திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

360 திருச்சதகம் நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக் கைத்து '' (அதிசயம் 8) நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம வெளப்பெற்றேன்- என அடிகள் அருளியவாறுங் காண்க, ஏசறவு 10. நெஞ்சிற்கு கீறிலாமை தன் செயலொழிந்து ஒருவழிப்பட்டு வில்லாமை சினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே " என்ற தாயுமானவர் வாக்கும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. அடிகளுக்கு மனம் ஒருவழிப்பட்டு அடன்காமை பிராரத்த வினையுடைமையாலாகும். ஓடுங்காத மனமுடைமையால் தன் சிறுமையை உணர்த்த நாயினேன் என்றார். நாயினேன் எனக் கடையனாயினேன் என்க. கடையனாயினேன் வாயிற் புறத்தே நிற்பவனாயினேன். என்றது மெய்யன்பர் உன் மெய்ம்மை மேவினாராக யானும் பொய்யும் புறமே போந்தோம் என்பதை விளக்கிய தாகும். பட்ட கீழ்மை அடைந்த இழிவரல். அடிகளுக்கு உண்டாகிய இழி வரல் என்னையெனின் முழுமுதலிறைவன் வலியவந்து ஆட்கொள்ளப் பெற்றும் உடனே கதியடையாது பிராரத்த கன்மத்தை நுகர்ந்து கொண்டு உண்டு உடுத்து உறங்கி உலகில் வாழவேண்டிய சீலைமையாகும். "தேனிலாவிய திருவருள் புரிந்த நின் சிவநகர் புகப்போகேன் ஊனிலாவியை ஒம்புதற் பொருட் டினும் உண்டுடுத்திருந்தேனே. (சத 40) மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டுடுத்திருப்பதானேன் போரேறே (சத 52) என அடிகள் அருளியமையுங் காண்க. இதன் கண். கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் என்பதனால் மனங் தொழிற்படாது இறையின்பத்தில் முற்கும் அதீத நிலையை விரும்புதல் பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 91, 90. மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்டபின் மழச் கையி எங்குபொற் கிண்ணம் என்றலாள் அரியை என்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேனினார் பொய்யில் அங்கெணப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே. திருச்சதகம் 361 ப - ரை : மை இலங்கு நல் கண்ணி பங்கனே-தீட்டிய மை விளங்கு தற்குக் காரணமாகிய நல்ல அருட்கண்களையுடைய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே; மெய் இலங்கு வெள் மீற்று மேனியாய்- வீடுபேற் றிற்கறிகுறியாகிய உண்மை விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்த திரு மேனியையுடையவனே; வந்து எனை பணி கொண்ட பின் - நீ ஞானாசாரிய னாக இவ்வுலகில் எழுந்தருளி வந்து அடியேனைத் தொண்டனாகக் கொண் டருளிய பீன் மற கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால். குழவியின் கையில் விளங்குகின்ற பொற்கிண்ணம் போலும் என்று நின்னை எளிமையாகக் கருதுகின்றதல்லாமல், அரியை என்று உனை கருதுகின்றி வேன் - பெறுதற்கு அருமையுடையை என்று உன்னை நான் நினைக்கின்றி லேன்; மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்-நின்னுடன் வந்த மெய்யன்பர்கள் உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர்; என்னை பொய்யில் புகுதவிட்டு.அடியேனைப் பொய்யாகிய உலக வாழ்க்கை யில் புகும்படி விட்டு; நீ அங்கு போவதோ பொருத்தமாவது-நீ சிவபுரத் துக்கு எழுந்தருள்வதுதானோ எளிமையாகி வந்து பணி கொண்ட நின் திருவருட்டிறத்திற்குத் தகுதியாவது; சொலாய்-சொல்லியருள்வாயாக. மையிலங்கு நற்கண்ணி பங்கனே, மெய்யிலங்கு வெண்ணிற்று மேனி யாய் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து என்னைப் பணிகொண்ட பின், மழக்கையிலங்கு பொற்கிண்ணம் போலும் என்று நின்னை எளிமையாகக் கருதுகின்றதல்லாமல் பெறுதற்கு அரியை என்று உன்னைக் கருதுகின்றி லேன்; மின்னுடன் வந்த மெய்ம்மை அன்பர் உனது மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர். என்னைப் பொய்யாகிய உலக வாழ்க்கை யிற் புகும்படி வீட்டு நீ சிவபுரத்துக்கு எழுந்தருள்வதுதானோ எளியை யாகி வந்து பணிகொண்ட நின் பெருமைக்குப் பொருத்தமாவது? சொல்லி யருள்க என்பதாம். மையிவங்கு நற்கண்ணி என்றது உமையம்மையை. "மையார் தடங் கண் மடந்தை மணவாளா" (திருவெம்பா 11) எனத் திருவாசகத்தும் மையார்ந்த வொண் கணுமை (ஞான 286 : 1) மையார் மலர்க்கண் ணாள் பாகர் போலும் (நாவு 234:3) மையார் கண்ணி பங்கா" (சுந் 27:4) எனத் தேவாரத்தும் வருவன காண்க. மை -மகளிர் கண்ணுக்குத் தீட்டும் அஞ்சன மை. அது இறைவியின் கண்க ையடைந்து விளக்கம் பெற்ற தென்பார். ''மையிலங்கு கண் " என்றார். இலங்கும் என்னும் எச்சம் காரியப்பொருட்டு, கற்க நற்கண் - அருட்கண். வந்து எனைப் பணிகொண்ட பின் ன்றது எத்துணை மேம்பாட்டின ரும் அறிதற்கரிய உயர்வினையுடையையாகிய நீ எனியையாய் ஞானாசாரிய னாக வலிய எழுந்தருளி வந்து சிறியேனைத் தொண்டனாகக் கொண்ட பின் என்றவாறு. "என்பெலா முருக்கி யெளியையா யாண்ட ஈசனோ (பிடித்த 10) 46
360 திருச்சதகம் நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக் கைத்து ' ' ( அதிசயம் 8 ) நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம வெளப்பெற்றேன் என அடிகள் அருளியவாறுங் காண்க ஏசறவு 10 . நெஞ்சிற்கு கீறிலாமை தன் செயலொழிந்து ஒருவழிப்பட்டு வில்லாமை சினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே என்ற தாயுமானவர் வாக்கும் ஈண்டு சிந்திக்கத்தக்கது . அடிகளுக்கு மனம் ஒருவழிப்பட்டு அடன்காமை பிராரத்த வினையுடைமையாலாகும் . ஓடுங்காத மனமுடைமையால் தன் சிறுமையை உணர்த்த நாயினேன் என்றார் . நாயினேன் எனக் கடையனாயினேன் என்க . கடையனாயினேன் வாயிற் புறத்தே நிற்பவனாயினேன் . என்றது மெய்யன்பர் உன் மெய்ம்மை மேவினாராக யானும் பொய்யும் புறமே போந்தோம் என்பதை விளக்கிய தாகும் . பட்ட கீழ்மை அடைந்த இழிவரல் . அடிகளுக்கு உண்டாகிய இழி வரல் என்னையெனின் முழுமுதலிறைவன் வலியவந்து ஆட்கொள்ளப் பெற்றும் உடனே கதியடையாது பிராரத்த கன்மத்தை நுகர்ந்து கொண்டு உண்டு உடுத்து உறங்கி உலகில் வாழவேண்டிய சீலைமையாகும் . தேனிலாவிய திருவருள் புரிந்த நின் சிவநகர் புகப்போகேன் ஊனிலாவியை ஒம்புதற் பொருட் டினும் உண்டுடுத்திருந்தேனே . ( சத 40 ) மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டுடுத்திருப்பதானேன் போரேறே ( சத 52 ) என அடிகள் அருளியமையுங் காண்க . இதன் கண் . கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் என்பதனால் மனங் தொழிற்படாது இறையின்பத்தில் முற்கும் அதீத நிலையை விரும்புதல் பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 91 90. மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்டபின் மழச் கையி எங்குபொற் கிண்ணம் என்றலாள் அரியை என்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேனினார் பொய்யில் அங்கெணப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே . திருச்சதகம் 361 - ரை : மை இலங்கு நல் கண்ணி பங்கனே - தீட்டிய மை விளங்கு தற்குக் காரணமாகிய நல்ல அருட்கண்களையுடைய உமையம்மையை ஒரு கூற்றிலுடையவனே ; மெய் இலங்கு வெள் மீற்று மேனியாய்- வீடுபேற் றிற்கறிகுறியாகிய உண்மை விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்த திரு மேனியையுடையவனே ; வந்து எனை பணி கொண்ட பின் - நீ ஞானாசாரிய னாக இவ்வுலகில் எழுந்தருளி வந்து அடியேனைத் தொண்டனாகக் கொண் டருளிய பீன் மற கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் . குழவியின் கையில் விளங்குகின்ற பொற்கிண்ணம் போலும் என்று நின்னை எளிமையாகக் கருதுகின்றதல்லாமல் அரியை என்று உனை கருதுகின்றி வேன் - பெறுதற்கு அருமையுடையை என்று உன்னை நான் நினைக்கின்றி லேன் ; மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் - நின்னுடன் வந்த மெய்யன்பர்கள் உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர் ; என்னை பொய்யில் புகுதவிட்டு.அடியேனைப் பொய்யாகிய உலக வாழ்க்கை யில் புகும்படி விட்டு ; நீ அங்கு போவதோ பொருத்தமாவது - நீ சிவபுரத் துக்கு எழுந்தருள்வதுதானோ எளிமையாகி வந்து பணி கொண்ட நின் திருவருட்டிறத்திற்குத் தகுதியாவது ; சொலாய் - சொல்லியருள்வாயாக . மையிலங்கு நற்கண்ணி பங்கனே மெய்யிலங்கு வெண்ணிற்று மேனி யாய் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து என்னைப் பணிகொண்ட பின் மழக்கையிலங்கு பொற்கிண்ணம் போலும் என்று நின்னை எளிமையாகக் கருதுகின்றதல்லாமல் பெறுதற்கு அரியை என்று உன்னைக் கருதுகின்றி லேன் ; மின்னுடன் வந்த மெய்ம்மை அன்பர் உனது மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர் . என்னைப் பொய்யாகிய உலக வாழ்க்கை யிற் புகும்படி வீட்டு நீ சிவபுரத்துக்கு எழுந்தருள்வதுதானோ எளியை யாகி வந்து பணிகொண்ட நின் பெருமைக்குப் பொருத்தமாவது ? சொல்லி யருள்க என்பதாம் . மையிவங்கு நற்கண்ணி என்றது உமையம்மையை . மையார் தடங் கண் மடந்தை மணவாளா ( திருவெம்பா 11 ) எனத் திருவாசகத்தும் மையார்ந்த வொண் கணுமை ( ஞான 286 : 1 ) மையார் மலர்க்கண் ணாள் பாகர் போலும் ( நாவு 234 : 3 ) மையார் கண்ணி பங்கா ( சுந் 27 : 4 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . மை -மகளிர் கண்ணுக்குத் தீட்டும் அஞ்சன மை . அது இறைவியின் கண்க ையடைந்து விளக்கம் பெற்ற தென்பார் . ' ' மையிலங்கு கண் என்றார் . இலங்கும் என்னும் எச்சம் காரியப்பொருட்டு கற்க நற்கண் - அருட்கண் . வந்து எனைப் பணிகொண்ட பின் ன்றது எத்துணை மேம்பாட்டின ரும் அறிதற்கரிய உயர்வினையுடையையாகிய நீ எனியையாய் ஞானாசாரிய னாக வலிய எழுந்தருளி வந்து சிறியேனைத் தொண்டனாகக் கொண்ட பின் என்றவாறு . என்பெலா முருக்கி யெளியையா யாண்ட ஈசனோ ( பிடித்த 10 ) 46