத்துளதாகும் அன்பும் இடையீடுபடும் பொய்ம்மையுடையது ; ஆனால் - அங்ஙனமாயின் : வினையேன் அழுதால் உன்னை பெறலாமே - பிராரத்த வினையின் பயனை கொண்டிருக்கும் யான் உன்னை அடைய வேண்டுமென்று விரும்பி அழு தால் உன்னை அடைய முடியுமா ? அடியேன் உன்னை வந்து உறும் ஆறு அருளாய் - ஆதலால் அடியேன் உன்னை வந்து அடையுமாறு அருள் செய்ய வேண்டும் . தேனே அமுதே கரும்பின் தெளிவே மானே யானே பொய் ; என் நெஞ்சும் பொய்மையுடையது . அந்நெஞ்சிடத்துளதாகும் அன்பும் பொய் ; அங்ஙனமாயின் உன்னை அடைய வேண்டுமென்று விரும்பி அழுதால் உன்னை அடைய முடியுமா ? ஆதலால் அடியேன் நின்னை வந்து அடையு மாறு அருள் செய்ய வேண்டும் என்பதாம் . வசி யானே என்பதில் ஏகாரம் எண்ணுப் பொருளது . அடிகள் தம்மை பொய் என்றது நிலையற்ற உலக வாழ்வுடைமை பற்றியாகும் . நெஞ்சும் பொய் என்றது ஓரிடத்து நிலை பேறின்றி அலையு நிலைமை பற்றியாகும் . தம்முடைய அன்பிரைப் பொய் என்றது எண்ணெய் ஒழுக்குப் போல இடையீடின்றி நிகழாது அன்பு இடையறவுபடுதல் பற்றியாகும் . அங்ங னம் இடையறவுபடுதல் உண்டி உறக்கம் முதலியன பற்றியாகும் . ஆனால் என்பது முற்கூறிய மூன்றும் பொய்யாகுமாயின் என ஏதுவை வலி யுறுத்தியது . வினையேன் என்றது எடுத்த உடலுக்குரிய பிராரத்த கன் 357 திருச்சதகம் மத்தை அநுபவித்துக் கொண்டிருக்கும் யான் என்றவாறு . வினையேன் குறிப்பு வினையாலணையும் பெயர் . பெறலாமே என்பதில் ஏகாரம் எதிர் மறைப் பொருளில் வந்தது . அடியேன் வந்து உறுமாறு அருளாய் எனப் பின்னர் அடிகள் வேண்டிக் கொள்ளுமாற்றானும் அவ்வேகாரம் எதிர் மறை என்பது இனிது விளங்கும் . தித்திக்கும் என்பதனை தேன் அமுது கரும்பின் தெளிவுகளுக்கு இனம் விலக்காது இயல்புகூறும் அடை மொழியாக்குக . தேன் முதலியன போல இறைவன் இனியனாக விளங்குதல் தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே ( சத 55 ) என அடிகள் அருளியவாற்றானுமறிக . தேன் அமுது கரும்பின் தெளிவு என்பன அறிவு இச்சை செயல்களுக்கு இன்பந்தருபவன என்பதைக் குறிப்பனவாகும் . தித்திக்கும் மானே என இயைத்து இனிமைதரும் பெரியோனே உரைப்பினும் அமையும் . மான் என்பது மகான் என்பதின் திரிபு . பெரி யோன் என்பது கருத்து அருளாய் முன்னிலை உடன்பாட்டு எதிர்கால வினைமுற்று . என இதன் கண் அடியேன் உனைவந்து உறுமாறு அருளாய் என்பதனால் உன்னை வந்து அடைந்து பெறும் ஆனந்தத்தினால் பரவசமடைய விரும்பு தல் பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 90 . 10.ஆனந்தாதீதம் ஆனந்தாதீதம்- வடநூன் முடிபு . ஆனந்த அதீதம் எனப் பிரிக்கப் படும் . ஆனந்தம் பேரின்பம் . அதீதம் அதன் மேற்பட்ட நிலை . இறை வனது முத்தியின்பத்தில் தன்னை மறத்தல் பரவசமாகும் . அதன் முதிர்ந்த நிலையே அதீதமாகும் . இந்நிலையையடையும் உயிருக்குத் தன்னுணர்வும் தான் நுகரும் உணர்வும் உளவாகா . எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 95. மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர் கொள் தாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்ற நின் மெய்ம்மை யன்பருள் மெய்ம்மை மேவினார் சறி லாதநீ எனியை யாய்வந் தொளி செய் மானுட மாக நோக்கியும் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே .