திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "பணிகொண் டென்னை யாட்கொண்டு" (புணர்ச் 5) வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி யென்னைப் பணி (குழைத்த 6) கொண்டாய்" 362 "திகழா நின்ற திருமேனி காட்டி யென்னைப் பணிகொண்டாய்"" (குழைத்த 10) என வருவன காண்க, மழ - குழவீ. "விசும்புற்ற திங்கட்கழு மழப் போன்று' (198) என் னும் திருக்கோவையாரினும் இப்பொருட்டாதல் காண்க. மழக் கையி லங்கு பொற்கிண்ணம் என்றவால் அரியை என்றுனைக் கருதுகின்றிலேன் என்றது குழவியின் கையிற் கொடுக்கப்பட்ட பாலுணவையுடைய பொற் கிண்ணத்தை அக்குழவி அதன் அருமை தெரியாது நழுவவிட்டுப் பாலுணவை யுமிழ்ந்து அக்கிண்ணத்தையும் சிதைப்பது போல, மிக்க அருமையுடைய நீ எளிமையுடையையாய் வலிய எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்டமையால் நின்னை அரியை என்று கருதாது எளியை என்று எண்ணுவேனாய் அதனால் நின்னையும் பிரிந்து கின்னருளால் எய்தம் பேரின்பத்தையும் இழந்தேன் என்றவாறு. குழந்தைக்குப் பொற்திண் ணத்திற் பால் கொடுக்கும் முறைமையினை உமையம்மையார் ஆளுடைய பிள்ளையாருக்குப் பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலைக் கொடுத்தமையா னும்,அதனை, போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை பாண்டவன் (282:2) எனத் தேவாரத்து அளுடைய பிள்ளையார் அருளிச் செய்தமையானும் அறிக. மெய்யிலங்கு வெண்ணீறு "சத்தியமாவது நீறு" என ஆளுடைய பிள்ளையாரால் அருளிச் செய்யப்பட்டது. திருநீற்றின் உண்மை, பசுவின் சாணம் எங்ஙனம் அக்கினியைச் சேர்ந்து தன்தன்மை கெட்டு தூய்தாந் தன்மையடைகின்றதோ அதுபோல இறைவனைச் சார்ந்த உயிரும் தன் ஆணவ இருள் கெட்டு தூய்மையடைந்து இன்புறும் என்பதை உணர்த் துவதாகும். ஞானாசாரியனாய் எழுந்தருளிய ஞான் ற இறைவன் திருமேனி யில் வெண்ணிறு காணப்பட்டமையின் வெண்னிற்று மேனியாய்'" றார். 'சிவனவன் திரடோண் மேல், நீறு நின்றது கண்டனை யாயினும்" (சத 33) என அடிகள் அருளியவாறுங் காண்க. ""செந்நிற மேனி வென் ணீறணிவோன்" (திருக்கோவை 69) என்பதும் ஈண்டைக் கேற்ப அறியற் என் பாவது. மெய்ம்மையன் பர்-மெய்யன்பர். மெய்மை திருவடி யின்பர் மெய்ம்மை உன்பர் ப்ெமை மேவினமை 'ஜின் மலர் கொள் தாளிணை வேறிலாப். பகப் பரிசு பெற்ற சின் மெய்ம்மை யன்பர் உன் மெய்ம்மை மேவினாம் சத 91) என அடிகள் பிறிதோரிடத்து அருனியவாறுங் காண்க. திருச்சதகம் 363 பொய்யில் எனைப்புகுதவிட்டு எனக் கூட்டிப் பொருள் கொள்க. இனி, பொய் இலங்கு என்னைப் புகுத விட்டு எனப் பிரித்துப் பொய்ம்மை விளங்கும் எளியேனைப் புறத்தே போக விடுத்து எனப் பொருளுரைப் பாருமுளர். என்னைப் பொய்யில் புகுதவீட்டு நீ சிவபுரத்துக்கு எழுச் தருள்வதுதானோ எளியையாகி வந்து பணிகொண்ட நின் திருவருட்டிறத் திற்குப் பொருத்தமாவது கூறியருள்க என்றார். அங்குப் போவதோ எனக் கூட்டுக. அங்கு என்றது சிவபுரத்தை. போவது போதல்; தொழிற் "எய்ப்பினில் பெயர். சொல்லாய் என்பது சொலாய் என நின்றது. வைப்பனே வருதலுங் காண்க. யெனை வைப்பதோ சொலாய்" (சத 98) என இதன் கன், சொலாய் என இறைவனை வீடை கூறுமாறு வினா வீனும்நீ என்னை விட்டுப் போவது நின் திருவருட்டிறத்திற்குப் பொருத்த மற்றதாகலின் என்னையும் உடன் கொண்டு செல்லுதல் வேண்டும் என் பது குறிப்பாகும். அதனால் ஆனந்தாதீதத்தை அவாவுதல் பெறப்படுத் லின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போத ருதல் காண்க. 97. பொருத்தம் இன்மையேன் பொய்மை யுண்மையேன் போத வெள்றெனைப் புரிந்து தோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே. ப-ரை : கமல மலர் பாதனே - தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவனே, அரத்த மேனியாய் - செந்நிறமான திருமேனியையுடைய வனே,என் எம்பிரான் . என்னுடைய எம்பிரானே. பொருத்தம் இன்மை யேன் - நின்னை உடனே அடைதற்குரிய தகுதியில்லாதேன், பொய்மை உண்மையேன் - பொய்யுலக வாழ்வில் இருக்க வேண்டிய நிலைமையை உடையேன், எனை போத என்று புரிந்து நோக்கவும் - அத்தகைய என்னை வருக என்று அழைத்து விரும்பி அருட் பார்வை நல்கவும், வருத்தம் இன்மையேன் - நின்னை விரைந்து உண்மையேன் - மயக்க முடையேன் அணுகும் முயற்சியில்லாதேன், வஞ்சம் இறச் தொழிந்திலேன், அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளிநின்னால் அருள் செய்யப்பட்ட மெய்யடியார்களும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி, எனை இங்கு இருத்தினாய் - சிறியேனைப் பொய்யுலக வாழ்வில் இருக்கு மாறு பணித்தாய், முறையோ - இது உனக்குத் தகுதியோ? வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே - நிலையில்லாதேனாகிய எனது பிராரத்த வினைக்கு ஓர் அழிவில்லையோ?
திருவாசக ஆராய்ச்சியுரை பணிகொண் டென்னை யாட்கொண்டு ( புணர்ச் 5 ) வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி யென்னைப் பணி ( குழைத்த 6 ) கொண்டாய் 362 திகழா நின்ற திருமேனி காட்டி யென்னைப் பணிகொண்டாய் ( குழைத்த 10 ) என வருவன காண்க மழ - குழவீ . விசும்புற்ற திங்கட்கழு மழப் போன்று ' ( 198 ) என் னும் திருக்கோவையாரினும் இப்பொருட்டாதல் காண்க . மழக் கையி லங்கு பொற்கிண்ணம் என்றவால் அரியை என்றுனைக் கருதுகின்றிலேன் என்றது குழவியின் கையிற் கொடுக்கப்பட்ட பாலுணவையுடைய பொற் கிண்ணத்தை அக்குழவி அதன் அருமை தெரியாது நழுவவிட்டுப் பாலுணவை யுமிழ்ந்து அக்கிண்ணத்தையும் சிதைப்பது போல மிக்க அருமையுடைய நீ எளிமையுடையையாய் வலிய எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்டமையால் நின்னை அரியை என்று கருதாது எளியை என்று எண்ணுவேனாய் அதனால் நின்னையும் பிரிந்து கின்னருளால் எய்தம் பேரின்பத்தையும் இழந்தேன் என்றவாறு . குழந்தைக்குப் பொற்திண் ணத்திற் பால் கொடுக்கும் முறைமையினை உமையம்மையார் ஆளுடைய பிள்ளையாருக்குப் பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலைக் கொடுத்தமையா னும் அதனை போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை பாண்டவன் ( 282 : 2 ) எனத் தேவாரத்து அளுடைய பிள்ளையார் அருளிச் செய்தமையானும் அறிக . மெய்யிலங்கு வெண்ணீறு சத்தியமாவது நீறு என ஆளுடைய பிள்ளையாரால் அருளிச் செய்யப்பட்டது . திருநீற்றின் உண்மை பசுவின் சாணம் எங்ஙனம் அக்கினியைச் சேர்ந்து தன்தன்மை கெட்டு தூய்தாந் தன்மையடைகின்றதோ அதுபோல இறைவனைச் சார்ந்த உயிரும் தன் ஆணவ இருள் கெட்டு தூய்மையடைந்து இன்புறும் என்பதை உணர்த் துவதாகும் . ஞானாசாரியனாய் எழுந்தருளிய ஞான் இறைவன் திருமேனி யில் வெண்ணிறு காணப்பட்டமையின் வெண்னிற்று மேனியாய் ' றார் . ' சிவனவன் திரடோண் மேல் நீறு நின்றது கண்டனை யாயினும் ( சத 33 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . செந்நிற மேனி வென் ணீறணிவோன் ( திருக்கோவை 69 ) என்பதும் ஈண்டைக் கேற்ப அறியற் என் பாவது . மெய்ம்மையன் பர் - மெய்யன்பர் . மெய்மை திருவடி யின்பர் மெய்ம்மை உன்பர் ப்ெமை மேவினமை ' ஜின் மலர் கொள் தாளிணை வேறிலாப் . பகப் பரிசு பெற்ற சின் மெய்ம்மை யன்பர் உன் மெய்ம்மை மேவினாம் சத 91 ) என அடிகள் பிறிதோரிடத்து அருனியவாறுங் காண்க . திருச்சதகம் 363 பொய்யில் எனைப்புகுதவிட்டு எனக் கூட்டிப் பொருள் கொள்க . இனி பொய் இலங்கு என்னைப் புகுத விட்டு எனப் பிரித்துப் பொய்ம்மை விளங்கும் எளியேனைப் புறத்தே போக விடுத்து எனப் பொருளுரைப் பாருமுளர் . என்னைப் பொய்யில் புகுதவீட்டு நீ சிவபுரத்துக்கு எழுச் தருள்வதுதானோ எளியையாகி வந்து பணிகொண்ட நின் திருவருட்டிறத் திற்குப் பொருத்தமாவது கூறியருள்க என்றார் . அங்குப் போவதோ எனக் கூட்டுக . அங்கு என்றது சிவபுரத்தை . போவது போதல் ; தொழிற் எய்ப்பினில் பெயர் . சொல்லாய் என்பது சொலாய் என நின்றது . வைப்பனே வருதலுங் காண்க . யெனை வைப்பதோ சொலாய் ( சத 98 ) என இதன் கன் சொலாய் என இறைவனை வீடை கூறுமாறு வினா வீனும்நீ என்னை விட்டுப் போவது நின் திருவருட்டிறத்திற்குப் பொருத்த மற்றதாகலின் என்னையும் உடன் கொண்டு செல்லுதல் வேண்டும் என் பது குறிப்பாகும் . அதனால் ஆனந்தாதீதத்தை அவாவுதல் பெறப்படுத் லின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போத ருதல் காண்க . 97. பொருத்தம் இன்மையேன் பொய்மை யுண்மையேன் போத வெள்றெனைப் புரிந்து தோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே . - ரை : கமல மலர் பாதனே - தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவனே அரத்த மேனியாய் - செந்நிறமான திருமேனியையுடைய வனே என் எம்பிரான் . என்னுடைய எம்பிரானே . பொருத்தம் இன்மை யேன் - நின்னை உடனே அடைதற்குரிய தகுதியில்லாதேன் பொய்மை உண்மையேன் - பொய்யுலக வாழ்வில் இருக்க வேண்டிய நிலைமையை உடையேன் எனை போத என்று புரிந்து நோக்கவும் - அத்தகைய என்னை வருக என்று அழைத்து விரும்பி அருட் பார்வை நல்கவும் வருத்தம் இன்மையேன் - நின்னை விரைந்து உண்மையேன் - மயக்க முடையேன் அணுகும் முயற்சியில்லாதேன் வஞ்சம் இறச் தொழிந்திலேன் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளிநின்னால் அருள் செய்யப்பட்ட மெய்யடியார்களும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி எனை இங்கு இருத்தினாய் - சிறியேனைப் பொய்யுலக வாழ்வில் இருக்கு மாறு பணித்தாய் முறையோ - இது உனக்குத் தகுதியோ ? வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே - நிலையில்லாதேனாகிய எனது பிராரத்த வினைக்கு ஓர் அழிவில்லையோ ?