திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

366 திருவாசக ஆராய்ச்சியுரை இறைவியின் கூந்தல் இயல்பாகவே கறுமணமுடைத்தாகவும் ஏலம் ஏறு நற் குழவி என்றது உபசார வழக்காகும். " என கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற் கன்ப னாக்கினாய் என்றது மகா மேருமலையாகிய கல்லை மென்கனிபோல் இழகச் செய்து வில்லாக வளைத்த வித்தையினால் கற்போலும் நெஞ்சுடைய என்னை நெகிழச் செய்து நின்கழற்கு அன்பனாக்கினாய் என்றவாறு. "தெவ்வரை மெய்யெரி காய் சிலை யாண்டென்னை யாண்டுகொண்ட, செவ்வரை மேனி யன்" (ii4) எனத் திருக்கோவையாரில் வருதலும், இப்பகுதிக்கு " பகை வரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணிகொண்டு பின் என்னை அடிமை கொண்ட செவ்வரை போலும் திருமேனியையுடையன் உரையும், வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னை யாண்டா னென்பது போதர "காய்சிலை யாண்டென்னை யாண்டு கொண்ட வென்றார்; என்னைத் தனக்கடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை வரைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொரு பகையுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து. 'கல்லை மென் கனி யாக்கும் விச்சை கொண்டென்னை நின்கழற் கன்பனாக்கினாம்'' என்பதுமது என விசேடவுரையும் பேராசிரியர் எழுதி யிருத்தலும் ஈண்டு அறியற்பாலன. வீச்சை-வித்தை, விச்சை கொண்டு- வித்தையால். எல்லை - அளவு. 'நன்னா டலைவரு மெல்லை" கவி 39:31. இறை வள் திருவருளுக்கு எல்லையின்மையின் ''எவ்லை யில்லை நின் கருணை" என்றார். ''எல்லையில் மாக்கருணைக் கடவ் (திருப்படை 4) என வருத லுங் காண்க. எல்லையில்லை நின் கருணை என்பது அடிகள் பின்னர் வேண்டும் வேண்டுகோளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. எதுகொண்டு என்புழிக் கொண்டு என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. ஏது செய்யினும் என்புழி உம்மை, எவ்வித இழிவுடைய செயலைச் செய்யினும் என இழிவு சிறப்பு. வல்லையே என்புழி ஏகாரம் தேற்றம். இன்னும் என்றது முன்னுமல்லாமல் பின்னும் என்ற பொரு ளில் வந்தது. உம்மை. இறந்தது தழீஇய எச்சவும்மை. மீட்கவும் என்ப தில் உம்மை, இங்கு எனை இருத்திப் பிரிக்கும் ஆற்றனுடைய நினக்கு என்னை அதனினின்று மீட்கவும் ஆற்றலுண்டு என இறந்தது தழீஇய எச்சவும்மை. மறுவில் வான் - குற்றமில்லாத சிதாகாயம். பூதாகாயத்தை விலக்குதற்கு 'மறுவில்" என்னும் அடை கொடுக்கப்பட்டது. தவசி இதன் கண். எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் வல் லமையுடையை யல்லவா? என்றதனால் அங்ஙனம் அருள் செய்ய வேண் டும் என்பது பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 94. 09. திருச்சதகம் வான நாடரும் அறியொ ணாதந் மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ ஏனை நாடருந் தெரியொ ணாதநீ என்னை யின்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருசி நானுனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே 367 ப-ரை: வான நாடரும் அறியொணாத நீ - விண்ணுலகத்தவரும் அறிய இயலாத நீ. மறையில் ஈறும் முன் தொடரொணாத நீ-வேதங் களின் முடிபாகிய உபநிடதங்களும் முற்காலத்தில் தொடர்ந்து பற்றி இன்ன தன்மையன் என உணர்த்த முடியாத நீ, ஏனை நாடரும் தெரி யொணாத -மற்றைய உலகத்திலுள்ளவர்களும் தெரிய முடியாத என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா அடியேனை இனிதாக எளி வந்து ஊ சீனா ஆட்கொண்டருளியவாறும், நாடகம் ஆடுவித்தவா - என் ஊனுடலை ஆனந்தக்கூத்து ஆடும்படி செய்தவாறும். நான் உருகி உனை பருக வைத்தவா - அடியேன் உள்ளவருகி உள்ள முரு உன் அருட்பெருக்கைப் பரு கும்படி செய்தவாறும். ஞான நாடகம் ஆடுவித்தவா - என்னை மெய்ஞ் உடை அவிச்சை ஞானக் கூத்து ஆடும்படி செய்தவாறும். வையகத்து ரையவே - பூவுலகில் என்னுடைய அறியாமை நீங்கும் பொருட்டேயாம். வான நாடரும் அறிய முடியாத நீ, மறையின் முடிபாகிய உபநிட தங்களும் முன்தொடரொணாக நீ ஏனைநாடரும் தெரியொணாத நீ அடி யேனை இனிதாக எளிவந்து ஆண்டருளியவாறும் என் ஊனுடலை ஆனக் தக் கூத்தாடும்படி செய்தவாறும். நான் உள்ளமுருகி உன் அருட்பெருக் கைப் பருகும்படி செய்தவாறும், என்னை ஞானநாடகம் ஆடும்படி செய்த வாரும், பூவுலகில் என்னுடைய அறியாமை நீங்கும் பொருட்டேயாகும். நின் அருட்செயல் எத்துணை வியப்பிற்குரியது என்பதாம். வான வான நாடர் - விண்ணுலகத்துள்ள திருமால் முதலியோர். நாடரும் மருவியேத்தா விண்ணுள்ளீராய் நிற்பதென்னே" (சுந் 8:4) எனத் தேவாரத்து வருதலும் காண்க. இறைவனைத் திருமால் முதலிய வான நாடரும் அறியலொண்ணாமையை, "நான்முகனோ, டொருங்கு வளைக் கரத்தானு முணராதவன்' (381) எனத் திருக்கோவையாரில் அருளி யமையானுமறிக. உம்மை உயர்வு சிறப்பு. ஒண்ணாத என்பது இடைக் குறைந்து நின்றது. மறையிறு - வேதங்களின் முடிபாகிய உபவிடதங்கள், மறையீறு அறியா மறையோனே" (சத 85) என வருதலுங் காண்க. ஏனைநாடர் என்றது வித்தியாதத்துவ புவனங்களிலுள்ள உருத்திரர்களை. தாமறியாச், சேவேறு சேவடி' "மாவேறு சோதியும் வானவரும் (கோத் 1) என வருதலுன் காண்க இன்னிதாயாண்டு கொண்டவா - இனிதாக ஆட்கொண்டருளியவாறு.
366 திருவாசக ஆராய்ச்சியுரை இறைவியின் கூந்தல் இயல்பாகவே கறுமணமுடைத்தாகவும் ஏலம் ஏறு நற் குழவி என்றது உபசார வழக்காகும் . என கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற் கன்ப னாக்கினாய் என்றது மகா மேருமலையாகிய கல்லை மென்கனிபோல் இழகச் செய்து வில்லாக வளைத்த வித்தையினால் கற்போலும் நெஞ்சுடைய என்னை நெகிழச் செய்து நின்கழற்கு அன்பனாக்கினாய் என்றவாறு . தெவ்வரை மெய்யெரி காய் சிலை யாண்டென்னை யாண்டுகொண்ட செவ்வரை மேனி யன் ( ii4 ) எனத் திருக்கோவையாரில் வருதலும் இப்பகுதிக்கு பகை வரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணிகொண்டு பின் என்னை அடிமை கொண்ட செவ்வரை போலும் திருமேனியையுடையன் உரையும் வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னை யாண்டா னென்பது போதர காய்சிலை யாண்டென்னை யாண்டு கொண்ட வென்றார் ; என்னைத் தனக்கடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை வரைத்தான் ; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொரு பகையுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து . ' கல்லை மென் கனி யாக்கும் விச்சை கொண்டென்னை நின்கழற் கன்பனாக்கினாம் ' ' என்பதுமது என விசேடவுரையும் பேராசிரியர் எழுதி யிருத்தலும் ஈண்டு அறியற்பாலன . வீச்சை - வித்தை விச்சை கொண்டு வித்தையால் . எல்லை - அளவு . ' நன்னா டலைவரு மெல்லை கவி 39:31 . இறை வள் திருவருளுக்கு எல்லையின்மையின் ' ' எவ்லை யில்லை நின் கருணை என்றார் . ' ' எல்லையில் மாக்கருணைக் கடவ் ( திருப்படை 4 ) என வருத லுங் காண்க . எல்லையில்லை நின் கருணை என்பது அடிகள் பின்னர் வேண்டும் வேண்டுகோளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது . எதுகொண்டு என்புழிக் கொண்டு என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு . ஏது செய்யினும் என்புழி உம்மை எவ்வித இழிவுடைய செயலைச் செய்யினும் என இழிவு சிறப்பு . வல்லையே என்புழி ஏகாரம் தேற்றம் . இன்னும் என்றது முன்னுமல்லாமல் பின்னும் என்ற பொரு ளில் வந்தது . உம்மை . இறந்தது தழீஇய எச்சவும்மை . மீட்கவும் என்ப தில் உம்மை இங்கு எனை இருத்திப் பிரிக்கும் ஆற்றனுடைய நினக்கு என்னை அதனினின்று மீட்கவும் ஆற்றலுண்டு என இறந்தது தழீஇய எச்சவும்மை . மறுவில் வான் - குற்றமில்லாத சிதாகாயம் . பூதாகாயத்தை விலக்குதற்கு ' மறுவில் என்னும் அடை கொடுக்கப்பட்டது . தவசி இதன் கண் . எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் வல் லமையுடையை யல்லவா ? என்றதனால் அங்ஙனம் அருள் செய்ய வேண் டும் என்பது பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 94 . 09 . திருச்சதகம் வான நாடரும் அறியொ ணாதந் மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ ஏனை நாடருந் தெரியொ ணாதநீ என்னை யின்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருசி நானுனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே 367 - ரை : வான நாடரும் அறியொணாத நீ - விண்ணுலகத்தவரும் அறிய இயலாத நீ . மறையில் ஈறும் முன் தொடரொணாத நீ - வேதங் களின் முடிபாகிய உபநிடதங்களும் முற்காலத்தில் தொடர்ந்து பற்றி இன்ன தன்மையன் என உணர்த்த முடியாத நீ ஏனை நாடரும் தெரி யொணாத -மற்றைய உலகத்திலுள்ளவர்களும் தெரிய முடியாத என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா அடியேனை இனிதாக எளி வந்து சீனா ஆட்கொண்டருளியவாறும் நாடகம் ஆடுவித்தவா - என் ஊனுடலை ஆனந்தக்கூத்து ஆடும்படி செய்தவாறும் . நான் உருகி உனை பருக வைத்தவா - அடியேன் உள்ளவருகி உள்ள முரு உன் அருட்பெருக்கைப் பரு கும்படி செய்தவாறும் . ஞான நாடகம் ஆடுவித்தவா - என்னை மெய்ஞ் உடை அவிச்சை ஞானக் கூத்து ஆடும்படி செய்தவாறும் . வையகத்து ரையவே - பூவுலகில் என்னுடைய அறியாமை நீங்கும் பொருட்டேயாம் . வான நாடரும் அறிய முடியாத நீ மறையின் முடிபாகிய உபநிட தங்களும் முன்தொடரொணாக நீ ஏனைநாடரும் தெரியொணாத நீ அடி யேனை இனிதாக எளிவந்து ஆண்டருளியவாறும் என் ஊனுடலை ஆனக் தக் கூத்தாடும்படி செய்தவாறும் . நான் உள்ளமுருகி உன் அருட்பெருக் கைப் பருகும்படி செய்தவாறும் என்னை ஞானநாடகம் ஆடும்படி செய்த வாரும் பூவுலகில் என்னுடைய அறியாமை நீங்கும் பொருட்டேயாகும் . நின் அருட்செயல் எத்துணை வியப்பிற்குரியது என்பதாம் . வான வான நாடர் - விண்ணுலகத்துள்ள திருமால் முதலியோர் . நாடரும் மருவியேத்தா விண்ணுள்ளீராய் நிற்பதென்னே ( சுந் 8 : 4 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . இறைவனைத் திருமால் முதலிய வான நாடரும் அறியலொண்ணாமையை நான்முகனோ டொருங்கு வளைக் கரத்தானு முணராதவன் ' ( 381 ) எனத் திருக்கோவையாரில் அருளி யமையானுமறிக . உம்மை உயர்வு சிறப்பு . ஒண்ணாத என்பது இடைக் குறைந்து நின்றது . மறையிறு - வேதங்களின் முடிபாகிய உபவிடதங்கள் மறையீறு அறியா மறையோனே ( சத 85 ) என வருதலுங் காண்க . ஏனைநாடர் என்றது வித்தியாதத்துவ புவனங்களிலுள்ள உருத்திரர்களை . தாமறியாச் சேவேறு சேவடி ' மாவேறு சோதியும் வானவரும் ( கோத் 1 ) என வருதலுன் காண்க இன்னிதாயாண்டு கொண்டவா - இனிதாக ஆட்கொண்டருளியவாறு .